-
டியர் ராகவேந்திரன் சார்,
'முத்துக்குளிப்பவரே' பாடல் தந்ததைப் பாராட்டிற்கு நன்றி. அதைவிட சந்தோஷம் அந்த அற்புதப் பாடலைப் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருந்ததை மேற்கோள் காட்டி திரைகானம்.காம் இணையதளத்தில் வந்துள்ள செய்திக் குறிப்பு. இந்தப் பாடல் தங்களால் புகழ் பெற்றுக்கொண்டிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை. நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
-
'சத்தியம் தவறாதே' (20.12.1968)
"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க" மிக மிக மிக அரிய பாடல் முதன் முதலாக இணையத்தில்.
'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா (பணமா பாசமா புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழிமாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)
'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.
இப்படத்தின் vcd,dvd எதுவும் கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். எந்தத் தகவலும் இல்லை. ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே
"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...
பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை சில வருடங்களுக்கு முன் 'விஜய்' தொலைக்காட்சியில் போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியைப் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.
மிகவும் கடினப்பட்டு இந்தப் பாடலைத் தேடித் பிடித்து வீடியோ வடிவில் முதன் முதலாக இணையத்திலும், 'கலைநிலா' ரவிச்சந்திரன் திரியிலும் பதிவு செய்துள்ளேன். இந்தப் பாடலை அனைவரும் மிகவும் ரசித்துப் பார்ப்பீர்கள் எனவும் நம்புகிறேன். இப்பாடலைப் பற்றிய தங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்தப் பாடலை பதிவு செய்ததற்கு மிகுந்த பெருமையும், மனமகிழ்ச்சியும் கொள்கிறேன்.
இதோ... அந்த அற்புதமான "முத்துக்குளிப்பவரே"...பாடல் கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?feature...&v=0pj5iZOzX74
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களே,
மிக அபூர்வமான படம் சத்தியம் தவறாதே படத்தை முதல் வெளியீட்டிற்குப் பிறகு தற்போது தான் பாடல் காட்சியின் மூலம் பார்க்கிறேன். அதற்காக தங்களுக்கு உளமார்ந்த நன்றி. அதுவும் அப்படம் வெளியான டிசம். 20 அன்றே பதிவிட்டது பாராட்டிற்குரியது.
இதுபோல் அபூர்வமான பதிவுகளைத் தங்களிடம் மேலும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
-
ரவிச்சந்திரன் நடித்த மற்றொரு அபூர்வமான திரைப்படப் பாடல்
படம் - பம்பாய் மெயில் 109
பாடல் - கட்டுவேன் கையில் உன்னை
படம் வெளியான ஆண்டு - 1980 என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
(நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம். திரையரங்குகளில் வெளியானதா என்று எனக்கு நினைவில்லை. ஆனால் ரவி அவர்களுடன் PREVIEW காட்சியில் பார்த்தது.)
இயக்கம் - டி.பி.சுந்தரம்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
மெல்லிசை மன்னரின் வித்தியாசமான பாணி இசையில் தாளக் கட்டுகள் மிகச் சிறப்பாக அமைந்த பாடல். தேர்ந்த பாடகியரே பாடுவதற்கு மிகவும் சிரமப் படக் கூடிய மெட்டமைப்பு.
பாடியவர் - இசைக்குயில் சுசீலா, மற்றும் சிரிப்பொலி- ரவிச்சந்திரன்
http://youtu.be/Ug2rPlKX3zI
-
மற்றொரு சூப்பர் ஹிட் பாடல்.
படம் - பணக்காரப் பிள்ளை
பாடல் - மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள்
குரல்கள் - டி.எம்.எஸ். பி.சுசீலா
இசை - எஸ்.எம். சுப்பய்யா நாயுடு
http://youtu.be/WUZswSo4w9o
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
'முத்துக்குளிப்பவரே.. கொஞ்சம் பக்கத்திலே வாங்க' பாடலைத்தேடிப்பிடித்து பதிவு செய்து அனைவரையும் பார்த்து மகிழச்செய்தமைக்கு மிக்க நன்றி.
