ராகதேவனே வருக வருக உமது கானமழையை பொழிக பொழிக
Printable View
//அருமை நண்பர் எங்கள் ஊர்காரர் சுவையான செய்திகளை சில்மிஷத்துடன் கலந்து தரும் சின்னக் கண்ணா//ஹையாங்க்.. மு்ரளி சார்.. என்ன இது.. தனியாகவெல்லாம் சொல்லிக் கொண்டு.. உருப்படியாக எதுவுமே நான் எழுதவில்லையே..:) நன்றி..
ஹாய் ராகதேவரே.. வாங்க வாங்க..
காலை (கலை) வணக்கம் அனைத்து நண்பர்களுக்கும்
சின்ன கண்ணன் சார் நீங்கள் ஊரில் இருந்து வரும் போது 12 வது பக்கத்தில் பதிவு செய்வேன் என்று சொன்னீர்கள் பக்கம் 12 இல் இருந்து காத்து கொண்டு இருந்தேன் :)
'காத்திருந்து காத்திருந்து ' வைதேகி காத்து இருந்தாள் நினைவு வந்து விட்டது தலை
ராஜேஷ் சார் காலை வணக்கம்
மதிப்பிற்கும் மாரியாதைக்குரிய மூத்த பதிவாளர் ராகதேவன் நம்ம திரியில் . மிகவும் மகிழ்ச்சி. அவரது வேறு பல திரிகளில் பல பதிவுகள் கண்டு வியப்புற்றேன் .உண்மையில் அவர் ஒரு ராகதேவன் .நமது திரியின் பல்வேறு பரிமாணங்களுக்கு விரிவடைய போகிறது என்பதை அவரது வருகை கட்டியம் கூறி விட்டது.
அவரை மீண்டும் ஒரு முறை வருக வருக என்று வரவேற்கிறேன்
dear ராஜேஷ் சார்
தெலுகு இசை அமைப்பாளர் விஜயா கிருஷ்ணமுர்த்தி உடன் ஜோசப் என்று ஒரு இசை அமைப்பாளர் இணைந்து இசை அமைத்த விஷயம் கேள்வி பட்டு இங்கு ஒரு பதிவு இட்டு இருந்தேன். அவரை பற்றி மேல் தகவல்கள் கிட்டுமா
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
குட்மார்னிங்க் ராஜேஷ்.. ம்ம் நேத்து ராத்திரி யம்மா.. ஓ. . நோ நேற்றிரவு தான் மஸ்கட் மறுபடி திரும்பி வந்தோம் (போய் இருந்தது ஜெபல் ஷாம்ஸ் என்ற மலைப் பகுதிக்கு..நாலரை மணி நேர டிரைவ்..) இனி மேல் தான் ஹோம் வொர்க் பண்ணணும்..
திரும்பறச்சே பிபிஎஸ் பாட்டாக் கேட்டேன்..
காதல் கொண்டாலே ஆடவர்கள் பாவம்..என்று இசையரசியும்..அதைச்சொன்னாலே என் ஆரம்பிக்கும் எல் ஆர் ஈஸ்வரியும் காதல் என்பது எதுவரை எனக் கேள்வி எழுப்பும் பிபிஎஸ் கல்யாணக் காலம் வரும்வரை எனச் சொல்லும் சந்திரபாபு என கலக்கலாய் ஒரு பாட்டில் ஆரம்பித்தது..
ஏதோ மனிதன் பிறந்து விட்டான்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவரென்றால் ஆசை வரும் முதியவரென்றால் பாசம் வரும்.. என நிறைய பாடல்கள்..
முந்தா நாளிரவு ஜெபல் ஷாம்ஸ் மலையில் மெல்லிய குளிரில் கொஞ்சம் வழக்கம் போலான என் கரகரத்த இனிமைக் குரலில் நான் எடுத்துக் கொடுக்க மற்றவர்கள் பாடி ஆடினார்கள்..பழைய பாடல்கள் கம்மி தான்..(
ம்ம் அப்புறம் வீட்டிற்கு வந்தால் களைப்பு தான்.. இன்றுடன் லீவ் முடிய நாளையிலிருந்து ரொட்டீன் லைஃப்..
ஹோம் வொர்க் பண்ணிட்டு மறுபடி வர்றேன்..:)
கிருஷ்ணமூர்த்தி விஜயா படங்களில் இசை உதவியாளராகவும் இசையமைப்பாளராகவும் இருந்தார். அதனால் அவர் பெயர் விஜயாகிருஷ்ணமூர்த்தி என்று டைட்டிலில் போடுவதுண்டு.
ஜோஸப் - பாப் இசையில் வல்லுனராக இருந்தார். குலேபகாவலி கதா படத்தொடக்கத்தின் போது ஜோஸப்பின் இசையை பயன்படுத்த நினைத்த என்.டி.ஆர்
அவரை அந்த படத்துக்கு இசையமைப்பாளராக்கி கிருஷ்ணமூர்த்தியை அவருக்கு உதவியாளராக்கினார். அப்படித்தான் அந்த படத்துக்கு இருவரும் இசையமைத்தனர்.
இது முன்பு சிமாட்ட மியுசிக் வலைதளத்தில் படித்ததாக நினைவு..
அருமையான தகவல் ராஜேஷ் சார்
விஜயா கிருஷ்ணமுர்த்தி சிம்ம நாதம் (என்டிஆர்,வாணிஸ்ரீ) தெலுங்கில் சிம்ஹ பெல்லடு டைட்டில் கார்ட் நினைவில் உண்டு . இசை எம் எஸ் விஸ்வநாதன் உதவி விஜயா கிருஷ்ணமுர்த்தி
ஜகன்மோகினி இசை விஜயா கிருஷ்ணமுர்த்தி
இசை அரசி செம பாட்டு ஒன்று உண்டே 'காதல் அலைகள் மேலே ஊஞ்சல் ஆடும் பெண்மை அழகு நதிகளே ஓட நீரோடைக்கு என்ன பிரேமை " சூப்பர் பாலா இசை அரசி ஹம்மிங் 'தன்னானே தன்னானே தன்னானே '
பொங்கி பிரவாகமெடுக்கும் ஹொகெனகல் அருவி உடன் இசை அரசியின் இசை அருவி
இதே போல் ஜகன் மோகினி படத்தில் முதல் பாடல் ஒன்று நினைவில்
உண்டு ' ராஜா ராஜா ராஜா ராஜா செந்தூரம் என் பூக்கள் '. இதுவும் இசை அரசி தானா ?
கிருஷ்ணா ஜி,
இதோ காதல் அலைகள் மேலே
https://www.youtube.com/watch?v=VP8Oa_D2mSw