http://i58.tinypic.com/2exbogi.jpg
Makkal Thilagam in my aunt's wedding1968.
Printable View
http://i58.tinypic.com/2exbogi.jpg
Makkal Thilagam in my aunt's wedding1968.
This month Femina tamil magazine has published an article with MGCB Pradeep.
http://i125.photobucket.com/albums/p...ps44f39b18.jpg
Page 1 of the article
http://i125.photobucket.com/albums/p...psc03d3a1b.jpg
Page 2 and 3 of the article.
http://i125.photobucket.com/albums/p...ps924a79f0.jpg
Most of us should have seen this image.
http://i125.photobucket.com/albums/p...ps9b809889.jpg
And the same reproduced in our MGR blog.
http://mgrroop.blogspot.in/2014/07/femina-tamil.html
http://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU
Sri Rama Rama Rameti, Rame Rame Manorame;
Sahasrenama tattulyam, Rama Nama Varanane
राम रामेति रामेति रमे रामे मनोरमे ।
सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥
Raama Raame[a-I]ti Raame[a-I]ti Rame Raame Manorame |
Sahasra-Naama Tat-Tulyam Raama-Naama Vara-[A]anane ||
Meaning:
1: By meditating on "Rama Rama Rama" (the Name of Rama), my Mind gets absorbed in the Divine Consciousness of Rama, which is Transcendental,
2: The Name of Rama is as Great as the Thousand Names of God (Vishnu Sahasranama).
The Greatest Leader/Chief Minister the World will ever see.
Our Thalaivar Song would have inspired Mohanlal and Kaithapram Damodaran Namboothiri:
http://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA
http://www.youtube.com/watch?v=0a7PI6jXD74
This could have inspired Mr.Lal may be because looks more or less similar too ! :-)
http://www.youtube.com/watch?v=P9GHMCQGlV8
எனது திருமண நாளன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த பேராசிரியர் திரு. செல்வகுமார் , திரு.வினோத் (பெங்களுரு ), திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் ), திரு யுகேஷ் பாபு,
தொலைபேசி மூலம் வாழ்த்துக்கள் நல்கிய திரு. சி.எஸ். குமார்,(பெங்களுரு ), திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் ), நேரிலும், அலைபேசி மூலமும் வாழ்த்துக்கள் தெரிவித்த திரு. எஸ். ராஜ்குமார் , திரு.பி.ஜி.சேகர், திரு. நசீர், திரு.மோகன்குமார், திரு. ஹயாத் , திரு. சங்கர் , திரு.பாண்டியன் , திரு. நாகராஜ் திரு. சாந்தகுமார் ஆகியோருக்கும் மிக்க நன்றி.
ஓங்குக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான மங்காத புகழ்.!!
ஆர். லோகநாதன்.
படம் : மக்கள் என் பக்கம், பாடல் : வாலி இசை. எம் எஸ் விஸ்வநாதன். முழுப் பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. சில வரிகள் :
http://i61.tinypic.com/b6qxwl.jpg
http://i61.tinypic.com/2e2i4ux.jpg
http://i62.tinypic.com/210y5xj.jpg
http://i61.tinypic.com/2nhkaps.jpg
எனக்குள் எம்.ஜி.ஆர் - காவியக் கவிஞர் வாலி
http://i59.tinypic.com/297o6u.jpg
http://i60.tinypic.com/2py822h.jpg
http://i58.tinypic.com/29aqm2e.jpg
http://i59.tinypic.com/32zj4o6.jpg
http://i62.tinypic.com/r76o0y.jpg
பெமினா இதழில் வந்த மக்கள் திலகத்தின் கட்டுரை மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் பதிவு
மற்றும் மதுரை நகரில் மக்கள் திலகத்தின் ''விக்கிரமாதித்தன் '' படம் அரவிந்த் அரங்கில் நடை பெறும்
தகவல் பற்றிய தகவல்கள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றி .
தமிழ் திரை உலகின் பொற் காலம் 1960-1970.
