சுந்தரராஜன் சார்
தாங்கள் பதிவிட்ட மலரில் இருந்து பிரதி எடுக்கமுடியவில்லை
சில பிரதிகள் தேவை எப்படி முடியும்?
Printable View
இன்று மாலை சரியாக 6.30 மணி அளவில் மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் முன்னிலையில் திருச்சி கலைஅரங்கம் (தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஏ சி அரங்கம் ) கட்டபொம்மன் படம் திரையிடுவது என முடிவாகி விட்டது. தியேட்டர் நிர்வாகத்தினர் மிகவும் பிரியப்பட்டு படத்தை போடுகின்றனர். தியேட்டர் நிர்வாகியும் முன்னாள் அமைச்சர் திரு.மரியம் பிச்சை அவர்களின் துணைவியருமான திருமதி கஸ்துரி அவர்கள் படத்தை பற்றி மிக உயர்வாக கூறியதோடு இந்த தலைமுறை அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டுமெனவும் கூறினார். தியேட்டர் உள்ளேயும் வெளியேயும் என்ன அலங்காரம் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...9dd373ca1707c0
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...9a6c881affdd05
திரு ஜோ அவர்களுக்கு வணக்கம் - சிவாஜியும் ஒரு சினிமாப் பைத்தியமும் என்ற ஈர்ப்பான தலைப்பில் திரு வேணுகோபாலன் ரெங்கன் அவர்களின் இப்படைப்பு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது . சில உண்மைகள் , திரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன - உதாரணத்திற்கு " சாந்தி " படம் படு தோல்வி என்று ஒருவர் எழுதி இருக்கிறார் . இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி ஒரு புதிய சிந்தனையை எழுப்பிய படம் - வசூலிலும் , ஒடிய நாட்களும் ( 100க்கு மேல் ) இவை இரண்டிலும் இந்த படம் ஒரு சரித்திரம் படைத்தது - நம் திரியிலும் இதற்க்கான ஆவணங்கள் தரப்பட்டுள்ளன . நன்றாக ஓடி சரித்திரம் படைத்தப்படங்களைக்கூட நாம் தோல்வி என்று சொல்லி ஒரு உண்மையை பொய்யாக்கிக்கொண்டிருக்கிறோம் . ஆனால் சிலரோ ஓடாத படங்களை சரித்திரமாக்கி கொண்டிருக்கின்றார்கள் - நாம் அந்த வகையை சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் ஒரு உண்மையை , உண்மையாக எழுதுவோமே ! கர்ணனையும் தோல்வி படம் என்றே ஒரு கால கட்டத்தில் சிலர் விமர்சித்தனர் - ஆனால் காலம் அவர்களுக்கு கருணை காட்டவில்லை . "கப்போலோட்டிய தமிழன் " தோல்வி என்றனர் சிலர் - சரித்திரம் படைத்தது பின் வந்த வெளியீட்டுகளில் - இனி இப்படி யாருமே நடிக்க முடியாது என்ற பெயரை வாங்கித்தந்தது இந்த படம் .
உங்களை பற்றிய பதிவு இது இல்லை - உண்மை தெரியாமல் , புரிந்துகொள்ளாமல் , விவரங்களை சரியாக அலசாமல் அப்படி எழுதினவர் மீது எனக்கு வந்த கோபத்தினால் என் கருத்துக்களை உங்களிடம் உரிமையுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
அன்புடன்
ரவி
அன்பு நண்பர் நெய்வேலி வாசு சாரின் இரு அற்புதமான பதிவுகளும் திரு ரவி அவர்களின் செஞ்சோற்றுக் கடன் தொடரின் முதல் பகுதியும் மிகவும் அருமையாக உள்ளன. இதைப் பற்றிய கருத்துரைகளை விவாதிக்க இடைவெளியின்றி வேறு பல பதிவுகள் இடம் பெற்றுள்ளன. கடமையைச் செய்வோர் செய்யட்டும். அதற்காக மற்றவர்களை இடித்துரைக்கும் போக்கு கண்டனத்திற்குரியது. இதில் கடமையைத் தட்டிக் கழிக்கும் கேள்வி எங்கிருந்து வந்தது. அவரவர்க்கு இருக்கும் அணுகுமுறையில் தலைவரைப் பற்றிய கருத்துரைகளை இடுகிறார்கள். மாற்று முகாமுடன் எல்லோரும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லையே. விவாதிக்க விருப்பமுள்ளோர் விவாதிக்கட்டும். அதற்காக மற்றவர்களை இடித்துரைப்பதும் இழித்துரைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் திலகம் புகழ் பரப்பும் பணியில் என்னுடைய கடமையாக எனக்கென்று சில வழிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இதே போல மற்றவர்களும் அவரவர்க்கென்று சில வழிமுறைகளை வைத்துக்கொண்டு ஆற்றி வருகிறார்கள். சாதனைகளைப் பற்றிய விவாதங்களை கருத்துப் பரிமாற்றங்களை வழிமுறைகளை மேற்கொள்ள தங்களைப் போன்ற மற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். கடமையைச் செய்பவர்களிடம் ஆவணங்கள் இருக்கக் கூடும். அவ்வாறு இல்லாதவர்கள் அவரவர்க்கென உள்ள வழிமுறையில் நடிகர் திலகத்தின் புகழ் பாடுகிறார்கள். எனவே கடமை எனக் கூறி மற்றவர்களையும் வம்புக்கிழுப்பது முறையன்று.
வாசு சார்
விடுதலை நாள் என்றாலே வழக்கமான பாடல்களாக கப்பலோட்டிய தமிழன், பாரதவிலாஸ் எனப் பாடல்களை எல்லோரும் மேற்கோள் காட்டி எழுதும் போது, அதிகம் அறியப்படாத சந்தனத்தேவன் என்ற விடுதலைப் போர் வீரனின் கதையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட நாம் பிறந்த மண் பாடலை எடுத்து எழுதியதற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்தலைவரைப் போற்றி எழுதப்பட்டு நடிகர் திலகம் நடித்த இப்பாடலை, நடிகர் திலகத்தின் ரசிகர்களாகிய நாம் என்றும் மறப்பதில்லை. பெருந்தலைவர் பெயரைச் சொல்பவர்கள் தான் மறந்து விடுகிறார்கள். ஒரு வேளை இப்படம் 1975க்கு முன் வந்திருந்தால் அவர்களெல்லாம் இதை நினைவு படுத்திக்கொள்வார்களோ என்னவோ.
