-
என்னென்பேன் ஏதென்பேன்
என்றெல்லாம்
இனிப்புத் தடவிய வர்ணனைகளுக்கு
பெண்கள்
நாணப்பட்டு கன்னஞ்சிவந்ததெல்லாம் ஒருகாலம்..
இப்போது
கஷ்டப்பட்டு புதுப்புது
விதமாய்ச் சொன்னாலும்
முகத்தில்
உணர்வினைக் காட்டுவதில்லை...
என்ன காதலா
என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள்...
இருந்தாலும்
ரசிக்கத் தவறுவதில்லை
உள்ளூர..
-
உள்ளூர அடைத்த சமாச்சாரங்கள்
சமோசாவின் கிழங்கு மசாலாக்கள்
சீயம் போளியின் தேங்காய் வெல்லங்கள்
சிறிதளவும் சிரமமாயிருப்பதில்லை
பச்சைக் காயும் வடையும் மெயோனைசும்
அடக்கிய பர்கரை தின்பது சாகசமே
-
சாகசம் பண்ணித்தான்
மயக்கிப்புட்டா போல
பாரேன் அவ்ளையும்,
அவ வீட்டு மனுஷாளையும் மட்டும் தான்
பார்க்கறானே தவிர
நம்மள் மதிக்கிறானா
இப்பவே மாறிட்டான் பாரேன்
சின்ன்க்கா பெரியக்காவிடம்
கண்கள் தளும்பச் சொல்லியதும்
அதானே
முன்னெல்லாம் என்னை வாய் நிறைய
மாமான்னு ஆசையாக் கூப்பிடுவான்
இப்போ
அத்திம்பேர்னு எனக்கென்னவோ
வயசான் மாதிரி கூப்பிடுறான்
நீ சொல்ற்து ச்ரிதான் இவளே
என
அக்காவின் கணவர்
பக்கவாத்தியம் வாசித்ததும்
திருமண வ்ரவேற்பில்
பழக்கமில்லாத கோட் சூட்டினால்
விய்ர்வை வழிந்தாலும்
செயற்கையாய்
தெரியாதவர்களுடன்
செயற்கைச் சிரிப்பில் கை குலுக்கி
பக்கத்தில் இருப்பவ்ளின்
அழகைக் கூடப் பார்க்காமல்
க்ளைப்பாய் இருந்த் நான்
மலங்க மலங்க முழித்தபடி
கேட்டுக் கொண்டிருந்தது ஒரு காலம்..
இப்போது
போன மாதம் திருமணமான
சின்னக்காவின் பையனைப் பற்றி
அவரிடமே தொலை பேசினேன்..
என்னக்கா
மாட்டுப் பொண்
நன்னா நம்ம பையன
மயக்கிட்டாளா..
உன்னை கவனிக்கறாளோ என்னமோன்னு
ஒண்ணுவிட்ட சித்தி
முந்தானாள் சென்னையில் இருந்து கேட்டாக்கா...
அதெல்லாம் ஒண்ணுமில்ல க்ண்ணா
பாவம் அந்தக் குழ்ந்தை
வெகுளி
எப்பவும் சிரிக்கத்தான் செய்யுது போ
என்ன சமைக்கத் தான் தெரிய்லை
நா ஹெல்ப் பண்றேன்
நெட்ல அம்மா கூட் பேச்றா தான்
அதனாலென்ன.. நாமெல்லாம் புது மனுஷா தானே
அவளுக்காக
நம்ம பையனும் கொஞ்சம் அவாளோட பேசறான்..
இதெல்லாம் தப்பா எடுத்துக்கலாமா சொல்லு...
சொல்லச் சொல்ல சிரிப்புடன்
மனதுள் எழுந்த்து ஒரு கேள்வி..
மாறியது காலமா..
அல்லது மனிதர்களா...
-
மனிதர்களா பதர்களா
கொதிக்கின்றன கோபத்தில்
நீரும் நிலமும் நெருப்பும்
வானும் வெளியும் கூடி நின்று
மாசுறச் செய்தார் மதியின்றி
அழித்து அவலமாக்கினார் அந்தோ
மூடரிவர் திருந்தவேயில்லை
முடிவதற்கா இந்த சொர்க்கம்
-
சொர்க்கம் என்பது..
முன்பு
பல்லை எடுத்து பின் பொய்ப்பல்
பொருத்தியவுடன்
தாத்தா ஜம்மென்று முறுக்கைக் கடித்து
ரசித்து சாப்பிட்ட போது
அவர் கண்ணில் தெரிந்த ஒன்றா..
மனைவி எதற்கோ வெளியில் இருந்தபோது
அப்பா ரொம்பத் தலைவலியாப்பா
இரு பிடிச்சுவுடறேன் சொல்லி
குடுகுடுவென்று ஓடி
ஸ்டூல் போட்டு
உயரத்தில் ஷெல்பில்
இருந்த அமிர்தாஞ்சனததை எடுத்து
பின் அருகில் வந்து
இருவிரல்களிலும் எடுத்து
தலையின் இருபுறமும் அழுந்த
தேய்த்து
கொஞ்சம் சுற்றியும் தேய்த்து
பின் எப்படிப்பா இருக்கு என
சின்னவள் கேட்ட போது
எனக்கும் தெரிந்ததா..