மிகப்பெரிய நடிகர்கள் - தயாரிப்பு நிறுவனங்கள் - சிறந்த இயக்குனர்கள் - அருமையான இசை அமைப்பாளர்கள் - பாடகர்கள் -பிரமாண்ட படைப்புகள் - வசூலில் வரலாறு படைத்த காவியங்கள் - வெள்ளிவிழா - சாதனைகள்
என்று தமிழ் சினிமாவை புரட்டி போட்ட இனிமையான காலம் .
1960-1970 - எம்ஜிஆரின் சாதனைகள் .
தென்னிந்திய திரை உலகில் அதிக இடங்களில் வெள்ளி விழா ஓடிய படம் - எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை -1965.
எம்ஜிஆர் கொடுத்த வெள்ளி விழா படங்கள் - 3
எங்க வீட்டு பிள்ளை -1965
அடிமைப்பெண் - 1969
மாட்டுக்கார வேலன் -1970
எம்ஜிஆர் கொடுத்த 100 நாட்கள் படங்கள் .
பாக்தாத் திருடன் - 1960
திருடாதே - 1961
தாய் சொல்லை தட்டாதே - 1961
தாயை காத்த தனயன் - 1962
பெரிய இடத்து பெண் - 1963
நீதிக்கு பின் பாசம் - 1963
பரிசு - 1963
வேட்டைக்காரன் - 1964
பணக்கார குடும்பம் - 1964
தெய்வத்தாய் -1964
படகோட்டி -1964
ஆயிரத்தில் ஒருவன் -1965
அன்பே வா- 1966
முகராசி - 1966
பெற்றால்தான் பிள்ளையா - 1966
காவல்காரன் - 1967
ரகசிய போலீஸ் 115- 1968
குடியிருந்த கோயில் -1968
ஒளிவிளக்கு -1968
நம்நாடு - 1969
என் அண்ணன் - 1970
எங்கள் தங்கம் - 1970
தமிழ் திரை உலகில் அதிக நாட்கள் - அதிக வசூல் - தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் என்று சாதனைகள்
புரிந்து முதலிடத்தை பெற்று சாதனைகள் நிகழ்த்தியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - வசூல் சக்கரவர்த்தி என்று எல்லா பத்திரிகைகளும் - வார - மாத இதழ்களும் - கூறியதை
தயாரிப்பளர்களும் - விநியோகஸ்தர்களும் ஒப்பு கொண்டுள்ளனர் ..
courtesy - panipookkal - net
1960-1970
எம்.ஜி.ஆர். நடித்த ஒவ்வொரு படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலை வாரிக் குவித்தது. அடிமைப்பெண் , ஆயிரத்தில் ஒருவன், திருடாதே, எங்கள் வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்று “வசூல் மன்னன்” என்ற பட்டத்தை அவருக்கு பெற்று தந்தது.
ஜனரஞ்சகமான விஷயங்கள் மக்களை எவ்வாறு கவர்கின்றன என்பதை அறிந்திருந்த எம்.ஜி.ஆர், தனது படங்களுக்கென தனியொரு சூத்திரத்தை வைத்திருந்தார். சிறப்பான பாடல்கள், பெண்களை கவரும் கதாபாத்திர அமைப்பு, இளைஞர்களை கவர சண்டைக் காட்சிகள் என அனைத்து அம்சங்களையும் கலந்து கொடுத்து தனது படங்களின் வெற்றிக்கு வழி வகுத்து வந்தார். திரைப்படம் என்பது மக்களுக்கு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அவர்களை நல்வழிப்படுத்தவும் சீர்திருத்தவும் பயன்படும் ஒரு சாதனமாக இருக்க முடியும் என்று மெய்ப்பித்தவர். எம்.ஜி.ஆர்
1967ல் தேர்தல் வந்த போது காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியனை எதிர்த்து தி.மு.க நின்றது. பரங்கிமலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆர். போட்டியிட வாக்கு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த நிலையில், எம்.ஜி. ஆருடன் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்வதற்காக அவரது ராமாவரத் தோட்டத்துக்கு வந்திருந்த எம். ஆர். ராதா, பேச்சில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டு விட, கழுத்துப் பகுதியில் குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது தவறை உணர்ந்து எம்.ஆர். ராதாவும் தன்னையே சுட்டு கொள்ள முயன்று அதே மருத்துவமனையில் சேர்க்கப்பாட்டார்.