சத்தியம் தவறாதே படத்தை சின்ன வயதில் தியேட்டரில் பார்த்ததுதான். மீண்டும் பார்க்கக்கிடைக்கவில்லை. தற்போது பழைய படங்களை ஒளிபரப்பும் சில டிவி சேனல்கள் கூட இதுபோன்ற படங்களைக் கண்டுகொள்வதாகத்தெரியவில்லை.
ரவிச்சந்திரனின் படங்களைப்பொறுத்தவரை அவரது வண்ணப்படங்களே அதிகம் காணக்கிடைக்கின்றன. காதலிக்க நேரமில்லை, நான், மூன்றெழுத்து, மீண்டும் வாழ்வேன், அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா போன்ற கலர்ப்படங்கள் அதிகம் குறுந்தகடு, நெடுந்தகடுகளிலும், டிவி சேனல்களிலும் பார்க்க முடிந்த அளவுக்கு பல அற்புதமான கருப்புவெள்ளைப்படங்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வராமலே இருக்கின்றன. அவற்றில் சத்தியம் தவறாதே, மயிலாடும் பாறை, ஓடும் நதி, குமரிப்பெண், எங்க பாப்பா போன்ற பல படங்கள் அடங்கும்.
விஜயநிர்மலாவைப்பற்றி நீங்கள் சொன்னது மிகவும் சரி. அவரது அழகுக்கும் திறமைக்கும் தமிழில் போதுமான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். கே.ஏஸ்.ஜி. தனது சித்தி, பணமா பாசமா போன்ற படங்களில் நல்ல வேடங்கள் தந்தார்.
என்னவோ தெரியவில்லை, இசையருவி சேனலில் வரும் 'காவியப்பாடல்கள்' நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜயநிர்மலாவின் பல பாடல்களைக்காணும் வாய்ப்புக்கிடைத்தது. முத்துராமனுடன் 'சந்திப்போமா.. இன்று சந்திப்போமா' (சித்தி), ஜெய்சங்கருடன் 'நான் கலைஞனல்ல உன்னை சிலையாக்க' (நீலகிரி எக்ஸ்பிரஸ்), நடிகர்திலகத்துடன் 'அம்மா கண்ணு சும்மாசொல்லு' (ஞான ஒளி), நாகேஷுடன் 'வாழைத்தண்டு போல உடம்பு' (பணமா பாசமா) பாடல்களை இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பார்க்க் நேர்ந்தது.
சென்ற வாரத்தில் ஒரு நாள் அதே சேனலில் 70-களில் வந்த வண்ணப்படப்பாடல்களில் நடிகர்திலகம், மக்கள் திலகம் இருவரின் பாடல்களை மட்டும் ஒதுக்கி விட்டு மற்றவர்களின் வண்ணப்பாடல்களை ஒளிபரப்பினர். அத்தனையும் முத்தான பாடல்கள். அதில் ரவி பாடல்கள் நிறைய வந்தன.
ஜெமினி - இயற்கையென்னும் (சாந்திநிலையம்), மங்கையரில் மகாராணி (அவளுக்கென்று ஓர் மனம்), தன்னந்தனியாக நான் வந்தபோது (சங்கமம்)
ஜெய்சங்கர் - அந்த சிவகாமி மகனிடம் (ப.பூதம்), மேயர் மீனாட்சியில் ஒரு பாடல்
ரவிச்சந்திரன் - போதுமோ இந்த இடம் (நான்), ஓ..ஓ.. எத்தனை அழகு (அதே கண்கள்), மாதமோ ஆவணி (உ.உள்ளேவா)
சிவகுமார் - முள்ளில்லா ரோஜா (மூன்றுதெய்வங்கள்), இல்லம் சங்கீதம்(அவன் அவள் அது), தேவியின் திருமுகம் (வெள்ளிக்கிழமை விரதம்)
ஏ.வி.எம்.ராஜன் - திருமகள் தேடி வந்தாள் (இருளும் ஒளியும்)
ஸ்ரீகாந்த் - தேவன் வேதமும் (ராஜநாகம்)
சசிகுமார் - கீதா ஒருநாள் பழகும் (அவள்)
முத்துராமன் - என்ன பார்வை (கா.நேரமில்லை), ராஜராஜஸ்ரீ (ஊட்டிவரைஉறவு), கண்ணுக்குத்தெரியாத (என் அண்ணன்) இதில் விஜயநிர்மலாவும் இருந்தார்.