இந்த வரிகள் இன்றைய காலகட்டத்தில் திரையரங்கில் விண்ணதிரும் கரகோஷத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை.Quote:
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென உதறியவன்
ஏதும் தேவையில்லையென உதறியவன்
அதுவும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்தின் முன் நின்று நடிகர் திலகம் நெஞ்சு நெகிழும் வண்ணம் பாடி நடிக்கும் போது கால வித்தியாசம் பார்ப்பவர்கள் மனம் உருகாமலா போய் விடும்...
தங்களின் நினைவூட்டலுக்கு மிக்க நன்றி வாசு சார்.
தொடர்ந்து தங்களின் பங்களிப்பில் நடிகர் திலகத்தின் அபூர்வமான பாடல்கள், காட்சிகள் தங்கள் எழுத்தோவியத்தில் மிளிர வேண்டுகிறேன்.
ரவி
செய்நன்றிக் கடன் மிகவும் அருமையான தலைப்பு. நடிகர் திலகம் தன்னுடைய நன்றிக்கடனை செலுத்தாமல் இருந்ததில்லை. அதே போல் அவருக்கு மற்றவர்கள் நன்றிக்கடன் செலுத்தியதை அனுபவித்தவருமில்லை. ஆனால் அவருடைய கதாபாத்திரங்கள் மூலம் நன்றியினை மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார்.
ஒரு மனிதன் அடிப்படையில் தன் பெற்றோருக்கும் அதற்கடுத்தபடியாக தன் மனைவிக்கும் தன் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டவனாகிறான்.
அயலாரிடம் அவன் தன் நன்றிக்கடனைத் திருப்பி செலுத்தி அதை நேர் செய்ய வாய்ப்புண்டு.
ஆனால் தன் பெற்றோருக்கும் அதன் பின் தன் மனைவிக்கும் அவன் எவ்வாறு செலுத்துவான்.
மெல்லிசை மன்னரின் இசையில் பியானோ இசைக்கருவியின் இனிமையான ஒலி துணை வர, பாடகர் திலகத்தின் இனிமையான குரலில் உணர்வு மேலிட, வாலியின் வைர வரிகளுக்கு நடிகர் திலகம் தன் நடிப்பால் அளித்திருக்கும் இந்த முக பாவம், ஈரேழு உலகங்களிலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இவரைப் போல் ஒருவன் வரமுடியாது எனக் கட்டியம் கூறுவதை இந்தப் பாடலை ஓர் உதாரணமாகக் கொண்டு நாம் அறியலாம். அதுவும் இந்த வரிகள்
எந்தக் கடலினும் மிகப் பெரிது
நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட எண்ணும் போது
பல பிறவிகள் தேவை...
என்ன அருமையான வரிகள்...
https://www.youtube.com/watch?v=SxeODtxmL9M
Dear sir
I had replied in general about those who comfortably slip when any debate that happens. I implied you too in that list. I Dont ask anybody to fight with anyone. Seniors like you who know the truth can clarify any wrong news that gets spread. Similarly, Mr. Pammalar. He claims rather claimed so many things during many discussions but now, he keeps mum. He may be bothered about his business, that's a different story. But those who know the true and correct information keep quiet quoting philosophical proverb just like what you did, then what sanctity or loyalty that we are talking off, when we are not even bothered about lies being spread by few people?..
Regards,
rKS
I insist and strongly believe what I said. It is not a philosophy but a fact. I repeat.
Quote:
மனசாட்சி உள்ளவருக்கு விளக்கத் தேவையில்லை.
மனசாட்சி அற்றவருக்கு விளக்கிப் பயனில்லை.
TODAY 11.00AM WATCH SUNLIFE TV
http://i57.tinypic.com/4sla9f.jpg
இது படைப்புகளின் நேரம்...
ஒரு தாய்க்கு குழந்தைகளின் அஞ்சலி...
மெல்லிசை மன்னரின் படைப்புகள் அவருக்கு செலுத்தும் அஞ்சலி...
http://i1146.photobucket.com/albums/...pszmxosiuv.jpg
அன்புள்ள சிவா சார், திரிசூலம் வசூல்சாதனை மலர் ஈ-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய ZOOM IN பக்கத்தில் உள்ள ICON ஐ கிளிக் செய்தால் பதிவிறக்கம் ஆகும். ANDROID கைபேசி உள்ளவர்கள் Adobe Reader INSTALL செய்தால் ஈ.புத்தகத்தை கைபேசியில் பார்க்கலாம். நன்றி.அன்புள்ள சிவா சார், ஈ-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய ZOOM IN பக்கத்தில் உள்ள ICON ஐ கிளிக் செய்தால் பதிவிறக்கம் ஆகும். ANDROID கைபேசி உள்ளவர்கள் Adobe Reader INSTALL செய்தால் ஈ.புத்தகத்தை கைபேசியில் பார்க்கலாம். நன்றி.
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
சுந்தர்ராஜன்
அருமை நண்பர் எத்திராஜ் அவர்களின் திரிசூலம் மலரைப் பத்திரமாக வைத்திருந்து இன்று பார் போற்றும் வண்ணம் இணையக் கோப்பாக மாற்றி எல்லோரும் உண்மையை உணரும் வண்ணம் அளித்துள்ள தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த மலரில் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய நண்பர்கள் சிவா எ சிவானந்தம், கதிர் காமநாதன், மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து என உலகெங்கும் அந்நாட்களிலேயே இருந்த குறைந்த பட்ச வசதியான அஞ்சல் தலை மற்றும் உறைகளின் பயன்பாட்டுடன் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதும், அவற்றைத் தொகுத்து மலராய் வெளியிட்டதும் எத்துணை சிரமம் என்பதை அறியலாம்.
சிவாஜி ரசிகர் மன்ற மலர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அதில் வசூல் நிலவரங்கள் 99 சதம் நம்பலாம். ஒரு சதவீதம் அச்சுக் கோப்பை சரிபார்க்க நேரமில்லாமல் வெளிவந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களினால் நிகழ்ந்திருக்கலாம்.
