-
மக்கள் திலகத்தின்
திரைப்பட வரலாற்றில்....
சில முக்கிய தகவல்கள்..........
115 திரைப்படங்களில் தனிப்பெரும் கதாநாயகனாக நடித்து.....
அக்காவியங்களில்
அதிக திரைப்படங்கள்
அதிக அரங்குகளில் 100 நாட்களை கடந்தவைகளில்
மக்கள் திலகம் முன்ணனி ஆவார்....
தமிழ்நாடு... பெங்களுர்..
இலங்கை.... உட்பட
மதுரை வீரன்
35 அரங்கு 100 நாள்
உ. சுற்றும் வாலிபன்
25 அரங்கு 100 நாள்
எங்க வீட்டுப்பிள்ளை
17 அரங்கு 100 நாள்
அடிமைப்பெண்
16 அரங்கு 100 நாள்
நாடோடி மன்னன்
15 அரங்கு 100 நாள்
மாட்டுக்கார வேலன்
14 அரங்கு 100 நாள்.
ரிக்க்ஷாக்காரன்
12 அரங்கு 100 நாள்
உரிமைக்குரல்
12 அரங்கு 100 நாள்
இதயக்கனி
12 அரங்கு 100 நாள்
குடியிருந்த கோயில்
10 அரங்கு 100 நாள்.
10 திரைப்படங்கள் மட்டும்
தமிழகத்தில் ....
கர்நாடகத்தில்....
இலங்கையில்.....
100 நாளை கடந்த திரையரங்குகள்...
158 திரையரங்குகளில்
100 நாட்கள்....
(நாடோடி மன்னன்
இலங்கை எத்தனை அரங்கு 100 நாள் என்பது சரியான தகவல்கள் வரவில்லை)
சி.கணேசனின் படங்கள்
திருவிளையாடல்
13 அரங்கு 100 நாள்
தங்கப்பதக்கம்
14 அரங்கு 100 நாள்
வ.மாளிகை
13 அரங்கு 100 நாள்
பா.மன்னிப்பு
12 அரங்கு 100 நாள்
4 படங்கள் மட்டும்
தமிழகம்..
இலங்கை....
மொத்தம் அரங்குகள்
100 நாள்.... 52 மட்டுமே...
அடுத்தது 75 நாள் .....
-
அரிதிலும் அரிதான புகைப்படத்தின் வரலாறு வடபழனியில் இருந்த, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில், முன்பு சவுண்டு இன்ஜினியராக பணியாற்றியவர் ரவிசங்கர். கேரள மாநிலம், எர்ணாகுளம், திருப்பூணித்தரா, என்ற ஊரில் பிறந்தவர். ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பணியாற்றியபோது, இவருக்கு கிடைத்த கறுப்பு - வெள்ளை பிலிம் சுருள் ஒன்று, கடந்த, 40 ஆண்டுகளாக இவரிடம் பத்திரமாக இருந்தது. அதில், பதிவாகி இருப்பது ஒரு பிரபலமான மனிதரின் படங்கள் என்று அறியாமலேயே அதை பாதுகாத்து வந்துள்ளார்.
இந்த பிலிம் சுருளில், இதுவரை யாரும் பார்க்காத அரிய புகைப்படம் பதிவாகி இருக்கிறது என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பின், அதை, 'டெவலப்' செய்த போது, அதிலிருந்த புகைப்படத்தை பார்த்து அவர் உணர்ச்சிவசப்பட்டார். அப்புகைப் படத்தில் இருந்தவர், எம்.ஜி.ஆர். பிப்., 17, 1970ல், ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் அந்த கறுப்பு - வெள்ளை பிலிமில் இருந்தது. எம்.ஜி.ஆர்., நடித்து, ஜனாதிபதி விருது பெற்ற, ரிக் ஷாக்காரன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது, இடைவேளையில் படப்பிடிப்பு குழுவினர் எல்லாரும் ஓய்வில் இருந்தனர். படத்தில் எம்.ஜி.ஆர்., ஓட்ட வேண்டிய ரிக் ஷா, அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. ரிக் ஷா ஓட்டத்தெரியாத எம்.ஜி.ஆர. ஓட்டி பழகினால் தேவலை என்று தோன்றியதால் ரிக் ஷாவில் ஏறி, ஓட்டத் துவங்கினார். ஸ்டுடியோ வளாகத்தில் அவர் சைக்கிள் ரிக் ஷா ஓட்டுவதை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்தனர். சிறிது நேரம் ரிக் ஷா ஓட்டியவர், யாரையாவது உட்கார வைத்து ரிக் ஷா ஓட்டினால், படத்தில், இயல்பாக அமையுமே என்று நினைத்தவர், படப்பிடிப்பு குழுவினரை பார்த்து, யாராவது இருவர் ரிக் ஷாவில் வந்து அமரும்படி கூறினார். பல முறை அழைத்தும், யாரும் ரிக் ஷாவில் உட்கார தயாராக இல்லை. மதிப்பிற்குரிய, வாத்தியார் ரிக் ஷா ஓட்டும்போது, நாங்கள் எப்படி உட்காருவது என்ற கூச்சத்தால், ஒதுங்கி நிற்பதை கண்டு எம்.ஜி.ஆர்., நொந்து போனார். பரிதாபமாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் நாயரை பார்த்தார்; அவர் உடனே தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனை பார்த்திருக்கிறார். உடனே, இருவரும் ரிக் ஷாவில் ஏறி உட்கார்ந்தனர். குஷியான எம்.ஜி.ஆர்., சிரித்துக் கொண்டே, ரிக் ஷா ஓட்டத் துவங்கினார். அங்கிருந்த பிரபல புகைப்பட கலைஞர் நாகராஜ் ராவ், இந்த காட்சியை, தன் கேமராவில் பதிவு செய்தார். எம்.ஜி.ஆர்., நடித்த, 132 படங்களின் காட்சிகளை புகைப்படமாக எடுத்தவர் இவர். நாகராஜ் ராவ், ரவிசங்கரின் தாய் மாமனின் நண்பர்.
கடந்த, 1965ல், 12 வயது ரவிசங்கர், சென்னையில் உள்ள மாமன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் நாகராஜ் ராவ் வீட்டில் தான் தங்கியிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்து, ஐ.டி.ஐ., படித்து, சான்றிதழ் காட்டி, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் சவுண்டு இன்ஜினியராக சேர்ந்தார். அங்கே, 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
இதற்கிடையில், புகைப்படக்காரர் நாகராஜ் ராவ், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட பிலிம் சுருளை, ரவிசங்கரிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். அந்த பிலிம் சுருளை வீட்டில் வைத்தவர், அத்துடன் அதைப்பற்றி மறந்து போனார் ரவிசங்கர். நாற்பது ஆண்டுகள் ஓடி விட்டன.
பாலகாட்டில் எம்.ஜி.ஆர்., குடும்பத்துக்கு சொந்தமான வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீடு, நினைவுச் சின்னமாக ஆக்கப்பட்டது. அங்கே வைப்பதற்காக, எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் தேவைப்பட்டன. இதுபற்றி ரவிசங்கரிடம் கேட்டு இருக்கின்றனர். அப்போது தான் அவருக்கு, அந்த பிலிம் சுருள் பற்றிய ஞாபகம் வந்தது. அவர், அவசர அவசரமாக, அந்த, பிலிம் சுருளை தேடி கண்டுபிடித்திருக்கிறார். அதை, 'டெவலப்' செய்தபோது, அதில் இருந்த காட்சிகள், அவரை வியக்க வைத்தன. இயக்குனர் கிருஷ்ணன் நாயரையும், ஆர்.எம்.வீரப்பனையும் உட்கார வைத்து, ரிக் ஷா ஓட்டும் புகைப்படம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தெளிவாக இருந்தது. அந்த புகைப்படத்தை, எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில் வைக்க, சந்தோஷமாக கொடுத்துள்ளார், ரவிசங்கர்..........
-
நம்நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் நாட்டு மக்களின் வாழ்வோடு பின்னி பிணைந்திருந்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான். தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஊர்ப்பெரியவர்கள்,தனவந்தர்கள்,
ஜமீன்தார்கள் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது.
கிராமங்களில் இவர்கள்
வைத்ததுதான் சட்டம். புரட்சி நடிகரும்
அந்த காலக்கட்டத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை கோட்பாடுகளில் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் எப்போதும் கதர்சட்டை அணிந்த படிதான் காட்சியளிப்பார்.
அறிஞர் அண்ணா தி.க.விலிருந்து பிரிந்து திமுகவை 1949 செப் 19 ல் தொடங்கும் போது அண்ணாவுடன்
சம்பத், மதியழகன், நெடுஞ்செழியன், n v நடராஜன் போன்றோர்கள் இருந்த போதிலும்
புரட்சி நடிகரும்,கட்சியின் நீண்டகாலமாக தலைவராக இருந்தவரும் திமுக வில் இல்லை.
கட்சியின் நீண்ட கால தலைவராக இருந்தவர், பெரியாரோடு தங்கி விட்டாலும் சமயம் பார்த்து யார் வளர்கிறார்கள் என்று பார்த்து 1952
வாக்கில் திமுகவில் நுழைந்து தனது அடித்தொண்டை பேச்சு மூலமாகவும்
கூழாங்கற்கள் வசனம் மூலமாகவும் கட்சியில் தன்னை ஒரு பெரிய ஆள் போல காண்பிக்க துவங்கினார்.
அதன்பிறகு அண்ணாவின் கொள்கை அவரது மேடைப்பேச்சு மூலமாக எம்ஜிஆர் திமுகவில் 1954 ல். தன்னை இணைத்துக்
கொண்டார்.
அண்ணாவின் மூலமாக
நடிப்பு வாய்ப்பை பெற்ற கணேசன்
பஞ்சப் பராரிகளாக இருந்த திமுகவிடம் இருந்து தன்னையும் தன் பணத்தையும் காத்துக்கொள்ள திருப்பதி சென்று திருப்பதி கணேசா என்ற அடைமொழியுடன் முதல் படத்தில் வாய்ப்புக்காக தெய்வத்தை பழித்து "அது பேசாது கல்" என்று வசனம் பேசி விட்டு பின்னர் காங்கிரஸில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதனால் காங்கிரஸின் உதவியுடன் "கெய்ரோ படவிழா" மற்றும்இந்திய அமெரிக்க "நல்லெண்ண தூதரா"க அமெரிக்க பயணத்திற்கும் அவருக்கு
பாதை வகுக்கப்பட்டது.
ஆனால் சிவாஜியோ அது தனது திறமைக்கு கிடைத்த பரிசாக பறைசாற்றிக் கொண்டு கர்வத்தோடு நடந்து கொண்டது விஷயம் தெரிந்தவர்களுக்கு முக சுழிப்பை தந்தாலும் அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
ஒரு கட்டத்தில் சிவாஜியால் எந்த அரசியல் லாபமும் இல்லை என்று புரிந்து கொண்ட காங்கிரஸ் சிவாஜியை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கியது.
சிவாஜியும் ஏதோ தன்னால்தான் காங்கிரஸ் வளர்ந்தது என்று நினைத்துக்கொண்டு தான் தனிக்கட்சி தொடங்கி தான் ஒரு டம்மி பீஸ் என்பதை அவரே உணர்ந்து கொண்டார்.
உலகத்திலேயே தன்னுடைய நடிப்புதான் சிறந்தது என்ற அடிப்பொடிகளின் பேச்சை கேட்டு ஏமாந்ததோடு தனக்கு ஒரு அவார்டும் கிடைக்கவில்லையே என மனம் நொந்து அரசியல் சினிமா இரண்டிலிருந்தும் துறவறம் பூண்ட கதை நாம் அறிந்ததுதான்.
திருப்பதி சென்றவுடன் திமுகவின் வெறுப்புக்கு ஆளான புதுப்பணக்காரரான கணேசனை காங்கிரஸும் இரு கரம் நீட்டி வரவேற்றது. அந்த காலக்கட்டத்தில் யாராவது திமுகவில் இருந்தால் அவர்களை கறுப்பு சட்டைக்காரன் என்றுதான் அழைப்பார்கள். அவர்களை சமூக விரோதி போல் தள்ளியே வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் மூலம் ,
தொழிலாளர்கள், உழைப்பாளிகள்,
விவசாயி,ரிக்ஷாக்காரன்,பரிசல்காரன், மீனவர்கள் இப்படி பல வேடங்களில் ஏழைப்பங்காளனாக நடித்து அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றினார்.
ஆனால் சிவாஜி மிட்டா, மிராசு தனவந்தர், பண்ணையார் போன்ற வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை மிகை நடிப்பின் மூலம் காட்டிக் கொண்டிருந்தார். எம்ஜிஆருடைய அநேக படங்களில்
முதலாளிகளையும் மிட்டா மிராசுகளையும் எதிர்த்து ஏழை மக்களுக்கு ஆதரவாக அவர்கள் முகத்திரையை கிழிப்பது போல் காட்சியமைப்பை வைத்திருப்பார்.
அவர்கள் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் ஊர் மக்களுக்கு
எடுத்துரைத்து முடிவில் அவர்கள் திருந்துவதாக அல்லது சட்டத்தின் பிடியில் ஒப்படைப்பது போல காட்சியை அமைத்து ஏழை மக்களுக்கு பண முதலைகளிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார்.
அதனால் பணக்காரர்களின்(காங்கிரஸ்காரர்கள்) அராஜகத்தையும்
அகம்பாவத்தையும்
கொஞ்சம் கொஞ்சமாக மக்கனிடம் எடுத்துக் கூறினார்.
இதனால் கிராமங்களில் ஆலமரமாக இருந்த காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக சிதறியதுடன் ஏழை மக்களின் கட்சியாக திமுக
உருமாற துவங்கியது. இப்படிப்பட்ட கதையமைப்பு உள்ள படங்களாக
(நல்லவன் வாழ்வான் பெரிய இடத்துப் பெண் நம்நாடு உரிமைக்குரல்) போன்ற படங்களில் நடித்து திமுக வை
வளர்க்க பெரு முயற்சி எடுத்ததால்
பெரும் பணக்காரர்கள், தியேட்டர் ஓனர்கள், மில் ஓனர்கள் இதுபோன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.
மலைபோல் இருந்த காங்கிரசை தனது திரைப்படம் என்ற சிறு உளியால் சிறுக சிறுக உடைத்து கற்குவியலாக மாற்றி அதன்மேல் திராவிட கொடியை ஏற்றி திமுகவை ஆட்சிபீடம் ஏற வைத்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே உண்டு. அதனால் கோபமுற்ற காங்கிரஸ் தனவந்தர்கள் எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல தியேட்டர் கிடைக்காமலும் அப்படி கிடைத்த தியேட்டரில். எம்ஜிஆர் படங்களை 50 அல்லது 100 நாட்கள் ஓட விடாமலும் பார்த்து கொண்டனர்.
அவர்கள் பெரும்பாலும் சிவாஜி ரசிகர்களாக இருந்து சிவாஜியின் மிகை நடிப்பை புகழ்ந்தும் எம்ஜிஆரின் நடிப்பை இகழ்ந்ததுடன் நில்லாமல் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு "விசிலடிச்சான் குஞ்சுகள்" என்ற பட்டத்தையும் கொடுத்து கிண்டல் செய்து வந்தனர். இவர்களோடு சேர்ந்து பத்திரிகை முதலாளிகளும் எம்ஜிஆருக்கு எதிராக பனிப்போர் தொடங்கி எம்ஜிஆர் செய்திகளை இருட்டடிப்பு செய்தனர்.
பத்திரிகை காரர்கள் ஆங்கில படங்களையும், சிறந்த அவார்டு படங்களையும், வங்கப் படங்களையும் பார்ப்பவர்கள். இயற்கையான நடிப்பை அறிவார்கள். ஆனாலும் எம்ஜிஆரின்
நடிப்பை சிறுமைப்படுத்துவதாக எண்ணி சிவாஜியின் மிகை நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து அவரை மிகை நடிப்புக்கே அடிமை ஆக்கி விட்டார்கள்.
எம்ஜிஆர் ஒரு படத்தில் சொல்லுவார். என்னை அதிகமாக புகழ வேண்டாம், புகழ்ச்சியைப் போல ஒரு மனிதனுக்கு வேறு எதிரி எதுவும் கிடையாது என்பார். அது எவ்வளவு உண்மை என்று சிவாஜியின் வாழ்க்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சிவாஜி அவர்களோடு சேர்ந்து கொண்டு பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஏழை எளியவர்களின் ஆதரவை முற்றிலுமாக சிவாஜி இழக்க நேரிட்டது.
ஆனால் அவருடைய படங்கள் பார்வையாளர்கள் குறைந்த நிலையிலும் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓட்டி தங்களது(கட்சி) முதலாளித்துவ மனப்பான்மையை வெளிப்படுத்தினார்கள். எம்ஜிஆர் தனது படத்தின் ஓட்டத்தை பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை.
ஆனாலும் மக்களின் பேராதரவோடு ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று படத்தை தூக்கி விட்டு வேறு படத்தை திரையிடுவது திரையரங்க உரிமையாளர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மதுரை சென்ட்ரல்,மற்றும் நியூசினிமாவில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த பல படங்களை 100 நாட்களுக்கு முன்னாலேயே தூக்கி விட்டு வேறு படங்களை திரையிடுவார்கள்.
அதன்பின்பு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த மாதிரி எம்ஜிஆர் வளர்த்த திமுகவை தான் வளைத்துக் கொண்டு எம்ஜிஆர் படங்களுக்கு மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்த தீயசக்தியை எதிர்த்து போராடி அதிலும் வெற்றி பெற்றார். எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல தியேட்டர் கிடைக்க விடாமல் பல நெருக்கடி கொடுத்தாலும் நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பெற்றார்.
ஆனால் திமுகவை வனர்த்தது தான்தான் என்று நினைத்த "கட்டமரம்" மக்களின் வெறுப்பாற்றில் மிதந்து கரை ஒதுங்கிய காட்சியைத்தான் நாம் பார்த்தோமே!. ஆனாலும் கணேசனுக்கு எப்போதும் சினிமாவில் சிவப்பு கம்பள வரவேற்புதான். என்ன செய்து என்ன பயன்?. புரட்சி(நடிகர்)தலைவரை வெல்ல யாராலும் முடியவில்லை என்பதே உண்மை நிலை..........
-
கலைவாணரின் நினைவு நாள் இன்று...30-08-1957
தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் தோழியாகக் கொண்டதே தெளிவாகக் காண்பிக்கிறது. கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாள் வாய்த்தது போல, கிருஷ்ணனுக்கு மதுரம் வாய்த்திருக்கிறார். இல்லை; தப்பிதம். சுந்தராம்பாளுக்குக் கிட்டப்பா வாய்த்தது போல மதுரத்துக்குக் கிருஷ்ணன் வாய்த்திருக்கின்றார். இது தமிழ்நாட்டின் பாக்கிய-மாகும்” - 1943-ம் ஆண்டிலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் இப்படி நெஞ்சாரப் புகழ்ந்து எழுதியவர் 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' எனச் சிறப்பிக்கப்பெறும் அறிஞர் வ.ரா.'கலைவாணர் என்.எஸ்.கே.' என்று தமிழக மக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் 'நாகரீகக் கோமாளி' என்பதாகும்.''நாட்டுக்குச் சேவை செய்யநாகரீகக் கோமாளி வந்தான் அய்யா:ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நல்லஅழகான ஜதையோடு வந்தான் அய்யா!”
என்று தமது சொந்தப் படமான 'நல்ல தம்பி'யில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் வாயிலாக வெளியிட்டார் கலைவாணர். ஒரு முறை சென்னை வானொலியில் உரையாற்ற நேர்ந்த போதும் அவர் 'என் கடன் களிப்பூட்டல்' என்றே குறிப்பிட்டார். தம் தனி வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி கலைவாணர் நகைச்சுவை உணர்வுக்குத் தந்த இடம் முக்கியமானது; முதன்மையானது.கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும்
சில சுவையான நிகழ்ச்சிகள்
சுவை 1: உண்மையில் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், நாகம்மைக்கும் நாகர்கோயிலில் ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது. ஆனால் டி.ஏ. மதுரத்திடம் தமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி அவரது கரங்களைப் பற்றினார் கலைவாணர். இந்தப் பொய் மிக விரைவிலேயே அம்பலமாகி மதுரம், கலைவாணருடன் சண்டை போட்டார்; “ஏற்கனவே உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று கலைவாணரைக் கோபமாகக் கேட்டார். அப்போது கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில்:“ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய் என்பார்கள். நான் எனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்ற ஒரே ஒரு பொய்யைத்தானே சொன்னேன்?”