காதலியின் முதல் முத்தம்,
பிறந்த சின்னப் பூ
குட்டி விரலால் பிடித்துக் கொள்ளும் போது,
இன்னும் இன்னும்..
சொர்க்கங்கள் புலப்படத்தான்
செய்கின்றன
உயிர்வாழும் போதே..
-
உயிர்வாழும் போதே சவ நிலை
இல்லையில்லை தவ நிலை
ஆனந்தம் நிர்வாணம் முக்தி
அடி ஆத்தி ஆத்தி
ஆடும் நித்தி நித்தி
அஞ்ஞானமா மெய்ஞானமா
ஆணும் பெண்ணும் ஆடிப் பாடி
அந்தக்கால அந்தப்புரமாகுது
ஆசிரமங்கள் ஊருலகெங்கும்
கோடிகளை அங்கு குவித்த
கூறு கெட்ட மக்கா மக்கா
மானமுனக்கு இருக்கா இருக்கா
-
இருக்கா இருக்கா
இல்லையா இல்லையா
இது என்ன கேள்வி
இருந்தால் இல்லை
இல்லை என்றால் இருக்கும்
உண்ருங்க்ள் குழந்தைகளே
சிரித்தவண்ணம் துறந்தவர்
எனத் தன்னை
சொல்லிக் கொள்பவர் சொல்ல
மின்னிய்து புகைப்படக் கருவிகள்
வெள்ளைப்பேப்பர்களில்
பேனாக்களின் எழுத்துக்கோலங்கள்
மறு நாள் வண்ணப் படத்தில்
முதல்பக்கத்தில்
தினப் பத்திரிகைகளும் வாராந்த்ரிக்ளும்
பாராட்டிய் படி...
சில் நாட்க்ள் கழித்து
துறந்தவர் துறக்காத்வ்ற்றை அறிந்து
அதுப்ற்றி அவ்ரிடமே கேட்டால்
இருக்கும் என்றால் இருக்கும்
இல்லை என்றால் இல்லை
எனப் பதில்வர
அதுவும்
தொலைக்காட்சி,பத்திரிகைகள்
மூல்மாக
எதிர் மறையாக...
துறந்தவரைத்
இன்னும் துறக்காமல்
கூட்டம் இருப்பதன் காரண்ம்
பணமா
நல்ல குண்மா
வேறு ஏதாவ்தா..
எதுவுமில்லை...
கலிகாலம்...
-
கலிகாலம்தான் சந்தேகமேயில்லை
காக்கா குருவி மைனா காணவில்லை
குளங்களும் கொக்குகளும் இங்கில்லை
கான்கிரீட் காடுகளில் வாழ்கின்ற நிலை
கரைகளை உடைக்கும் விஞ்ஞான அலை
கட்டிப்போடும் சொகுசுகளின் மாய வலை
கரையும் சுகங்களின் நீளுகின்ற எல்லை
கொடுக்கிறோம் கனவிலுமறியாத விலை
-
விலை கொஞ்சம் ஜாஸ்தி தான்
இருந்தாலும்
ஆசையாய்க் கேட்டுவிட்டது..
பட்ஜெட் நூறு தான்
இது எண்ணூறு
..ம்ம்.
வாங்க வேண்டியது தான்
எட்டுமாசம் கொஞ்ச்ம்
கை செலவைக் குறைக்க வேண்டியது தான்
இவளோ திட்டுவாள்
பரவாயில்லை
சமாதானப் படுத்திவிடலாம்..
கடன்..ம்ஹீம்.. வாங்க வேண்டாம்
மில்லில்
கொஞ்சம் ஓவர் டைம் பார்க்கலாம்..
கொஞ்சம் சிகரெடடைக் குறைத்துக் கொள்ள்லாம்..
இருப்பது ஒரே குட்டி...
பலவிதமாய் அலசி
அழகாய் ஒரு ஃப்ராக் வாங்கி
குட்டியிடம் காண்பித்தால்
ஒரே குஷி...
மறந்தே போனது எல்லாம்
தாவி
அது கொடுத்த
ஒரே முத்தத்தில்
-
முத்தத்தில் முழு நிமிடம் ஓட்டி
கதையென்பதை வலிய ஓரங்கட்டி
இசையென இரைச்சல் ஒன்றை கூட்டி
அதையும் இதையும் கொஞ்சம் காட்டி
திறந்து காட்டுவதில் மட்டும் போட்டி
திரையில் விரிவது கொடுமை சாமி
-
சாமி
உன்னை வேண்டிக்கிட்ட்து பலிச்சு
எனக்கு கிடச்சுடுத்து நான் வேண்டிய்து
ரொம்ப நன்றி சாமி
குதித்தான்
தட்டில் பல பணத்தைப் போட்டான்..
பய்பக்தியுட்ன்
நெற்றியில் இட்டுக்கொண்டான்
சென்றான்
சில தின்ங்கள் கழித்து
அதே ஆள்..
சாமி
இது என்ன அனியாயம்
கொடுக்கரமாதிரிக் கொடுத்து
எடுத்துக்கிட்டியே
நியாயமா
இனி உன்னைப் பார்க்க மாட்டேன் போ...