அந்த நிலையிலயும் எம்.ஜி.ஆர்., ‘ராதா அண்ணனை பார்த்துக் கொள்ளுங்கள் … அவருக்கு தேவையான உதவிகளைச் செய்யுங்கள்’ என்று மருத்துவர்களிடம் வேண்டிக் கொண்டாராம். அப்போது நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், குண்டடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரின் புகைப்படம் பெரும் பங்கு வகித்தது. 1967 தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனார். ஆனால் அடுத்த ஆண்டே அண்ணாதுரை காலமாகிவிட கருணாநிதி முதல்அமைச்சர் ஆனார். அவர் முதல்வராக வேண்டும் என்று பாடுபட்டவர்களில் எம்.ஜி.ஆர். முக்கியமானவர். திரை உலகிலும் சரி, அரசியலிலும் சரி கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர்.
என் தந்தையார் எங்களை பெரும்பாலும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத்தான் அனுமதிப்பார். பிளட் அண்ட் ஸான்ட், டயர்ன் பவர், டார்ஜான், மற்றும் ஏரால் பிளைன் போன்றவர்களின் சாகசப் படங்களாகவே அவை இருக்கும்.
சற்றேறக் குறைய எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களும் அம்மாதிரி சாகசங்களை வெளிப்படுத்தும் படங்களாக இருந்ததால் அந்த ஆங்கில நடிகர்களின் மீது எனக்கு இருந்த மோகம் இவர் மீதும் இருந்தது. தமிழ் நாட்டின் ஏரால் பிளைன் என்றே நாங்கள் அழைப்போம்.
எனவே முதன் முதலாக – அதுவும் சற்றும் எதிர்பாராமல் அவரது வீட்டிலேயே எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்ததும், அவர் அன்போடு என்னைப் பற்றி விசாரித்ததும் எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டது.
அதன்பிறகு நான் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக படத்தோழிலுக்கு வந்த பிற்பாடு எம்.ஜி.ஆரிடம் எனது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிக் கொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் தந்தையார் ஒரு வண்ணப்படம் எடுக்க முடிவு செய்தார். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் அசோகன் ‘ அண்ணே அண்ணன் எம்.ஜி.ஆரைப் போட்டு ஒரு படம் எடுங்கண்ணே’ என்று என்னிடமும் என் சகோதரரிடமும் சொல்லுவார். அவர் அப்போது எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்து வந்தார்.
தொழில் ரீதியாக சின்னாப்பத் தேவரோடு ஏற்பட்ட பழக்கத்தினால் நான் அடிக்கடி தேவரைப் பார்க்க அவரது செட்டுக்குப் போவேன். அங்கே எம்.ஜி.ஆர்., அசோகன் இருப்பார்கள். நான் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழக தேவரும், அசோகனும்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.
எங்கள் தந்தையார் பிரம்மாண்டமான அளவில் வண்ணப்படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்த போது எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைத்து எடுத்தால் என்ன என்று நாங்களும் நினைத்தோம். தந்தையும் சம்மதிக்கவே எம்.ஜி.ஆரைச் சந்தித்து எண்ணத்தைச் சொன்னோம்.
அவர் மகிழ்ச்சியுடன் எங்கள் எண்ணத்தை ஏற்றார். ‘அன்பே வா’ இப்படித்தான் ஆரம்பமாயிற்று. இதன் பிறகு அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அப்போதுதான் அவரது லட்சிய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும், அவரது பல நற்பண்புகளையும் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது.
