குழந்தைகளான மக்கள்தலைவர் சிவாஜியின் அன்பு இதயங்கள்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 13.2.15 வெள்ளி அன்று வெளியான மக்கள்தலைவர் சிவாஜியின் தர்மம் எங்கே திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு. அனைத்து சினிமா ரசிகர்களும் தியேட்டர் அலங்காரத்தை வேடிக்கை பார்த்துவிட்டு தனது செல்போனில் போட்டோ எடுத்து சென்றனர். அது மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்து மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்டோ எடுத்து சென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மற்றவர்களே இப்படி என்றால் நமது ரசிகர்கள் சும்மா இருப்பார்களா படம் வெளியானதில் இருந்து தினமும் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்க்கு வந்திருந்து கலெக்சன் கேட்டுவிட்டு சென்றது சந்தோசமான செய்தி.
அனைவரும் ஞாயிற்றுக் கிழமைக்கு காத்திருந்தது போல் மாலை 6 மணி காட்சிக்கு 4 மணி முதலே வர துவங்கி விட்டனர். நான், vcs சார், வெங்கடேஷ் , பழனி , பாண்டி ஆகியோர் 5.15 மணிக்கு தியேட்டர்க்கு சென்ற போது 100 அடி நீளமுள்ள தியேட்டர் வாசல் முழுவதும் சரியான கூட்டம் வாசல் முழுவதும் ரசிகர்களின் தலைகளாகவே இருந்தது. கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே சென்றோம்.
பாவ மன்னிப்பு திரைப்பட்திலிருந்து எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் போடுவோம் என்பதற்காக தியேட்டர் உரிமையாளரை சந்திக்க சென்றோம், இந்த பாடலை திரையிடக்கூடாது என்பதற்காக சிலர் வேலை செய்தனர். எதற்கும் உரிமையாளரை சந்தித்து கேட்டுவிடுவோம் என்பதற்காக நானும் சந்த்ரசேகர் சாரும் சென்று கேட்டோம். கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர் உடனே சரி என்று சொன்னார்.
அதற்குள் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். கீழே ஆண்கள் டிக்கெட் மற்றும் ஹைகிளாஸ் டிக்கெட் புல்லாகி விட்டது. மேலும் எப்பொழுதுமே நமது தலைவர் படத்திற்கு வரும் பெண்கள் கூட்டம் இந்த படத்திற்கு சற்று அதிகமாகவே வந்திருந்தது.ஒவ்வொரு படத்திற்கும் நமது ரசிகர் கூட்டம் பெருகிக்கொண்டே வருவது மற்றவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
தியேட்டரில் வேலை செய்யும் ஒருவர் இவ்வளவுக்கும் காரணம் இவர் தான் இவருக்கு நன்றி சொல்லுங்கள் என்று சந்திரசேகர் சாரை காட்டினார். அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் இதன் வாயிலாக நன்றியை தெரிவித்து கொள்வோம்.
இடைவேளை வந்தபோது எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் திரியிடப்பட்டது. பாடலை பார்த்தவுடன் நாற்பது, ஐம்பது, ஏன் அறுபதை கடந்தவர்களும் தங்களது வயதையும் மறந்து ஒரு குழந்தையை போல் மாறி டான்ஸ் ஆடியது படத்தை பார்க்க வந்திருந்த மற்ற விநியோகஸ்தர்களையும் தியேட்டர் ஊழியர்களையும் பிரமிக்க வைத்துவிட்டது.
மற்றவர்கள், பொதுமக்கள், படவிநியோகர்தர்கள் அனைவரும் தியேட்டர் அலங்காரத்தை கண்டு பாராட்டினார்கள்.
இப்படி ஒரு பிரமாண்டமான அலங்காரத்திற்கு எனக்கு உறுதுணையாய் இருந்த வெங்கடேஷ், பழனி, ராஜன், குமார், சமூகநல பேரவையை சேர்ந்த பாண்டி, பச்சைமணி, சிவஜிசெல்வம், பத்மநாபன் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தியேட்டர் கொண்டாட்டம் போட்டோக்கள்.
http://i1369.photobucket.com/albums/...ps3fb8f012.jpg
http://i1369.photobucket.com/albums/...ps24c51631.jpg
http://i1369.photobucket.com/albums/...ps0b0f654b.jpg
http://i1369.photobucket.com/albums/...ps3b3b79c6.jpg
http://i1369.photobucket.com/albums/...ps0e71fa84.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.