இரண்டு தடவைகளிலும்
ச்லனமில்லாம்ல்
சாமி காத்தது மெளனம்
-
மௌனம் மயான மௌனம்
இருட்டு கருவறை இருட்டு
அடுத்ததும் பொட்டையா
கூசாமல் கொன்று விடு
அல்லது ஓடு அப்பன் வீட்டுக்கு
அடுத்து கட்டப்போகும் மகராசி
பெறுவாள் மகனை புருசனுக்கு
கள்ளிப்பாலும் நெல்லுமணியும்
பழசாகி குளிப்பாட்டி குளிரில்
விறைக்க வைப்பது புது உத்தி
சட்டம் என்ன செய்யும் பாவிகளே
அதி நவீன சோதனைக்குப்பின்
ஓசையின்றி ஒழிக்கும் பட்டணமே
நாலெழுத்து சொல்லித்தர ஏலாதாம்
நகை நட்டு போட வக்கில்லையாம்
வேலியிட்டு பயிரை பாதுகாக்கணுமா
பொய்யாய் புனைய எத்தனை காரணம்
இரண்டாம் தர குடிமகளாய் அழுத்தி
குடி முழுகிப் போகவே குழி பறிக்கிறார்
கண்ணே கண்மணியே கலங்காதே
முடிவில்லா கிரகணமிருந்ததில்லை
வெள்ளி நிலவே வெள்ளை மலரே
விசும்பின் ஒளியே வாழ்வின் சுவையே
வினைகளின் வினாக்களின் விடை நீயே
-
நீயே தான்
எல்லாம் செய்ய வேண்டும்
போகுமிடத்தில்
வா சொல்லிக் கொடுக்கிறேன்..
அக்காவுக்குக் கல்யாணம்
நிச்சயமானதும்
அம்மா
சுத்தமாய் மாறி
என்னை ஒதுக்கி
எல்லாம் அவளுக்கே
சமையல், ஒப்பனை இன்னபிற
சொல்லிக் கொடுத்தாள்..
கல்யாணம் ஆன பின்பும்
கூட
இருவரும் பேசிக்கொள்ளும்
சம்பாஷணையில்
என்னை சேர்க்க மாட்டார்கள்..
போடி அந்தண்டை
என அதட்டுவார் அம்மா..
என்ன ரகசியம் வேண்டியிருக்கிறது
முணுமுணுத்து நகர்வேன்..
ஒருவருடம் கழித்து
எனக்கு நிச்சயம் ஆன பிறகு
என்னிடம் பேச வந்த போது
போ அவளிடமே போய் பேசு
எனக் கோபிக்க
அம்மா சிரித்து
அடி குட்டி...
இப்ப தான்
உன் கிட்ட பேசணும்..
எனச் சொல்லி
பேசி, கற்றுக் கொடுக்க..
ஒரே ஒருகேள்வி எழுந்தது மனதில்
கல்யாணம் ஆனால்தான் பெரிய பெண்ணா
-
பெரிய பெண்ணா இல்லை சின்ன பெண்ணா
பெரிய குழப்பம் தொடருது என்னுள்ளே
வருடத்தோடு வயது வளரவில்லையோ
வதனபுத்தக பண்ணை விளையாட்டிலே
விதையாக பூ கனி தானியங்களோடு
வானவில்லும் கிடைக்கக் கண்டு விதைத்திட
வயலெல்லாம் வெடித்துச் சிரிக்கும் வானவில்கள்
வியப்பான வெள்ளைக் களிப்பிலெனை ஆழ்த்துதே
நடை தளர்ந்த வயதிலே நான்கும் பார்த்தபின்னே
நடப்பதும் நடக்காததும் மறந்து முன்னம் போல்
கற்பனைகளும் கதைவிடும் விளையாட்டு களங்களும்
களிப்பாக்கி அமுதுண்ட தேவர் லோகம் காட்டுவதேன்
-
காட்டுவதேன் என்ப்து புரியாத புதிர்...
எனக்கே தெரியாதா என்ன..
என்ன தான் கொஞ்சம் குண்டா இருந்தாலும்
உன்னோட க்ண்ல மின்ற் குறும்பு
ச்ற்றே விலகியிருக்கும் நடுப்ப்ல்..
குழ்ந்தைத் த்னமான உன் குரல்..
என்க்கு ரொம்ப்ப் பிடிக்கும்..
க்ல்யாண்மான புதிதில்
மனைவியின் வார்த்தைக்ள் இவை..
எப்ப்டியிருந்தாலும் சார்
கொஞ்சம் சிரித்தே
பிரச்னைகளை எதிர் கொள்கிறீர்கள்
ஐ லைக் இட்
சொன்ன்வள்
அலுவ்லக மார்க்கெட்டிங் பெண்..
கண்ணா
கொஞ்சூண்டு தொப்பையைக் குறை
அப்புறம் பாரு
இந்த டானிஷ் குட்டி
ஒம் பின்னாலேயே வரும்
உபதேசித்த்து அலுவ்ல்க
விற்பனை மேலாளர்..
இருந்தாலும்
கண்ணாடி முன் பார்க்கும்போது
எவ்வ்ளது தடவை
இருட்டை அப்பப்பார்த்தாலும்
தலை தூக்கி
கள்ளத்தன்மாய்ச் சிரித்தப்டி
வெளிவ்ரும்
வெள்ளி ஒற்றை முடி...
கோபத்துடன்
கத்திரி எடுத்து வெட்டினேன்..