ஏனென்றால் இந்த வசூல் விவரங்களனைத்தும் திரையரங்குகளில் ரசிகர்கள் சென்று டிசிஆர் எனப்படும் ஆவணங்களிலிருந்து சேகரித்துக் கொண்டு வந்தவை. நாங்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு அவரவர் ஊர்களில் வசூல் விவரங்களைத் திரட்டி நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு தொகுப்பாக அந்தந்த ஊர்களில் மலர்களாக வெளியிட பங்களிப்பு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலிருந்தும் எனக்கு மலர்கள் போஸ்டர்கள் போன்றவை வந்துள்ளன. நானும் அனுப்பியுள்ளேன். கால ஓட்டத்தில் பலவற்றை என்னால் பேண முடியாமல் போய் விட்டது. நான் முன்பே பலமுறை சொன்னது தான். தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு ஆற்றியுள்ள பணி மகத்தானது. அதில் ஒவ்வொருவரின் உழைப்பும் ஈடு செய்ய முடியாததாகும்.
இதில் இவருடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்கள் என பேதம் பார்க்க முடியாது. ஒரு படம் அவர்களது வசூல் அதிகம் என்றால் அடுத்த படம் நம்முடையது அதனை மிஞ்சுவது இயல்பு, நடந்த உண்மையும் கூட. இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். பணமா பாசமா படம் இரு திலகங்களின் பட வசூலையும் முறியடித்ததும் நடந்துள்ளது. இவை யாவையுமே மக்களின் வரவேற்பு திரைப்படங்களுக்கு கிடைப்பதைப் பொறுத்தது.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் இந்த மலர்களில் உள்ள விவரங்களை நம்பாதவர்களுக்கு அதை நிரூபிக்கும் வண்ணம் ஆவணங்களை சான்றாகக் கொண்டு வருவது கடினம். திரையரங்குகளின் பல்வேறு விதமான கணக்கு வழக்குகள், ஒரே வளாகத்தில் பல்வேறு திரையரங்குகள், பல்வேறு காட்சிகள், பல்வேறு திரைப்படங்கள் என வளர்ந்து விட்ட காலத்தில் அவர்கள் அந்நாளைய ஆவணங்களை நாம் கேட்டாலும் தரக்கூடிய நிலையில் இருக்க மாட்டார்கள்.
இவற்றை அரசிடமும் நாம் கேட்டுப் பெற முடியாது. சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களையோ ஆவணங்களையோ அரசுத்துறைகளிலிருந்தும் பெற முடியாது. அதை வைத்திருப்பார்கள் என்பதையும் உறுதியாகக் கூற முடியாது.
இவ்வாறான சூழ்நிலையில் விவாதங்கள் ஒரு அளவிற்கு மேல் நம்பகத்தன்மையை இழக்கும் வாய்ப்பு அதிகம்.
நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பொறுத்த மட்டில் பலவிதமாக அவற்றை அவர் படங்கள் புரிந்துள்ளன. வசூல் விஷயத்திலோ ஊதிய விஷயத்திலோ அவர் யாருக்கும் குறைந்தவர் அல்ல. அவரைக் குறைத்து எடை போட நினைப்பவர்கள், ஒன்று காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாக இருக்க வேண்டும், அல்லது தமிழுணர்வு சிறிதும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடம் மனசாட்சி என்பது சிறிதும் இருக்காது. அதே போல மனசாட்சி உள்ளவர்கள் அவருடைய சாதனைகளை நிச்சயம் புரிந்து கொண்டி்ருப்பார்கள். எதையும் அலசி ஆராய்ந்து உண்மையை உணரும் மனம், நிச்சயமாக மனசாட்சி உள்ளவர்களுக்கு இருக்கும்.
நாளிதழ்களில் விநியோகஸ்தர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ தந்திருக்கக் கூடிய விளம்பரங்ளே இன்றைய கால கட்டத்தில் வசூல் சாதனைகளை நிரூபித்துக் காட்டக்கூடிய ஆவணங்களாகும்.
இந்த அடிப்படையிலேயே நாம் சாதனைகளைக் கூறுவதற்கான அணுகுமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் அதுவரை இல்லாத சாதனையைச் செய்த திரிசூலம் வசூல் விவரங்களை மலராகத் தொகுத்து வெளிியிட்ட எத்திராஜ் அவர்களுக்கும் அதனைப் பேணிப் பாதுகாத்து இன்று நமக்களித்த தங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
ரவி ,
அது ஒரு விவாதம் .. அதில் பல கருத்துகள் வரும் ..அதில் அன்னப்பறவை போல நமக்குள்ளதை எடுத்துக்கொள்வோம்.
அதனால் தான் இது போன்ற பகிர்வுகளில் அதன் உள்ளடக்கத்தை முழுவதும் வெட்டி இங்கே ஒட்டுவதற்கு பதில் இணைப்பு சுட்டியை மட்டும் பகிர்ந்து கொள்வேன் .
புரிதலுக்கு நன்றி .
Dear Sir,
Even if it is our house Mirror, it is we who have to go and stand infront of it to see our face.
Mirror cannot come to us and stand infront of us so that it shows our face.
Ideology differs...I do agree !
But, I would consider, quoting different proverbs or philosophy rather than mentioning fact to drive away lies, is only a route for escapism !
If we fall down and get seriously bruised, we have to either go to the doctor to take treatment or apply medicine to get it alright.
We cannot say, it is all fate and everything Mela irukkaravan paaththuppaan and sit simply ! It will only end up in Septic !!
Also, we cannot say at a later point that the road they had laid is not correct and I know it quite sometime back itself from my experience of travelling by that road.. If they are honest, they should have laid the road properly. So, there is no point in telling them...!
That's the point that am driving !
Regards
RKS
Dear RKS
It's your stand and not necessarily I should take it. Don't use escapism and all that to blame me. There is nothing reasonable for you to blame me and say I am taking escapism. If you are able to, you can have your own ways and means and I would fully appreciate your initiatives. But do not dare to put blame on me. I have done all that you are doing or want me to do, long back and I shall be more happy to see you succeed in your ventures.
What I have said is fact and not a philosophy or proverb to quote but a fact that we have come across in past four decades in our experience.
I have clearly explained my views in my reply to Sundararajan. I think it's more than enough.