‘வசதியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அதில் எளிமை இருக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது’ என்பார். இம்மாதிரி எடுத்ததற்கெல்லாம் அவர் புத்திமதி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனல் போ போகத்தான் அதன் அருமையையும், பெருமையையும் உணர ஆரம்பித்தேன்.
இப்படித் தன்னிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் நல்ல பண்புகளை, நல்ல பணழக்கங்பகளை அவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தி வந்திருக்கிறார்.
தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தன் பட உலக ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துவிட்டு வீரமும் ஒழுக்கமும், படிப்பினையும் வளர்த்துக் கொண்ட ரசிகர்கள் ஆயிரமாயிரம் உண்டு. படங்களில் மட்டும் அவர் நல்லவராகத் தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் அவற்றைக் கடைபிடித்து வந்ததுதான், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை மலைபோல் குவித்தது.
இப்போதும் நானோ அவரோ சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் முதலாளி என்று சொல்லிக் கொள்ள போட்டி போடுவோம். பெரும்பலும் அவர் முந்திக் கொண்டு விடுவார்.
முதல் அமைச்சராக பதவி ஏற்ற போது அவரை வாழ்த்தி மாலை அணிவிக்கச் சென்ற போது ‘ இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு முதலாளி’ என்று சொன்னேன்.
A.V.M. Saravanan
1960 களில் எம்ஜிஆரை பற்றி திரை உலகில் ஒரு சிலரின் கருத்து
எம்ஜிஆருக்கு சமூக படங்களில் நடிக்க தெரியாது
எம்ஜிஆருக்கு மேல் தட்டு ரசிகர்கள் கிடையாது
எம்ஜிஆர் வயதானவர் ...
எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சொந்தமானவர்
திரை உலகில் அவருக்கு எதிர்காலமில்லை .... என்றெல்லாம் ஒரு சிலரால் பதிவு செய்யப்பட்டது . காரணம் 1959 ஆண்டு முழுவதும் மக்கள் திலகம் விபத்து காரணமாக ஓய்வில் இருந்தார் .
பிரபல திரைப்பட நிறுவனங்கள் - பிரபல நடிகர்கள் இந்த தருணத்தை பயன் படுத்தி கொண்டதையும் கவனிக்க வேண்டும் .
1960 -மக்கள் திலகம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார் .
சமூக படத்தில் தன்னால் சிறப்பாக நடித்து வெற்றி பெற முடியும் என்பதை நிருபித்து காட்டினார் .
பின்னாளில் படத்திற்கு படம் வித்தியாசமான தன்னுடைய நடிப்பினை வழங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்பதை அகில உலகமே பாராட்டிய வரலாறு
மறக்க முடியாது .
எம்ஜிஆரின் புகழ் இன்று எந்த அளவிற்கு சென்றுள்ளது என்பதை நம் இனிய நண்பர்
திரு பம்மலார் கூறிய தகவல்கள்
அம்பத்தூர் முதல் ஆஸ்திரியா
விருதுநகர் முதல் வியட்நாம்
அமெரிக்கா - பிரான்ஸ் - மலேசியா - லண்டன்
கன்னியாகுமரி - கோவை - துபாய் என்று எல்லா எல்லைகளை தாண்டி மக்கள் திலகத்தின்
தீவிர ரசிகர்கள் '' உலகம் சுற்றும் வாலிபன் '' தலைப்பிற்கு ஏற்றவாறு ரசிகர்கள் வியாபித்திருப்பது
எம்ஜியாரின் புகழை - ரசிகர்களின் ஆதரவை நினைத்து பெருமை பட வேண்டும் .
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=OAUZKOt3npc
1971-1977
தமிழ் திரை உலகில் மக்கள் திலகத்தின் படங்கள் படைத்த சாதனைகள் .
ரிக்ஷாக்காரன் - 1971 - பாரத் பட்டம் பெற்ற படம் .
நல்ல நேரம் - 1972 1972ல் சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் .
உலகம் சுற்றும் வாலிபன் - 1973- 1977 வரை வசூலில் முதலிடம் .