ஹேய் நான் இப்போ இளமையாக்கும்...
என
கெக்கெக்கே என் கொக்க்ரித்தால்
ஆர்ப்பரிக்காமல்
சிரித்து
வெள்ளிமுடி சொல்கிறது சேதி..
-
சேதி சென்றது பல காதம்
டாம் டாமென தட்டித் தட்டி
பறந்து சென்றது புறாவுடன்
மடித்துக் கட்டிய மடலாய்
கடல் தாண்டியது கடிதத்தில்
விரைந்து வந்தது தந்தியாய்
காதில் சொன்னது வானொலிப்பெட்டி
கண்ணுக்குத் தந்தது தொலைக்காட்சி
கணிணியில் குவிந்திருக்கும் கடல்
உள்ளங்கை அலைபேசியில் இப்போது
விரல் தொடக் கொட்டிடக் காத்திருக்கு
மூளை வளருது துரத்துது முன்னேற்றம்
-
முன்னேற்ற்ம் வேண்டுமென்றால்
கொஞ்சம் சிரி
க்ண்களை அகலவிரி
அப்பொழுது தான் பெண்கள்
உன்னை ச் சூடுவார்கள்..
பெரிய் ரோஜா
சற்றே சோம்பியிருந்த
குட்டி ரோஜாவிடம் சொல்ல.
ம்ம்
என்ன பண்ணுவது
நீ நன்னா வள்ந்துட்ட
அதனால தெனாவட்டாசொல்ற
பாரேன் நேத்து மழை
அப்புறம் தோட்டக்காரன் வேற
த்ண்ணி ஊத்தினான்..
எவ்ளோ குடிச்சும் வள்ர முடியலை..
விதிப்படி ந்டக்கட்டும்
பெரிய ரோஜா தலையிலடித்துக்கொள்ள
பறிக்கும் பெண் வ்ந்தாள்...
கையில் இரு கூடைகள்
பெரிய ரோஜா ஒரு கூடை
சின்னது இன்னொன்றில் விழ..
க்டைக்குச் சென்று மாலைகளானதில்...
தொம்மென்று வைக்கப்பட்ட் பெரிசு
சுற்றும் முற்றும் பார்த்தால்
உயிரற்ற உட்லின் மேல்..
சுற்றியுள்ளவர்களுடன் சேர்ந்து
அதுவும் அழுத்து....
டப்க்கென்று விழுந்த
மாலையிலிருந்த குட்டி ரோஜாவிற்கு
கற்பூர் வாச்னை..ம்ற்றும் இன்பமான
சொல்ல முடியாத ந்றுமணம்...
உற்றுப் பார்த்தால்
இருப்பது அம்பாள் கழுத்தில்..
ஓ தாங்க்யு
ஓ நன்றி
ஓ நன்னி அம்மே
என பல் மொழிகளில் குழறி
சந்தோஷப் பட்டது..
புரிவதே இல்லை
எப்பொழுதும்
இறைவனின் கணக்கு
-
கணக்கு போடுகிறான்
கூட்டிக் கழித்து
அழித்துத் திருத்தி
அந்தர் பல்டி அடித்து
கபடதாரி அரசியல்வாதி
கடிமனதாளின் காதலன்
வேட்டைக்காரர் குறி பாவம்
வலையில் மீனாய் சிக்கும்
-
சிக்கும்
சுற்றிச் சுற்றிப் பார்க்கும் விழிகளில்..
ஒரு சின்ன சமிக்ஞை..
உடனே
குதி குதி எனக்
குதிக்க ஆரம்பித்து விடுவோம்..
கையில் உள்ள
காகித மாலைகளும் ஜொலிக்கும்..
எங்களது பற்களும் ஆடைகளும்
பளபள விளக்கொளியில்
இன்னும் பளபளப்பாக...
சுற்றியிருக்கும் ஜனம்
ரசிக்குமோ இல்லையோ தெரியாது..
ஆரம்பத்தில்
சின்ன வயதில்
நான் நன்றாக ஆடுவேனாம்..
பாட்டி உச்சி முகர்வாள்
அம்மா பாராட்டுவாள்
அப்பா பர்ஸ் திறந்து
பணம் கொடுப்பார் ஆடல் வகுப்பிற்கு..
எல்லாம் நன்றாகத் தான் சென்றது..
படிப்பும் நன்றாக வந்தது..
எங்கு வாழ்க்கை திரும்பியது தெரியவில்லை..
கடைசியில்
இப்படி
விளையாட்டுப் போட்டி மைதானத்தில்
குதிக்க வேண்டியதாகி விட்டது..
இதோ
மறுபடி சமிக்ஞை..
நாலா ஆறா ஆட்டமிழப்பா தெரியாது..
கால்கள் தாவுகின்றன
கைகள் விரிகினறன
இதழ்கள் மலர்கின்றன
ஆரம்பித்து விட்டோம் குதிக்க
ஒரு சின்ன
வயிற்றுக்காக...