படம் .பைலட்பிரேம்நாத்
பாடல். இலங்கையின் இளம்குயில்.
இலங்கையின் இளம்குயில் என்று நடிகர்திலகம் பாடிவரும்போது, இலங்கையின் பாரம்பர்ய ஆடை அணிந்து நடனமாடிவரும் மாலினிபொன்சேகா
அடுத்த வரியான
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட என்று அவர் பாடி வரும்போது தமிழ்நாட்டின் பாரம்பர்ய உடையான சேலை அணிந்து ஆடி வருவார்.
நாட்டையும்,மொழியையும் தாண்டியது காதல் என்ற ஒரு கருத்தை பாடல் வரிகள் விளக்கும் அதே சமயம் அந்தத் திரைப்படம் இந்தியா இலங்கை நல்லிணக்கத்திற்காகஇரு நாடுகளும் இணைந்து தயாரித்த கூட்டு தயாரிப்பு என்பதை யும் அது நினைவு படுத்துவதாக உள்ளது.
http://i1065.photobucket.com/albums/...psvah5bszd.jpg
http://i1065.photobucket.com/albums/...ps5x9lk8sb.jpg
××××××××××××××××××××××××××××××××××××××××××
ஒஹ்...பெம்வதி... ஒஹ்..பெம்வதா ..
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
நாடுகளையும் மொழிகளையும் தாண்டி
உன் நடிப்பு எல்லா உள்ளங்களாலும்
ரசிக்கப்படும்.அதற்கு சாட்சி நாடுகள் வழங்கிய கௌரவங்கள்.
ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பறிமாற
உன் எண்ணங்கள் வழங்கிய நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலையும் ஏடுகள்.
இலங்கையின் இளங்குயில் உன்னோடு இசை பாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
எத்தனை பிறப்பு எடுத்தாலும் உனக்காகவே நாங்கள்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
எத்தனை ஜென்மங்களாயினும்
எங்களின் தலைவன் நீதான்.
விலகாத சொந்தமிது பலகால பந்தமிது விலகாத சொந்தமிது பலகால பந்தமிது
நம் சொந்தம் எப்போதும் தொடரும்.
முடிவே இல்லாதது.
இணை சேரும் நூலிழை போல் இணைந்தேன் உன் நூலிடை மேல்
பிரிக்கமுடியாது
உன் நினைவுகளை
எங்களிடம் இருந்து ...
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ ஆஆஆஆ...ஓஓஓஓஒ...ஓஓஓஒ..
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
நீதானே எங்கள் வழிகாட்டும் கோயில்
வளரும் நம் உறவுகளை வாழ்த்துகின்ற வேளையிது
கடல் வானம் உள்ளவரை கணம்தோறும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம் திகட்டாத மோஹன ராகம்
கலையாது உன் புகழ்
வானும் கடலும் உள்ளவரை.
காலம் காலமாய்
தமிழ் மொழி போல்
திகட்டாது என்றும்
உன் நடிப்பு ரசம்.
இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
Dear Sir,
FOUR DECADES YOU KEPT QUIET & YOU WANT TO EXTEND IT TO FIFTH DECADE TOO :bow: ????? AMAZING SIR !!!! NOW I AM ABLE TO REALISE, WHY TRUTH TOOK / TAKING SO MUCH TIME TO COME OVER LIES !!!! :clap:
Am not blaming you. I think you are deliberately ignoring the point that is driven. I do appreciate and know your efforts in providing authenticated information without any bias in your hay days and certainly hats off to you!
Am just asking to repeat it when it is needed most. Both yourself and Mr. Pammalar (from the past year) are keeping quiet despite knowing the fact that wrong information is being spread. Not even once, an attempt is made from your end or Mr. Pammalar (from the past year) on mentioning the correct information which you guys have mentioned earlier. Not even, you are prepared to provide the link of the old materials here.
Instead, you choose to say, philosophical proverbs thinking that it would harm the harmony between both the group. It is not so....!
If you say that to maintain a harmony we should keep quiet and listen and acknowledge even all wrong information about Nadigar Thilagam achievements and Records, spread by few of our neighbours, AM SORRY, I WOULD NEVER HESITATE TO SAY THAT YOU ARE NOT LOYAL TO NADIGAR THILAGAM ANYMORE TO THE EXTENT YOU WERE & NOW YOU ARE MOST INTERESTED IN ONLY HARMONY BY ACCEPTING, ACKNOWLEDGING BY KEEPING QUIET TO THE WRONG INFORMATIONS BEING PROVIDED & SPREAD !
You don't even bother to say in generic terms that " It is not good to debate without any concrete proof or evidence" in the thread !
This does not mean that am asking to have a fight..! It is not !!! There is a difference between fighting & debating !
I too would like to say that I stand by my recent opinion about your kindself Sir !!!
Regards
RKS
சுந்தர்ராஜன் சார்
திரிசூலம் மலர் நிச்சயம் பாதுகாத்து வைத்துகொள்ள ஒரு பொக்கிஷமே. ஆனால் அதில் கூறப்பட்ட ஒப்பீடு விதம் சரியில்லை என்பதே எனது கருத்து. காரணம், நமது பராசக்தி படத்துடன் மதுரை வீரன் படம் ஒப்பீடு செய்தால் அது எந்தளவிற்கு சரியாக இருக்காதோ அதுபோல உள்ளது ஒப்பீடு.
மலர் தயாரித்த காலகட்டத்தில் அவர்கள் அப்படி ஒரு ஒப்பீடு எதுவும் யோசிக்காமல் அந்த மன நிலையில் செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அதில் கொடுத்துள்ள தகவல் மிகவும் அருமையான தகவல்கள் அது வரையில் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம்.
இதுபோல நானும் விரைவில் என்னிடத்தில் உள்ள நடிகர் திலகம் அவர்கள் நடித்த திரைப்படங்களின் சுமார் 258 படங்கள் வெளியீடு, 50 நாட்கள், 100 நாட்கள், 175 நாட்கள் விளம்பர ஆவணங்கள்...சிறப்பு பேசும்படம் பதிவுகள்...interview , முன்னோட்டம் ஆகியவை E PAPER வடிவில் தரவுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்...!
அதனை தங்களுடை WEBSITE www . சிவாஜிகணேசன்.in இல் பதிவேற்றி...நடிகர் திலகம் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வண்ணம் ஒரு பக்கத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் !