சுவை 2: 'மதுரை வீரன்' திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி:'அத்தே!' என்பாள் அரசிளங்குமரி (பானுமதி). அக மகிழ்ந்து போவார் மதுரை வீரனின் தாய் (டி.ஏ.மதுரம்); அப்போது இரண்டே சொற்களில் தமது விமர்சனத்தைச் சொல்லுவார் மதுரை வீரனின் தந்தையாக வரும் கலைவாணர்: “நீ செத்தே!” திரை அரங்கமே இதைக் கேட்டுச் சிரிப்பில் அதிரும்.இப்படத்தில் பிறிதொரு காட்சியில் கலைவாணரும் மதுரமும் வைகை ஆற்றைக் கடந்து மதுரை மாநகருக்குச் செல்வார்கள். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் சுவையான உரையாடல்: “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லை?”“வை அண்டான்னானா? குண்டான்னானா? 'வை', 'கை'ன்னு தானே சொன்னான்?”
சுவை 3: 1956-ல் இந்தியப் பேசும் படத்தின் 25-ம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது.“லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்!” என்று கலைவாணர் பேச்சைத் தொடங்கினார்.'கலைவாணர் ஆங்கிலத்தில் உரையாற்றப் போகிறார்' என்று பலரும் நினைத்தனர்.“அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த இங்கிலீஷ்” என்று கூறிவிட்டு தமிழில் பேசினார்.
சுவை 4: ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் கல்கியிடம் “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை” எனச் சொன்னார்.“அதற்கு நான்கு 'மை' வேண்டுமே?” என்றார் கல்கி.“என்னென்ன கலர்களில்?” - இது என்.எஸ்.கிருஷ்ணன்.“பேனா மை, திறமை, தனிமை, பொறுமை” எனக் கல்கி சொன்னதும் உடனடியாக, “நீங்கள் சொன்னது மிக அருமை…” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்!
சுவை 5: என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தச் சரித்திர நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி, தமக்கு எந்தெந்த ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார். “வங்க ராஜா தங்கம் கட்டினார்; கலிங்க ராஜா நவமணிகள் கட்டினார்” என்றெல்லாம் அடுக்கிக் கூறினார் மந்திரி. உடனே சக்கரவர்த்தி, “சோழராஜா என்ன கட்டினார்?” என்று கேட்க, வசனம் மறந்த மந்திரி விழிக்க, வேலைக்காரனாக நின்ற கலைவாணர் “வேஷ்டி! வேஷ்டி!” என்று சொல்லி விட்டுப் போக, அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.திரைப்பட ஆய்வாளரான அறந்தை நாராயணன் 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்' என்ற கலைவாணரைப் பற்றிய நுாலின் முடிவில் எழுதியிருக்கும் வரி இது:“
1936 முதல் 1957 வரை லட்சக்கணக்கான தமிழர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்து கொண்டிருந்த கலைவாணர் ஆகஸ்ட் முப்பதாம் நாள் முற்பகல் பதினொரு மணி பத்து நிமிடத்தில் இருந்து, தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்”.அனைவரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்யும் ஓர் அரிய தற்செயல் நிகழ்வு; ஒப்புமை; “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமான போது அவருக்கு வயது 29; பாரதியார் காலமானது அவரது 39-ஆவது வயதில்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ 49-ம் வயதில் காலமானார். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். நகைச்சுவைக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்த கலைவாணரை சிறப்பிக்கும் விதத்தில் அவரது பிறந்த நாளை (நவம்பர் 29) 'நகைச்சுவை நாள்' என்று அறிவிக்கலாமே!
-முனைவர் நிர்மலா மோகன்,
எழுத்தாளர்
இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் .
மதுரை - சிரித்து வாழ வேண்டும்
கோவை -ஆயிரத்தில் ஒருவன்
கோவை -புதுமைபித்தன்
சென்னை -ஆயிரத்தில் ஒருவன் - தர்மம் தலைகாக்கும் .
நல்லவான் வாழ்வான் -31.8.1961
53 ஆண்டுகள் நிறைவு நாள்...
பிறரை கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொள்ளுதலை Vicarious Learning என்கிறோம் உளவியலில். தாயைப் போலவே மகள் பாத்திரம் பிடிப்பதும், அப்பா கோபத்தில் திட்டும் வார்த்தை வெளியில் மகனுக்கு சுலபமாக வருவ தும் இதனால்தான். பிரபு தேவா நடனத்தை பொடிசுகள் டி.வி பெட்டி முன் ஆடுவதும் இதனால்தான்.
வேலையில் பாஸ் உடல் மொழியும் வார்த்தைகளும் இதனால்தான் மிக எளிதாக உள் செல்கிறது. அதனுடன் அவர்களின் நிர்வாக நெறிமுறைகளும் திறன்களும் துணைக்குச் செல்கின்றன.
இதில் முக்கியமானது பேசும் வார்த்தைகளும் பேசாத ஒழுக்கமும் முரண்படுகையில் அங்கு பேசாத ஒழுக்கம்தான் பின்பற்றப்படுகிறது. “எல்லாத்தையும் ப்ராஸஸ் மீறாம செய்யணும்பா” என்று சொல்லிக்கொண்டே “எப்படியாவது இதை இன்னிக்கு முடி!” என்று உணர்த்தினால், அங்கு வழிமுறைகள் மீறப்பட்டு அன்றே அது அவசரமாக நடந்து முடியும்! இப்படித்தான் நாம் அனைவரும் நெறிமுறைகள் கற்கிறோம்.
நெறிமுறையும் நம்பிக்கை போலத்தான். ஆயிரம் வார்த்தைகள் புரிய வைக்காததை ஒரு செயல் புரிய வைக்கும். ஒவ்வொரு மேலாளரும் விழுமியம் கற்றுத் தரும் ஆசான். ஆனால், அது வகுப்பறைகளில் நடைபெறுவதில்லை. அன்றாட அலுவல் பணியில் கற்றுக் கொள்ளப்படுகின்றன!
நாம் காணும் அனைத்து மக்களின் ஒழுக்கமும் நேர்மையும் நம் வாழ்வு சார்ந்த மதிப்பீடுகளை மாற்றுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள் என நாம் பெரிதும் மதிக்கும் நபர்களே தவறுகள் செய்யும் பொழுது அதன் தாக்கம் நமக்குள்ளும் ஏற்படுகிறது.
அதுபோல, ஒரு நிறுவனம் அரசாங் கத்தையோ, வாடிக்கையாளரையோ, தொழிலாளரையோ யாரை மோசம் செய்தாலும் அது பொது மக்கள் பார்வையில் நம்பிக்கை இழக்கிறது. Corporate Fraud என்று கூகுள் செய்து பார்த்தால் இன்றைய தூக்கத்தை நீங்கள் இழப்பது நிச்சயம்!
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல்தான் சர்வ ரோக நிவாரணி போல இந்த கார்ப்பரெட் எதிக்ஸ் பயிற்சியை வைத்துக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது அவ்வளவு முக்கியம் என்றால் ஏன் எம்.பி.ஏ வில் முக்கிய பாடமாக இல்லை? பள்ளிகளில் மாரல் சயின்ஸ் பாடத்தையே தவறவிட்ட நிலையில் இதை எதிர்பார்ப்பதே தவறுதான்!
இந்த கேள்விகள் கிளப்பிய சூட்டின் தன்மை உணர்ந்து என் அமர்வின் நெறியாளர் என் மென்னையைப் பிடித்து என்னை திசை திருப்பினார். இந்த புனித பசுவைத் தொடுவதாவது? அதுவும் மாணவர்கள் மத்தியில் எப்படி? அமர்வு முடிந்து நெருப்பு கனன்று கொண்டிருந்தது.
அகத் தூய்மை தலைமைப் பண்பிற்கும் நிறுவன நெறிகளுக்கும் எவ்வளவு முக்கியம் என தேனீர் இடைவெளியில் மாணவர்களிடம் பேசினேன். அப்போது நிறுவன மோசடிகளின் விலை பற்றி ஒரு பேராசிரியர் பிரமாதமாக பட்டியல் போட்டுக் காண்பித்தார். கைகுலுக்கல்களும் ‘கட்டிப்பிடி’ வைத்தியமுமாய் விடைபெற்ற பின்னும் மனம் பேசாத அம்சங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆர் படங்களின் தலைப்பு களை வைத்தே Value Clarification பற்றி கருத்தரங்கம் நடத்தலாம் என்று தோன்றியது. நல்லவன் வாழ்வான். நீதிக்குப்பின் பாசம். திருடாதே. தாய்க் குப்பின் தாரம். நீதிக்கு தலை வணங்கு.
எங்கோ தவறவிட்ட அடிப்படைப் பாடங்களை அவசரமாக அடுத்தத் தலைமுறைக்கு கடத்த வேண்டும். யாரை மிதித்து ஓடினாலும் கடைசியில் பணம் சம்பாதித்து ஜெயிக்கணும் என்கிற அவசர பாடத்தை மறு பரிசீலனை செய்ய வைக்க வேண்டும். அரசியல்வாதியும் தலைவனும் நம் விழுமியங்களிலிருந்து தோன்றியவர்கள் என்று புரிய வைக்க வேண்டும்.
கெட்ட செய்தி கொடுப்பவர்களுக்கு ஒரு வியாபார நோக்கம் உள்ளது; அதை உதறி விட்டு நல்ல செய்திகளை உருவாக்கலாம் வா என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மை என்பது யாரும் பார்க்காத போது நீ செய்யும் செயலில் இருக்கிறது என்பார்கள். நெறி முறைகளை புகட்ட சிறந்த வழி அதற்கு நாம் முன் மாதிரியாகத் திகழ்வதே. எல்லா காலத்திலும் இருட்டு இருந்திருக்கிறது. எல்லா காலத்திலும் வெளிச்சமும் வந்திருக்கிறது.
சூது கவ்வும் என்று அரை குறையாக சொன்னதற்கு பரிகாரமாய், அதன் பின் தருமம் வெல்லும் என்பதையும் சேர்த்துச் சொல்வோம்
1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ' நல்லவன் வாழ்வான் ' படத்தில் வரும் "சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்.." என்ற காதல் பாடலிலேயே,
" உதயசூரியன் உதிக்கும் போது
உள்ளத் தாமரை மலராதோ;
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ "
- என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ' எதையும் தாங்கும் இதயம் ' வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்
courtesy - thinnai
" நான் ஆணையிட்டால்..."
பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.
தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.
இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.
கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.
----------
' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :
" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;
கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)
எம்ஜிஆரின் அடையாளப் படம் படகோட்டி. (typical mgr film) அதில்
ஒரு காதல் ஜோடிப் பாடல் (தொட்டால் பூ மலரும்)
ஒரு காதல் ஜோடி சேரும் பாடல் (பாட்டுக்குப் பாட்டெடுத்து)
ஒரு காதல் பிரிவுப் பாடல் (என்னை எடுத்து தன்னைக் கொடுத்து)
ஒரு எதார்த்தப் பாடல் (தரைமேல் பிறக்க வைத்தான்)
ஒரு தத்துவப் பாடல் (கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)
ஒரு கவர்ச்சிப் பாடல் (அழகு ஒரு ராகம்) நம்பியார் பார்வையில் நாயகி சரோஜா தேவியே வந்து கிளப் டான்ஸ் ஆடுவார் -அப்றம் எப்டி மீனவப்படத்துல கவர்ச்சி காட்றது?)
ஒரு ஜாலிப் பாடல் (கல்யாணப் பொண்ணு) (எம்ஜிஆர் மாறுவேடம்னா ஒரு மீசை அல்லது ஒரு –ரிகஷாக்காரன் படத்துல வர்ர மாதிரி- பெரிய மரு ஒண்ண எடுத்து மூஞ்சியில ஒட்ட வச்சிக்கிறது அவ்ளோதானே? அவ்ளோதான், அடையாளம் தெரியாதுல்ல?)
ஒரு பூடகப் பாடல் (நானொரு குழந்தை)
என்று வகைக்கு ஒன்றாகப் போட்டுத் தாக்கியிருப்பார் எம்ஜிஆர்.
அனைத்துப் பாடல்களும் வாலியே எழுதியன என்பது குறிப்பிடத்தக்க செய்தி
பின்னர் வந்த பெரும்பாலான படங்களில் அனேகமாக “எம்ஜிஆர்-ஃபார்முலா“பாடல்களை எழுதும் வாய்ப்புகள் வாலிக்கே வழங்கப்பட்டன என்பது திரைப்படத்துடன் கலந்த தமிழகத்தின் அரசியல் வரலாறு.........
-
மலேசியாவின் மக்கள் ஓசை, மற்றும் தமிழ் மலர் நாளிதழில் வெளியான செய்திகள் -29/08/20
----------------------------------------------------------------------------------------------------------------------
பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*ஆயிரத்தில் ஒருவன் படத்தை காண 200 ரசிகர்கள் திரண்டு வந்தனர்*
--------------------------------------------------------------------------------------------------------------
டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நேற்று முன்தினம் பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் அரங்கில் இரவு 8.30 மணி சுதந்திர தின சிறப்பு* காட்சியாக திரையிடப்பட்டது*
லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ, ரெனா , ராமலிங்கம் ,மலேசிய இந்திய விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு , கிள்ளானைச் சேர்ந்த தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ மோகன், மலேசிய எம்.ஜி.ஆர். விஜயசேகர், எம்.ஜி.ஆர். ஹரி, எம்.ஜி.ஆர். சுரேஷ்,,எம்.ஜி.ஆர். தேவா, எம்.ஜி.ஆர். குணா , தொழிலதிபர் ஜெயபாரதி, ஓம்ஸ் ப. தியாகராஜன் , ஆகியோரும் சிறப்புக் காட்சியைக் காண வருகை புரிந்தனர் .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா நடித்து வெற்றிக்கொடி நாட்டிய ஆயிரத்தில் ஒருவன் தற்போது லோட்டஸ் பைவ் ஸ்டார் வெளியீடாக 11 அரங்குகளில் திரையிடப்படுகிறது .* *மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இன்னிசையில் அனைத்து பாடல்களும் இன்னமும் சூப்பர் ஹிட்டாக இருக்கின்றது . என்று ரசிகர்கள் தெரிவித்தனர் .**
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்ட திரைப்படமாக*ஆயிரத்தில் ஒருவன் விளங்கிக்கொண்டிருக்கிறது .என்பது குறிப்பிடத்தக்கது .
-
மக்கள் ஓசை நாளிதழ் -30/08/20
-----------------------------------------------------
மெர்டேக்காவை முன்னிட்டு காஜாங் திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன்*
திரைப்படம் வெளியீடு - எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள் உற்சாகம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மெர்டேக்காவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் எல்.எப்.எஸ்.திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது*
காஜாங் எல்.எப்.எஸ். அரங்கில் எஸ்.ஓ.பி.விதிமுறைகளின் கீழ் லோட்டஸ் பைவ் ஸ்டார் திரையரங்கின் பணியாளர்களின் முறையான ஒத்துழைப்புடன் இத்திரைப்படம் திரையிடப்பட்டது* என இதன் நிர்வாகி விமல் முனியாண்டி தெரிவித்தார் .**
இயக்குனர் பி.ஆர். பந்துலு* இயக்கத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இன்னிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா , நாகேஷ் ,நம்பியார் , மனோகர்* மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . மாபெரும் (claasic*evergreen dijital )திரைப்படத்திற்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உற்சாகமான ஆதரவை வழங்கினர்*
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*10/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற பெயருக்கு வீரம்,வள்ளல்***கருணை, பண்பு, ,அன்பு ,இரக்கம் ,*மனிதநேயம், மனிதாபிமானம் என்று பலவகைகளில் அர்த்தம் கொள்ளலாம் . எம்.ஜி.ஆர்.அவர்கள் ஒருமுறை பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக சபாநாயகர் மாநாட்டில் பங்குபெற* அப்போதைய சபாநாயகர்**திரு.பி.எச் பாண்டியன் அவர்களை தகுதி, திறமை, ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில்* அனுப்பியுள்ளார் . மாநாட்டில் பங்குற்று வெற்றிகரமாக தாயகம் திரும்பிய திரு.பி.எச்.பாண்டியனை சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தன் சக அமைச்சர்களுடன் சென்று காத்திருந்து* கட்டியணைத்து வரவேற்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். தன் சக அமைச்சர்களையும், சகாக்களையும் எப்படி அரவணைத்து வரவேற்றார், மதிப்பளித்தார் எம்.ஜி.ஆர். என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த இன்ப கனவு என்கிற நாடகம் நடைபெறுகிறது .ஒருமுறை அவருடைய நாடகத்திற்கு அப்போது நண்பராக பழகி வந்த திரு.மு.கருணாநிதி நாடகத்திற்கு தலைமை தாங்கினார் .* அந்த மேடையில் ,முத்தமிழ், முக்கனி என்று பேச ஆரம்பித்த அவர் , எம்.ஜி.ஆர். அவர்கள் இன்று முதல் புரட்சி நடிகர் என்று அழைக்கப்படுவதாக விருது வழங்கினார் . எம்.ஜி.ஆர்.-கருணாநிதி இருவருக்கும் ஆழமான நட்பு இருந்தது .* என்றைக்கு சுயநலம், சொந்த பிள்ளை, சொந்த குடும்பம் என்று ஆரம்பித்ததோ ,அப்போதுதான் பிரிவினை என்கிற விரிசல் ஆரம்பமானது .எம்.ஜி.ஆர். தனது அரசியல் விவகாரத்தில் ஒருபோதும் இவற்றை அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ இல்லை என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம் . 1958ல் தனது சொந்த தயாரிப்பான நாடோடி மன்னனில் இரட்டை வேடம் ஏற்று நடித்து இயக்கி**பிரம்மாண்ட வெற்றியடைந்து படத்தை பற்றி தவறான பிரச்சாரம்,*செய்தவர்கள் வாயடைக்கும்படி செய்தார் . வெற்றிவிழாவின்போது அனைத்து கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பரிசளித்தார் .* மதுரை தமுக்கம் மைதானத்தில்* லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மாபெரும் கூட்டத்தின் நடுவில் எம்.ஜி.ஆர். யானைமீது அமர்ந்து வந்தார் .* விழாவில் எம்.ஜி.ஆருக்கு 110 சவரன் தங்கவாள் பரிசளிக்கப்பட்டது .நாடோடி மன்னன் படத்தில் மன்னனாக முடிசூட்டியபின் ,ஏழை எளியோருக்கு, பெரியோர்களுக்கு, தாய்மார்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்களை அறிவித்தார் .* மக்களிடம் இருந்து பெறும் வரிப்பணத்தில் மக்களுக்காக திட்டங்கள் தீட்டப்படும் .மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர வேண்டும் .*வயோதிகர்களுக்காகவும்,மாற்று திறனாளிகளுக்காகவும்,கல்வி நிலையங்கள் அமைக்கவும், தொழில் அபிவிருத்திக்காகவும்,வேலையில்லாத திண்டாட்டத்தை போக்கவும்* என் சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன்*என்பார்* இந்தப்படம்*.வெளியானபோது யாரும் கனவில்கூட எம்.ஜி.ஆர். முதல்வராகி இந்த திட்டங்களை நிறைவேற்றுவார் என்று நினைத்திருக்கமாட்டார்கள் .ஆனால் 20 ஆண்டுகள் கழித்து, எம்.ஜி.ஆர். முதல்வரானதும் தான் படத்தில் அறிவித்த திட்டங்களை படிப்படியாக காலத்திற்கு தகுந்தவாறு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார் . படத்தில் தான்*அறிவிக்காத சில திட்டங்களையும் நிறைவேற்றினார் .*
வாரிசு அரசியலை எம்.ஜி.ஆர். வெறுத்தார் என்பதற்கு ஒரு சம்பவம் உதாரணம் .ஒருமுறை பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சுகுமார் போட்டியிடுவதாக இருந்தது .எம்.ஜி.சுகுமார் ஒரு குங்குமம் கதை சொல்கிறது போன்ற சில படங்களில் நடித்துள்ளார் . இவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் ஏராளமான சுவரொட்டிகள் அந்த பகுதியில் ஒட்டப்பட்டன .இந்த தகவல்கள் அறிந்த எம்..ஜி.ஆர். உடனடியாக அண்ணா பத்திரிகை அலுவலகம் சென்று ,ஒரு செய்தியை வெளியிட ஏற்பாடு செய்தார் .என்னுடைய அரசியல் வாரிசு என்று யாரும் இருக்க முடியாது . நான் யாரையும் அறிவிக்கவில்லை .என் அனுமதியில்லாமல் என் வாரிசு என்று விளம்பரம் செய்து தேர்தலில் நிற்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்கிற செய்தியை பகிரங்கமாக வெளியிட்டு ,தன்னுடன் பிறந்த அண்ணன் மகன் என்றும் பாராமல்**அறிவிக்க செய்தவர் எம்.ஜி.ஆர். எப்படி நாடோடிமன்னன் படத்தில், அறிவித்தாரோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவர்தான் ஆட்சியில் அமரவேண்டும் என்று சொன்னாரோ, வாரிசு அரசியல் கூடாது என்று வாதிட்டாரோ, அதை செயலில் , உலக அளவில், நிரூபித்துக்காட்டிய ஒரே மாமனிதர், ஈடு இணையற்ற மக்கள் தலைவர்* இன்றுவரை எம்.ஜி.ஆர். தான் .
