https://www.youtube.com/watch?v=MrFYNuieH0M
Printable View
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளித் திருநாளின் தீம் பாடல் என்றுமே காதல் மன்னர் தோன்றும் கல்யாணபரிசு பாடல் காட்சியே!!
Quote:
இன்று புகையில்லா தீபாவளி என்னுமளவில் சுற்றுசூழல் மாசு தடுப்பாக வெடிகள் இல்லாத பசுமை தீபாவளி கொண்டாடுமளவு சுற்றுப்புற சூழல் காற்றிலும் நீரிலும் ஒளியிலும் ஒலியிலும் உணவிலும் உடையிலும் உணர்விலும் கெட்டுப் போனதாக உருவகப் படுத்தப்படும் நிலையில் தீப ஒளியில் தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்பதற்கு இப்பாடல் காட்சியே சாட்சியம் !!
.....சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு தீயேதுமில்லாமல் வெடித்திடும் கேப்பு ...இதுவே பசுமை தீபாவளி....பட்டுக்கோட்டையாரின் பார்வையில்...
https://www.youtube.com/watch?v=MrFYNuieH0M
Karaoke forms too...indelible kalyanaparisu diwali song!!
https://www.youtube.com/watch?v=9vyAfW_AjSc
https://www.youtube.com/watch?v=WUgWBQComsU
https://www.youtube.com/watch?v=VuR_75ahCPE
Gap filler!
Same Diwali song in the Hindi version Nasrana starring RajKapoor!
https://www.youtube.com/watch?v=V9Cr2RpVxxw
Happy DeepavaLi ! :) Celebrate with all sweets and kaaram - wheat halwa, almaond halwa, mysore pagu, adhirasam, paal kovaa,........, murukku, seedai, poochchi koodu, kaara boondhi, kaara sevu,.......... But, limit sugar intake ! :lol:
Also, play this song from Nayagan - naan sirithaal DeepaavaLi........
http://www.youtube.com/watch?v=1uf64EMKoN8
Have fun with mathaappu and 'cape'-u ! :)
Fireworks are banned here except for sparklers and fireworks that don't go above a few feet!
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :)
Ellorukkum Deepavali Vaazhthukkal
தீபாவளி ஸ்பெஷல்…
*********
“ணிக்ணிக்ணிக் என ஏதோ ஒரு பூச்சியோ ராக்கோழியோ மெல்லிய குரலில் ராகம் பாடிச் சென்றுகொண்டிருந்தது..
வாசலைக் கடந்து யாரோ சைக்கிளில் மணியடித்தவாறே செல்வது கொஞ்சம் ஒலி கூட்டி ப் பின் மெல்ல மெல்லத் தேய்ந்துசெல்வதும் காதில் விழுந்தது..விழுந்ததா இல்லை..
பின் அவள் குரல் மட்டும் கேட்டது..யுகத்துக்கு அப்பாலா..வெகு தொலைவிலா..இல்லை..வெகு நெருக்கத்தில் காதுக்கருகே…”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம் அவம்மேல ஒரு ராணி ஆசைப்பட்டாளாம்..ஒரு நா ராணி என்ன பண்ணாளாம்..ராஜாவின் கோட்டையை முற்றுகையிட்டுட்டாளாம்..இப்படி…”
பாபு கொஞ்சம் கஷ்டப் பட்டே உதடுகளை விடுவித்தான்..கோட்டைகளாய் கற்பனைசெய்யப்பட்ட உதடுகள்.. செய்தவள் தங்கம்..அவள் பார்வையில் கேள்விக்குறி..பாபுவுக்குள்ளும் சிந்தனைகள்.. நான் செய்வது சரிதானா..இது யமுனாவிற்குச் செய்யும் துரோகமில்லையா..
ஏதோ பேச வாயெடுத்தவனைப் பேச விடவில்லை அவள்..”
ஹல்லோ….வாசகாஸ்.. வெய்ட் வெய்ட்.. ஏற்கெனவே எனக்கு நல்ல்ல பெயர்.. இதில் இப்படி ஆரம்பித்தால் இன்னும் நல்லதாகிவிடும். அதுவும் தீபாவளியும் அதுவுமா..
ஹச்சோ ..தலைப்பு போட மறந்துட்டேன்.. திரையில் மலர்ந்த நாவல்கள்…
எனில் இது தி.ஜானகி ராமன் எழுதிய மோகமுள் நாவலில் வரும் (கொஞ்சம்மாறியிருக்கும்..ஏனெனில் நினைவிலிருந்து எழுதுகிறேன்) முக்கியக் காட்சியில் முக்கியப்பாத்திரங்களின் மனவோட்டம்..
http://d.gr-assets.com/books/1327812102l/5054443.jpg
அது சரீ ஈ ஈ..