நாம் இனி யாருடைய எந்த பிரம்மாண்ட நடிகர் திலகம் மலருக்காகவும் தேவுடு காக்கவேண்டாம் பாருங்கள் ..இப்போ வரும்...அப்போ வரும் என்று...ஏமாந்து போவதற்கு ...! அதற்க்கு சொன்னேன் !
Regards
RKS
LISTEN TO VIETNAM VEEDU SUNDARAM - EVERY CHILD IN THE UNIVERSE WILL REALISE & VOUCH WHO POSSESSED PHENOMENAL REAL TALENT AND EXPERTISE IN ALL THE FUNCTIONS OF FILM NUANCES YET REMAINED HUMBLE !!!
https://www.youtube.com/watch?v=gncO6P2flgw
ஆர்கேஎஸ்,
இரண்டு மூன்று நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது. உண்மைகள் நிறுவப்பட வேண்டும் என்ற உங்கள் துடிப்பும் புரிகிறது. ஆனால் அதே நேரத்தில் இவர் முன் வந்து பேசவில்லையே இவர் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்று யாரையும் சொல்லிக் காட்ட வேண்டாமே! அதிலும் ராகவேந்தர் சார் உங்களை விட வயதில் மிகவும் மூத்தவர். அவருக்கென்று ஒரு வழியை தேர்ந்தெடுத்து அவர் பயணம் செய்கிறார். அவரின் ஸ்டாண்ட் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அதற்காக அவரை விமர்சிப்பது சரியா?
நானும் அவரும் கூட ஒரு சில விஷயங்களில் முரண்படுகிறோம். அதற்காக அவர் மீது விமர்சனம் வைக்க மாட்டேன். ஏன் நேற்றுக் கூட, வாசு பதிவிட்ட நாம் பிறந்த மண் பாடலுக்கான பின்னூட்டத்தில் பெருந்தலைவர் பற்றிய வரியை குறிப்பிட்டு இதே பாடல் 1975-க்கு முன் வந்திருந்தால் பலரும் பாராட்டியிருப்பார்கள் என்று என்னை வாரியிருந்தார். நான் அதை எளிதாகதான் எடுத்துக் கொண்டேன். அவர் நிலைப்பாடு அவருக்கு என் நிலைப்பாடு எனக்கு. அதில் நான் உறுதியாக் இருப்பேன்.
மற்றொரு விஷயம். இதை நான் இரண்டு மூன்று தடவை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். பல நேரங்களில் பல உண்மைகள் நமக்கு தெரிந்தால் கூட ஒரு சில விஷயங்களை கருதி நாம் அதை தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்லை. இங்கே சில விஷயங்கள் விவாதிக்கப்படும்போது அதே கோணத்தில் எடுத்துக் கொண்டாலே போதுமே!
உங்கள் சக்தி ஆக்கப்பூர்வமாக செயல்படட்டும்!
அன்புடன்
முரளி சார்
நாம் பிறந்த மண் பாடலைப் பற்றிய பின்னூட்டத்தில் நான் குறிப்பாக யாரையும் சுட்டிக்காட்டி எழுதவில்லை, தாங்கள் உட்பட. அன்றைக்கு இருந்த காலகட்டத்தில் அப்படமோ பாடலோ பெற வேண்டிய வரவேற்பினைப் பெறவில்லையே என்ற கோபம் எனக்கு எப்போதுமே உண்டு. அந்தக் கால கட்டத்தில் சிவாஜி ரசிகர்கள் இரு கூறாகப் பிரிந்ததன் விளைவில் வந்த ஆதங்கத்தின் காரணமாக படம் வெளியான அன்றே இக்கருத்தை நான் சொல்லி யிருக்கிறேன். முன்பே வேறோர் பாகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சித்ராவில் படம் வெளியாகியது, ரசிகர் மன்ற சிறப்புக் காலைக்காட்சி சாந்தியில் நடைபெற்றது. முதன் முதலில் ரசிகர்களுக்குள் அரங்கத்தினுள்ளேயே மோதல் ஏற்பட்டது. சிவாஜி ரசிகர் எனச் சொல்லிக்கொண்டு நடிகர் திலகத்தைத் தரக்குறைவாக விமர்சித்த ஒருவர், குறிப்பாக கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டிய சந்தனத் தேவன் வாழ்க்கை வரலாற்றை வின்சென்ட் அவர்கள் மிகவும் பாடுபட்டு உருவாக்கிய அந்த சித்திரத்தை மனம் போன போக்கில் அரசியல் காரணங்களுக்காக விமர்சித்த போதே இதில் யார் யாரோ உள் நுழைந்து இது தான் சாக்கு என நடிகர் திலகத்தை கேவலப்படுத்த தங்கள் காழ்ப்புணர்ச்சியைக் கொட்ட சரியான தருணமாக மாற்றினர். இந்த கருத்தை புதியதாக உங்களுக்காகவோ அல்லது இன்றைக்கு இருக்கும் ரசிகர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்படத்தினைப் பற்றித் தாங்கள் என்னிடம் பேசும் போது பல முறை பாராட்டிக்கூறியுள்ளீர்கள். அதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எனவே யாரையும் குற்றம் கூறும் நோக்கில் அந்தப் பதிவில் நான் எதையும் எழுதவில்லை, தாங்கள் உட்பட.
நான் சொல்லாத ஒன்றை ஆர்கேஎஸ் அவர்கள் கூறுகிறார். நல்லிணக்கம் வேண்டியே நான் எந்தக் கருத்தையும் எதிர்க்காமல் மௌனம் சாதிக்கிறேன் என்பதாக. கருத்துப் பரிமாற்றங்கள் கொண்டும் நல்லிணக்கம் பேண முடியும். என்னிடம் கைவசம் ஆதாரம் இருந்தாலொழிய நான் இந்த விவாதங்களில் பங்கேற்பதில்லை என்பதை இந்த மய்யத்தில் நான் இணைந்த நாள் தொட்டு கடைப்பிடித்து வருவது ஆர்கேஎஸ்ஸுக்குத் தெரியுமோ இல்லையோ தங்களுக்குத் தெரியாமல் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக இவற்றில் நான் கவனம் செலுத்துவதில்லை என்கிற காரணத்தால் இவையெல்லாம் என் நினைவிலும் அவ்வளவாக இல்லை. அந்நாட்களைப் பற்றிய நினைவாற்றலில் தங்களுடையதில் ஒரு சதவீதம் கூட எனக்குக் கிடையாது, குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் ஓடிய நிலவரங்களைப் பொறுத்த மட்டில்.