எம்.ஜி.ஆர்.தி.மு.க.வில் இருந்தபோது தேர்தல் பிரச்சார குழுவிற்கு தலைவராக நியமிக்கப்படுகிறார் . ஒருமுறை தஞ்சை பகுதியில் காரில் மெதுவாக* செல்லும்போது* ஒரு குடிசை* வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது .உடனே காரை நிறுத்தச்சொல்லி, குழந்தையின் அழுகுரல் வந்த வீட்டிற்கு தான் மட்டும் நடந்தே சென்று ,குடிசையில் புகுந்து ,அழுகின்ற குழந்தையை வாஞ்சையுடன் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள, அந்த சமயத்தில் ,குடிசையின் பின்புறம் இருந்த குழந்தையின் தாய் ஓடோடி வந்து பார்க்கிறாள் .குழந்தையின் அழுகுரல் நின்றதும், யாரோ ஒருவர் குழந்தையை தூக்கியிருப்பதை பார்க்க வந்தவர் எம்.ஜி.ஆரை பார்த்ததும், திடுக்கிட்டு, ஆச்சர்யத்துடன், கைகால்கள் நடுங்க ,பயத்தோடு பார்க்கிறார் . ஆனால் ஒரு கணம் எம்.ஜி.ஆர். அந்த குழந்தையை ஆசுவாசப்படுத்தி ,அழாமலிருக்க,தாலாட்டி*,கொஞ்சுகிறார் .சற்று தூரத்தில் குழந்தையின் தந்தை குடித்துவிட்டு* படுத்து கிடக்கிறார் .*அவரை எழுப்பி, இனிமேல் குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லி,*உங்கள் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதீர்கள்.குடும்பத்தை நன்றாக கவனியுங்கள் என்று கூறி, குழந்தையின் கையில் ரூ.1,000/- கொடுத்து, வாழ்த்திவிட்டு வந்தார் .*அன்றுமுதல்* எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெரிய பட முதலாளிகளுக்கு ஒருபோதும் அடிபணிந்து போனதில்லை .பெரிய பட முதலாளிகளுக்கு நிறைய படங்கள் ஒப்பந்தம் செய்து நடித்ததில்லை. உதாரணத்திற்கு ஏ.வி.எம்.குக்கு அன்பே வா,நாகிரெட்டிக்கு எங்க வீட்டு பிள்ளை, நம்நாடு, ஜெமினி வாசனுக்கு ஒளி விளக்கு,ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபைக்கு மாட்டுக்கார வேலன் , வீனஸ்* கிருஷ்ணமூர்த்திக்கு என் அண்ணன் ,ஊருக்கு உழைப்பவன் ,ஸ்ரீதருக்கு உரிமைக்குரல், மீனவ நண்பன் , எம்.ஜி.ஆர். உருவாக்கிய சிறிய பட தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் . குறிப்பாக தனது ஆத்ம நண்பர்*சின்னப்பா தேவருக்கு மட்டுமே 16 படங்களில் நடித்துக்கொடுத்தார் .தன்னை மட்டுமே நம்பி,கோவையில் இருந்து சென்னை வந்த தேவரை மிக பெரிய தயாரிப்பாளர் ஆகவும், தேவர் பிலிம்ஸ் என்கிற பெரிய நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர் தான் .
ஒவ்வொரு திசையில் இருந்து வரும் செய்திகளை தன்வசப்படுத்திக்கொண்டு,அதை ஒரு மாய சக்தியாக, மாய வில்லாக தனக்கேற்றபடி மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவர் எம்.ஜி.ஆர். அந்த வல்லமையோடு, தன் வாழ்க்கையின்*அடிச்சுவடுகளை காட்டிக்கொண்டு செல்லும் பக்கங்கள் வெளிச்ச பக்கங்களாக*மாறவேண்டும் என்பதற்காகத்தான் நாம் சகாப்தம் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி வருகிறோம் .இன்னும் சொல்ல போனால், ராமாயணம், மகாபாரதம்,சங்க இலக்கியங்களை படிக்காதவர் ,வாழ்க்கையில்* நெருக்கடிகள், பிரச்னைகள் சந்தித்து, அதிலிருந்து மீண்டு,வெற்றிகண்டு* இருப்பவர் எங்கோ உள்ளவர் அல்ல*சமீப காலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.அவர்கள்தான்*அந்த சாகச மனிதனின் சரித்திரம் நம்மை போன்ற சாமானியருக்கு எல்லாம் ஒரு பாடம் , படிப்பினை ,அந்த படிப்பினையை நாமும்,தொடருவோம்,வெல்வோம் ,வெற்றிப்பாதையை அடைவோம் . மற்றவை அடுத்த அத்தியாயத்தில் தொடரும்
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.சிரித்தாலும் போதுமே, செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*
2.உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -* பாசம்*
3.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து - நேற்று இன்று நாளை*
4.எம்.ஜி.ஆர். - பானுமதி உரையாடல் - மலைக்கள்ளன்*
5. மன்னனாக எம்.ஜி.ஆர்.அறிவிக்கும் திட்டங்கள் -நாடோடி மன்னன்*
6.குலேபகாவலியில் எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகள்*
6.தைரியமாக சொல் நீ மனிதன்தானா - ஒளி விளக்கு*
7.தர்மம் தலைகாக்கும் பாடல்* - தர்மம் தலைகாக்கும்*
.**
-
வடசென்னையில் அகஸ்தியா திரையரங்கு நிரந்தரமாக மூடப்படுகிறது*
---------------------------------------------------------------------------------------------------------------------தினத்தந்தி -31/08/20
சென்னை தண்டையார்பேட்டை யில் இருக்கும்* பழமையான அகஸ்தியா தியேட்டர் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக நாளை* முதல்*(01/09/20) நிரந்தரமாக மூடப்படுகிறது . என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது .* இந்த தியேட்டர் 1967ல் 1004 இருக்கைகளுடன் திறக்கப்பட்டது .முதல் படமாக பாமா விஜயம் திரையிடப்பட்டது . எம்.ஜி.ஆரின் காவல்காரன் முதல் முதலாக 100 நாட்கள் ஓடிய படம் .உலகம் சுற்றும் வாலிபன் தினசரி 3காட்சிகளில் 25 வாரம் ஓடியது .* பல்லாண்டு வாழ்க 104 நாட்கள் .மீனவ நண்பன்*88 நாட்கள் - நினைத்ததை முடிப்பவன் 84 நாட்கள் ஓடியுள்ளன . அதிக அளவில் எம்.ஜி.ஆர். படங்கள் திரையிடப்பட்டன .* சிவாஜி கணேசனின் சிவந்தமண்,சொர்க்கம் ,ராஜா படங்கள் திரையிடப்பட்டு உள்ளன . ரஜினியின் அபூர்வ ராகங்கள், பைரவி , ப்ரியா ,படிக்காதவன் , கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், குருதிப்புனல் ,தேவர் மகன் ,விஜய்யின் குஷி, கில்லி , அஜித்தின் அமராவதி, தீனா, சூர்யாவின் காக்க காக்க உள்பட பல வெற்றி படங்கள் இங்கு திரையிடப்பட்டு உள்ளன .* சினிமா ரசிகர்கள் சங்கத்திடம் இருந்து குளிர்சாதன* வசதி இல்லாத சிறந்த திரையரங்கம்* விருதை பல தடவை பெற்றுள்ளது* .**வடசென்னை மக்களின் பொழுது போக்கோடு இரண்டற கலந்துவிட்ட அகஸ்தியா தியேட்டர் மூடப்படுவது அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது .* 3 மாதங்களுக்கு முன்பு கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள மகாராணி, வடபழனியில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி அரங்குகள் மூடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டன .* சென்னையில் ஏற்கனவே, சாந்தி, வசந்தி, நடராஜ், காமதேனு, பைலட் , ஆனந்த், பாரகன் , பிளாசா, ராக்சி, ராஜகுமாரி, நாகேஷ், ஸ்டார், கிரவுன், கிருஷ்ணா,பிரபாத், பிராடவே, பாண்டியன் ,சித்ரா, அலங்கார, மிட்லண்ட்,கெயிட்டி*உமா, புவனேஸ்வ்ரி சயானி உள்பட 50க்கு மேற்பட்ட தியேட்டர்களை மூடி வணிக வளாகங்கள், அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டி உள்ளனர் .
-
எம்.ஜி.ஆர்.பக்தர்களுக்கு மிகவும் வருத்தமா ன
செய்தி.வடசென்னையில் இந்த ஒரு அரங்கில்தான் தலைவர் படங்கள் வெளியாகி வந்தன. முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் காவல்காரன்.ஒளிவிளக்கு 35 நாட்கள். பிராட்வே யி ல் கூடுதலாக திரையிடப்பட்டு 92 நாட்கள் ஓடியது.
தேடிவந்த மாப்பிள்ளை 61 நாட்கள். உலகம் சுற்றும் வாலிபன்- தினசரி 3 காட்சிகளில் 175 நாட்கள். மற்ற சில படங்கள் ஒரு காட்சியில் வெள்ளிவிழா ஓடின.
நினைத்ததை முடிப்பவன் நல்ல வசூலுடன் 84 நாட்கள் ரகசிய போலீஸ் 115- 64 நாட்கள் ஓடியது
பல்லாண்டு வாழ்க-104 நாட்கள்.மீனவ நண்பன் 88 நாட்களில் 4 லட்சம் வசூல். சாதனை புரிந்து ம் தீபாவளி வெளியீடு க்காக எடுக்கப்பட்டது
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 49 நாட்கள்.
இவை தவிர படகோட்டி,ஒளி விளக்கு
போன்ற சில படங்கள் மறு வெளியீட்டில் 2 வாரங்கள் ஓடின
-
நாடோடி மன்னன் படத்தில் முதன்முதலில் திமுக கட்சிக் கொடியை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் லோகோவாக வைத்திருந்தார் அதனால் படத்தை வெளியிட சென்ஸார் அனுமதி வழங்கவில்லை ஆனால் தலைவர் கொடியின்றி படத்தை திரையிடப்போவதில்லை என்று கூறி மும்பை சென்ஸாரில் அனுமதி பெற்று கட்சிக் கொடியுடன் படத்தை திரையிடச் செய்தார் திமுக வளர்ச்சிக்கு தலைவர் பெரும் பங்காற்றினார். மேலும் அண்ணா மறைவிற்குப்பின்பு நாவலர் அவர்களே முதல்வராக தேர்வு செய்ய இருந்தார்கள் ஆனால் கருணாநிதி சூழ்ச்சி செய்து நம் தலைவரின் உதவியை நாடினார் தலைவரும் நண்பருக்கு உதவிட நினைத்து தனது ஆதரவு எம் எல் ஏ க்களை கருணாநிதிக்கு ஆதரவளிக்க வேண்டிக் கொண்ட காரணத்தால் அன்று கருணாநி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் தலைவர் ஆதரிக்கவில்லையென்றால் கருணாநிதி முதல்வர் ஆகியிருக்க முடியாது. இதுதான் உண்மை.........
-
சில திமுகவினர் கூறுவதுண்டு தலைவர் திரைப்படத் துறையில் வளர்ச்சியடைய கருணாநிதிதான் காரணம் என்று ஆனால் உண்மை அதுவல்ல திரைப்படத்துறையில் கருணாநிதியை அறிமுகப் படுத்தியதும் தலைவர்தான் தலைவர் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் அப்போது மிகவும் பிரபலமான கதாசிரியராக இருந்த திரு இளங்கோவன் அவர்கள் அந்தப் படத்திற்கு கதைவசனம் எழுத ஒப்பந்தம் ஆகியிருந்தார் ஆனால் இயக்குநரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் படத்திலிருந்து விலகினார் அதனால் இயக்குநர் இளங்கோவனைப்போல் எழுதக்கூடியவர் இந்தப் படத்திற்கு தேவை என்று கூறினார் உடனே தலைவர் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரது எழுத்து இளங்கோவனைப்போல் இருக்கும் என்று கூறவே சரி நான் சொல்லும் காட்சிக்கு வசனம் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார் கருணாநிதியும் அந்தக் காட்சிக்கு வசனத்தை கடிதம் மூலமாக எழுதி அனுப்பினார் அது இயக்குநருக்கு பிடித்துப் போகவே கருநாநிதியை அந்தப்படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள் கருணாநிதிக்கு அதுவே முதல் திரைப்படம் ஆனால் தலைவரோ அதற்கு முன்பே திரைப்படத்தில் நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்தார் இதே படத்திற்கு சாண்டோ சின்னப்பத் தேவரை ஸ்டன்ட் மாஸ்டராக சிபாரிசு செய்து அவருடைய வாழ்வில் வளம் சேர்த்தவரும் நம் தலைவர்தான்..........
-
#பதவிதேவையில்லை
******** பேரறிஞர் அண்ணா ஆட்சியை பிடித்ததும் அமைச்சர் பட்டியல் தயார் செய்தார். அதில் எம்ஜிஆர் பெயரும் இடம் பெற்று இருந்தது இதை அறிந்த எம்ஜிஆர் எனக்கு பதவி தேவையில்லை என்றார் காரணம் நான் ஒரு நடிகன் என்னை நம்பி ஒரு சினிமா உலகம் காத்திருக்கு தியேட்டரில் முறுக்கு விற்பவர் முதல் போஸ்ட் ஒட்டும் அந்த தொழிலாளர்கள் வரை அவர்களின் நன்மைக்காக* சினிமாவை துறக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் அப்படி பட்ட பதவி தேவையில்லை மக்களிடம் நல்ல பழக்கத்தை சொல்லி கொடுக்க சினிமா சிறந்த ஏடு என் ரசிகர்களை ஏமாற்ற நான் ஒரு போதும் விரும்ப வில்லை என்று தன் விருப்பத்தை முன் வைத்தார் எம்ஜிஆர்*
********* கட்சிக்காக பாடுபட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்க எனக்கு பதவி வேண்டாம் என்பது அண்ணாவை உதாசினப்படுத்து போல் என்று பலர் முனுமுனுத்தாலும் அவர் மனநிலையை உணர்ந்த அண்ணா பதவி கிடைக்கவில்லை என்றதும் கட்சி தாவும் உலகில் தம்பி இராமசந்திரன் நம் கட்சிக்கு கிடைத்த வரம்
******* ❤பதவிக்காக பகையை தேடுபவர்களும் உண்டு தம்பி இராமசந்திரன் தன் உழைப்பு அனைவருக்கும் பதவி அவரால் கிடைத்தது அதை மறந்து விடக்கூடாது நாம் ஆயிரம் மேடை போட்டு சொல்வதை தம்பி ஒரு காட்சியில் காண்பித்து விட்டு சென்று விடுவார்
******** தம்பி உழைப்பை கூட கட்சிக்காக காணிக்கை ஆக்கிய உத்தமர் அவருக்கு அனைவரும் நன்றி கடன் பற்றிருக்கிறோம் அவர் திரை உலக சக்கரவர்த்தி அவரையும் ரசிகர்களையும் பிரிப்பது பாவம் அவர் இஷ்டபடியே உழைப்பையும் தர்மம் செய்யலாம் என்று உணர்த்திய என் அன்பு தம்பிக்கு என் இதயத்தில் பதவி தந்திருக்கிறேன் அவருக்கு மக்கள் தந்த இதய சிம்மாசனத்தை எவரும் பறித்து விட முடியாத உயரத்தில் இருப்பவர்
******** எம்ஜிஆர் வீட்டு சாப்பாடு என்றால் அண்ணாவுக்கு அலாதி பிரியம் இருவரும் ஒன்றாக சாப்பிடும் போது அண்ணா சொன்னார் தம்பி உன்னை பற்றி சிலர் அவதூர் பேசுகின்றனர் நீ சரியாக கட்சி மீட்டிங் பின்பு சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை எப்பவும் சினிமா தான் என்று இருக்கிறதாக சொன்னார்கள் நீ அந்த துறையில் மன்னாதி மன்னனாக இருப்பதால் தான் நான் நாட்டுக்கு மன்னன் ஆகி உள்ளேன் யார் என்ன? சொன்னாலும் உனது இலட்சியம் தொடரட்டும் நீ ஒரு வானத்து சந்திரன் அனைவருக்கும் ஒளி கொடுப்பவன் மற்றவர்கள் கைவிளக்கு போல் ஒளி தருவர்கள் என்று வாழ்த்தி மகிழ்ந்தார் அண்ணா*
எம்ஜிஆர் பிறந்த நாளில்
******* அண்ணாவுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் நல்ல புரிதல் இருந்த தால் தான் எம்ஜிஆர் அண்ணாவை ஒரு வினாடி கூட மறந்ததில்லை*.........
-
பாச சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் தெரிவித்த அகஸ்தியா திரையரங்க செய்தி மிகுந்த மன கவலைப்பட வைத்துள்ளது...எல்லாம் காலம், நேரத்தின் கைகளில்... வேறொன்றும் சொல்வதற்கில்லை...
-
"தலைவன்". புரட்சி நடிகரின் வித்தியாசமான திரைப்படம். தயாரிப்பில் நெடுநாள் இருந்த படம்.
படத்துக்கு ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டு இறுதியில் 1970 ஜீன் 24 அன்று வெளியாகி முதல் சுற்றில் சுமாரான வெற்றியை பதிவு செய்தாலும் b & c யில் வெற்றிக்கொடியை பறக்க விட்ட படம். மாற்று அணியினர் எந்தவிதத்திலும் "தலைவன்" தோல்விப் படம் என்று சொல்லியே வந்தனர்.
அதிலும் படம் பார்த்த மாற்று அணி ரசிகர்கள் எம்ஜிஆர் ஜோதிலட்சுமியை மடியில் வைத்துக் கொண்டு பறப்பதை கிண்டல் செய்து பேசினார்கள். இப்படி செய்வார்கள் என்று தெரிந்துதான் எம்ஜிஆர் முதல் காட்சி ஆரம்பத்திலேயே யோகா கலைகளின் பெருமைகளையும்
அந்த கலைகள் மூலமாக பல சக்திகளை பெற்று சாதித்து காட்டியவர்களின் கூற்றுகளையும்
க்ளிப்பிங்ஸாக காட்டுவார். அதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காலகட்டம் அல்ல அது.
அந்தக் காலகட்டத்தில்தான் விட்டலாச்சார்யாவின் டப்பிங் மாயாஜாலப் படங்கள் சக்கை போடு போட்டன. டைட்டிலில் வந்த எலும்புக்கூடுகளை பார்த்ததும் டப்பிங் படம் பார்ப்பது போல் ஒரு எண்ணம் எல்லோருக்கும் வந்தது
தவிர்க்க முடியாதது. பாடல்கள் எஸ்எம்.எஸ். "ஆசைமுக"த்துக்கு பின்னர் அவர் இசையமைத்த படம்.
வித்தியாசமான வேகமான மெட்டுக்களுடன் பாடல்களும் டப்பிங் பட மனநிலைக்கு கொண்டு சென்றதை மறக்க முடியாது.
ஆயினும் பாடல்கள் அருமையான மெட்டுக்கள். திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும். படத்தை பற்றிய விமர்சனம் சுமார் ரகத்தை சேர்ந்தாலும் படத்தின் வெற்றி ஒரு
ஆச்சர்யமானது. எம்ஜிஆர் நடிக்காமல் வேறு யாராவது நடித்திருந்தால் படம் ஒரு வாரம் கூட ஓடியிருக்காது என்பதே உண்மை. தூத்துக்குடி ஜோஸப்பில் வெளியாகி படம் 21 நாட்களை அனாயசமாக கடந்தது. ஜோஸப்பில் வெளியான நிறைகுடம் 18 நாட்களும் சிவாஜி ரஜினியுடன் நடித்த கலர் படமான ஜஸ்டிஸ் கோபிநாத் 18 நாட்களும்தான் ஓடியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சேலத்தில் அதிகபட்சமாக 63 நாட்களும் திருச்சியில் 50 நாட்களும்
ஆத்தூரில் 42 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது. "தலைவன்" வெளியாகி 35 நாட்களுக்குப் பின் ஆக 29 ல் வெளியான "தேடி வந்த மாப்பிள்ளை" தலைவனின் ஓட்டத்தை கட்டுப்படுத்தியது எனலாம். ஆனாலும் "தலைவன்" எம்ஜிஆர் படத்திற்குக்குரிய வெற்றியை பெற தவறவில்லை. படத்தின் ஒரு சில இடங்களின் வசூலை நாம் பார்க்கலாம்.
