-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரிக் ஷாக் காரன் " டிஜிட்டல் வெளியீடு
குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இன்று காலை 11 மணி அளவில் துவங்கியது .
நிகழ்ச்சியில் விநியோகஸ்தர்கள் திரு. கிருஷ்ணகுமார் , திரு. ராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்து ஆலோசனைகள் தெரிவித்தனர் .
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு, மற்றும் இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் ஆகியோரும் உரையாற்றி, ரிக் ஷாக்காரன் டிஜிட்டல் திரைப்படம் வெற்றி பெற்று, அரிய சாதனைகள் படைக்கும் வகையில் அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்று பேசினார்கள்
முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீப ஆராதனைகள் செய்யப்பட்டன .
திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டனர் அவர்கள் பக்தர்களின் கேள்விகளுக்கும், வேண்டுகோளுக்கும் செவி சாய்த்த வண்ணம் இருந்தனர்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த பல்வேறு நிர்வாகிகள் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்து , சாதனைகள் படைக்க
அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் .
இறுதியில் ட்ரைலர் வெளியீடு பற்றிய அழைப்பிதழ் அனைவருக்கும்
அளிக்கப்பட்டது .
-
-
-
-
-
-
-
-
-
திரு.தம்பாச்சாரி ,மூத்த எம்.ஜி.ஆர். பக்தர் தீப ஆராதனை செய்யும் காட்சி
http://i63.tinypic.com/vxowgw.jpg