பெருந்தலைவர்கள் தனியாரை நாடாது
அரசை நாடிருந்தால் அரசின் தரம்
அகில உலகவில் மாறியிருக்கும்
என்று மாறுவரோ
இந்த மன்னின் மன்னர்கள்.
-
கிறுக்கன்
Printable View
பெருந்தலைவர்கள் தனியாரை நாடாது
அரசை நாடிருந்தால் அரசின் தரம்
அகில உலகவில் மாறியிருக்கும்
என்று மாறுவரோ
இந்த மன்னின் மன்னர்கள்.
-
கிறுக்கன்
படைப்பில் பிழையில்லா உருவமும் இல்லை
குறையில்லா மனிதரும் இல்லை.
-
கிறுக்கன்
சுபநிகழ்வில் ஏற்றதாழ்வு பதிவாகும் இடம்
சீர்செய்யும் சீர்கெட்ட சபை.
-
கிறுக்கன்
முதலாம் ஆண்டு(1994)
எந்த துறை என்றபோது
மின் துறை என்றோம்
கேட்டவர் அவர் துறையா என
பயமுறித்தினார்கள்
பரிதாபப்பட்டார்கள்
இரண்டாம் அண்டு
மற்றவர்கள் பொறாமைப்பட்டனர்
நாங்கள் பெருமை கொண்டோம்
தங்கள் அன்பையும் அறவணைப்பையும் கண்டு
நீங்கள்...... சிங்கம் ஆகவே பயந்தனர்
நாங்கள்.... சிங்க குட்டிகள் :lol2:
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் Dr.Subburaj சார் மற்றும் நமது நண்பர்களுக்கு...
-
கிறுக்கன்
கொடைமறந்து கொடுத்ததை தானே கொண்டால்
கொடுத்தும் கெடுப்பான் இறைவன்.
-
கிறுக்கன்
தர்மத்தை நாம் மறந்து வாழ்வதால்
அதர்மம் நம்மை ஆள்கிறது.
-
கிறுக்கன்
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைக்காது
ஊமையாய் உள்ளத்தை ஊனமாக்கும்.
-
கிறுக்கன்
உற்றோரை உலுக்கி உறுத்தி உருகுலைத்திடும்
உற்ற உறவின் மனநோய் .
-
கிறுக்கன்
Hi kk and pp nga .....
Hope u both are well along with family!
Kk..... podunga onga manathil thondrum varigal..... to feast our mind heart and eyes... thank u in advance
திறன்சிறுத்த பெருலட்சியம் என்றும் ஏமாற்றம்
திறன்பெருத்த சிறுலட்சியமே ஏற்றம்.
-
கிறுக்கன்
மனிதரிடம் பற்று உன்னை புண்படுத்தும்
படைத்தவனிடம் பற்று பண்படுத்தும்.
-
கிறுக்கன்
எண்ணத்தில் நேர்மை நன்மைக்கு வழிகாட்ட
எதிர்மறையோ தீமையை தீண்டவைக்கும்.
-
கிறுக்கன்
கைபிடிக்க கைக்கூலி கேட்பவன் கணவன்
எனும் போர்வையில் கயவன்.
-
கிறுக்கன்
பசிபோக்கும் பணம் பலரிடம் உண்டு
மனமோ சிலரிடம் மட்டும்.
-
கிறுக்கன்
தனக்கும் முதுமை உண்டென உணராதவரால்
முளைக்கின்றன முதியோர் இல்லங்கள்.
-
கிறுக்கன்
இக்கரையல்ல எக்கரையும் வசபடாது உனக்கு
உன்மீது அக்கரையில்லை எனில்.
-
கிறுக்கன்
கருவிலேயே பிரபஞ்சத்தை அறிந்தாய் அதனால்
தனித்துவ உருவில் பிறந்தாய்.
-
கிறுக்கன்
சுலபமாய் கிடைத்ததால் உயிரையும் சில
உறவையும் நாம் மதிப்பதில்லை.
-
கிறுக்கன்
வாழ்க்கைதுணை உனது பூர்வஜென்ம பாவ
புண்ணியத்தை எடுத்துரைக்கும் கண்ணாடி.
-
கிறுக்கன்
நம்மை நோகடித்தவரை மன்னித்தலே நம்
மனதை குணப்படுத்தும் அருமருந்து.
-
கிறுக்கன்
நம்பிக்கை இல்லாதார்க்கு நம்பியவரின் நம்பிக்கை
யாவும் மூட நம்பிக்கையே.
-
கிறுக்கன்
வந்தவழி மறவாது வாழும் காலம்
யாவும் வசந்த காலமே
-
கிறுக்கன்
என்னால் எனது எனும் மாயை
மறையும் தருணம் மரணம்.
-
கிறுக்கன்
நல்லறம் நழுவாது நக்கிப் பிழையாது
நடுநிலை நிற்கும் நல்லூடகம்.
-
கிறுக்கன்
ஊர்பசி போக்க தன்பசி மறந்து
உழைத்து இளைத்தவன் விவசாயி.
-
கிறுக்கன்
நொடியை யுகமாக்கி தவிக்க வைத்து
தளர்த்திடும் முதுமையில் தனிமை
-
கிறுக்கன்
நான் காணாமல் போகவில்லை ஹப்தான் கைக்கு எட்டால் இருந்தது. திரும்ப கிடைத்த செய்தி கிடைத்ததும் தலைகால் புரியாத சந்தோஷம் எனக்கு!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சார்ந்து வாழாத தம்பதி சேர்ந்து
வாழ்வதில் பயன் இல்லை.
-
கிறுக்கன்
வீழ்த்தியவர் வியக்க வாழ்தல் மேன்மை
வீழ்த்த வாழ்தல் மடமை.
-
கிறுக்கன்
பிறப்பது இறப்பதற்கே என்பது உறைக்கும்
தருணம் நல்லுறவின் மரணம்.
-
கிறுக்கன்
நேர்மை பயணம் நெரிசல் இல்லாது
நிறைந்த நிம்மதி தரும்.
-
கிறுக்கன்
மனதியங்க இன்பமும் துன்பமும் உருப்பெறும்
மனதுறங்க பேரானந்தம் நிலைபெறும்.
-
கிறுக்கன்