http://oi67.tinypic.com/1zeusnc.jpg
Printable View
துரோகிகளின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி வெற்றிநடைபோடுகிறது மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன். எதிரிகளை மன்னித்து விடலாம், ஆனால் துரோகிகளை மன்னிக்க முடியாது. துரோகிகள் நன்றாக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. காலம் பதில் சொல்லும்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...cd&oe=577EE95D
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
நாளை 08.05.2016 வெள்ளி முதல் மீண்டும் டிஜிட்டலில் மிரட்ட வரும் மக்கள்தலைவரின் கர்ணன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...38acbe924a90c8
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://oi68.tinypic.com/20hrsdw.jpg
(முகநூலில் இருந்து)
http://oi64.tinypic.com/2mhbuat.jpg
(முகநூலில் இருந்து)
http://oi63.tinypic.com/sxg3ra.jpg(முகநூலில் இருந்து)
http://oi65.tinypic.com/9qjrr5.jpg(முகநூலில் இருந்து)
http://oi66.tinypic.com/10r2vxs.jpg
(முகநூலில் இருந்து)
எனக்கு மிகவும் பிடித்தமான
"தேவன் வந்தான்டி" பாடலுக்கான அம்சமான நிழற்படங்களைத் தந்து
மகிழ்வித்த திரு.சிவா அவர்களுக்கு நெஞ்சார்ந்த
நன்றி.
( "இமயம்" திரைப்படத்தின்
"கங்கை யமுனை" எனது
அடுத்த விருப்பம். )
http://i1028.photobucket.com/albums/...psalfairfa.jpg
எல்லாக் காலத்திலும்
இருக்கிறார்கள்...
வீரபாண்டிய கட்டபொம்மன்
வேறு மாதிரி
இருப்பதாகக் கருதி,
பாடப் புத்தகத்தில்
மாற்றி வரையும்
பள்ளிப் பிள்ளைகள்.
http://i1028.photobucket.com/albums/...psky2tey51.jpg
புகைப்படத்தை
வைத்துக் கொண்டு
கவிதைக்கு அலைந்தேன்.
அட...
புகைப்படத்திலேயே
சிரிக்கிறதே
கவிதை..!?
http://i1028.photobucket.com/albums/...psdnuxcrey.jpg
கூடிக் கொண்டே போகும்
ரசிகர் கூட்டம்
கண்டு மிளிரும்
கண்கள்..
கரவொலிக்கும்,
சீழ்க்கையொலிக்கும்
பழகிப் போன
செவிகள்..
பெரியோரை
வணங்குவதற்கும்,
எளியோரை
வாழ்த்துவதற்குமாய்
கரங்கள்..
இலட்சிய எல்லை நோக்கி
வீரநடை போடும்
கால்கள்..
எப்பவும்
புகழ் மாலை சுமப்பதற்கே
தோள்கள்..
எதிரிகளையும்
வசீகரிக்கும்
புன்னகை வசிக்கிற
உதடுகள்..
எல்லாம்...
உங்களுக்கு மட்டுமே
வாய்த்த
வரப்பிரசாதமய்யா..!
http://i1028.photobucket.com/albums/...pskeb7hqvi.jpg
தோள் குலுக்கி,
விழி மலர்த்தி,
கழுத்தொடித்து
முகம் உருட்டி,
அன்று நீங்கள் காப்பாற்றியது
கதாநாயகியின்
மானத்தை மட்டுமா?
உங்களையே நம்பி
ஒப்படைக்கப்பட்ட
கலைப் பெண்ணின்
மானத்தையும்தானே?
Tremendous Response once again to NT's Karnan. NT Rocks as usual in Box Office.
http://i1028.photobucket.com/albums/...ps472g2eko.jpg
அசத்துவதே
தொழிலாகி விட்டது
உங்களுக்கு.
அசந்து போய் நிற்பதே
வேலையாகி விட்டது
எங்களுக்கு.
இனிய நண்பர் திரு முதய்யன் அவர்களுக்கு
நலம் நலம் அறிய ஆவல். நீண்டநாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம் மையத்தில்.
தங்களுடைய பதிவிற்கு விளக்கங்கள்
1) நவீன தொழில்நுட்பம் - DI செய்து பிறகு டிஜிட்டல் QUBE முறையில் வெளியீடு செய்துள்ள திரைப்படம் சிவகாமியின் செல்வன்.