அத்தனையும் முத்துமுத்தான வண்ணப்பாடல்கள். சிடி, டிவிடி காலமாகப்போய்விட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுவே வீடியோ கேஸட் காலமாக இருந்தால் அப்படியே சுருட்டியிருக்கலாம்.
-
Raghavendhar sir,
Thanks a lot for posting the songs from 'Bombay Mail' and 'Panakkara Pillai'
I saw Bombay Mail when it was released. Ravichandran will appear then and there as Spider Man. A good entertainmnet movie.
'Manikka magudam sooti kondaaL' is wondeful composing by SMS.
-
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்புப் பாராட்டுக்கு நன்றிகள்.
மாணிக்க மகுடம் தான் தங்களுக்கு சூட்ட வேண்டும் 'மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள்' என்ற தேன் பாடல் தந்ததற்கு.
'பம்பாய் மெயில்109' படத்தின் "கட்டுவேன் கையில் உன்னை" பாடல் பதித்து மெய்மறக்க செய்து விட்டீர்கள். நான் தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை. அப்படிப்பட்ட பாடலை எதிர்பாராவிதமாகக் கொடுத்து நிலைகுனியச் செய்து விட்டீர்கள். என்ன பாடல் சார் அது! இதுவரை நான்கைந்து முறை பார்த்து விட்டேன். காதுகளில் முத்துக்குளிப்பவரை போகச் செய்து விட்டு கட்டுவேன் என் பாடலில் உன்னை என்று என் மனத்தைக் கட்டி விட்டீர்கள். சிரிப்பொலி ரவிச்சந்திரன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்ட விதம் அருமை. நன்றிகள் சார்!
'பம்பாய் மெயில்109' நானும் பார்த்திருக்கிறேன் சார், ஏதோ தீபாவளிக்கு வந்தது போன்ற நினைவு. நம் v.k.r. அவர்களின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன். கார்த்திக் அவர்கள் சொன்னது போல ஸ்பைடர்மேன் உடையில் (ப்ளூ அண்ட் ரெட்) ரவி வலம் வருவார்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் பாராட்டுக்கு நன்றி.
விஜயநிர்மலாவைப் பற்றி அழகாக கூறியிருந்தீர்கள். நல்ல திறமையான அழகான நடிகை. என் அண்ணனில் 'கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்' பாடலில் மிக அழகாக காட்சியளிப்பார். உயிரா மானமா படத்தில் கூட ஜெய்யின் ஜோடியாக வந்து நம் அன்புத் தலைவரின் மாபெரும் வெற்றிப் படமான
பட டைட்டிலின் வரிகளான 'சவாலே சமாளி...தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி'...பாடலுக்கும் விஜயநிர்மலா அற்புதமாகச் செய்திருப்பார்.
நீங்கள் குறிப்பிட்ட 'சங்கமம்' படம் தேனூறும் பாடல்களைத் தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட படம். அதில் குறிப்பாக 'ஒரு பாட்டுக்கு பலராகம்' என்ற டி.எம்.எஸ்ஸின் குரலில் ஜெமினி பாடுவதாக வரும் பாடல் என் உயிரைக் கொள்ளை கொண்ட ஒரு பாடல். அதுமட்டுமல்ல... 'கண்ணனிடம் கேட்டிருந்தேன் பிள்ளையொன்று வேண்டும்'..., 'வண்ணப் பூப்போட்ட சேலை கட்டி புதுப் பொண்ணு பக்கம் வந்தா'.., பாடல்களும் களை கட்டும். தேன் சொட்டும்..உங்கள் வண்ணப் பட பாடல்கள் லிஸ்ட் சூப்பர். இன்னும் இன்னும் அபூர்வமான அதிகம் கேட்காத ஆனால் உயிரை உருக்கக் கூடிய ரவியின் பாடல்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டி எடுத்து விடலாம் தங்களைப் போன்ற, ரசிகவேந்தர் போன்ற உண்மையான ரசிகர்கள் இருந்தால். அன்பு நன்றிகள் சார்.
தங்கள் ரசனைக்குத் தலை வணங்கும்,
வாசுதேவன்.
-
'பம்பாய் மெயில்109' படத்தின் ஸ்டில்
http://i1087.photobucket.com/albums/...vlcsnap-05.jpg
அன்புடன்,
வாசுதேவன்.