உரிமைக்குரல் - 1974- ஸ்ரீதரின் அமுத சுரபி
இதயக்கனி - 1975- வரலாறு படைத்த காவியம்
நீதிக்கு தலை வணங்கு - 1976
மீனவ நண்பன் - 1977
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத மாபெரும் நடிகராக , தனி திறமைகளுடன் , பல சாதனைகள் புரிந்து வாழ்கிறார் என்று பிரபல தமிழ் சினிமா மாத இதழ்
''பேசும் படம் '' வெளியிட்டிருந்த கட்டுரை .
http://i58.tinypic.com/2wcmuyr.jpg
http://i61.tinypic.com/317fqxz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அன்புள்ள செல்வகுமார் சார்
தாங்கள்தான் சரியாக இந்த பதிவை தொடக்கம் முதல் படிக்கவில்லை அல்லது சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று நினைகிறேன். பிரித்து பார்த்ததால் வந்த விளைவு என்று நினைக்கிறன்,. சேர்த்து பார்த்தால் எதற்கு என்பது விளங்கும்.
இருந்தாலும் பரவா இல்லை . உரைத்தது என்னுடைய எண்ணம்தான் . இந்த பதிவிற்கு தான் சார் !
rks
http://i1170.photobucket.com/albums/...psea559136.jpg
எனக்கான அன்னம் எம்.ஜி.ஆர். என்னும் பச்சை வயலிலும், எனக்கான ஆடை எம்.ஜி.ஆர். என்னும் பருத்தி விதையிலும் விளைய வேண்டுமென விதித்தது யார்?
ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தில் குந்திக் கிடந்த குயிலுக்கு ராமாவரம் தோட்டத்து ராஜகோகிலமாகி ராப்பகல் ராமச்சந்திரன் புகழைக் கூவிக்கிடக்கும் கொடுப்பினையைக் கூட்டிவைத்தது எது? என்ற கேள்வியோடு கட்டுரை தொடங்குகிறது. விதி என்கிறார் வாலி. அவரது தமிழ் என்பதுதானே உண்மை மொழி.
கதாநாயகனுக்கான பாட்டாக எழுதாமல் எம்.ஜி.ஆருக்கான பாட்டாக எழுதியதால்தான் அந்தப் பாடல்கள் வலிமை பெற்றன. ஆரம்பத்தில் பல வரிகளுக்கு எம்.ஜி.ஆரே பயந்துள்ளார். ஆனால் துணிந்து வாலி பயன்படுத்தி இருக்கிறார்.
நான் ஆணையிட்டால் என்பதற்கு முதலில் நான் அரசனென்றால் என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார் என்று எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்தான் பின்னர் மாற்றியிருக்கிறார். நீர் காதல் பாட்டு எழுதினா ரெண்டு மூணு அர்த்தம் வர்ற மாதிரி எழுதுறீரு. என்னுடைய சோலோ பாட்டு எழுதினா அதுல ஏகப்பட்ட அர்த்தங்கள் வர்ற மாதிரி எழுதுறீரு. அது ஆளுங்கட்சிக்கு அலர்ஜியா இருக்குது.
பாட்டைக் கொண்டு பதவியில இருக்கிறவங்கள பயமுறுத்துற கவிஞர் நீர்தானய்யா என்று எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். வாலி ஆகிய இருவர் மூலமாக அரை நூற்றாண்டு கால அரசியல், திரையுலகம் என இரண்டையும் உணர முடிகிறது. அதையும் தாண்டி தமிழ் தளும்பிப் பொங்குகிறது.
- ' நான் கண்ட எம்.ஜி.ஆர் ' என்ற கவிஞர் வாலியின்
நூலைப் ஜூனியர் விகடன் இதழில் வந்த கட்டுரை .
thanks boominathan aandavar
http://i1170.photobucket.com/albums/...psc0726464.jpg
http://i1170.photobucket.com/albums/...ps5d4e20e0.jpg
thalaivar with kpk
in vali residence
http://i1170.photobucket.com/albums/...ps9d9e5663.jpg