-
வயிற்றுக்காக உண்ணமாட்டாள்
வடிவம் காக்க உருகுவாள்
குச்சி குச்சி ராக்கம்மா
சுவரில்லாமல் சித்திரமா
-
சித்திரமா
ம்னதில் பதிந்த காட்சியா
கிடுகிடுவ்ன்று
உயரத்தில் இருந்த ஷெல்பில்
இருந்த அந்தப் பொருளை
சின்ன் நாற்காலி போட்டு
எடுத்தது
எப்படியோ
அம்மாவின் க்ண்களில் பட்டு விட்
எதுக்குடா அது
இங்க கொண்டா...
இல்லம்மா நானும்
செஞ்சு பார்க்கிறேன்..
வேண்டாம்டா
சொல்லச் சொல்ல்க் கேட்காமல்
கொல்லைப் புறம் போய்
அதை உபயோகப் படுத்திப் பார்க்கையில்
பின்னாலேயே ஒருகரம்..
அம்மா..
எங்க காண்பி..
நிறம் மாறாம்ல் அந்த அட்டை இருக்க
ஹப்பாடா..
ஒனக்குல்லாம் சர்க்கரை
இந்த வயசுமட்டுமில்லை
எந்த வயசுலயும் வ்ரவேண்டாம்
என்று பெருமூச்சு விட்டு
தூர எறிந்த
அவர் கண்களில் தெரிந்த நிம்மதி...
அவர் காலமான பிறகும்
பலவருடமாய் கண்ணுக்குள்...
இதோ இன்று
டாக்டர் .
ஹாய்..உங்களுக்கு ஒன்றும்
சர்க்கரையில்லை..
சின்ன மயக்கம் தான்...
தைரியமாயிருங்கள்..
க்ண்ணை மூடிக் கொண்டால்
அம்மா சிரிக்கிறாள்
வ்லதுகைக் கட்டை விரலை
உயர்த்தி....
-
உயர்த்திவிடத்தான் ஏணி
அது கூட வருவதில்லை
வாசனைக்குத்தான் கருவேப்பிலை
அது ஓரத்தில் ஒதுக்கப்படும்
அதிலும் காண் கீதை உரை
பலனை எதிர்பாரா கடமை
-
கடமையாக்..இல்லை இல்லை
கடனே என
ஒவ்வொரு பொருளாய் எடுத்து
இயந்திரமாய்
இயந்திர்த்தின் முன் விலை பதித்து
சிறிதும் பெரிதுமாக இருந்த பொருட்க்ளைத் தள்ளி
மொத்த்மாக இவ்வளவு என
வாடிக்கையாளரிட்ம் சொல்லி
அவர் கொடுத்த் அட்டையைத் தேய்த்து
காகிதமெடுத்து கையெழுத்து வாங்கி
அட்டையைக் கொடுத்தால்..
மறுபடி பொருட்கள்..
என்ன் செய்வது
வேலை..செய்தால் வயிறு நிரம்பும்...
ம்ம்..
வெறுத்துத் தான் வருகிற்து..
மறுபடி
பொருட்க்ளை எடுத்து
பில் போட்டு திரும்பவும்
அட்டையைக் கொடுக்கையில்
கை பிடித்தது குட்டிக் கரம்..
கடனட்டை கொடுத்தவரின் குட்டிப் பெண் போலும்..
தாங்க்யூ ஆண்ட்டி..
சின்னதாய்ப் புன்முறுவல் வர
தொற்றிக் கொண்ட்து சுறு சுறுப்பு
-
சுறு சுறுப்பு என்ற குணமது இருக்குமிடம்
தேனீ எறும்பு என்றறிந்தோம் பல காலமாய்
ஊனுறக்கம் மறந்த இணைய அடிமைகளிடம்
அதை காண்கிறோம் இப்போது சில காலமாய்
-
காலமாய் மாறிச்
ச்ற்றே பின்னோக்கிச் சென்றால்...
அட உன் இதழைப் போலவே சிவந்த
இந்தக் கனியை எங்கு பிடித்தாய்...
கனியும் சுவை
உங்கள் பேச்சும் சுவை..
கன்னம் சிவந்த ஏவாள்
கடித்த கனியை விட்டெறிய
கடித்த அவன்
பெண்ணே இந்தக் கனியும் சுவை
நீயே அருந்து எனச் சொல்லி பதிலுக்கு விட்டெறிய
அது எங்கோ விழுந்து மறைய
அடடே வேறுகனி
பறித்துத் தருகிறேன்
எங்கிருக்கிறது..
பார்த்தால் கிளை எட்டாதிருக்க..
பரவாயில்லை..
என அருகில் கிளி வ்ர..
அவனுக்குக் கனி மறந்து போக
காலமோ
நடப்பதை நிறுத்தாமல்
தடதடத்து ஓட..
**
அது அரண்மனைத் தோட்டம்..
குறுந்தாடியுடன் அவர்
மென்மையாய்
அவளைத் தீண்டியபடி
அன்பே இந்தக் க்ன்னங்களுக்கு
ஆப்பிள்கள் ஈடாகாது..
வெட்கத்துடன் கன்னம் மேலும் சிவக்க
என் காதலீ
உன்மேலுள்ள காத்லை
க்ண்டிப்பாய் உலகிற்குச் சொல்வேன்
ஒரு நாள்
இது சத்தியவார்த்தைகள்..
வேகமாய்ச் சிந்தியவற்றை
விவேகமாய் மும்தாஜ் அணை போட..
மேலும் வேகமாய்காலம் ஓட..
**
ஏ ஃபார் ஆப்பிள்..