கும்பகோணம்
------------------------
தலைவன். 35 நாள் 57,481.80
எ.வந்தாள். 50. " 50605.61
தே.வ.மாப். 50. " 82353.69
சொர்க்கம். 50. 72281.23
ஆத்தூர்
--------------
தலைவன் 40 நாள். 45314.87
சொர்க்கம் 26. " 36147.09
எ.வந்தாள் 21. " 32980.80
வியட். வீடு 27 " 35900.04
தலைவரின். B சென்டர் வசூலை பார்த்தால் தெரிகிறதா? ஒரு தலைவனை கூட மிஞ்ச முடியவில்லை சிவாஜியின் 100 நாட்கள் வெற்றிப் படங்கள். அதேபோல் a சென்டரான மதுரையில் தங்கத்தில் வெளியாகி சிவாஜியின் "எதிரொலி" படத்தின் மொத்த வசூலையும் 10 நாட்களில் தூக்கியெறிந்தது குறிப்பிடத்தக்கது..........
-
உண்மையான பதிவு. நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸில் இல்லாமல் திமுகவில் நீடித்திருந்தால் அவருக்கு அகில இந்திய பெருமைகள் கிடைத்திருக்காது. அவர் திமுக ஆதரவு நிலையில் இருந்து வெளியேறிய பிறகு (அவர் திமுகவில் உறுப்பினராக இருந்ததே இல்லை) காங்கிரஸ் ஆதரவாளர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் அவரை தூக்கிவிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தமிழகத்தில் வெளியாகும் முன்பே லண்டனில் பிரதமர் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டுக்கு போட்டு காட்டி ஆதரவு திரட்டினார்கள். நாடோடி மன்னன் படத்தை சர்வதேச விழாவுக்கு முதலில் கேட்டு புரட்சித் தலைவர் அதை எடிட் செய்து சுருக்கி கொடுத்த பிறகு படவிழாவுக்கு போக விடாமல் தடுத்தார்கள். இதை பாரத் விருதுக்காக சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்த பாராட்டு விழாவில் தலைவரே தெரிவித்தார்.
பட முதலாளிகள் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலும் அதிகாரிகள் மேல்தட்டு காங்கிரஸ் ஆதரவாளர்கள். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களது பெயர்களை சினிமாவில் காட்டலாம், சொல்லலாம். ஆனால், திமுக, உதய சூரியன், அண்ணா ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது என்று சென்சார் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டனர். சிவாஜி கணேசனுக்கு இருந்ததைப் போல சென்னையில் சாந்தி தியேட்டர், கிரவுன், புவனேஸ்வரி குத்தகை தியேட்டர், திருச்சியில் பிரபாத் பினாமி தியேட்டர் போன்று சொந்த தியேட்டர்கள் புரட்சித் தலைவருக்கு இல்லை. மன்னவன் வந்தானடி போன்ற மொக்கை படங்களை சொந்த தியேட்டரில் ஓட்டிக் கொண்டார்கள். சொந்த தியேட்டரில் ஓட்டப்பட்ட 100 நாள் படங்களை கழித்தால் அவரது 100 நாள் படங்கள் இன்னும் குறையும். தியேட்டர்காரர்களும் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள். பத்திரிகைகளும் காங்கிரஸ்காரர்கள், மேல்தட்டினர் கையில் இருந்ததால் புரட்சித் தலைவருக்கும் திமுகவுக்கும் எதிராகவே எழுதி சிவாஜி கணேசனை தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். இத்தனை இருட்டடிப்புகளையும் மீறி புரட்சித் தலைவர் இமயமாக உயர்ந்து சினிமாவிலும் அரசியலிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இதில் இன்னொரு பொய் வேறு சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்வார்கள். தமிழக காங்கிரசுக்கு சிவாஜி கணேசன்தான் ஆணிவேராக இருந்தார். அவரால்தான் காங்கிரசுக்கு ஓட்டு விழுந்தது என்று பொய் அள்ளிவிடுவார்கள். காங்கிரசில் இருந்து சிவாஜி கணேசன் பிரிந்ததால் காங்கிரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. 1989 சட்டசபை தேர்தலில் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் 26 இடங்களில் வெற்றிபெற்றது. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி கணேசன் தோற்றுப்போனார் என்பது வரலாறு. கோபுரத்தை பொம்மை தாங்கியதாம்..........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*12/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------, குலேபகாவலி ,மர்மயோகி, மந்திரிகுமாரி ,நாடோடிமன்னன் ,புதுமை பித்தன், மகாதேவி,என்று ஆரம்பித்து ஆயிரத்தில் ஒருவன் வரையில் ஆளுகின்ற அரசின் எதேச்சார போக்கு, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்த்து இறுதியில்*
போராடி வெற்றி பெறுபவராக நடித்தார்.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக சொல்ல போனால், தன்னுடைய வாழ்க்கையின் லட்சியம் , வாழ்க்கையின் நோக்கம் ஆகியவற்றை*இலக்கண இலக்கியங்களோடு சொன்ன படம் நாடோடி மன்னன் .இந்த படத்தில்தான் பல்வேறு திட்டங்களை தான் மன்னனாக முடிசூட்டியதும் அறிவிக்கிறார் . முதியோருக்கான பென்சன், விவசாயிகளுக்கான பென்சன் ஆதரவற்றவர்களுக்கான திட்டங்கள், ஜாதிகள் ஒழிப்பு பற்றிய சட்டங்கள் ,ஒடுக்கப்பட்டவர்களை கோயிலில் அனுமதிப்பது, ஒடுக்கப்பட்டவர்களை தொட்டால் தீட்டு என்பதில் இருந்து விலக்கு ,பெண்களை கற்பழிப்பவருக்கு முன்* ஜாமீன் இல்லாத தூக்கு தண்டனை போன்ற சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை நாடோடி மன்னனில் தான் ஆட்சிக்கு வருவதற்கு 20 ஆண்டுகள் முன்பே அறிவித்துவிட்ட ஒரு முன்னோடி ஆவார் .நாட்டிலே சட்டதிட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விஞ்ஞான வளர்ச்சி, தொழில் புரட்சி, தொழில்நுட்பம் ஆகியன இல்லாத காலத்தில் படத்தில் அறிவித்தார் .அவற்றை ஒரு பாடலாகவே பாடியிருப்பார்* அவர் .பட்ட துயர் இனி மாறும் , ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்* .**நானே போட போறேன் சட்டம். பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்,நாடு நலம் பெறும் திட்டம்* .என்கிற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாயிலாக அந்த பாடல் இடம் பெற்றாலும் ஒவ்வொரு பிரேமிலும்,ஒவ்வொரு கருத்திலும்,நடிப்பிலும் பாடலிலும்* எம்.ஜி.ஆர்.தான் நிற்கிறார் .* அதே சமயம் ஒருபோதும் திரைப்படங்களில், புகை பிடிக்காதவராக, மது அருந்தாதவராக ,. , பெண்களுக்கு தீங்கு இழைக்காதவராக ,நடிப்பில் வில்லத்தனம் இல்லாதவராக தான் நடிப்பது என்ற கொள்கையில் இருந்து மாறாதவராக இறுதிவரையில் கடைபிடித்தார் .*சாதித்தும் காட்டினார் .
அ.தி.மு,க கட்சிக்காக ஒரு பத்திரிகையை ஆரம்பிப்பது, தனக்கு தெரிந்த பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பது* என்று முடிவெடுத்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார் . அப்போது எல்லோரும் புரட்சி வணக்கம், புரட்சி காலை, புரட்சி மலர், புரட்சி நடிகர் என்றெல்லாம் யோசனை தெரிவிக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். அதற்கு மறுப்பு தெரிவித்து, என்னை பொறுத்தவரையில் கட்சியின் பெயரில் அண்ணா, பத்திரிகையின் பெயரும் அண்ணாதான் .அண்ணா பெயரில் தொழிற்சங்கம் என்று எங்கும், எதிலும் அண்ணா என்று உறுதியாக இருந்தார் .அவர் எடுத்த முடிவின்படி தோன்றியதுதான் அண்ணா பத்திரிகை .என்ற நாளிதழ் .
அதே சமயத்தில் ஒரு செய்தியை* எப்படி கிராஸ் செக் செய்வது என்பதற்கு*பல்வேறு பத்திரிகைகளில் ஒரு குழு அமைத்து அதற்கு குரூப் லீடர் ஒருவர் இருப்பார் .ஆனால் எம்.ஜி.ஆர். என்ன செய்வாரென்றால்** காலையில் எல்லா பத்திரிகைகளை காரில் வைத்து ,அதை பத்திரிகையாளர் சோலை என்பவரை படிக்க வைத்து ,ஒவ்வொரு செய்திக்கும்/தலைப்புக்கும்* என்ன கருத்து,எப்படி சொன்னீர்கள்* இதை ஏன் இப்படி பார்க்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு கோட்டைக்கு சென்றுவிடுவார் .மதியம் தி.நகர் அலுவலகத்திற்கோ,அல்லது வீட்டிற்கோ திரும்பும்போது அதே பத்திரிகைகளை காரில் வைத்து , அண்ணா பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கார்த்தியை உடன் அழைத்து சென்று, பத்திரிகைகளில் உள்ள தலைப்புகளில் ,செய்திகள் பற்றி ,ஏன் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று கூறி* அவருடைய கருத்தை/விமர்சனத்தை***கேட்பது வழக்கம் .இப்படி இருவேறு கோணங்களில் இருவேறு* ஆட்கள் மூலமாக, ஒரே விஷயத்தை இரண்டு பார்வைகளில்**அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்வாராம் .*
எம்.ஜி.ஆர்.அவர்கள்* மக்களில் ஒருவனாக**வாழ்க்கையின் ஒவ்வொரு படிக்கட்டுகளையும் கடந்து வந்தவர் .* அதனுடைய அவமானங்கள், பிரச்னைகள், கஷ்டநஷ்டங்கள், தோல்விகள் ஆகியவற்றை சந்தித்து ,சந்தித்து ,அவற்றை படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டவர் என்பதற்கு திரைப்படங்களிலே வருகின்ற வசனமாகட்டும் , பாடல்களாகட்டும், காட்சிகளாகட்டும் ஏதாவது ஒன்றை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள், அதன்மூலம் சிலர் விவரமறிநது* வாழ்க்கையில் முன்னேற் அது வாய்ப்பாக அமையட்டும் என்று குறிக்கோளுடன்*திரைப்படங்களில் நடித்தார் எம்.ஜி.ஆர்.*
மிக பெரிய ஜாம்பவான்களாக இருந்த எந்த பெரிய திரைப்பட நிறுவனங்களுக்கும் அவர்களது* திரைப்படங்களில் நடிப்பதற்கு உடனடியாக* பரிபூரண* சம்மதம் தெரிவிக்கவில்லை.தனக்கேற்ற சிறு தயாரிப்பாளர்கள், பட நிறுவனங்களை*நிறைய அளவில் ஊக்குவித்தார் ,உருவாக்கினார் என்பதுதான் அவரது திரைப்பட சரித்திரம் .* அதே போல சாமானியர்கள், அரசியலில் இருந்து மிக பெரிய ஜாம்பவான்களாக பேச்சாற்றல், எழுத்தாற்றல் இல்லாதவர்களை, சாதாரண சைக்கிள் கடைக்காரர்* ,தேநீர் கடைக்காரர்கள்* போன்றோரை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்.*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்கள் எப்போதும் உற்சாகம் நிறைந்தது .உலகம் பிறந்தது எனக்காக , உன்னை அறிந்தால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ,புதிய வானம் புதிய பூமி, நான் உங்கள் வீட்டு பிள்ளை, நான் ஆணையிட்டால் போன்ற பாடல்களில் அவர் ஓடி வருகின்ற அந்த துள்ளலும் ,நடன அசைவுகளும் ,உணர்ச்சிகரமான முகபாவங்களும் ,பாவனைகளும் ,அனைவருக்கும் உற்சாகத்தையும்,புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது .அதே போல சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு, சுறுசுறுப்பு, வேகம், விவேகம், லாவகம் ,ஸ்டெப்புகள், பன்ச்கள் அனைத்திலும் கரை கண்டவர்*கத்தி சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, சிலம்பம், கம்பு சண்டை, ஜூடோ,வில்வித்தை, மல்யுத்தம் ,அனைத்திலும் தேர்ச்சி பெற்ற* ஒரே நடிகர் இந்திய அளவில் எம்.ஜி.ஆர். ஒருவரே .* சண்டை காட்சிகளில் படத்திற்கு படம் புதுமை,*வித்தியாசம் நுட்பம் ஆகியன புகுத்தினார் .* எதிரிகளை பந்தாடும்போது சிரித்துக் கொண்டே அவர்களை வீழ்த்துவதில் வல்லவர் . ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கூட ஒரு சண்டை காட்சியில் ஜெயலலிதா தடுக்கும்போது, இரு பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன் என்று உற்சாகமாக புறப்படுவார் .
நடனத்தை பற்றி அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை .எவ்வளவோ சொல்வார்கள் .தொல்காப்பியம், நடனம் ,அந்த காலத்தில் இலக்கியத்தில் கொடி கட்டி பறந்த மணிக்கொடி* எழுத்தாளர்களுடன் எம்.ஜி.ஆர். தொடர்பு வைத்திருந்தார் .எழுத்தாளர் திரு.பி.எஸ்.ராமையாவுடன் நட்பில் இருந்தார் .இப்படி எல்லா இலக்கியவாதிகளை பற்றி அறிந்து வைத்திருந்தார் . தொல்காப்பியத்தில் சிலர் நவரசம் உண்டு என்பார்கள். நவரசம் இல்லை . எட்டு ரசம்தான் உண்டு என்பதையும் எம்.ஜி.ஆர். அறிந்து இருந்தார் .எம்.ஜி.ஆர். தன*வீட்டில் அமைத்திருந்த ஒரு பெரிய அரிய நூலகம்* போல**வேறு எங்கும் பார்த்ததில்லை என்று பலரும் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன் .**
தாயன்பு, சகோதர பாசம், பெண்களை மதிப்பது ,ஒடுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பது, அநியாயத்தை தட்டி கேட்பது ,அடிமைகளை வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து மீட்பது* என்று பல விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நடித்து மக்கள் மனதில் பதிந்து*ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன் முழு பரிமாணத்தை காட்டினார் .அவர் ஒரு கேள்வி எழுப்பினார் . சிறைச்சாலைகளுக்கு சென்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு இப்போதெல்லாம் அவ்வளவாக கூட்டம் கூடுவதில்லை ஏன் .அவர்களுடைய தியாகங்கள் மக்கள் கண்களில் இருந்து மறைந்துவிட கூடாது .ஒருமுறை கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவுக்கு சிலை வைக்க ஏற்பாடுகள் நடந்தன .நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது ,எம்.ஜி.ஆரை சந்திக்க ஒரு யோசனை இருந்தது .ஆனால் பாலதண்டாயுதம் என்பவர் மேடைக்கு மேடை, எம்.ஜி.ஆர் பற்றி மிக கடுமையாக விமர்சித்தவர் . ஒரு சினிமா நடிகரிடம் போய் நின்று அவரிடம் நிதி கேட்பதற்கு அவருக்கு முகமில்லை தயக்கமும் .சங்கடமும் கூட .ஆனால் திரு.தா பாண்டியன் அவர்கள் பால தண்டாயுதத்தை வலிய அழைத்து ,எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதுவும் பேசவேண்டாம் .சும்மா வாருங்கள் என்று அழைத்து சென்றார் .பாலா தண்டாயுதத்தின் விமர்சன பேச்சுக்களை அறிந்த எம்.ஜி.ஆர். அதை பற்றி பேசுவதை தவிர்த்து , நேரடியாக தா. பாண்டியனிடம் கேட்கிறார். சிலை அமைக்க எவ்வளவு செலவாகும் .நீங்கள் எல்லாம் வழக்கத்தையும்,பழக்கத்தையும் மறந்துவிட்டீர்கள் . இவற்றையெல்லாம் மறந்துவிட்டால் தலைவர்களின் தியாகங்கள் மக்கி போய் மண்ணோடு மண்ணாகிவிடும் .தலைவர் ஜீவாவுக்கு சிலை அமைக்க நான் பொறுப்பு ஏற்று* கொள்கிறேன் .* அந்த சிலை வைக்கும் செலவிற்கான முழு தொகையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பரந்த மனப்பான்மையுடன் சொன்னதும் பால தண்டாயுதம் ஒரு கணம் ஆடி போய்விட்டார் . இதை அவர் எதிர்பார்க்கவில்லைஎம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு போக்குவரத்து கழகங்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டபோது ஜீவா பெயரில் போக்குவரத்து கழகம் ஒன்றை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது . எம்.ஜி.ஆர். பிரிவினை வாதத்தை ஆதரித்தவரில்லை தேசியத்திற்கு எதிராக பேசியவரில்லை .* ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனி உடைமைக்கு எதிராக அவர் குரல் கொடுத்திருக்கிறார் .* பொது உடைமையை நேசித்து, ரசித்து பேசியும் இருக்கிறார் . அவர் கண்ட தத்துவம்தான் அண்ணாயிசம் .அதாவது வாழுகின்ற மக்களுக்கு*.எல்லாம் அவர்கள் வாழ வழி செய்வது .அவர்களின் பசிக்கு உணவிட வேண்டும் .என்கிற தத்துவதைத்தான் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்து நடைமுறை படுத்திகிற உலகத்திற்கே சொன்ன திட்டமாக சத்துணவு திட்டத்தை ,இளமையில் கல்வி* என்பது எவ்வளவு முக்கியமோ , அதே போலஇளமையில்* வறுமை* பசி கொடுமை* கொடியது* என்பதை உணர்ந்துதான் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார் .இப்படி பல சரித்திர சாதனைகள் செய்வதற்கு தன்* வாழ்க்கையை பாடமாக்கி கொண்டார் .மற்ற தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம் ...
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.வாங்கய்யா வாத்தியாரய்யா - நம் நாடு*
2.நாடோடி மன்னன் படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.*
3.மன்னனாக முடி சூட்டியதும் அறிவிக்கும் திட்டங்கள் -நாடோடி மன்னன்*
4.எம்.ஜி.ஆர். -கண்ணாம்பா -எஸ்.வி.ரங்காராவ்-நீதிக்கு பின் பாசம்*
5.கேளம்மா சின்ன பொண்ணு கேளு - கன்னித்தாய்*
6.எம்.ஜி.ஆர்.-வி.கோபாலகிருஷ்ணன்* உரையாடல் -கலங்கரை விளக்கம்*
*.**
-
தனியார் டிவிக்களில் நடிக பேரரசர்*எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள்*ஒளிபரப்பா கிய பட்டியல் (24/08/20 முதல் 31/08/20 வரை )
------------------------------------------------------------------------------------------------------------
24/08/20- சன் லைப் - காலை 11 மணி -ரிக்ஷாக்காரன்*
* * * * * * * *முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7மணி - விவசாயி*
* * * * * * * வேந்தர் டிவி -இரவு 11 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி - நவரத்தினம்*
25/08/20- மூன் டிவி -பிற்பகல் 12.30 மணி - விவசாயி*
* * * * * * * * *சன் லைப் - மாலை* 4 மணி - கண்ணன் என் காதலன்*
* * * * * * *புது யுகம் டிவி -இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*
26/08/20- சன் லைப் - காலை 11 மணி - உரிமைக்குரல்*
* * * * * * * *மெகா டிவி* - மதியம் 12 மணி - திருடாதே*
27/08/20 -சன் லைப் - மாலை 4 மணி - தெய்வத்தாய்*
* * * * * * * *புது யுகம் டிவி - இரவு 7 மணி - கன்னித்தாய்*
28/08/20 - சன் லைப்* - காலை 11மணி -பல்லாண்டு வாழ்க*
29/08/20 - மெகா டிவி -மதியம் 12 மாய் - பணத்தோட்டம்*
* * * * * * * *மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - முகராசி*
* * * * * * *வெளிச்சம் டிவி _ பிற்பகல் 2 மணி - கலங்கரை விளக்கம*
* * * * * * * மெகா 24 -* பிற்பகல் 2.30 மணி - கன்னித்தாய்*
* * * * * * * மீனாட்சி டிவி - இரவு* 9.30 மணி - வேட்டைக்காரன்*
30/08/20-மெகா டிவி - மதியம் 12 மணி - படகோட்டி*
* * * * * * *முரசு டிவி -மதியம் 12 மணி/இரவு 7 மணி -தாயை காத்த தனயன்*
31/08/20 -சன் லைப் - காலை 11 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * * மீனாட்சி டிவி - இரவு 9.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * *
-
1965 ல் "எங்க வீட்டு பிள்ளை" "பணம் படைத்தவன்" "ஆயிரத்தில் ஒருவனை" தொடர்ந்து வெளியான படம்தான் "கலங்கரை விளக்கம்". இதனையடுத்து வெளியான "கன்னித்தாய்" படத்தின் வெற்றியையும் கடந்து தொடர்ந்து வெற்றி நடை போட்ட படம். இயக்குநர் k.சங்கர் புரட்சி நடிகருடன் இணைந்த இரண்டாவது படம். அருமையான சஸ்பென்ஸ் "த்ரில்லர்" நிறைந்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக செல்லும் படம். எம்ஜிஆரின் நடிப்பு பிரமிப்பாக இருக்கும்.
ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையான நடிப்பில் கலக்குவார்..நாகேஷ் வீரப்பன் காமெடி நிறைவோடு இருக்கும். சரோஜாதேவி
இரண்டு வேடங்களில் நடித்து
பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியளித்திருப்பார். பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டுக்கள். முதல்தடவை
தூத்துக்குடி காரனேஷனில் பார்க்கும் போது மிகவும் த்ரில் ஆக இருந்தது.
M.s.விஸ்வநாதன்,
ராமமூர்த்தியிடமிருந்து பிரிந்து தனியாக இசையமைத்த
முதல் படம் என்று நினைக்கிறேன்.
பாடல்களில் அத்தனை இனிமை.
"பொன்னெழில் பூத்தது" பாடலை பஞ்சு அருணாசலம் எழுதியிருப்பார். அந்தப்பாடலில் சிவகாமியின் நடனம் மட்டும் சற்று அதிர்ச்சியை கொடுத்தாலும் பாடல் காட்சி ரசிக்கும்படி இருக்கும்.
கண்ணதாசனை மிஞ்சியிருப்பார் பஞ்சு.
"காற்று வாங்கப் போனேன்" பாடல் ரொம்ப ரொம்ப பாப்புலர் ஆன பாடல். அந்த காலத்தில் இந்த பாடலை பாடாத வாயே இருந்திருக்க
முடியாது என்று சொல்லலாம். சென்னையில் வெலிங்டன் ஸ்ரீமுருகன் ராக்ஸி சீனிவாசாவில் வெளியாகி சென்னையில் 83 நாட்களும் மற்ற ஊர்களிலும் அதிகபட்சமாக 83 நாட்களும் ஓடியது.
அடுத்து வந்த "குழந்தையும் தெய்வமும்" நவ 19 ல் அதே திரையரங்குகளில் சீனிவாசாவை தவிர மற்ற. திரையரங்குகளில்
வெளியாகும்வரை ஓடியது. தூத்துக்குடி காரனேஷனில் 35 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. 35 நாட்கள் என்பதை சாதாரணமாக எண்ண வேண்டாம்.
தூத்துக்குடியில் "ராஜா" 21 நாட்களும் "ஞானஒளி" 18 நாட்களும் "தியாகம்" 21 நாட்களும் இதே திரையரங்கில் வெளியான "மனிதனும் தெய்வமாகலாம்" 13 நாட்களும் "அஞ்சல் பெட்டி 520", 13 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது. மற்ற படங்கள் ஓடியதை பார்த்தால் "கலங்கரை விளக்கத்தி"ன் வெற்றியின் வீரியத்தை புரிந்து கொள்ளலாம். அந்த காலத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட வித்தியாசமான படம்தான் "கலங்கரை விளக்கம்"..........
-
கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயம்!!
Mgr முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த அமைச்சரின் வாரிசு திருமணம் வடபழனியில் உள்ள பிரபல மண்டப்பத்தில் நடக்கிறது,அது காலை நிகழ்ச்சி.அதே சமயம் காலையில் கோட்டைக்கு சென்றிருந்த mgr, தலைவர்(mgr) கையசைக்க உடனே அவரின் கார் வடபழனி நோக்கி பறக்கிறது.
மண்டபத்தில் இருந்தவர் மத்தியில் mgr வருகிறார் என்ற பரபரப்பு ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் கிட்டே வந்தவுடன் பாலத்தில் செல்லாமல் உஸ்மான் ரோடு திரும்பி தி நகர் வழியாக தலைவரின் கார் பயணிக்கிறது.சைதாப்பேட்டை பாலத்தில் சென்று வலது புறமாக சலவைத் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு செல்கிறது mgr கார்.ஏற்கனவே பலத்த மழை பெய்ததில் அந்தப் பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது.இருப்பினும் தலைவரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை நிறுத்தச் சொல்லி வேட்டியை மடித்துக்கொண்டு வேகமாகச் சென்றார், அங்கே நடந்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளியின் வீட்டு திருமணத்தில் கலந்துக் கொண்டார்.அந்த தொழிலாளியோ சிலையாய் நின்று பின்னே நாற்காலி ஒன்றை தேடி ஏற்பாடுச் செய்து பொன்மன செம்மலை உட்கார வைக்கிறார்.தலைவர் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு வழக்கம்போல பெருந் தொகையை அன்பளிப்பாக கொடுக்கிறார்.முக்கியமான விசயம் இந்த தொழிலாளி தலைவரின் துணிகளை சலவை செய்பவர்.மேலும் சின்ன பிளாஸ்பேக்! அந்த சலவை தொழிலாளி தன் வீட்டு திருமண பத்திரிக்கையை ஜானகி அம்மையாரிடம் கொடுக்கிறார்,அம்மையாரும் அதை வாங்கிக் கொண்டு அப்போதே ஒரு தொகையை கல்யாண சீதனமாக கொடுக்கிறார்.முடிந்தால் மட்டுமே தலைவர் வருவார் எனக் கூறுகிறார்.அந்த தொழிலாளி அம்மையாரிடம் தலைவர் முதலமைச்சர்,வேலை பளு காரணமாக வருவது அரிது!தாங்கள் தலைவரிடம் பத்திரிக்கை காண்பித்தால் போதுமானது என்றார்,அம்மையாரும் காண்பிப்பதாக உறுதி கூறி அனுப்பி வைக்கின்றார்.அம்மையார் தலைவரின் டைரியில் அந்த தேதியின் பக்கத்தில் பத்திரிக்கையை வைத்துவிடுகிறார்.அவராக அதைப் பார்த்துதான் கல்யாணத்திற்கு போயிருக்கிறார்.
தலைவரின் புகழ் ஓங்குக!!!.........
-
"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்.
தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா.
தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:
அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...
ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.
வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.
திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.
இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.
அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை
அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.
எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.
விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.
சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.
சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.
எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.
எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.
எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்..........
-
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனை பட்டியலில் 1977ம் ஆண்டு வெளியான "மீனவ நண்பன்", " இன்று போல் என்றும் வாழ்க", "நவரத்தினம்" திரைப்படங்கள், காவியங்கள் மாபெரும் தொடர் சாதனைகள் புரிந்துள்ள வரலாறு சில...........
சென்னை நகரில் மீனவ நண்பன் திரைப்படம் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு தேவி பாரடைஸ் திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. தொடர்ந்து அகஸ்தியா 88 நாட்களும், உமாவில் 88 நாட்களும் கமலா அரங்கில் 40 நாட்களும் ஒடி 18 லட்ச ரூபாயை நெருங்கியது வசூலில் மீனவ நண்பன்...
சென்னை நகரில் அடுத்த இரண்டாவது வெளியீடாக கிட்டத்தட்ட 15 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்ட மீனவ நண்பன் குறிப்பாக முருகன், சீனிவாசா,கபாலி, ராம், நேஷனல், லஷ்மி, வீனஸ் திரையரங்குகளில் மூன்று வாரங்களை கடந்து அவ்வாண்டில் மிகப்பெரிய வசூலை ஏற்படுத்தி 23 லட்ச ரூபாயை ஆறு மாத காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்த காவியம் மீனவ நண்பன் ஆகும்.
மதுரை சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 140 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து 117 நாட்கள் ஓடி 4 லட்சத்து 46 ஆயிரத்து வசூலில் கொடுத்த வெற்றிகரமான காவியம் மீனவ நண்பன் ஆகும்.
மற்றும் கணேசா சிடி சினிமா வெள்ளை கண்ணு திரையரங்குகளில் இரண்டு மூன்று வாரங்கள் திரையிடப்பட்டு அங்கும் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த காவியம் மீனவ நண்பன் திரைப்படம் ஆகும்..........
-
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தர்மபுரி, நாமக்கல், குமாரபாளையம் ,கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் திரையிடப்பட்ட திரைக்காவியம் மீனவ நண்பன் ஆகும். மீனவ நண்பன் திரைக்காவியம் 50 நாட்களில் மிகப்பெரிய சாதனையை இவ்வரங்கில் நிகழ்த்திக் காட்டி சரித்திரம் படைத்தது.*
உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல் , இதயக்கனி திரைப்படத்திற்குப் பின் மீனவ நண்பன் திரைக்காவியம்*
6 திரையரங்கிலும் 6 ஊர்களிலும் 50 நாட்களை கடந்து வெற்றி கொண்டு சாதனையாகும்.
கோவை மாநகரில் ராயல் திரையரங்கில் 68 நாட்களில்*
3 லட்சத்து 65 ஆயிரத்து வசூலாக கொடுத்து தொடர்ந்து சண்முகா திரையரங்கில் 4 வாரங்கள் ஓடி 4லட்சத்து 40 ஆயிரத்தை வசூலாக பெற்று மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திய காவியம் மீனவ நண்பன் ஆகும் .
அதே போல இன்று போல் என்றும் வாழ்க திரைக்காவியம் ராஜா, முருகன் இரண்டு திரையில்*
திரையிடப்பட்டு 102 நாட்கள்*
ஓடி 4 லட்சத்து 15 ஆயிரத்தை வசூலித்து சாதனை ஏற்படுத்தியது..*
ஈரோடு மாநகரில் மீனவ நண்பன் திரைப்படம் 78 நாட்கள் ஓடி*
3 லட்சத்து 15 ஆயிரத்தை வசூலாக கொடுத்து சாதனையை ஏற்படுத்தியது. மக்கள் திலகத்தின் இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 68 நாட்கள் ஓடி*
2 லட்சத்து 95 ஆயிரத்து வசூலைக் கொடுத்து மிகப்பெரிய சாதனையை தக்க வைத்து, தங்கப்பதக்கம் உட்பட மற்ற அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து முன்னணி... நவரத்தினம் 42 நாட்களில் 1,,85,304.00 வசூலை பெற்றது..........சேலம் நவரத்தினம்.....
47 நாள் பெற்ற வசூல் மட்டும்.
2,17,850.81ஆகும்.
ஒடி முடிய அல்ல....
6 காட்சி... 5 காட்சி திரையிடப்பட்டது.
இது தான் சரியான வசூல்..............
-
மதுரையில் "மீனவ நண்பன்"*
"இன்று போல் என்றும் வாழ்க*"
100 நாட்களை கடந்து வெற்றி கொண்டது.
மீனவ நண்பன் திரைப்படம் முதல்வெளியீட்டில் ஒரு கோடியே 15 லட்சத்து 5 மாத காலத்தில் வசூலாக கொடுத்தது.*
முதல் வெளியீட்டில் 44 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 36 திரையரங்குகளில்*
50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டது, அதேபோல இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 42 திரையரங்குகளில் வெளிவந்து*
26 திரையரங்குகளில் 50 நாளை கடந்து சரித்திரம் படைத்தது.*
ஆனால் தீபம் திரைப்படம் 12 தியேட்டர்களிலும், அண்ணன் ஒரு கோயில் திரைப்படம் 15 தியேட்டர்களில் மட்டுமே 50 நாட்களை கடந்தது.*
அண்ணன் ஒரு கோயில் திரைப்படம் மீனவ நண்பன் திரைப்படம் பெற்ற வசூலில் பாதி கூட பெறாமல் 9 தியேட்டரில் ஓட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1977ல் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் 3 வெளிவந்தது. முதலில் நவரத்தினம் அடுத்து இன்று போல் என்றும் வாழ்க அதன்பின் மீனவ நண்பன் 14 .8.1977 ல் வெளியான மீனவ நண்பன் திரைப்படத்திற்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்* முதல்வராக பதவியேற்ற பின் புதிய திரைப்படங்கள் அவ்வாண்டில் வெளிவரவில்லை தீபாவளிக்கு வெளிவந்த அண்ணன் ஒரு கோயில் திரைப்படத்தை சாந்தி கிரௌன் புவனேஸ்வரி மற்றும் சில ஊர்களில் நூறு நாட்களை குறைவான வசூலில் ஒட்ட செய்த அதிசயங்கள் அரங்கேறியது.
தொடரும் சாதனைகள் வசூல்கள்.............
-
கோவை மாவட்டத்தில் கோவை ,ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, உடுமலை ,தாராபுரம், நகரங்களில் 50 நாட்கள் கடந்து சாதனை ஏற்படுத்தியது மீனவநண்பன் திரைக்காவியம் ஆகும். கோவை ஈரோடு மட்டுமே அ.ஒ.கோவில்
50 நாள் ஆகும்.
வட ஆற்காடு ,தென்னாற்காடு மாவட்டங்களில் இன்று போல் என்றும் வாழ்க மீனவ நண்பன் மாபெரும் புரட்சியை, எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவதாக நவரத்தினம் திரைப்படமும் பல இடங்களில் 5 வாரம் ஆறு வாரங்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை படைத்துள்ளது.*
மீனவ நண்பன் திரைக்காவியம்*
13 திரையரங்குகளில் திரையிடப்பட்டு* சாதனையை ஏற்படுத்தியது.*
ஆம்பூர் மாநகரமே கண்டிராத வகையில் 50 நாட்களை கடந்து வெற்றி படைத்தது.
வசூல் : 1,10,457.61 ஆகும்.
வேலூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருப்பத்தூர், ஆம்பூர், விழுப்புரம், விருத்தாச்சலம்,
குடியாத்தம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தின்டிவனம் , தாம்பரம், ஆகிய நகரங்களில் இக்காவியம் வெற்றியை தந்தது.
மதுரை மாவட்டத்தில் மக்கள் திலகத்தின் மீனவ நண்பன்*
இன்று போல் என்றும் வாழ்க, நவரத்தினம் திரைப்படங்கள் சரித்திர சாதனைகள் படைத்துள்ளது.**
மீனவ நண்பன் திண்டுக்கல், விருதுநகர், பழனி, காரைக்குடி, ராம்நாட் , ராஜபாளையம், தேனி* பகுதிகளில் 50 நாட்களை கடந்து சாதனை.**
இன்று போல் என்றும் வாழ்க*
50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்துள்ளது. திண்டுக்கல், விருதுநகர் ,பழனி, காரைக்குடி, ஆகும்..........
-
குமுதம் வார இதழ் -09/09/20
-----------------------------------------------
மகனே, மனோகரா -
சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆருக்கு 40 வயது .தமிழ் சினிமா என்ற பத்திரிகையின் ஆசிரியர் கரீம் என்பவர் ,தன பத்திரிகையில்*எம்.ஜி.ஆரை கிழட்டு நடிகர் என்று குறிப்பிட்டார் .
அதை படித்த எம்.ஜி.ஆர். கோபப்படவில்லை .* மாறாக, கரீம் எழுதியதில் உண்மை உள்ளது .* மனோகரா நாடகத்தில் பம்மல் சம்பந்த முதலியார் நடிப்பார் .அந்த நாடகத்தில் நானும் சிறிய வேடத்தில் நடிப்பேன் .* ஒரு* காட்சியில் அம்மா .... இந்த* 16 வயது பாலகனைப் போருக்கு அனுப்புங்கள். வென்று வருகிறேன் என்பார் .* அப்போது அவருக்கு வயது* *40. துணிந்து பொய் சொல்கிறாரே என்று நினைப்பேன் .* அதை மக்கள் ஏற்றுக் கொண்டனர் .* அதுவேதான் என் விஷயத்திலும் . அதனால் கரீம் கவலைப்பட வேண்டாம் என்றார் .
எஸ்.எம்.உமர் எழுதிய கலை உலக சக்கரவர்த்திகள் நூலில் இருந்து*
-
ஸ்ரீதர் ஒரு மிகச்சிறந்த இயக்குநர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
"யானைக்கும் அடி சறுக்கும்" என்பதை போல சிவாஜியிடம் சிக்கி சின்னாபின்னமாக ஆகி விட்டார்.
ஸ்ரீதர் ஒரு யதார்த்த இயக்குநர்.
அவருடைய படத்துக்கு ஒரு இயல்பான நடிகர்தான் அவருடைய எண்ணத்தை போல நடிப்பை வெளிப்படுத்த முடியும். சிவாஜி ஒரு மிகை நடிகர். அவர் எப்படி ஸ்ரீதர் படத்துக்கு பொருந்த முடியும்.
அதேபோல் பாலசந்தரும் சிவாஜியை வைத்து தோல்வி கண்டவர்தான். எவ்வளவு பெரிய இமயத்தையும் சாய்த்து விடும் ஆற்றல் பெற்றவர் சிவாஜி. "சந்திரலேகா" "ஒளவையார்"
"வஞ்சிக்கோட்டை வாலிபன்" "வாழ்க்கைப் படகு" & "ஒளிவிளக்கு" போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்த ஜெமினி பட நிறுவனமே "விளையாட்டு பிள்ளை" என்ற கலர் படத்தை தயாரித்து நிலை குலைந்து போனார்கள். அவர்கள் மட்டுமா? கோமதிசங்கர் பிக்சர்ஸ், ஜேயார் மூவிஸ், v k ராமசாமி, தேங்காய் சீனிவாசன் இது போன்ற எத்தனையோ கம்பெனிகள் முடிவில்
ஒன்றும் இல்லாமல் போய் விட்டதே?
ஒரு காலத்தில் தமிழ்ப்படவுலகின் ஜாம்பவான்கள் என்றழைக்கப்பட்ட பீம்சிங், பந்துலு, a p நாகராஜன், ஸ்ரீதர், p.மாதவன், k.விஜயன் அத்தனை பேரையும் நிர்மூலம் ஆக்கிய பெருமை சிவாஜியையே சாரும். "முடி சூடிய மன்னரும் முடிவில் பிடிசாம்பலாவார்"
என்று "அரிச்சந்திரா"வில் பேசிய வசனம் சிவாஜிக்கு கனகச்சிதமாக
பொருந்தி வரும். அனைவரையும் முடித்து விட்டு தன்னை படமெடுக்க ஆள் இல்லாததால் அவரும் ஓய்ந்து போனார்.
லாபமில்லாமலா இத்தனை படம் அவரை வைத்து எடுத்தார்கள் என்று ஒருவர் கேட்டிருந்தார். பத்மினி பிக்சர்ஸ் 15 படங் களுக்கு மேலே சிவாஜியை வைத்து எடுத்து முடிவில் கடனாளி ஆனார்களே? இது போல்தான் எத்தனை படங்கள் எடுத்தாலும் முடிவு நம்மவர் கையில்தான் என்பதை காலம் கடந்து உணர்ந்து என்ன பயன்?.
எம்ஜிஆரை வைத்து படமெடுத்தவர்கள் இறுதிவரை மீண்டும் மீண்டும் படம் எடுக்க துடித்தார்கள். எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகும் போது 10 க்கும் மேற்பட்ட படங்கள் அவர் கை வசம் இருந்தது. ஆனால் இங்கோ பிரபுவை புக் பண்ண வந்தவர்கள்கூட எங்கே சிவாஜி தன்னையும் போட சொல்லி வற்புறுத்துவாரோ என்ற பயத்தில் இருந்ததாக பல தயாரிப்பாளர்கள்
சொன்னது பல பத்திரிகைகளில் வந்த விஷயம்தான்.
மீண்டும் ஸ்ரீதரை கவனிப்போம். "நெஞ்சிருக்கும் வரை" மேக்கப் இல்லாமல் என்ற புதுமையுடன் சிவாஜியை வைத்து எடுத்த படம்.
இருவரும் இணைந்ததால் மாபெரும் வெற்றி என்று நம்பியிருந்த ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த படம். அதோடு விட்டிருந்தால் கூட ஸ்ரீதர் பிழைத்திருப்பார். "காதலிக்க நேரமில்லை" யில் நடித்த பெரும்பாலான நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த "ஊட்டி வரை உறவு". காமெடியால் ஓரளவு ஓடினாலும் தயாரிப்பாளரின் கையை கடித்த கதையை சிவாஜியே கூறியிருக்கிறார்.
அது தயாரிப்பு 'கோவை செழியன்'. அதனாலும் ஸ்ரீதருக்கு எந்த வித பாதிப்புமில்லை.