யாராக்கும் பாபு யாராக்கும் தங்கம் யாராக்கும் யமுனா..யாராக்கும் பாபுவின் இசைக்குக் குரு நாதரான ரங்கண்ணா…
கதைச்சுருக்கம் சொல்லலாம் என நினைத்தால் திகைக்கிறது மனது..இத்தனைக்கும் மோகமுள் நாவல் படித்து ஒரு இருபத்தைந்து வருடத்திற்கு மேலிருக்கும்..மூன்று முறை புத்தகமாய் வாங்கி யாரோ எடுத்துக் கொண்டு போய்விட அடுத்த முறை போகும் போது வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்..
இருப்பினும் அது புத்தகமாய் எனது கலெக்ஷனில் பெருமையாய் வீற்றிருக்க மட்டும் செய்யும்..பின் என்ன.. நாவலின் விரியும் கதாபாத்திரங்கள் மனதுள் பதிந்திருக்கிறதே..
இருப்பினும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் கீழே உள்ள இரண்டு லிங்க்ஸ் படித்து விட்டு என்னைத் தொடரலாம்..
http://www.kalachuvadu.com/issue-157/page86.asp
https://3konam.wordpress.com/2010/12...%E0%AF%8D%E0a/
சிலுசிலுவென்று மெல்லிய தென்றல் தடவிக் கொண்டிருக்க,படித்துறையில் அமர்ந்து காவிரியின் ஆற்று நீரில் கால் நனைத்திருக்கும் போது (கூடவே மரபுக்கவிதைப் புத்தகம் மடியில் இருக்கும்போது) ஏற்படும் சுகம் இருக்கிறதே.. அது போன்றஒரு சிலிர்ப்பு ஏற்படும் தி.ஜானகிராமனின் எழுத்துக்களைப் படிக்கும் போது.
அவரைப்பற்றி எழுதுவதென்றால் நிறைய எழுதலாம்..அவரது சிறுகதைகள் எனக்கு ரொம்பப்பிடிக்கும் நாவல்களில் மோகமுள், உயிர்த்தேன், அம்மாவந்தாள்..
மோகமுள்ளின் கதை எனச் சுருக்கமாய்ச் சொல்லவியலாது..
சின்னவயதிலிருந்தே தான் பார்த்திருந்த யமுனாவின் மீது ஈர்ப்பு – தன்னைவிட பத்து வயது மூத்தவள்- இருப்பினும் அது காதலா வெறும் மோகமா எனக் குழப்பங்கள் – இல்லை அது தான் தனது தான் தேர்ந்தெடுத்த இசைவாழ்வினைத் தொடரச் செய்வதற்கான விளக்கில் விடப்படும் நெய் எனப் புரிந்து கொள்கிறான்..என்ன பலவருடங்கள் ஆகிறது அதற்கு அவனுக்கும்.. அந்த வேட்கை, வேள்விக்கு ஆகுதியானபிறகு யமுனாவிற்கும்..( இதுகூட சரியாக எழுதியிருக்கிறேனா தெரியவில்லை)
நடுவில் அவன் வாழ்க்கையில் குறிக்கிடும் இளம்பெண் தங்கம்மா.. வயதில் முதியவருக்கு வாழ்க்கைப்பட்ட இளம் நங்கை..அவளுக்கு பாபுவிடம் வேண்டுவது உடலா..இல்லை எனமட்டும் இல்லை.. வாழ்க்கை.. அவளது தாபங்கள் அவளது வார்த்தையிலேயே கொஞ்சம் பார்க்கலாம்..
//“நேத்து நீங்க பாடினேள் பாருங்கோ. ‘மனசு விஷய’வா அதுதானே?”
“ஆமாம்.”
“இனிமேல் என் காதுபட அதைப் பாடாமல் இருக்கேளா?”
“ஏன்?”
“நீங்க பாடினா நல்லாத்தான் இருக்கு . . . பாட வேண்டாம்.”
“ஏன்?”
“என் கல்யாணத்தில் யாரோ ஒரு பெண் வந்து பாடினா அதை . . . எனக்கு அதைக் கேட்டால் பைத்தியம் பிடிச்சுப் போயிடும் போலிருக்கு.//
ஏனென்று பார்த்தால் அந்தப் பாடலின் சாரம்சம்.. விளக்கமாய் காலச்சுவடு லிங்க்கில் இருக்கிறது..
தங்கம்மாவிடம் ஏற்பட்ட மோக விழைவிற்குப் பிறகு யமுனாவிடம் அவளுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக பாபு புலம்புவதும் இதனால் தான்.. தங்கம்மாவின் மரணம் தற்கொலை அவனுக்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் எல்லாம் நாவல் படிக்கும்போது கண் முன்னே விரியும்..