பம்மலாரைப் பற்றி எழுதி்யுள்ளார். இன்று இவர் இணையத்தில் மேற்கோள் காட்டும் பெரும்பாலான ஆவணங்கள் நமது ஆவணத்திலகம் பம்மலார் அவர்களுடையதே. அவருடைய ஆவணங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவர் ஆதரவு தரவில்லை என அவர் மீதே குற்றம் சாட்டுகிறார். இதை நீங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை எனத் தெரியவில்லை. அவருடைய பதிவுகள் நீக்கப்பட்டு விட்டாலும் கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கம் அப்படியே தான் இருக்கும்.
தாங்கள் கடைசி பாராவில் எழுதியதை நானும் ஆமோதிக்கிறேன். அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
செந்தில்வேல்,
'பைலட் பிரேம்நாத்' பாடலைக் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் இடையிடையே நம் தெய்வத்தின் புகழ் பாடியிருப்பது சுவை. மகிழ்ச்சி. தொடருங்கள். ரசிக்கக் காத்திருக்கிறேன்.
மனதை தேற்றிக்கொள்ள இப்படியும் வழிகள் உண்டா?
(மேலே உள்ள உங்களுக்கில்லை இது வேறு)
ராகவேந்திரா சார் நண்பர் கதிர்காமநாதனுடைய பழைய விலாசத்திற்கு
கடந்த வருடம் கடிதம் அனுப்பி ஒருமுறை பதிலும் கிடைத்தது
என்ன நடந்ததென தெரியவில்லை அதன் பின் அவரிடம் இருந்து
பதில் ஏதும் வரவில்லை
சோகம் என்னவெனில் மலரில் குறிப்பிடப்பட்டுள்ள
நாகர்கோயில் நண்பர் செல்வராஜ் அவர்கள்
கடந்தவருடம் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
வணக்கம்
வீர பாண்டிய கட்டபொம்மன் வரும் வெள்ளி 21/08/2015 வெளியாவது சிவாஜி ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. அந்த படம் தமிழகம் முழுவதும்
நல்ல திரைஅரங்குகளில் வெளியாக வேண்டும் என்று எங்கள் திருச்சி மாரிஸ் குரூப் சிவாஜிபக்தர்கள் கடந்த சில தினங்களாக பெரும் முயற்சி
செய்து வெற்றி அடைந்து விட்டோம்! அதற்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து ஊர்களிலும் உள்ள நம் ரசிகர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகள் !
குறிப்பாக திருச்சி தஞ்சை ஏரியாவில் பெரும் முயற்சி செய்து உழைத்த அன்பு நண்பர் சௌத்ரிராம் அவர்களுக்கு என் நன்றி!
எங்கள் மாரிஸ் குரூப் சிவாஜி இருந்த போதும் அவர் புகழ் பரவ உழைத்தோம்! அவர் இல்லாத போதும் உழைத்து கொண்டிருக்கிறோம்!
அந்த வேலைகளினால் கடந்த சில தினங்கள் பதிவிடவில்லை! இனி அதிகம் பதிவிடும் எண்ணமும் இல்லை !
பொதுவான இரு திரி ரசிகர்களிடம் ஒரே ஒரு கேள்வி ! என் பதிவில் வேகம் இருந்திருக்கும்! நான் மறுக்கவில்லை ! ஆனால் வார்த்தைகளில் கண்ணிய
குறைவோ செய்திகளில் உண்மையற்ற தன்மையோ இருந்ததாக கூற முடியுமா?
பொய் செய்திகள் பதிவிட்டு என்னை நானே ஏமாற்றி கொள்ளும் நபர் நானில்லை! அதைபோல் உறுதி படுத்தப்படாத சிவாஜியின் சாதனைகளையும் பதிவு
செய்ய மாட்டேன் !
சில நண்பர்கள் எதுக்கெடுத்தாலும் ஆதாரம் கேட்டு வாதத்தை திசை திருப்புவதை சாமர்த்தியமாக செய்கிறார்கள்! இப்படி இணையதள வசதி வருமென்று
அக்காலத்திலேயே அறிகுறி தெரிந்து இருந்தால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் ஆதாரங்களை பாதுகாத்து இன்று பதிவிட்டு எளிதாக நிரூபிக்க வசதியாக
இருந்திருக்கும்! பொதுவாக 1950 முதல் 1960 வரையிலான படங்களில் தான் ஓடிய விவரங்களில் சில சந்தேகங்கள், சில உறுதிபடுத்த முடியாத விவரங்கள், இரு தரப்பு நண்பர்களுக்கும் இருக்கும் ! அதை கூட ஏற்க வேண்டாம்! 1960 க்கு பிறகு ஓடிய படங்களுக்கு சாட்சியாக ஒரு சிறு சந்தேகம் கூட இல்லாமல் ஒப்பு கொள்ளும் உண்மையான இரு திலகங்களின் ரசிகர்கள் இன்றும் ஆயிரக்கணக்கில் உயிரோடு தான் இருக்கிறார்கள் நண்பர்களே!
உங்களுக்கு சந்தேகம் உள்ள விசயங்களில் அந்த நல்ல உள்ளங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாமே ? மக்கள் திலகம் சினிமாவில் சாதனைகள் பல செய்திருக்கிறார் என்று ஒப்புகொள்ள மறுக்கும் முட்டாள் அல்ல நான்! ஆனால் அவரை விட சினிமாவில் அதிக சாதனைகள் படைத்தது மட்டுமின்றி இன்று
வரையிலும் நெருங்க கூட முடியாத எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் நான் உயிராக மதிக்கும் நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே! இது என் கருத்து
மட்டுமல்ல ! சத்தியமான சினிமா வரலாற்று உண்மை! உண்மை! உண்மை!
நன்றிகள் !
பொள்ளாச்சி.
1978 ஜூன் மாதம் 16ஆம் தேதி.