ஏன் ஏண்ட் நு சொல்லக் கூடாது டீச்சர்
சும்மா இரு ஆப்பிள் தான் சரி..
**
காலம் மறுபடி மூச்சிரைக்க
இங்க பாருங்க சார் பாட்டு நல்லா இருக்கா
ஆடற் கலையே நீயாரோ
ஐஸ்க்ரீம் நிலவே நீயாரோ..
என்னங்க இது இருபத்தோராம் நூற்றாண்டு..
ஆடற்கலைன்னு புரியாத பாஷைல சொல்லிக்கிட்டு..
மாத்துங்க..
ஆப்பிள் பெண்ணே நீயாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீயாரோ..
பாருங்க இப்பவே சொல்றேன்
இந்தப் பாட்டு ஹிட்..
ஹீரோயினையும் யாராலயும் அணுக முடியாது
**
படத்துல இருக்கறது என்ன பழம் தாத்தா
ஆப்பிள்ம்மாஙக
நான் சாப்பிட்டதேயில்லையே
நாமல்லாம் அதப்பத்தி
கனவு தான் காணமுடியும்
சமத்தா தூங்கு செல்லம்..
*
எந்தக் காலத்திலும்
ஆப்பிள் இருப்பது/இருந்தது
எட்டாத உயரத்தில் தான்
-
உயரத்தில்தான் பிரச்சினை
அதனாலென்ன என்று தள்ளிட
அமிதாப்பும் ஜெயாவும் இல்லை
பெண்ணல்லவா பனை மரம்
குள்ளமான பையன் பின்வாங்கினான்
பள்ளங்கள் நிறைந்த பெண்சமத்துவம்
-
பெண் சமத்துவம்
ஆஹா நலல் தலைப்பு
பழையதாய் இருந்தாலும்..
பேசிப் பேசிப் பொழுதைக்
கழிக்கலாம்..
மாற்றங்கள் வருமா என்ன..
எண்ணச் சிறகுகள்
விண்ணோக்கினாலும்
உடலிருப்பது தரையில்..
-
தரையில் புரளும் தலைமுறைகள்
தண்ணித்தொட்டி கன்னுக்குட்டிகள்
வெப்பம் உருக்கும் பனிமலைகள்
ஆகும் நிலத்தை விழுங்கும் கடல்நீர்
உலகை அழிக்கப்போவது தண்ணீர்
அதில் இல்லை எள்ளளவும் ஐயம்
எந்தத் தண்ணீர் என்பது பந்தயம்
-
பந்தயம் தான்.
ஒப்புக் கொண்டாயிற்று..
இதோ வந்தாயிற்று...
கிழவனாரின் கண்கள் சுழல
அடுக்குமாடிக் குடியிருப்பில்
மனங்கள், பணங்கள் வேறுபட்டிருந்தாலும்
மைதானத்தில் கூடியிருக்க..
கிழவர் வேட்டியை குறுக்கில்
கட்டிக் கொண்டார்..
நெற்றிக் குறுக்கில் பேரனின் குரல்..
தாத்தா
சர்க்கரை பிபி மாத்திரை
போட்டுக் கொண்டாயா..
கொஞ்சம் யோசி
உன்னால் முடியுமா..
முடியுண்டா
மனதில் உறுமி நிமிர்ந்தால்
அருகில் பேரனின் நண்பன்
இள் வயது
புதிய ஷீக்கள் கால்களில்
கைகள்
உடற்பயிற்சியில் உரமுடன்..
கைகால் நீட்டி வளைத்து
இவரைப்பார்த்த சிரிப்பில்
சினேகமில்லை..
கூடவே நிறைய அலட்சியம்..
பெரிசு..
சும்மா கூவாத
முடிஞ்சா எங்கூட
ஓடி வர முடியுமா..
நீ ஜெயிச்சா
நாங்க விளையாடவே மாட்டோம்
தோத்தா...
உசுப்பேற்ற
எழுபது வருடமாய்
உடன் வளர்ந்த ரோஷம்
விஸ்வரூபமெடுக்க..
சரிடா..
எதிர் கிரெளண்ட்ல ஒரு ரவுண்ட்
யார் முதல்ல வரான்னு பாக்கலாம்
நாள் குறித்து
இதோ வந்தாயிற்று..
நடுவராய் இருந்தவர்
ஒன்று இரண்டு மூன்று சொல்ல.
பெரிய புயலும் சின்னச் சூறாவளியும்
பறக்க
வெற்றிக் கம்பம் வந்ததும்
ஒருவர் மூச்சிரைக்க
மற்றவர் கொஞ்சம் மூச்சிரைத்து நின்று
கீழே விழ..
கூட்டத்தில் குரல்கள்.
அச்சச்சோ என்னாச்சு.
தெரியலையே
இந்த வயசுல இதெல்லாம் வேண்டாம் தானே
பார்க்காத ஒருவர் சொல்ல
என்ன சொல்றீங்க நீங்க..
விழுந்த்து கிழவனார் இல்லை.
பின்...
கூட்டத்ததை விலக்கி
பரிசோதித்த வைத்தியர் முகம் மாறித்
தோள் குலுக்க..
என்ன ஆச்சு..
மாரடைப்பாம்..ச்ச்
ரொம்பச் சின்ன வயசுப்பா..