நவீன தொழிநுட்பம் என்பது பழைய படத்தினை டிஜிட்டல் முறையில் DI செய்து காட்சியமைப்பில் துல்லியத்தன்மை கொண்டுவந்து பிறகு திரயிடுவதாகும் ...அதற்கேற்றார்போல ஒலி...அமைப்பு மற்றும் இத்தியாதிகள் கொண்டதுதான் நவீன தொழில்நுட்பம். இத்தியாதி என்பது 3D / 2K format போன்றவைகளாகும் என்பதை தாங்கள் அறியாதது அல்ல.
நீங்கள் கேட்ட தொழில்நுட்ப கேள்விகளுக்கு திரை அரங்கில் முக்கால்வாசி பதிலே கிடைக்காது குறிப்பாக இரவு காட்சிகளுக்கு போகும் பட்சத்தில் !
காரணம் தர குறைவான ஆட்கள்தான் இருப்பார்கள்.
2) DTS ஒலி அமைப்பு செய்துள்ளதாக எந்த விளம்பரும் செய்யப்படவில்லை என்பது நீங்கள் அறிவீர்கள்.
இருப்பினும் centralised sound system முறையில் இந்த திரைப்படம் DI - டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவானது என்பதில் எந்தளவும் ஐயம் வேண்டாம் .
MONO TRACK முறையில் உள்ள ஒலி அமைப்பு கொண்ட படம் எனும்போது , அதனை பிரித்தெடுத்து DTS செய்தால் நல்ல இசைக்கு பதில் இரைச்சல் தான் கேட்கும்.
அதுவும் நம் காதுகளுக்கு பல ஸ்பீக்கர் வாயிலாக வரும்போது கர்ண கொடூரமாக இருக்கும்.
இதற்க்கு பதில் CSS முறையில் உள்ள ஒலி அமைப்பு எவ்வளவோ மேல். செவிக்கும் கஷ்டம் தராது. ORIGINALITY யும் கெடாது !
மேலும் இதன் ஒலி அமைப்பு கெடாமல் இருந்ததால் பின்னணி இசை மற்ற படம் போல சேர்க்க தேவை வரவில்லை. செயற்கையான பின்னணி இசை சேர்த்தால் நன்றாக இருக்காது. காரணம் வாத்தியங்கள் வேறு இசை கொடுக்கும்....electronic KEYBOARD வேறு ஒலி எழுப்பும்.
நீங்கள் படத்தை பார்க்காமல் வந்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மற்றொருமுறை சந்தர்ப்பம் வரும் பட்சத்தில் தவறாமல் பார்க்கவும் !
RKS
Good Explanation Subbu. Happy BirthDay to you.
Karnan - Technically better than first one. Crystal clear picture and a majestic NT as Karnan.
http://i1028.photobucket.com/albums/...pso4z1jeoa.jpg
ஊரெங்கும்
பெருமழை பெய்யும்.
ஜனங்களின்
சந்தோஷம் போல்
எங்கெங்கும்
வெள்ளம் பெருக்கெடுக்கும்.
விவசாயிகளின்
மகிழ்ச்சிக் கண்கள்
ஆனந்தக்கண்ணீர்
என்ற பெயரில்
அந்த மழையை
நகலெடுக்கும்.
மழலையர் விட்ட
காகிதக் கப்பல்கள்
அடுத்தடுத்த
தெருக்கள் தாண்டி
ஆனந்த நீர்ப் பவனி வரும்.
அத்தனை வீட்டு
ஜன்னல்களிலும்
வியப்பு,வியப்பாய்
முகங்கள் முளைக்கும்.
அற்புத மழைக்கு நன்றி கூறி
ஆயிரம் முகங்கள்
சிரித்தாலும்,
அபத்தமாய் சுளிப்பதற்கும்
ஒரு முகம் இருக்கும்.
சகதிக்குள் செருப்பைத்
தவற விட்ட
சலிப்பில் ஒருவன்
"தேவையே இல்லாத மழை"
என்பான்..
எரிச்சலுடன்.
-----------
ஊருலகமே
நடிகர் திலகத்துள்
ஆழ்ந்து, வியந்திருக்க..
"சிவாஜில்லாம் ஓவர் ஆக்டு"
என்று திருவாய் மலர
ஊருக்கொரு கிறுக்கன்
இருப்பானே..!?
அவனோடு ஒப்பிடலாம்...
இந்த மழை வெறுப்பவனை!
http://i1028.photobucket.com/albums/...pswa001hkk.jpg
பஞ்சு மெத்தைகள்
தராத சுகத்தை
பாசத்தில் குழிந்த
அன்னையின் மடி தரும்.
ஆயிரம் படங்கள்
வருகின்றன.
பஞ்சு மெத்தைகள்
அவையெல்லாம்.
உங்கள் படம் தான்
எங்களுக்கு
அன்னை மடி.