இந்த நாவலை எப்படிப் படமாக எடுத்திருப்பார்கள் என்று மிக ஆவல் எனக்கு இருந்தது.. சிதைக்காமல் இருக்கவேண்டுமே என்றபயமும் இருந்தது..
http://ecx.images-amazon.com/images/...L._SL1444_.jpg
நல்லவேளை கூடுமான வரையில் சிதைக்காமல் அப்படியே பாபு யமுனா பாபு ரங்கண்ணா பாபு தங்கம்மா பாபு வைத்தி பாபு ராஜம் என கதாபாத்திரங்களுடன் பாபுவான அபிஷேக்கை ஒன்றி இருக்கும்படி எடுத்திருந்தார் ஞான ராஜசேகரன்..
கடைசியில் அப்ரப்ட்டாக டபக்கென இதற்குத் தானா என யமுனா சொல்லப் படம் முடிவது நாவல் படிக்காதவர்களுக்குப் புரிவது சிரமம்..அதுவே நாவலில் பல பக்கங்களுக்கு விரியும் ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகும்..
இந்தப் பதிவு கூட காலச்சுவடு பதிவைப் படித்ததனால் விரிவாக எழுதவில்லை..அதைப் பார்த்தாலே புரியும்
யமுனாவாக அர்ச்சனா ஜோக்லேகர், ராஜமாக விவேக். தங்கம்மா வாக யாரெனத் தெரியவில்லை..ஆனால் வெகு பொருத்தமான முழியும் முழியுமான பெண், ரங்கண்ணாவாக நெடுமுடி வேணு.. என வெகு பொருத்தமான பாத்திரத் தேர்வு..
http://padamhosting.me/out.php/i5583...3h25m46s39.png
http://padamhosting.me/out.php/i5583...h24m14s140.png
மோகமுள் நாவலை என்றும் மறக்க முடியாது..அதைத் திரைப்படமாகத் தந்ததையும்..
அதில் உள்ள சில பாடல்கள்…
மெதுவாக இசை ஞானம் மனதோடு அரும்பும்
கமலம் பாத கமலம்..
https://youtu.be/KzCxeKXcY60
சொல்லாயோ வாய் திறந்து..
பாபு யமுனா ராஜம்
https://youtu.be/Q4WhrHfXF10
தங்கம்மா சொல்லாயோ வாய் திறந்து
https://youtu.be/czhul3eoTtI
நிறைய நாட்களாக எழுதவேண்டும் என்ற எண்ணம் முகிழ்த்து முழித்துக் கொண்டே இருக்க சரி எழுதிவிடலாமெனக் கொஞ்சம் கொஞ்சமாய் சில நாட்கள் ஒருவரி இருவரியாய் எழுதி..இதோ இட்டுவிட்டேன்.. எடிட்பண்ணி விட்ட விஷயங்கள் நிறைய.. சுவைக்குறைவின் மன்னிக்க..
வாசுவின் சிரமங்கள் செய்து பார்க்கும் போது தான் புரிகிறது.. பட் நான் இப்போது மோகமுள் பார்க்கவில்லை..முன்பு பார்த்தது தான்.. நேரம் கிடைத்தால் வார இறுதியில் பார்க்க வேண்டும்..
தியாக ராஜ கீர்த்தனை பாடல் + ஆங்கில விளக்கம்..
https://youtu.be/73h2vrdhxcQ
If one becomes a slave to the evil propensities of the five senses, how can he meditate on the holy feet of SrI RAma? Then where is the prospect of obtaining His grace? Is it not as ridiculous as lending the door of one's cottage to a neighbor and standing guard at one's own, all night trying to drive away the dogs itching to enter? It is as foolish as a faithless housewife going out to get some bran, leaving behind a potful of cooked rice to be carried away by monkeys. To advise such silly ones is like initiating a deaf person by whispering a sacred text in his ears.
சிக்கா...
சொல்லாயோ வாய் திறந்து பாடல் ( ஆண் குரல் ) படத்தில் ஒரு சரணம் மட்டுமே வரும். பாடுவது அருண்மொழியாம்.. ஆனால் ஆடியோ ரிலீசில் எம்.ஜி.ஸ்ரீகுமார் பாடி ரெண்டு சரணம் இருக்கு.... ( அருண்மொழியின் ஆடியோவும் இருக்கு...) எந்தக் குரல் உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்கோ..
( தேடி லிங்க் கொடுக்க முடியலை.. தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டு உடம்பு டயர்ட் ஆயிருச்சு.. நீங்களே கண்டு பிடிச்சு கேட்டுட்டு பதில் சொல்லுங்கோ )