அடுத்து அவர் எடுத்த "சிவந்த மண்" அவர் தலையில் பேரிடியை இறக்கிய படம். கண்மண் தெரியாமல் கணேசனை நம்பி கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த படத்தை கண்டு சினிமா உலகமே அதிர்ச்சி அடைந்தாலும் ஸ்ரீதர் எந்த கணக்கும் பார்க்காமலே தாராளமாக செலவு செய்தார். தன்மீது அவ்வளவு நம்பிக்கை வைத்த போதிலும் அங்கேயும் விளையாடி விட்டார் சிவாஜி
சிவாஜி ரசிகர்கள் அப்போது பெருமையாக "சிவந்த மண்ணு"க்கு இப்போதே 1 1/2 கோடி செலவு என்று பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால் படம் படுதோல்வி அடைந்த பின்பு இந்தி படத்துக்குத்தான் அதிக செலவு, "சிவந்த மண்" தோல்வியில்லை என்று
சப்பை கட்டு கட்டுகின்றனர். சரி அதை விடுவோம். எம்ஜிஆருக்கு 'பாரத்' பட்டம் கிடைத்ததை பாராட்டும் போது ஸ்ரீதர் அளித்த பேட்டியை பாருங்கள்.
எம்ஜிஆரை வைத்து 'உரிமைக்குரல்' தயாரிக்கும் முன்பே
எம்ஜிஆர் தான் அகில இந்தியாவிலும் சிறந்த நடிகர் என்றும் உலக பெரும் விருதுக்கும் தகுதியானவர் என்றும் உண்மையை ஒப்புக்கொண்டு அவரை பாராட்டியிருக்கிறார். எம்ஜிஆரின் படங்கள் உலகம் முழுவதும் பெரிய அளவில் வெற்றி பெற்று ஓடுவதே அதற்கு சாட்சி என்றும் எடுத்துரைக்கின்றார்.
'சிவந்த மண்ணி'ல் சிக்காமல் 'அன்று சிந்திய ரத்தத்தை' எடுத்திருந்தால் அலைகடலின் சிறிய தோணி பெரிய கப்பலாக மாற இருந்த வாய்ப்பை இழந்ததோடு இருக்கிற சிறிய தோணியும் நடுக்கடலில் தத்தளிக்க
விட்டு விட்டார்.
எம்ஜிஆருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை "அன்று சிந்திய ரத்தத்தி"ன் படப்பிடிப்பு தளத்திலே தான் உணர்ந்து கொண்டதாக அவர் கூறியிருந்தார். எம்ஜிஆரிடம் மனம் திறந்து பேசி படத்தை கலரில் எடுத்திருந்தால் அந்தப்படம் நல்ல முறையில் வளர்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எம்ஜிஆர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தும் படம் மேற்கொண்டு வளராமல் போனது ஸ்ரீதரின் துரதிர்ஷ்டமே..........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*13/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் நேர்ந்த துன்பங்கள், பிரச்னைகள்,சிக்கல்கள் ஆகியவற்றை களைந்து ,வாழும் காலத்தில் வெற்றி படிக்கட்டுகளை தானே* வடிவமைத்த சிற்பியாக திகழ்ந்தவர் .என்பதற்கு வேறு எங்கும் உதாரணத்தை தேடவேண்டாம் . இந்த உலகத்திலே தேடினாலும் கிடைக்காத அற்புதமான* ஒரு அரிய பொக்கிஷமாக எம்.ஜி.ஆர். எனும் தனி நபர் வாழ்க்கை உள்ளது .அந்த வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்வதற்கான பாடங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன**
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் குன்றியபோது ,ஜப்பானில் இருந்து வந்த டாக்டர் கானு* என்பவர் தகுந்த சிகிச்சை அளித்து ,அவர் குணமடைய பல யோசனைகள், கருத்துக்கள் தெரிவித்து இருந்தார் .எம்.ஜி.ஆர். பரிபூரண குணமடைய டாக்டர் கானுவின் சிகிச்சை முறைகள் பெரிதும் பலனளித்தன.அதற்கு நன்றி செலுத்தும் வகையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது .அப்போது தங்கத்தில் யானை பொம்மை பரிசு அளிக்க எம்.ஜி.ஆர். விரும்பினார் .அதை வடிவமைத்த பிறகு எம்.ஜி.ஆரின் பார்வைக்கு வந்தபோது , யானையின் துதிக்கையும்,வாயும் அளவில் ஒரே வடிவத்தில் உள்ளது .அதை மாற்றி அமைக்க சொல்லி உத்தரவிட்டார் .பரிசு பொருளாக இருந்தாலும் அதன் வேலைப்பாடில் உள்ள குறைகளை வெகு நுட்பமாக கண்டுபிடித்து அதை சரிசெய்ய சொன்னார் .அதன்பின் அந்த தங்கயானையை* டாக்டர் கானுவுக்கு பரிசளித்தார் . எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவற்றை நுட்பமாக கவனிப்பது, அற்புதமாக கண்காணிப்பது என்று எம்.ஜி.ஆருக்கு சிந்தனை இருந்ததன் காரணமாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வெற்றிக்கான பாதையை கண்டறிய முடிந்தது என்பதற்க்கு சிறந்த ஒரு சான்றுதான் இந்த தங்கையானை பரிசளிப்பு சம்பவம் .
1974ல் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வந்தது .அப்போது நடிகை லதாவை அழைத்து* நீ கான்வென்டில் ஆங்கிலத்தில் படித்ததனால், நான் தமிழில் பேசும்போது மொழிபெயர்த்து சொல்லவேண்டும்*என்று கூறி லண்டனுக்கு உடன் அழைத்து சென்றார்* அங்கு ஒரு கூட்டத்தில் பேசும்போது, அன்புள்ள தாய்மார்களே, பெரியோர்களே, என் ரத்தத்தின் ரத்தமே என்று பேசும்போது* ஆங்கிலத்தில் நடிகை லதா ரத்தத்தின் ரத்தங்களே என்பதற்கு சகோதர,சகோதரிகளே என்று மொழி பெயர்த்தார்.அதை கவனித்த* எம்.ஜி.ஆர்.* .உடனே . குறுக்கிட்டு,அது பொருத்தமான மொழி பெயர்ப்பு அல்ல ஒரு கணம் யோசித்து பொருத்தமாக மொழி பெயர்க்கசொன்னதற்கு பிறகு நடிகை லதா தவறை உணர்ந்து சரியாக பேசினார் .அதாவது எம்.ஜி.ஆர். ஆங்கிலம் முறையாக பயிலாவிட்டாலும் .ஓரளவு எளிமையாக ஆங்கிலம் பேசும் அளவிற்கு ஆசிரியர் வைத்து கற்று கொண்டதோடு ,மற்றவர்கள் தவறாக பேசினால் அதை திருத்தும் அளவிற்கு ஆங்கிலத்தில் அவருக்கு புலமை இருந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம் .
1956ல் ஒரிசாவில் புயல் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன .அந்த நேரத்தில் சென்னையில் படித்து கொண்டிருந்த ஒரிசா மாணவர்கள் ஒரு இந்தி திரைப்படத்தை வெளியிட்டு ,அத்துடன் ஒரு நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர். தலைமையில் நடத்தினால் நல்ல வசூல் கிடைக்கும்*அந்த நிதியை ஒரிசாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்று கருதினர் . அதன்படி சென்னை அசோக் (சிவசக்தி ) தியேட்டரில் சிறப்பு காலை காட்சி எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற முடிவு செய்து சம்மதம் பெறபட்டது ,அந்த கால கட்டத்தில் தமிழ் நடிகை வைஜயந்தி மாலாவும் நடிகர்*திலீப்குமாரும் நடித்து நியூ டெல்லி என்கிற இந்தி படம் சில தியேட்டர்களில் வெளியாகி இருந்தது .அதில் ஒரு காட்சியில் தமிழன் தலையில் செருப்பு வைத்தபடி கதாநாயகன் ஆடுவது, அருகில் கதாநாயகி இருப்பது போல் ஒரு காட்சி இருந்தது .இந்த காட்சி பற்றி பரபரப்பாக அப்போது பேசப்பட்டது .விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். தர்மசங்கடத்திற்கு உள்ளானார் . தி.மு.க. இந்தி எதிர்ப்பு பற்றி முழங்கி வந்த நேரம் .ஆனால் எம்.ஜி.ஆர். இந்தி மொழிக்கு எதிரானவரல்ல .இந்தி மொழியை திணிப்பதைத்தான் எதிர்த்தார் அந்த குறிப்பிட்ட காட்சி பற்றி விவரம் அறிந்த*. மாணவர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டது .எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிக்கு வருவது சந்தேகம் என்று நினைத்தனர் .*ஆனால் எம்.ஜி.ஆர்.கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்திற்கு நடுவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . இடைவேளையின்போது எம்.ஜி.ஆர். பேசியதாவது ,தமிழ்நாட்டில் ஒரு இந்தி படம் திரையிடப்பட்டுள்ளது .அதில் தமிழன் ஒருவர் தலையில் செருப்பு வைத்து கதாநாயகன் ஆடும் காட்சி கண்டு நான் மிகவும் வேதனைப்பட்டேன். மனம் வருந்தினேன் .இதுபற்றி மாணவர்கள் ஏன் முன்கூட்டி எனக்கு தகவல் அளிக்கவில்லை .மாணவர்களின் பரந்த மனப்பான்மை, மக்களுக்கு* *உதவும் திட்டம் என்று கருதிதான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் .இருப்பினும் என்னுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். மாணவர்கள் என்னை நாளை வீட்டில் வந்து சந்தியுங்கள் என்று கூறி புறப்பட்டார் .* மறுநாள் மாணவர்கள் சென்றதும் அவர்களை வரவேற்ற எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் வெளியிடும்போது அதன் கருத்துக்கள், காட்சிகள் மக்களால் வரவேற்கப்பட வேண்டுமே தவிர , அவர்கள் மனம் புண்படும்படியோ, வேதனைப்படும் படியோ இருக்க கூடாது .அந்த காட்சி எனது மனதை மிகவும் பாதித்தது .நான் சார்ந்த தி மு.க. கட்சியில் கூட என்னை பற்றி தவறாக நினைக்கும் வாய்ப்பு உள்ளது .இந்த நிகழ்ச்சியை நான் தவிர்த்து இருக்கலாம் என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம் . ஆனால் நான் வந்ததற்கு காரணம் ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் உதவ ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அதற்கு என்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் .நான் ஒருவேளை வராமலிருந்தால் பகிரங்கமாக என் எதிர்ப்பை தெரிவிக்க முடியாமல் போயிருக்கும் . அந்த எதிர்ப்பின் வலிமையை மற்றவர்களும் உணராமல் போயிருப்பார்கள் . அதுமட்டுமல்ல அங்கு நிதி அளிக்க முன்வராததற்கு இதுவும் ஒரு* காரணம் .மேலும் நான் நிதி அங்கு அளித்து இருந்தால் ,கணிசமாக நிதி சேர்ந்துவிட்டது என்று எண்ணி நிதி தரக்கூடியவர்கள் தராமல் போக வாய்ப்புள்ளது . எனவேதான் என் எதிர்ப்பையும், கருத்தையும் தனிப்பட்ட முறையில் உங்களிடம் தெரிவிப்பதோடு ,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரிசா மாநில மக்களுக்கு உதவ நீங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு என்னால் முடிந்த அளவில் உதவுகிறேன் என்று கூறி 1956ல் ரூ.10,000/- நிதி அளித்து மாணவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .பின்பு அவர்களை நன்கு உபசரித்து அனுப்பினார் .
எம்.ஜி.ஆர். அவர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர் அல்ல.இந்தி மொழி திணிப்பைத்தான் எதிர்த்தார் என்பதற்கு உதாரணம் . நவரத்தினம் படத்தில்*ஆரம்பத்தில் வரும் ஒரு இந்தி பாடலுக்கு நடிகை ஜரினா* வகாப்புடன் நடித்திருப்பார் .அந்த காலத்தில் ஒரு கட்டத்தில் கச்சா பிலிம் ரோல் தட்டுப்பாடு ஏற்படுகிறது . பிலிம்ரோல் வாங்கும் இடத்தில உள்ள ஒரு அதிகாரி, நல்ல உடற்கட்டு, முகவெட்டு உள்ளவர் .அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை.*எம்.ஜி.ஆரின் பட தயாரிப்பாளர் ஒருவருடன் இவருக்கு தொடர்பு ஏற்படுகிறது .தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரிடம் அவரை பற்றி சொல்லி ,இவரை நாம் பயன்படுத்தி கொண்டால் கச்சா பிலிம் ரோல் கொஞ்சம் தாராளமாக கிடைக்கும் என்று சொல்கிறார் .எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ஏனென்றால் இந்த திரைப்பட தொழிலையே நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாடம் உழைத்து* பிழைத்து* வருகிறார்கள் . ஆனால் அவருக்கோ நிலைமை அப்படியில்லை.*சர்க்கார் சம்பளம் வாங்குகிறார் . 60 வயதுக்கு பின்பும் அவருக்கு ஒய்வு ஊதியம் கிடைக்கும் .திரைப்பட தொழிலாளர்கள் நிலை அப்படியில்லை. எனவே அப்படிப்பட்ட நிரந்தர வருவாய் பெற்று வரும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தாதீர்கள்.அத்துடன் இங்குள்ள தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பது போல் ஆகிவிடும் அந்த எண்ணத்தை அடியோடு விட்டுவிடுங்கள் என்று அறிவுரை கூறினார் .
மாற்றாருடைய பசி உணர்வும், மாற்றார் கேட்காமலேயே உதவும் மனப்பான்மை*கொண்ட மாண்புடையவர் எம்.ஜி.ஆர். அந்த மாண்புதான் மறைந்தும் மறையாத நிலையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது .* அந்த மகானுடைய*வாழ்க்கை பாடங்கள், படிப்பினைகள் நமக்கு வழிகாட்டி கொண்டிருக்கும் .அதை தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*
நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பான காட்சிகள்/பாடல்கள் விவரம்*
------------------------------------------------------------------------------------------
1.மஞ்சள் முகமே வருக* - வேட்டைக்காரன்*
2.நேரம் நல்ல நேரம் - தனிப்பிறவி*
3.ஆகட்டுண்டா தம்பி ராஜா ,நடராஜா - நல்ல நேரம்*
4.பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ -சிரித்து வாழ வேண்டும்*
5.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க .
6.தமிழில் அது ஒரு இனிய கலை - சங்கே முழங்கு*
7.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல்- நேற்று இன்று நாளை*
8.லடுக்கேசீ மிலி லடுக்கி-இந்தி பாடல் -நவரத்தினம்*
9.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல் - ரிக்ஷாக் காரன்*
10.ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*
-
1963 ஆம் ஆண்டு மக்கள் திலகம் திரையில் வலம் வந்த திரைப்படங்கள் ஒன்பது ஆகும்.அவ்வாண்டில் அதிக வசூலை படைத்து தமிழகமெங்கும் பெரிய நகரம் முதல் சிறிய கிராமங்கள் வரை மிகப்பெரிய வெற்றியை உருவாக்கிய முதல் திரைக்காவியம் அதிக வசூலை படைத்த வெற்றிக் காவியம் பெரிய இடத்துப் பெண் திரைப்படமாகும்.
பெரிய இடத்துப் பெண் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திக் கொடுத்து அவ்வாண்டில் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் கொடுத்தது.
1963 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் 9 திரைப்படங்களும் மாபெரும் வரலாற்றைப் படைத்தது.
பெரிய இடத்துப் பெண்,
கொடுத்து வைத்தவள், நீதிக்குபின் பாசம், பரிசு, தர்மம் தலைகாக்கும், பணத்தோட்டம், ஆனந்த ஜோதி, காஞ்சித்தலைவன், கலையரசி திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்தது.
பெரிய இடத்துப் பெண் திரைப்படம் சென்னையில் சித்ரா,கிரவுன் திரையரங்கில் 100 நாட்களும் மதுரை திருச்சி சேலம் கோவை யில் 92 நாட்களும் ஓடியது.
33 திரையரங்குகளில் 50 நாளை வெற்றி கொண்ட ஒரே திரைப்படமாக
பெரிய இடத்துப்பெண் திகழ்ந்தது.1963 ல் அதிக வசூலை ஏற்படுத்திய ஒரேபடமாகும்.
வித்தியாசமான கதையமைப்பில் இரு வேடங்கள் தாங்கிய கதாபாத்திரத்தில் முருகப்பன் அழகப்பன் என்ற மகத்தான தோற்றத்தில்.... பாடல்கள், சிறப்பான கதை அமைப்புடன் கூடிய காவியமாக வெளிவந்தது.
கிராமத்திலும் நகரத்திலும் வெற்றியை பதித்த திரைக்காவியம் பெரிய இடத்துப் பெண்.
சென்ற ஆண்டு வரை இக்காவியம் ஓய்வில்லாது திரையில் வெற்றிக் கொடியை நாட்டி வந்துள்ளது சுமார் 57 ஆண்டுகள் கழித்தும் இத்திரைப்படம் இன்றும் வெள்ளித்திரையில் உலா வருவது சிறப்பாகும்.
தொடரும்.............
-
சிவாஜி கணேசன் ஸ்ரீதரை வைத்து சிவந்த மண் படம் எடுத்து தர்த்தி இந்திப் படத்தையும் சேர்த்து எடுத்து தயாரிப்பு செலவுக்கு ஏற்ற பணம் வசூலாகவில்லை. அவளுக்கென்று ஒரு மனம் படமும் தோல்வி. சிவாஜி கணேசனை வைத்து ஹீரோ 72 என்று ஆரம்பித்தார். சிவாஜி கணேசன் ரசிகர்கள் 1972 என்றால் துள்ளுவார்கள். அத்திப்பூத்தாற்போல அந்த ஒரு ஆண்டுதான் அவர்களுக்கு அதிக படங்கள் வெற்றி. ஆனாலும், பாரத் விருது, திமுகவில் இருந்து நீக்கம், அதிமுக உதயம், தமிழகம் முழுவதும் ஆதரவு அலை, புரட்சி நடிகர் புரட்சித் தலைவர் ஆனது என்று அந்த ஆண்டு உண்மையான ஹீரோ 72 ஆக மக்கள் திலகம்தான் வெற்றிபெற்றார். சிவாஜி கணேசன் நடித்த ஹீரோ 72 படமும் பணப் பிரச்சினையால் பாதியில் நின்றது. அதை முடித்துக் கொடுக்க
ஸ்ரீதருக்கு சிவாஜி கணேசன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும் ஸ்ரீதர் கால்ஷீட் கேட்டதற்கு சிவாஜி கணேசன் தம்பி பிடிகொடுக்காமல் இழுத்தடித்து, (சிவாஜி கணேசனின் கால்ஷீட்களை கவனித்து வந்த அவரது தம்பி சண்முகம் அண்ணனை விட கஞ்சன். பணம் வந்தால்தான் சிவாஜியை நடிக்க போகலாம் என்று சொல்வார்) சிவாஜி கணேசனும் சிங்கப்பூர் சென்று விட்டார். இதை ஸ்ரீதரே சொல்லி இருக்கிறார். அந்த நிலையில்தான் சிவாஜி கணேசனால் கைவிடப்பட்டு கடனில் இருந்த ஸ்ரீதருக்கு உரிமைக்குரல் படம் மூலம் மக்கள் திலகம் மறுவாழ்வு கொடுத்தார். ஸ்ரீதர் படங்களிலேயே அதிக வசூல் அள்ளிக் கொடுத்த படம் உரிமைக்குரல்.
உரிமைக்குரல் அடைந்த பிரம்மாண்ட வெற்றியால் சிவாஜி கணேசன் பொறாமைப்பட்டு ஸ்ரீதருக்கு ஹீரோ 72 படத்தை ஏனோதானோ என்று முடித்துக் கொடுத்தார். அதுதான் வைரநெஞ்சம் என்று வெளியானது. எந்த அளவுக்கு சிவாஜி கணேசன் ஒத்துழைப்பு இல்லை என்றால் ஒரு இடத்தில் சிவாஜி கணேசன் டப்பிங் பேசவே இல்லை. அந்தப்படத்தில் பாலாஜியின் பிறந்தநாள் அன்று ஷோபா ராமநாதனாக வரும் சிஐடி சகுந்தலாவுடன் சிவாஜி கணேசன் கைகோர்த்து ஆடியபடி பேசுவார். அப்போது சிவாஜி கணேசன் குரலுக்கு பதிலாக ரேடியோ விளம்பரங்களில் பேசியவர் (அவர் பெயர் சுந்தர் என்று நினைவு) பேசுவார். ஒரு தமிழ் படத்தில் சிவாஜி கணேசனுக்கு தமிழ் வசனத்தில் டப்பிங் குரல் கொடுக்கப்பட்ட ஒரே படம் வைரநெஞ்சம். இதை விவரம் தெரிந்த எந்த சிவாஜி கணேசன் ரசிகரும் மறுக்கமாட்டார்கள். அந்த அளவு பொறாமையால் சிவாஜி கணேசன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சிவாஜி கணேசன் டப்பிங் கொடுக்கும் முன்பே ஸ்ரீதர் அவசரப்பட்டு வெளியிட்டார் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் சப்பைகட்டு கட்டி பொய்சொல்வார்கள். 72ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 75ல் வெளியானது. இதுதான் அவசரமா? கடைசியில் வைரநெஞ்சம் படமும் டாக்டர் சிவா படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டும் டப்பாவுக்குள் போய் நஷ்டம் ஏற்படுத்தியது தனிக்கதை. இதுவும் ஒரே நாளில் 2 படம் வெளியாகி சிவாஜி கணேசன் ஏற்படுத்திய சாதனை..........