இப்படி ஆச்சே...
கிழவனார்
மூச்சிரைப்பையும் பொருட்படுத்தாமல்
அடப்பாவி எழுந்திருடா
எழுந்திருடா விளையாடலாம்..
அச்சோ.. நான் தப்புப் பண்ணிட்டேனே
எனக் கதற..
பார்த்தவர்களுக்குப் புரிந்ததொன்று..
வாழ்க்கை மாறுவதற்கு
போதும் ஒரு நொடி..
இல்லைஇல்லை அதற்கும் குறைவாக..
-
குறைவாக இருந்தது எங்கும் வசூல்
பெட்டிக்குள் சுருண்டுகொண்டது ரீல்
பச்சையாய் கொச்சையாய் வசனம்
கசாப்புக்கடையாய் ஓடும் ரத்தம்
க்வாட்டர் மப்பில் வாலிபர் கூட்டம்
கிளுகிளுப்பாய் குமரிகள் குத்தாட்டம்
அதிநவீன அசகாய அசாத்திய சூரத்தனம்
அக்கரை பசுமையில் காதலர் நடனம்
எதைக் குறத்தேன் நடிகையர் உடை தவிர
தயாரிப்பாளர் குழம்பித் தவிக்கிறார் பாவம்
-
பாவமாய் த் தான் இருக்கிறது
காய் நறுக்கும் போது
கையில் கத்திபட்டதில் ரத்தம் வர
இது துடித்துப் போய்விட்ட்து
ஐஸ் எங்கே
குளிர்பதனப் பெட்டியில் இருந்து
எடுத்து விரலில் வைத்து
ரத்தம் நிற்கவும்
வா டாக்டரிடம் போவோம்..
வேண்டாம்யா
சரி நீ வேலை செய்யாதே
நான் பார்க்கிறேன்
பரவாயில்லை தோசை தானே..
நீ சும்மா இரு..
தோசைக் கல்லில்
வேகமாய்ச் சுட வைத்து
மாவு விட்டு வார்த்தால்...
பிரளயம் தான்..
தோசை கொத்துப்பரோட்டாவாய் வர
விக்ரமாதித்தனாய் மாறி முயற்சித்து
மற்ற இரண்டும் நன்றாய் வர..
ஆனால் வட்டம் தான் இல்லை..
தட்டில் போட்டு பிய்த்து
ஆ காண்பி..
யோவ் ரொம்பச் செய்யாதய்யா
சாப்பிடு இவளே..
சட்னியில் தோய்த்துக் கொடுத்ததைச்
உண்டதும் கண்ணில் நீர்..
என்னாச்சு நல்லா இல்லையா..
காரமா.. எனப் பதறிப் பாவமாய்க் கேட்க
விழுங்கியபடியே சொன்னேன்..
ஜோராய் இருக்கிறது..
தோசை இல்லை..உன் மனசு
-
மனசு நினைத்தது எதற்கு எனக்கு இத்தனை விழிகள்
காண விரும்பாத பல கசப்பான விபரீத காட்சிகள்
உறங்காமல் களைப்பில் போராடும் பரிதாப வேளைகள்
பொல்லாத விழிகள் போல் மனசுக்கு ஏன் இத்தனை வழிகள்
செல்லாத பேர்களில்லை சத்திரம் போல் திறந்த வாசல்கள்
அனுமதிக்க தேவையில்லாத நுழைவுகள் வெளிநடப்புகள்
குதிரைக்கு கண்களில் மறைப்பு பயணத்தின் அவசியங்கள்
மாளிகைக்கு மணிக்கதவுகள் மரியாதையின் சின்னங்கள்
படைப்பில் பல சாபங்கள் முயன்றால் அவையே வரங்கள்
-
வரவில்லை வந்ததும் கண்டேன் வட்டமில்லாத் தோசை
தரமாய்த் தந்தார் சின்னக்கண்ணன் தகுந்த அன்பைக் காட்டி
உரமாய் விளங்கும் உத்தமத் திரியில் உங்கள்பங்கு நன்று
சிரமம் பலதில் செய்யும் சேவை தினமும் இங்கு தொடர்க
அவதானி கஜன்
-
தொடர்க என்றன கண்கள்
ஊர்ந்து சென்றன கைகள்
கன்னியின் மௌன ஆணைகள்
காளையின் இனிய கணங்கள்
-
கணங்கள் சிலதான்..
அதற்குள் அது நடந்து
முடிந்து விட்டது..
அலுவலகம் முடிந்து
சிந்தனையை நெய்தபடி
வேகமாக சுலபமாக நடந்ததில்..
ஹலோ..
அழைத்தது ஒரு யுவதி..
அழகிய நீல நிறச் சுடிதார்
குறும்பாய்ச்சிரிக்கும் கண்களின் மேல்
கறுப்பு ஃப்ரேம் கண்ணாடி..
டபக்கென
கால் முதல் தலைவரை
பார்வை பாய்ந்ததில்..
கொஞ்சம் அழகு தான்..
அளவெடுத்துச் செய்த
சிற்பம் தான்..
யாராயிருக்கும் என
யோசித்து
மறுபடி ஹாய் எனச் சொல்ல..
பதிலுக்கு புன்னகை தந்து
விறுவிறுவெனப் போயே போய்விட்டாள்..