நடிகர்திலகத்தின் ரசிகர்களிடையே ஒரு தகவல் வேகமாக பரவத்தொடங்கியது.அது பரபரப்பையும் ஆவலையும் தூண்டியது.
நடிகர்திலகத்தின்
ரசிகர்மன்றங்கள்மாபெரும் சக்தியாக இருந்த காலகட்டம் அது.பொள்ளாச்சியைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. எல்லா கிராமங்களிலும் ரசிகர் மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தன.சில குறிப்பிட்ட வீதிகளில் அந்த வீதிகளில் உள்ள அனைவருமே சிவாஜி ரசிகர்களாகவே இருந்தனர்.உதாரணம்:பொள்ளாச்சியில் நெசவாளர் காலனி என்று இரண்டோ, மூன்றோ தெருக்களைக் கொண்ட காலனி ஒன்று உள்ளது.அந்தத் தெருக்களில் உள்ள வீடுகளில் சிவாஜி போட்டோ இல்லாத வீடுகளே கிடையாது.
ஆரம்பத்தில் சொல்ல வந்த செய்தி என்னவெனில்,
ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படம் திரையிட்ட துரைஸ் திரையரங்கில் 60அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது என்பதே அது.நடிகர்திலகம் காக்கி உடையில் நின்று கொண்டு இருக்கும் போஸ்.அது மட்டுமல்லாமல் கட்அவுட்டைச் சுற்றி சீரியல் பல்புகளால் அலங்காரம் செய்யப்படிருந்தது.அந்த சீரியல் பல்புகள் கட்அவுட்டைச்சுற்றி ஓடுவது போல் அமைக்கப்பட்டிருந்தது.கட்அவுட் மட்டுமல்லாது திரையரங்கின் முன்புறம் முழுவதும் அதே மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.அதற்குமுன் வேறு எந்த திரைப்படத்திற்கும் 60அடி கட்அவுட் பொள்ளாச்சியில் வைக்கப்பட்டதில்லை.இன்றுவரை அந்த சரித்திரம் மாறவில்லை.
இரவு நேரத்தில் திரையரங்கைப் பார்ப்பதற்கு ஜெகஜோதியாக இருக்கும்.
அந்த வியப்பு எல்லா கிராமங்களுக்கும் பரவ அதைப் பார்ப்பதற்காகவே தினம் ஒரு கூட்டம் வெளியூர்களில் இருந்து
பஸ்ஸில் வந்து பார்த்துவிட்டு செல்வர்.
பொதுவான ரசிகர்களுக்கு சில உண்மை விளக்கங்கள் !
1978 வரை 10 வெள்ளிவிழா படங்கள் சிவாஜி அளித்தார்! mgr அவர்கள் 6 படங்கள் மட்டுமே அளிக்க முடிந்தது என்ற எனது பதிவின் நோக்கத்தை
திசை திருப்பும் நோக்கத்தில் சிவாஜி 1978 வரை 9 வெள்ளிவிழா படங்களை மட்டும் அளித்தார் , 1979 இல் வெளியான திரிசூலத்தையும் சேர்த்து தான்
10 படங்கள் என்று தவறாக ஒரு மாற்று முகாம் நண்பர் , தெரிவித்துளார். மேலும் சிவாஜியின் 200 படங்களுக்கு 10 வெள்ளிவிழா mgr அவர்களின் 115 படங்களுக்கு 6 படங்கள் என்றும் தவறாக கூறியுள்ளார். சிவாஜியின் வெள்ளிவிழா படங்கள் பராசக்தி கட்டபொம்மன், பாகபிரிவினை,பாவமன்னிப்பு,பாசமலர்,
திருவிளையாடல் ,பட்டிக்காடா பட்டணமா ,வசந்தமாளிகை தங்கபதக்கம்,தியாகம் ஆகியவை 1978 வரையிலும் வெளிவந்தவை. திரிசூலம் 1979 இல் வந்தது
உங்களுக்கே தெரிந்து இருக்கும் போது எனக்கு தெரியாதா ?
மேலும் சிவாஜி தனது 115 படங்களுக்குல் மட்டுமே mgr அவர்களின் சாதனைகளை முறியடித்து விட்ட விவரங்களை ரவிகிரன் சார் ஏற்கனவே கூறிவிட்டதால்
அது பற்றி மீண்டும் கூறி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாமென கருதுகிறேன் .
mgr அவர்கள் 1947 முதல் 1978 வரை 31 வருடங்களில் 134 மொத்த படங்களில் நடித்தார். அதில் 115 படங்களில் ஹீரோவாக நடித்தார்.
சிவாஜி 1952 முதல் 1978 வரை 26 வருடங்களில் 199 மொத்த படங்களில் நடித்தார் அதில் தமிழில் 191 படங்களில் ஹீரோவாக நடித்தார்.
சிவாஜி 16 வருடங்களிலேயே 115 தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து முடித்து விட்டார்!
நடித்த வருடங்களின் அடிப்படையில் பார்த்தாலும் படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் உண்மையான சாதனையாளர் சிவாஜி தான்
என்பது எளிதில் விளங்கும்!
நன்றிகள்
Dear Sir
It was not about records also. Because Every Actor has his or her own records...For Example : Mr.Ravichandran was called Vellivizha Nayagan, which both the thilagam's were not called...But that does not mean that Nadigar Thilagam or Makkal Thilagam did not have records for Silver Jubilee....Mr. Jaishankar was known as Friday Actor for his movies would release every Friday..So..Every Actor has their own specific records on their domain.
What is making us to respond is, People are making statement as if there was only one actor in this earth...and all records belong to him and nobody could come near him...etc., etc...Such False, Totally Biased deliberate wrong information is what making us to respond, that too because many people who are common film lovers read such forums !
Otherwise, we do not gain or loose anything by discussing all these things !
Regards
RKS
BUT IF YOU NOTICE ....THEY WILL NEVER POST ONE ACCEPTABLE AUTHENTIC PROOF..
BUT THEY WILL COME OUT WITH RASIGAR MANDRAM NOTICE...SUDDENLY AND WILL SAY THIS IS THE PROOF....& WE HAVE PROVED IT..WE HAVE PROVED IT...
BUT IF WE POST NOTICES THEY WILL SAY....RASIGAR MANDRAM NOTICE CANNOT BE ACCEPTED AS PROOF...IF WE SAY THE SAME, THEY WILL SAY AGAIN, THE WHOLE WORLD KNOW ABOUT IT.......!