-
புரட்சித் தலைவரை வைத்து அன்று சிந்திய ரத்தம் படம் கறுப்பு வெள்ளையில் ஸ்ரீதர் எடுத்தார். அதேநேரம் ரவிசந்திரன் என்ற புதுமுகம் நட்சத்திர அந்தஸ்து இல்லாத முத்துராமனை வைத்து காதலிக்க நேரமில்லை படத்தை கலரில் எடுத்தார். இது சம்பந்தமாக விளம்பரமும் வந்தது. இதுபற்றி ஸ்ரீதர் சொன்னது இதுதான்: மக்கள் திலகத்திடம் யாரோ தவறாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. அவருக்கு அவரே விளம்பரம் என்று நினைத்தேன். அதனால் அவர் படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்தேன். ஒரு சில காட்சிகள் எடுத்த பிறகு மீண்டும் படப்பிடிப்புக்காக அவரை பார்க்கப் போனேன். ஆனால், அவர் அப்போது என்னிடம் ஒரு பெரிய பட்டியலை காண்பித்து இவ்வளவு படக்கம்பெனிகளுக்கு நடித்து தர வேண்டியிருக்கிறது என்றார். ஆமாம், இவ்வளவு கம்பெனிகள் இருக்கும்போது எனக்கு நீங்கள் நடிப்பது கஷ்டம்தான் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவரை வைத்து கறுப்பு வெள்ளையில் எடுப்பதை அவரிடம் விளக்கமாக சொல்லியிருந்தால் அவரும் புரிந்து கொண்டிருப்பார். அவரிடம் விளக்காததை நினைத்து வருந்தினேன்’..
என்று ஸ்ரீதர் தனது அனுபவத்தை சொல்லியிருந்தார். பிறகும் ஸ்ரீதர் கடனில் சிக்கியபோது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மக்கள் திலகம் அவருக்கு உரிமைக் குரல் படத்தை செய்து கொடுத்து மறுவாழ்வு அளித்தார். அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக ஸ்ரீதரிடம் அட்வான்ஸாக வாங்கிய 25 ஆயிரம் ரூபாயை உரிமைக்குரல் பட சம்பளத்தில் மக்கள் திலகம் பெருந்தன்மையைாக கழித்துக் கொண்டார் என்றும் ஸ்ரீதர் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் ஸ்ரீதருக்கு ஒத்துழைக்காதது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். ...........
-
வீடியோவில் எம்.ஜி.ஆர்., வரலாறு!
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்க்கை வரலாற்றை, வீடியோ ஆவணமாக மாற்றியுள்ளார்,நடிகரும், தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர். ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்., என்ற பெயரில், மொத்தம், 25 வீடியோக்கள், இதில் இடம் பெற்றுள்ளன.இது குறித்து, அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., மீது, என் தந்தை கொண்ட அளவு கடந்த பற்று காரணமாக, அவரது படங்களில், உடை அலங்கார நிபுணராக பணியாற்றினார்.
எனக்கு, எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், அப்பா மூலமாக, அவர் குறித்து கேட்டபடியே, எம்.ஜி.ஆர்., ரசிகனாகவே வளர்ந்தேன்.வரும் இளைய தலைமுறைக்கு, இதை தெரியப்படுத்தும் விதமாக, எம்.ஜி.ஆர்., வரலாற்றை வீடியோக்களாக உருவாக்கி உள்ளேன். இந்த கொரோனா காலத்தில், மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி, தன்னம்பிக்கை அளிப்பவையாக, இந்த வீடியோக்கள் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்........
எம்.ஜி.ஆர் வாழ்க்கை
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை 25 வீடியோக்களில் வெளியிட்டுள்ளார், பஷீர். எம்.ஜி.ஆர் பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்' என்ற தலைப்பில் 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில் இவர் பதிவேற்றியுள்ளார்.
எட்டாவது வள்ளல்
பத்திரிகையாளர் மணவை பொன்.மாணிக்கம் எழுதிய எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட புகழ்மன செம்மல் எம்.ஜி.ஆர் ஆகிய புத்தகங்களில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை படித்து நெகிழ்ந்த பஷீர், அவற்றை வீடியோக்களாக உருவாக்கி இருக்கிறார்.
உடையலங்கார நிபுணர்
இதுபற்றி ஜெ.எம்.பஷீர், கூறும்போது, 'என் தந்தை ஜமால், எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்று காரணமாக, அவரது படங்களில் உடையலங்கார நிபுணராக பணியாற்றினார். எனக்கு எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவிலையே தவிர, அப்பா மூலமாக அரைப்பற்றி கேட்டபடி எம்.ஜி.ஆர் ரசிகனாகத்தான் வளர்ந்தேன். அவரை பார்த்துதான் மற்றவர்களுக்கு உதவும் குணத்தையும் வளர்த்துக் கொண்டேன்.
தன்னம்பிக்கை
அந்த புத்தகங்களை படித்த போது தெரிந்து கொண்ட விஷயங்கள் மற்றும் எம்ஜிஆர் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்ட விஷயங்களை வைத்து வீடியோவாக உருவாக்கி இருக்கிறேன். இந்த வீடியோக்களை சுமார் 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த கொரோனா காலத்தில் மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை அளிப்பவையாக இந்த வீடியோக்கள் இருக்கும் என்கிறார் பஷீர்.........
-
அடுத்து நாம் சிவாஜி பட வசூலில் உள்ள தில்லுமுல்லுகளைப் பற்றி பார்க்கலாம். நமது மீது அபரிமிதமான பாசம் காட்டும் ஒரு சில அன்பர்கள் இதை பார்த்து என்ன பிரயோஜனம்? என்றும் வேறு உருப்படியான வேலையை பார்க்கும் படியும் கேட்கிறார்கள். நமது தளத்தில் வேறு என்ன உருப்படியான வேலை? என்று எனக்கு தெரியவில்லை.
சரி, அவர்கள் தளத்தில் என்ன உருப்படியான வேலை செய்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் தளத்தில் நாட்டின் தொழில் வளர்ச்சியையும்
GDP ரேட்டையும் ஏற்றுவதற்கு அனைவரும் ஒற்றுமையாக உழைப்பதை கவனித்தேன்.. சிவாஜி நடித்த இந்த காட்சி எந்தப் படத்தில் வருகிறது?
'ப' வரிசையில் மொத்தம் எத்தனை படம்? 'கு' வரிசையில் மொத்தம் எத்தனை?.
சிவாஜி இந்த நடிகையுடன் எத்தனை படங்களில் நடித்தார்?. சிவாஜி பேசும் இந்த வசனம் எந்த படத்தில் இடம் பெற்றது? இது போன்ற தொழில் வளர்ச்சி வேகமாக நடைபெறுவதை
பார்க்கும் போது எனக்கும் தேசப்பற்று சற்று அதிகம் பீரிட ஆரம்பித்து விட்டது. ஆகவே நாமும் தேசப்பற்றுடன் சிவாஜி பட வசூலில்
நடைபெற்ற ஊழலை பற்றி பார்க்கலாம்.
'ராஜா', 'நீதி' இரண்டும் சுஜாதா சினி ஆர்ட்ஸின் பாலாஜி படங்கள்.. இரண்டு படங்களும் தொடர்ந்து 100 காட்சிகள்HF என பேப்பரில் முழு பக்க விளம்பரம் வந்ததை பார்த்திருப்பீர்கள். அதை தொடர்ந்து வந்த வசூல் விபரங்களில் உண்மை, நேர்மை இருக்கிறதா? இல்லை மக்களை ஏமாற்ற கொடுத்த பொய் விளம்பரமா? என்பதை பார்க்கலாம்.
'நீதி' படத்தின் 28 நாட்கள் வசூலை பார்த்தால் ரூ 2,45,817.60. அதாவது 28 நாட்களில் மொத்தம் 84
காட்சிகள் HF . ஒரு காட்சியின் வசூல்
ரூ 2,926.40. 'திரை மன்னன்' பத்திரிகையில் 'ராஜா'வின் 10 நாட்கள் அதாவது 30 காட்சிகளின் வசூல் சுமார்ரூ 1,08,000. அதாவது ஒரு காட்சியின் வசூல் ரூ 3,600. 'ராஜா'வுக்கு பின்தான் 'நீதி'.
இரண்டும் 1972ல் வந்த படங்கள்.'ராஜா' ஜன 26 'நீதி' டிச 7
"ரிக்ஷாக்காரன்" 1971 ல் வெளியான படம். தொடர்ந்து 100 காட்சிகள் HF வசூல்ரூ 2,72,200. அதாவது ஒரு காட்சியின் வசூல் ரூ 2,722. "ரிக்ஷாக்காரனு"க்கு பின்னால் கட்டணங்களை மாற்றி அமைத்ததில் கூடியிருக்கலாம். 'ராஜா' தொடர்ந்து 107 காட்சிகள் HF விளம்பரம் வந்ததை நாம் அறிவோம். 107 காட்சிகளின் HF வசூல் 313124.80 .
அப்படியானால் ஒரு காட்சியின் வசூல் ரூ 2926.40 . சரி HF கணக்கு சரியாக வருகிறது. அப்படியென்றால் 50 நாட்கள் 150 காட்சிகள்HF ஆனால் என்ன வசூல் வரும். மொத்தம் ரூ 4,38,960. வரவேண்டும். ஆனால் ராஜா' படத்தின் 50 நாட்கள் வசூல் ரூ 4,64,457.80. என்று விளம்பரம் செய்திருக்கிறார்களே அதெப்படி? 50 நாட்களும் தொடர்ந்து எல்லா காட்சிகளும் HF என்று வைத்தாலும் ஒரு காட்சி வசூல் ரூ 3,096.38 வருகிறது. அதற்கு வாய்ப்பில்லை.
ஆனால் 'ராஜா'50 நாட்கள் தொடர்ந்து H F ஆகவில்லை. அப்படியானால் வசூல் இதைவிட சற்று குறைவாகத்தான் வந்திருக்க முடியும்.சுமார் ரூ 25,497.80 அதிகம் வருகிறதே? சிவாஜி படங்கள் மட்டும் 50,100,175 நாட்களை ஒட்டி. வசூல்
பிச்சிகிட்டு போகும் மர்மத்தை இதற்கு முன்னால்"திருவிளையாடல்"
"தங்கப்பதக்கம்" போன்ற படங்களில்
பார்த்திருக்கிறோம்.ஆனால் "ராஜா"வும் அப்படித்தானா?. அப்படி முயற்சி செய்தும் 1971 ல் வெளியான "ரிக்ஷாக்காரன்" வசூலை நெருங்க முடியவில்லை. ரிக்ஷாக்காரன் 51 நாட்கள் மொத்த வசூல் ரூ9,15,000. ஆனால் ராஜா 50 நாட்கள் மொத்த வசூல் ரூ 8,66,000.
"ரிக்ஷாக்காரன்" ஓடி முடிய மொத்த வசூல் ரூ 16,84000 ஆனால் ராஜா ஓடி முடிய 12 லட்சத்திற்குள் முடங்கி விட்டது. 50 நாட்களிலும்,ஓடி முடியவும் ரிக்ஷாக்காரனின் மொத்த வசூலை ராஜாவால் நெருங்க முடியவில்லை என்பதே உண்மை. சில பேர் 100 மீ ஓட்டப்பந்தயம் ஓடுவான். ஆனால் 1000 மீ அவனால் ஓட முடியாது.
அது போலதான் நம்ம ராஜா வும்.
50 நாளை வேகமாக ஓட்டிய "ராஜா" 100 நாட்களை ஓட்ட முடியாமல் 100 வது நாளன்று 2 காட்சிகளோடு படத்தை நிறுத்தி விட்டார்கள். அன்று இரவு 10 மணி இரண்டாவது காட்சிக்கு ஆளே வரவில்லையா? எவ்வளவு உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பது தெரியாதா? சிவாஜி ரசிகர்களுக்கு.
்
ஆனால் 'நீதி' ஒரு காட்சி வசூல் ரூ 2,926.40 என்று வருகிறது. அதையே 'திரை மன்னனி'ல் ரூ 3,600 என்று வருகிறது.
ஆக மூன்று செய்திகளில் ஒரு H F
காட்சிக்கு மூன்று விதமான வசூல் வருவதை நீங்கள் பார்க்கலாம்.
'நீதி'யும் தொடர்ந்து 100 காட்சிகள் HF
இந்த கண்கட்டு வித்தை சிவாஜி படங்களுக்கு மட்டும் வருவதை நாம்
சிவாஜி ரசிகர்களின் பாசம் என்பதா?
இல்லை அவர்கள் செய்யும் மோசம் என்பதா?.
இது எல்லா சிவாஜி படங்களுக்கும் அவர்கள் காட்டும் மோடி மஸ்தான் வேலைதான். எம்ஜிஆர் ரசிகர்கள் எங்கே கணக்கு பார்க்கப் போகிறார்கள் என்று கள்ளக்கணக்கை காண்பித்தார்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு நாள் நேரம் இன்மையால் இதை கவனிக்கவில்லை. சற்று ஓய்வு கிடைத்தவுடன் எடுத்த முதல் கணக்கே கோணல். எனவே அவர்கள் கணக்கு முற்றிலும் கோணலாகத்தான் இருக்கும் என்பதில் எள்முனையும் சந்தேகமும் இல்லை.
"ரிக்ஷாக்காரன்" 51 நாட்கள் வசூலை
தேவி பாரடைஸில் எளிதில் முந்திய "ராஜா"வுக்கு 100 நாட்கள் வசூலை ஏன் முந்த முடியவில்லை. 50 நாட்களுக்கு பிறகு படம் ஓடாமல் உட்கார்ந்து விட்டதா? என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் சிவாஜி ரசிகர்களுக்கு தெரியும் அந்த வித்தை. எப்போதெல்லாம் வசூல் குவிக்க வேண்டுமோ அப்போதெல்லாம் சரியாக வசூல் குவிக்கின்றன சிவாஜியின் படங்கள் அவர்கள் நினைத்தபடி.......... Courtesy: Mr.Shankar, Rtd., SBI., Tuticorin...
-
எம்.ஜி.ஆருடன் ‘பணம் படைத்தவன்’, ‘ஒளி விளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உட்பட பல படங்களில் r.s.மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். ‘காவல்காரன்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக மனோகர் நடித்திருப்பார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கும் மனோகருக்கும் குத்துச்சண்டை நடக்கும்.
படப்பிடிப்பின்போது மனோகரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு குத்துச்சண்டை தெரியுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘ஏதோ கொஞ்சம் தெரியும்’’ என்றார் மனோகர். இரண்டு மூன்று ஷாட்கள் முடிந்ததும் மனோகரின் பஞ்ச், தான் குத்துவதை தடுப்பது ஆகியவற்றை கவனித்த எம்.ஜி.ஆர். மனோகரிடம், ‘‘ஏன்யா பொய் சொல்றே? பெரிய சாம்பியன் மாதிரி ஃபைட் பண்றே’’ என்று கூறியபடியே அவரை செல்லமாகக் குத்தினார்.
‘அடிமைப்பெண்’ படத்தில் நடிப்ப தற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாட கத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட் களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம். மனோ கரை அழைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் நடத்தும் நாட கங்களுக்கு தேவையான பொருட்களை எவ் வளவு வேண்டு மானாலும் வாங் கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னு டைய செலவு’’ என்றார். மகிழ்ச் சியில் திக்கு முக்காடிப் போய்விட்டார் மனோகர். தனது நாடகங் களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்.
‘அடிமைப்பெண்’ படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, படிகளில் உருண்டு விழ இருந்த மனோகரை எம்.ஜி.ஆர். சரியான நேரத் தில் பிடித்து அவரைக் காப்பாற்றினார்.
நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆர்வத்துக்கு ஒரு உதார ணம். ஒருமுறை சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் மனோகரின் நாடகங்கள் பதின்மூன்று நாட் களுக்கு தொடர்ந்து நடந்தன. எல்லா நாட்களும் எம்.ஜி.ஆர். வந்து நாடகங்களைப் பார்த்தார்.
அடாது மழை பெய்தாலும் விடாமல் நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்ததும் உண்டு. அதே என்.கே.டி. கலா மண்டபத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் சார்பில் ‘சத்திய தரிசனம்’ என்ற நாடகம் நடந்தது. அது திறந்தவெளி அரங்கம். தனது மனைவி ஜானகி அம்மையாருடன் வந்து நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. கூடியிருந்தவர்கள் அருகே இருந்த கட்டிடங்களில் போய் ஒண்டிக் கொண்டனர். எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் மழையில் நனைந்தபடியே அமர்ந்திருந்தனர்.
இதைப் பார்த்துவிட்டு சகஸ்ரநாமம், ‘‘மழை காரணமாக நாடகத்தை நிறுத்திக் கொள்கிறோம். இன்னொரு நாள் இதை நடத்துவோம்’’ என்று அறிவித்தார். நனைந்த உடையுடன் மேடையேறிய எம்.ஜி.ஆர்., ‘‘அடாது மழை பெய்தாலும் நாடகம் பார்க்கத் தயாராக இருந்தேன். நீங்கள்தான் நிறுத்திவிட்டீர்கள். பார்த்தவரை நாடகம் சிறப்பாக இருந்தது. மீண்டும் நடத்தும்போது சொல்லுங்கள் வருகிறேன்’’ என்று பேசினார்.
அதன்படியே, பெரம்பூர் ஐ.சி.எஃப். திடலில் மறுபடியும் ‘சத்திய தரிசனம்’ நாடகம் நடந்தபோது எம்.ஜி.ஆர். சென்று பார்த்து கலைஞர்களை கவுரவித்தார்.
#படத்தில் தலைவருடன் s.v, சகஸ்ரநாமம் , t.k. பாலச்சந்திரன் , கள்ளபார்ட் நடராசன் , பக்கிரிசாமி
ஆகியோர் ..........
-
கோகுலம்*கதிர்*-செப்டம்பர் -2020
------------------------------------------------------
என் காசுல* உன்கட்சி கொள்கை*
---------------------------------------------------
நாடோடி மன்னன் படத்தை*முதன் முதலாக டைரக்ட்*செய்கிறார் எம்.ஜி.ஆர்.*யார் யாரையோ*வைத்து பாட்டு எழுதுகிறார் .* ஆனாலும் திருப்தி இல்லை .கடைசியில் பட்டுக்கோட்டையாரிடம் ,உன்கிட்ட*பாட்டு இருந்தா*குடு கல்யாணம் என்று கேட்டதுமே*ஒரு பாட்டை நீட்டுகிறார் .
அதில்*சும்மா*கிடந்த*நிலத்தை*என்று ஆரம்பித்து*மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே, பசி வந்திட காரணம்*என்ன மச்சான் ?* அவன் தேடிய*செல்வங்கள் வேறு இடத்திலே*சேர்வதினாலே வரும் தொல்லையடி ,தினம் கஞ்சி கஞ்சி*என்றால் பானை நிறையாது*.சிந்திச்சு முன்னேற வேணுமடி*என்ற வரிகளை*படித்து பார்த்தார்*எம்.ஜி.ஆர். பிறகு சிரித்துக் கொண்டே*,நீ ரொம்ப விவரம்* கல்யாணம் ,என் காசுல உன் கட்சி*கொள்கையை எழுதிடலாம்னு பார்க்கிறியா*? என்று கிண்டலாக கேட்டார் .
ஆனால் கடைசிவரை*எம்.ஜி.ஆர். இந்த கவிஞனை மறக்கவே இல்லை .என்னுடைய நாற்காலியில் நான்கு கால்களில் 3 கால்கள் யாருடையது என்று எனக்கு தெரியாது*. ஆனால்* அதில் ஒரு கால்*என் தம்பி பட்டுக்கோட்டை*கல்யாணசுந்தரத்துடையது என்று புகழ்ந்து கொண்டே இருந்தார் .