ம்ம்
என்ன செய்வது..
மறுபடி கூப்பிடலாமா..
யார்மா நீ
யாரும்மே நீ
ஹல்லோ ஆப் கோன் ஹை..
மோளே நீயாருன்னு பற..
இவ்ளோ அழகா வேற இருக்கே..
ம்ஹீம்..
நினைவுக்கு வராமல் போக..
இப்போது
நடப்பதும் இருந்தது கனமாக..
-
கனமானதொரு புத்தகத்தை
கையிலும் மனதிலும் சுமந்திருந்தது, வலித்தது!
ஏட்டில் துப்பிய கனத்துக்கு
பெருக்கலும் கூட்டலுமாய் மதிப்பெண்
பட்டம் பறந்தது இலகுவானேன்..
பரணில் படுத்துறங்கும் கனமான புத்தகமும்
அதன் உட்கருத்து துருபிடித்து தூசியேறியது
-
தூசியேறியது..
சற்றே கையில் இடுக்கிக் கொண்டு
தும்முகையில்
விழுந்தன
அந்தப் பழைய டைரியும்
மடித்து வைத்த இன்லண்ட் லெட்டரும்...
இவளுக்கு..
ந்லமா.. நான் நலம்.
இங்கு மும்பையில்
ஆலு சப்பாத்தி பானி பூரி என
வாயில் வைக்க வழங்கவில்லை..
பசங்க் எப்படி இருக்காங்க..
எனத்தொடர்ந்திருந்த அப்பா..
முடிக்கையில்
ஜாக்கிரதையாய் இரு என எழுதி
கீழே
சற்றே கிறுக்கலாய்
கைய்ழுத்தின் அருகே
ரொம்ப்பச் சின்னதாக
ஐ லவ்யூ..
படித்துச் சிரித்து
கிடுகிடென்று
பரணிலிருந்து இறங்கி
மூக்குக்கண்ணாடியுடன்
பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவிடம்
டொட்டொடோய்ங்க் எனத்
துப்பட்டாவுடன் குதித்து நீட்டினால்..
முதலில் கோபம்..
பின்னர் கெஞ்சல்..
ஏய் தாடீ....
பின்னால் கடிதத்தை வைத்துக் கொண்டு
அப்பாவைப் பார்க்கையில்..
அழகாய்த் தான் இருக்கிறது
ஆண்களின் வெட்கமும்
-
வெட்கமும் பொய்
பூசிய சாயமே
உரித்துப் பார்க்க
வெங்காயமில்லை
மூழ்கி எடுக்க
முத்துக் கடலல்ல
இலக்கணமில்லாக் கவிதை
இரக்கமில்லா வனிதை
இடையறா மாற்றம்
ஈர்க்கின்ற தோற்றம்
அரிச்சுவடி கற்குமுன்
நரை வந்துவிட்டது
அறிந்த வரை வியப்பு
ஆயுளுக்கும் தவிப்பு
அப்பாவிப் பையன்
அறியாத ஆழம் அது
-
ஆழம் அது என்று
சொல்லிச் சொல்லிக் கேட்காமல்
போய்
போயே போய்விட்ட
முரளியின் மனைவியை
பலவருடங்க்ள் கழித்துப் பார்த்த போது
வழக்கமாய் க் கேட்கும்
செளக்கியமா வாயில் வந்து விடடது..
நல்லா இருக்கேன் மாமா
மாமி எப்படி..
பப்லு ப்டிச்சு முடிச்சுட்டானா
என்ன வேலை பார்க்கிறான்..
இங்க
என் மாமா மாமி
நன்னா பாத்துக்கறா
எல்லாச் சொத்தும் எழுதி வச்சுட்டா எனக்கே..
ம்ம்
ஆள் படை அம்பு எல்லாம்
இருக்கு
செளக்கியத்துக்கு என்ன குறைச்சல்
படபடவென பட்டாசாய்
வார்த்தைகள் வெடித்தாலும்
கண்கள் மட்டும்
சற்றே கலங்கலாய்..
-
கலங்கலாய் மாற்றும் சலனங்கள்
தெளிந்த சாரமில்லா நீரோடையை
ஆமையாய் நத்தையாய் ஊர்ந்த நாட்கள்
ரங்கராட்டினமாய் மாறிய கணங்கள்
அபூர்வமாய் வரும் இனிய வரங்கள்
அடுக்காய் தொடர்கின்ற சம்பவங்கள்
பூப்போட்ட சராய் சட்டையில் சிப்பந்திகள்
ஆடி மகிழ்விக்க கணப்படுப்பில் முன்னால்
பலகாரம் ருசியாய் அணி வகுத்து வர
மாயக் கடற்கரை சூழலில் இனிப்புகளால்
வாயும் வயிறும் மனமும் குளிர்ந்து ததும்பிட
பல்லடுக்கு அங்காடியில் சுற்றித் திரிந்தபின்
பார்க்கும் சினிமாவும் பொழுதுதைச் சாப்பிட
எண்ணற்ற கேளிக்கைகள் குழந்தைகளுடன்
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கிடைக்க
இரவும் பகலும் தேதியும் கிழமையும் மாதமும்
மறக்கின்றதோர் மயக்கத்தில் மிதக்கிறேன்
மீண்டும் நானொரு சின்னஞ்சிறு குழந்தையாய்