IF YOU NOTICE THEY WIL OFTEN WOULD SAY...EVERYBODY KNOWS...WHOLE WORLD KNOWS.....in 1970...THAT MAGAZINE PUBLISHED IF I VAGUELY REMEMBER......in 1968...IT WAS PUBLISHED IN THE ANOTHER MAGAZINE..IF I REMEMBER CORRECTLY....etc., etc.,
AND CERTAIN CASES, THEY WILL SAY , YOUR OWN MEMBER Mr. GOPAL TOLD........IN SIVAJI BOOK, AROOR DAS TOLD......AARU OORUKKU DAS TOLD etc.,...AS IF AROOR DAS IS THE CHARTERED ACCOUNTANT OF NADIGAR THILAGAM & MAKKAL THILAGAM..
PEOPLE WHO READ THIS, WILL DEFINITELY KNOW AND ARE NOW CAPABLE ENOUGH TO UNDERSTAND WHICH IS TRUTH & WHICH IS FALSE SIR...!
RKS
AND IT DOES NOT REQUIRE A HARWORD UNIVERSITY DOCTORATE TO UNDER STAND THE SIMPLE FACT OF COMPARING THE NUMBER OF MOVIES DONE IN NUMBER OF YEARS TIME & ALSO, ALL PEOPLE WITH GENUINE KNOWLEDGE WILL AGREE THAT, UNLESS THE STAKE HOLDERS GET SUFFICIENT PROFITS, THE PRODUCERS OR DISTRIBUTORS WILL NEVER GO AGAIN TO ANY ACTOR / ACTRESSES TO DO A MOVIE !!!
25.2 YEARS = 200 Films is AMPLE PROOF OF THE PUDDING WHEN IT COMES TO NADIGAR THILAGAM !!!
LET THOSE COMMON PEOPLE READ & UNDERSTAND WHO HAD BETTER BUSINESS, BETTER FILM CAREER & BETTER PROSPECTS !!
I WILL POST ANOTHER AUTHENTIC DOCUMENT OF US HISTORIAN ERIC BARNOV NAMED INDIAN FILM ( PUBLISHED IN 1965 ) in WHICH HE HAD MENTIONED WHOM DID THE INDUSTRY DEPENDED & WAITED FOR, WHO HAD THE BEST BUSINESS IN THIS INDUSTRY !!!
THE ABOVE BOOK IS NOT A RASIGAR MANDRA NOTICE OR WRITTEN BY GUY OF AROOR DHAS CALIBRE !!!
PLEASE WAIT FOR A DAY OR TWO !!!
REGARDS
RKS
Regards
RKS
நண்பர்களே !
சிவாஜி 36 வருடங்களில் 260 படங்களில் கதாநாயகனாக நடித்தார் ! 1978 வரை மட்டுமே 191 தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்தார்!
16 வருடங்களிலேயே 115 படங்களில் நடித்து முடித்து சாதனை படைத்தார் ! இதை நாம் சொன்னால் சிலநண்பர்கள் அதிக படங்களில் சிவாஜி நடித்த
சாதனையை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்! அதிக படங்களில் நடிப்பது சாதனை மட்டுமல்ல! அது மிகவும் கடினம் மட்டுமல்ல!
அது மிகவும் risk ஆன ஒரு விஷயம் ! அதிக படங்களில் நடிப்பது அதுவும் gap இன்றி தொடர்ந்து படங்களை வெளியிடுவது மக்களுக்கு விரைவில் சலிப்பை
உருவாக்கும் சாத்தியமும் உண்டு ! விரைவில் சினிமா மார்க்கெட் உச்ச நிலையை இழந்து விடக்கூடிய அபாயமும் உண்டு ! அதனால் தான் மற்ற நடிகர்கள் 30 வருடங்களுக்கு மேல் நடித்தாலும் அதிக படங்களில் நடிப்பதை தவிர்த்தார்கள்! அந்த பயம் இல்லையென்றால் அதிக படங்களில் நடித்து அதிகம் வருமானம்
ஈட்டும் வாய்ப்பை ஏன் நழுவ விட வேண்டும்? சிவாஜிக்கு தன் நடிப்பு திறமையின் மேல் இருந்த அபார தன்நம்பிக்கையினால் அந்த நடுக்கம் கடைசி வரையிலும் சிறிதும் இல்லாமல் 36 வருடங்களும் ஒரு வருடம் கூட gap இன்றி வருடத்துக்கு சராசரியாக ஏழு முதல் எட்டு படங்கள் நடித்தார்.
அதிக படங்களில் நடிப்பதில் உள்ள risk பற்றி மற்ற நடிகர்கள் எந்த அளவுக்கு புரிந்து நடித்தார்கள் என்பதுக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்!
superstar திரு ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 40 வருடங்களாக நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர் இன்றும் ஒரு உச்ச அந்தஸ்த்தில் தான் இருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும்! ஆனால் அனைவரும் அறியாத செய்தி ஒன்று கூறட்டுமா? அவர் நடிக்க வந்து முதல் இருபது வருடங்களில் தமிழில் மட்டும் அவர் நாயகனாக நடித்தது சுமார் 80 படங்கள் ! ஆனால் அடுத்த இருபது வருடங்களில் 1995 முதல் 2015 வரை அவர் நடித்தது மொத்தமே
எட்டு படங்கள் மட்டுமே! அவர் மட்டுமல்ல உச்சத்தில் உள்ள எந்த நடிகரின் புள்ளி விவரங்களை பார்த்தாலும் ஏறக்குறைய இதே நிலை தான் இருக்கும்!
சிவாஜியின் பிற்கால வருடங்களில் அவரின் படங்களை அதிகம் எதிர் மறையாக விமர்சனம் செய்யப்பட்ட காலங்களில் கூட உதாரணத்துக்கு 1982 ஆம்
ஆண்டில் அந்த ஒரே வருடத்தில் மட்டுமே 12 படங்களை வெளியிட்டு மூன்று 100 நாட்கள் படமும் ஒரு வெள்ளிவிழா படமும் கொடுத்தார் என்றால் அவரின்
boxoffice power பற்றி நன்றாக புரியும்!
நன்றிகள்