-
பாத்தாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 14/08/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.ஒரு பெரிய நடிகராக, தமிழக முதல்வராக இருந்த போதிலும் இப்போது பேசுகிறார், எனக்கு இவ்வளவு மன்றங்கள் இருக்கின்றது .லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் .அது ஒரு பெரிய விஷயம் அல்ல .ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போது, பல்வேறு காரணங்களுக்காகவும்*பலரும் கூட்டம் கூட்டமாக சேர்ந்து அவரை சொந்தம் கொண்டாடுவது உண்டு .ஆனால் அவன் இறந்த பிறகு ,என்னையே நான் எடுத்துக் கொள்கிறேன் .,எவ்வளவு பேர் அவனை நினைவில் வைத்திருக்கிறார்கள் எவ்வளவு பேர் அவனது நினைவை போற்றுகிறார்கள் .என்பதில்தான் ஒரு மனிதன் வாழ்ந்ததற்கான அர்த்தம் இருக்கிறது .அப்படி எனது மறைவிற்கு பின்னால் எனது மன்றங்கள் செயல்படுமேயானால் அதுதான் எம்.ஜி.ஆர். என்கிற மனிதன் வாழ்ந்ததற்கு ஏதாவது* நியாயமான காரணம் இருக்கிறது என்று நினைப்பதற்கு அது உதவியாக இருக்கும் ஆமாம். அது உண்மைதான் .இப்போதும்கூட எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மன்றங்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவிற்கு அவருடைய பெயரில் மன்றங்கள் இருக்கிறது .* அதே போல எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள், விசுவாசிகள், அபிமானிகள் ,மக்கள் திலகம் ,புரட்சி நடிகர், புரட்சி தலைவர் ,வாத்தியார் எம்.ஜி.ஆர். என்று பல்வேறு அமைப்புகள் சமூக வலை தளங்களில் போட்டி போட்டு கொண்டு அவர் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள் .* அவருடைய புகழை இன்றைக்கும் நிலை நிறுத்திக் கொண்டு ,அவருக்காக தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் நேரத்தை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் .என்பதுதான் அவர் கேட்டாரே ஒரு கேள்வி ,என் மறைவிற்கு பின்னாலும் என்னை வாழ செய்யபோகிறவர்கள் நீங்கள்தான் என்று ,அதை அவருடைய மன்றங்களை சார்ந்தவர்கள்* நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் .
காவலர்களுக்கு, காவல்துறைக்கு பயிற்சி அளிப்பதற்கு காவலர்கள் பயிற்சி கல்லூரி சென்னையில் இயங்கி கொண்டிருக்கிறது .* காவல்துறை அதிகாரியாக உள்ள வால்டர் தேவாரம் அதில் முதல்வராக பணியாற்றுகிறார் .அவர் ஒருநாள் வகுப்பில் பேசும்போது ,ஒரு காவலர் பணியில் இருக்கும்போது எப்படி இருக்க வேண்டுமென்றால் ,என் கடமை படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் அறிமுக காட்சியில் எப்படி செயல்படுகிறார் என்று பாருங்கள் என்று சொல்லி அந்த காட்சியை அவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கிறார் .* அந்த காட்சியில் ஒரு பெண் தன்னந்தனியாக ஒரு குழந்தையுடன் நள்ளிரவில், இருள் சூழ்ந்த பகுதியில் வந்து கொண்டிருக்கிறார் .திடீரென நான்கைந்து முரடர்கள் தோன்றி ,அவள் கையில் உள்ள குழந்தையையும், அவள் அணிந்திருந்த ஆபரணங்களையும் பறிக்க முயற்சிக்கின்றனர்* *அந்த சமயத்தில் காவல்துறை அதிகாரியான எம்.ஜி.ஆர்.ஒரு பைக்கில்* ரோந்து வரும்போது இதை பார்த்து விடுகிறார்*பைக்கில் இருந்து இறங்கும் நேரம்தான் தெரியும். மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து அந்த முரடர்களை அடித்து, உதைத்து, துவைத்து எடுத்து ,அந்த பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றுகிறார் .அந்த காட்சியை பார்க்கிறவர்கள் திடுக்கிட்டு போவார்கள். என்ன நடக்கிறது என்று நினைப்பதற்குள்* அந்த காட்சி நடந்து முடிந்துவிடும் .அவ்வளவு வீரம், வேகம், விவேகம், சுறுசுறுப்பு, விறுவிறுப்பு கொண்ட காட்சி அது .காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் இந்த காட்சியை பாடமாக தன் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதற்காக காவலர் பயிற்சி கல்லூரியில் திரையிட்டு காண்பித்ததாக அதிகாரி வால்டர் தேவாரம் தானே பலமுறை நிகழ்ச்சிகளில் சொல்லி பெருமை படுத்தியுள்ளார் .
நல்ல விஷயங்களை செய்வதற்கு நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் உங்களை* தேடி 9 அடிகள் தாண்டி* நன்மைகள் வரும் .என்று பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர். கூறியுள்ளார் .* இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் .* கடந்த 24/12/2019* *அன்று எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளன்று மதுரையை சார்ந்த பக்தர் ஒருவர் அன்னதானம் அளிப்பது என்று திட்டமிடுகிறார் .* 23ந்தேதி, அதற்கான ஏற்பாடுகள், பொருட்கள் எல்லாம் வாங்கி வைத்து, சமையற்காரரை,வரவழைத்து ,ஆலோசித்து,தன் வீட்டு பக்கத்தில் ஒரு இடத்தில பந்தல் அமைத்து* நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்தார் . என்ன பிரச்னை என்றால் 23ந்தேதி மதியம் இவர் வீட்டுக்கு அருகில் ஒரு முதிய பெண்மணி இறந்து போகிறார் . இப்படி* ஒரு தடை வந்துவிட்டதே. நாளை நிகழ்ச்சியை நடத்தலாமா ,வேண்டாமா என்று குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார் .* நடந்தது என்னவென்றால் அன்று மாலையே இறந்தவரின் சடலத்தை கொண்டு போய் எரித்து இறுதி சடங்குகளை முடிக்கிறார்கள் .*பிறகு அன்னதான நிகழ்ச்சி குறித்த பணிகள் மீண்டும் துரிதமாக*தயார் செய்கிறார் . மறுநாள் ,24ந்தேதி, குறிப்பிட்ட நேரத்தில் அன்னதான நிகழ்ச்சி தொடங்குகிறது . வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் மழை வருவது போல அறிகுறி. சிலர் இவரிடம் மழைவரும் போல தெரிகிறது . எப்படி நிகழ்ச்சியை நடத்துவது . சிலர் நனைந்துவிடுவார்கள் . நமது திட்டம் நல்லபடியாக நிறைவேறுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் . ஆனாலும் நிகழ்ச்சி, பொறுமையாக,ஆரம்பித்து, முடிவில் சற்றே வேகமாக அனைவரும்*சாப்பிட்டு முடித்து விடுகிறார்கள் .மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுறுகிறது*5.15க்கு* அடைமழை பொழிய ஆரம்பித்து கொட்டி தீர்த்துவிடுகிறது . அத்தனை தடைகளையும் கடந்து* நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்த அந்த மதுரை பக்தர் ,தலைவர் எம்.ஜி.ஆர். கூறியபடி நல்லதை செய்வதற்கு ஒரு அடி எடுத்து வைத்தால்* உங்களை தேடி 9* அடிகள் தாண்டி*நன்மைகள் வந்து சேரும் என்பது நிதர்சனமான உண்மை ,. இது வாத்தியார் சொன்னது என்று***சமூக வலை தளத்தில் பதிவு செய்தார் .*
நல்லதை செய்ய நினைக்கும்போது பல தடைகள் வருவது போல தோன்றினாலும் கூட* அந்த தடைகள்*.தடம் தெரியாமல் போகும் நிச்சயம்*உங்களுக்கு பலன் கிடைக்கும் என்பது ,எம்.ஜி.ஆர். அவர்கள் அவ்வையின் சொல்லான* அறம் செய்ய விரும்பு என்பதை தன் வாழ்நாள் எல்லாம் கடைபிடித்தார் அல்லவா,அதனால்தான் மக்கள் இதயங்களில் அவர் மன்னாதி மன்னனாக வீற்றிருக்கிறார் .
வென்றாரும், வெல்வாரும் இல்லாத நிலையில் ஒளிவீசும் தலைவா ,முடியரசருக்கு இல்லாத செல்வாக்கெல்லாம் முழுமையுடன் வெற்றிபெறும் முழுமதியே ,குன்றடைய புகழ் கொண்ட குணக்குன்றே தென்னாடும், தென்னவரும் உள்ளவரை* *.மன்னா உன் திருநாமம் துலங்கவேண்டும்*உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர், உள்ளங்கள் அதை கேட்டு மகிழ வேண்டும் .நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழாவில் இந்த கவிதை வாழ்த்தி எழுதி வாசிக்கப்பட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதியால் என்பது வியப்பான செய்தி .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் ....
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.உன்னை அறிந்தால்* - வேட்டைக்காரன்*
2.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
3.காவல் துறை அதிகாரியாக எம்.ஜி.ஆர். - என் கடமை*
4.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -ரிக்ஷாக் காரன்*
5.நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*
6.நான் அளவோடு ரசிப்பவன் - எங்கள் தங்கம்*
-
28வது நினைவு நாள்:
அமைச்சர் பதவியை மறுத்த ப.நீலகண்டன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த சக்ரவர்த்தி திருமகள், ராமன் தேடிய சீதை, சங்கே முழுங்கு, குமரிகோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், கணவன், காவல்காரன், கொடுத்து வைத்தவள், திருடாதே, படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். ரஜினியின் அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் மாதிரி, எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் ப.நீலகண்டன்.
எந்த விஷயத்தில் சந்தேகம் இருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் ப.நீலகண்டனிடம் தான் ஆலோசனை கேட்பார் எம்.ஜி.ஆர். அவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவரை தனது இணை இயக்குனராக வைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை கமர்ஷியல் ஹீரோவாக்கியதில் நீலகண்டனுக்கு பெரும் பங்கு உண்டு.
கடைசிவரை எம்.ஜி.ஆருடன் நட்பாக இருந்த நீலகண்டன், அவரிடம் எந்த உதவியையும் கேட்டு பெற்றதில்லை. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆன பிறகு தன்னை வளர்த்த ப.நீலகண்டனுக்கு ஏதாவது செய்ய நினைத்தார். திரைப்படம் உள்ளிட்ட கலைத் துறைக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கி அதற்கு ப.நீலகண்டனை அமைச்சராக்க விரும்பினார். ஆனால் நீலகண்டன். உங்கள் அன்பு ஒன்றே போதும் என்று அதை மறுத்து விட்டார். அவரின் 28வது நினைவு தினம் இன்று..........
-
புதுக்கோட்டை நகரில் எங்கவிட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மகத்தான சாதனை மற்றும்... திரைப்பட பட்டியல்கள் எங்கவீட்டுப்பிள்ளை
82 நாட்களும், ஒளிவிளக்கு
67 நாட்களும் அடிமைப்பெண்
66 நாட்களும் ஆயிரத்தில் ஒருவன்
60 நாட்களும் குடியிருந்த கோயில்
62 நாட்களும்
நம்நாடு
60 நாட்களும், காவல்காரன்
52 நாட்களும் ரகசியபோலிஸ்115
50 நாட்களும்
ஓடி சாதனை பெற்றது. இந்த சாதனையில்
50 நாள் கூட ஓடாத சிவாஜியின் சிவந்தமண் திரைப்படம் 41 நாட்களில் எடுக்கப்பட்டு விட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாடோடி மன்னனுக்கு பின் 50 நாள் ஓடிய திரைக்காவியம் எங்கவிட்டுப்பிள்ளை அதன் பின்பு நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான நம் நாடு திரைப்படம் தேவகோட்டை நகரில் உள்ள லட்சுமி திரையரங்கில் சனி ஞாயிறு 4 காட்சியும்
மற்றும் 13 நாட்கள் மூன்று காட்சியும் ஓடி 50 நாட்கள் கடந்து சாதனையைப் படைத்தது. இங்கு உள்ள சரஸ்வதி திரையரங்கில் சிவந்தமண் 18 நாட்கள் மட்டுமே வசூல் இல்லாது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்
தக்கது..........
-
மதுரை சிந்தாமணி திரையரங்கில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் சாதனைகள்...*
அரங்கில் வெள்ளிவிழா ஓடி சரித்திரம் படைத்த காவியங்கள்*
அடிமைப்பெண் 176 நாள்
வசூல் : 4,34,643. 75*
மாட்டுக்கார வேலன்* 177 நாள்
வசூல் : 4,33,744.54
*
அரங்கில் 200 காட்சிகள் அரங்கு நிறைந்த முதல் திரைக்காவியம் இதயக்கனி.
அரங்கில் 150 காட்சிகள் அரங்கு நிறைந்த திரைக்காவியம்*
மீனவ நண்பன்.
அரங்கில் நூறு காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த காவியங்கள்*
அடிமைப்பெண்*
மாட்டுக்கார வேலன்*
நேற்று இன்று நாளை
அரங்கில் அதிக வசூலை உருவாக்கிய திரைக்காவியம் இதயக்கனி
வசூல் : 5,52,218.33
அரங்கில் 20 வாரங்களை கடந்த திரைக்காவியங்கள்*
அ.40 திருடர்களும்*
141 நாட்கள்*
அன்பே வா*
147 நாட்கள்*
இதயக்கனி*
146 நாட்கள்.
100 நாட்களை வெற்றி கொண்ட திரைப்படங்கள் ....
ராஜகுமாரி 112 நாள்
மர்மயோகி* 104 நாள்
காவல் காரன் 126 நாள்
வசூல் : 3,01,950.76
எங்கள் தங்கம்* 107 நாள்
வசூல் : 2,75,920.91
குமரிக் கோட்டம் 105 நாள்
வசூல் : 2,51,983.08
நேற்று இன்று நாளை 119 நாள்
வசூல் : 4,05,967,78
மீனவ நண்பன் 117 நாள்
வசூல் : 4,46,814. 11
12 வாரங்களுக்கு மேல் ஓடிய திரைக்காவியங்கள்.....*
மன்னாதி மன்னன்*
84 நாட்கள்.
கண்ணன் என் காதலன்*
93 நாட்கள்*
ரகசிய போலீஸ் 115*
92 நாட்கள்**
வசூல் : 2,66,722.25
ராமன் தேடிய சீதை*
84 நாட்கள்*
வசூல் : 2,64,700.42
மற்றும் அரங்கில் திரையிடப்பட்ட திரைப்படங்கள்*
சங்கே முழங்கு 69 நாட்கள்*
மகாதேவி 63 நாட்கள்
(இரண்டு அரங்கில் வெளியிடப்பட்டது
சந்திரா 41 நாள் )
ராஜராஜன் 50 நாட்கள்*
நாம் 70 நாட்கள்*
கலங்கரை விளக்கம் 73 நாட்கள்.
அரங்கில் அதிக அளவில்*
மக்கள் திலகத்தின் காவியங்களே
100 நாட்களை கடந்து வெற்றி சாதனை புரிந்துள்ளது.*
தொடரும் சாதனைகள்..............
-
1954 ல் மகத்தான...
மாபெரும் சாதனைகள் பல படைத்து அவ்வாண்டில் வெளியான
"மலைக்கள்ளன்".... மனோகரா படத்தை வென்ற
வரலாறு ....காணீர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கதாநாயகனாக வலம் வந்து மிகப் பெரிய தாக்கத்தையும் வெற்றியையும் ஏற்படுத்திய வெற்றி காவியமாக பட்சிராஜா தயாரிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை படைத்த ஒரே திரை காவியமாக மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் உருவெடுத்தான்!
மலைக்கள்ளன் திரைப்படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்......
ராஜகுமாரி , மருத நாட்டு இளவரசி மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி, என் தங்கை, ஜெனோவா திரைப்படங்களுக்கு பின் மிகப்பெரிய எழுச்சியை தென்னக திரைப்பட உலகில் ஏற்படுத்திய திரைக்காவியம்...... ஒரே ஒப்பற்ற காவியம் புரட்சி நடிகரின் வெற்றி பவனில் வெளியான மலைக்கள்ளன் ஆகும்.
"கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான் தவறுமாயின் குறி வைக்கமாட்டான்" என்று மர்மயோகியில்* மக்கள் திலகம் சொன்ன கருத்துக்கு பின்.... மலைக் கள்ளனில் மக்கள் திலகம் பதித்த ஒரு வெற்றி தலைப்புதான் "மலைக்கள்ளன் வந்தான் மக்கள் உள்ளங்களை வென்றான்" என்ற கருத்துடன் மலைக்கள்ளன் பவனி வந்தான் !
1954 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் வெளியான அத்தனை படங்களுக்கும் மகுடமாக ஜொலித்த ஒரே ஒப்பற்ற திரைக்காவியம் மக்கள் பேரரசு எம்.ஜி.ஆரின் மலைக்கள்ளன் ஆகும்.
மர்மயோகி திரைப்படத்திற்குப் பின் இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட திரைக்காவியம் மலைக்கள்ளன் ஆகும்.
48 திரையரங்குகளில் வெளிவந்து தமிழகத்தில் மட்டும் 38 திரையரங்கில் திரையிடப்பட்டு அத்தனை திரையரங்குகளிலும்*
50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த ஒரே காவியம்
மலைக்கள்ளன் மட்டுமே.
புரட்சி நடிகர் திரைப்பட வரிசையில் 32 வது காவியமாக மலைக்கள்ளன் ஜொலித்தான் ! மக்கள் திலகம் தனிப்பெரும் கதாநாயகனாக வலம் வந்த பதிமூன்றாவது திரைப்படமாக மலைக்கள்ளன் மகுடம் சூட்டினான்.
1954 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் வெளியான அத்தனை படங்களுக்கும் மகுடமாக ஜொலித்த ஒரே ஒப்பற்ற திரைக்காவியம் மக்கள் பேரரசு எம்.ஜி.ஆரின் மலைக்கள்ளன் ஆகும்.
மர்மயோகி திரைப்படத்திற்குப் பின் இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட திரைக்காவியம் மலைக்கள்ளன் ஆகும்.
48 திரையரங்குகளில் வெளிவந்து தமிழகத்தில் மட்டும் 38 திரையரங்கில் திரையிடப்பட்டு அத்தனை திரையரங்குகளிலும்*
50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த ஒரே காவியம்
மலைக்கள்ளன் மட்டுமே.
புரட்சி நடிகர் திரைப்பட வரிசையில் 32 வது காவியமாக மலைக்கள்ளன் ஜொலித்தான் ! மக்கள் திலகம் தனிப்பெரும் கதாநாயகனாக வலம் வந்த பதிமூன்றாவது திரைப்படமாக மலைக்கள்ளன் மகுடம் சூட்டினான்!
சென்னையில் 3 திரையரங்குகளில் திரையிடப்பட்டு கேசினோவில் 100 நாட்களை வெற்றி கொண்ட முதல் காவியமாக மலைக்கள்ளன் திகழ்ந்தான். பிரபாத் 12 வாரங்களும், சரஸ்வதியில்*
11 வாரங்களும்* வெற்றி கொண்டான் மலைக்கள்ளன்.
மதுரை தங்கம் திரையரங்கில் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் மாபெரும் சாதனையை... வசூலை படைத்து 1954 ஆம் ஆண்டு 2 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்த ஒரே திரைப்படமாக மலைக்கள்ளன் திகழ்ந்தான்..........
-
மதுரை மாநகரில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி திரைப்படங்களுக்கு பின் ஐந்தாவதாக 100 நாளை கடந்தது திரைக்காவியம் மலைக்கள்ளன் ஆகும்.
நெல்லை மாநகரில் ராஜகுமாரி திரைப்படத்திற்கு பின் மலைக்கள்ளன் 100 நாட்களை கடந்து வெற்றி கொண்டு சாதனையைப் பதித்தான்.
1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக ஊர்களில் நூறு நாட்களை வெற்றிகொண்ட திரைக்காவியம் புரட்சிப் பேரரசின் மலைக்கள்ளன் ஆகும். சென்னை, மதுரை, திருச்சி கோவை, சேலம், நெல்லை, இலங்கை 100 நாட்களை வெற்றிகொண்ட வேந்தனாக மலைக்கள்ளன் முடிசூடினான்.
இந்திய திரைப்பட உலகில் ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஆறு மொழிகளில்.....*
(தமிழ் ,தெலுங்கு ,கன்னடம், உருது ,இந்தி , சிங்களம்) தமிழைத் தவிர மற்ற 5 மொழிகளில் நடித்த கதாநாயகன்களை விட மக்கள் திலகம் இயற்கையாக திரையில் பவனி வந்து ஜொலித்த காட்சிகள் சிகரம் போல் ஒளிவீசியது* மலைக்கள்ளன் காவியத்தில்...*
வெள்ளித்திரையில் மலைக்கள்ளன் காவியத்தில் மக்கள் திலகம் 4* விதமான கதாபாத்திரத்தில் பல விதமான தோற்றத்தில் சாதனை படைத்தார் மலைக்கள்ளன்... ஆக குமாரதேவன் ஆக .....அப்துல் ரஹீம் ஆக .....வயோதிகராக நான்கு வேடத்தில் வந்து வெள்ளித் திரையில் தன் இயற்கை பரிமாணத்தை பதித்தார்..........