http://i.ytimg.com/vi/MdyU9LGLhzY/hqdefault.jpg
http://video.globaltelevision.tv/upl...adbgfa53xf.jpg
http://i.ytimg.com/vi/D8KIBvUrE3g/hqdefault.jpg
Printable View
வாசு ஜி காலை வணக்கம்
காலை வணக்கம் அன்பு நண்பர்களே,
இன்று ராஜஸ்ரீ ஸ்பெஷலோ...
அன்பில் ஆடுதே பாடல் தான் உடனே நினைவிற்கு வருகிறது..
ஜி.கே.வெங்கடேஷ் இசையில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் தாக்கம் இருக்கும். இப்பாடலில் அது நன்றாகவே தெரியும். துவக்க இசை அப்படியே தென்றல் உறங்கிய போதும் பாடலை நினைவூட்டும்.
http://www.youtube.com/watch?v=LBTKLtrz1xk
இதே படத்தில் நம்மை மெய் மறக்கச் செய்யும் இசையரசியின் குரலில்
கதை ஒன்று நான் சொல்லவா..
http://www.youtube.com/watch?v=owhnvP56jDE
நமது நண்பரும் மய்யத்தின் அங்கத்தினருமான பேராசிரியர் கந்தசாமி அவர்கள் தமிழ்த் திரையிசைக்குத் தன்னாலான பங்களிப்பாக ஒரு இசை நூலகம் மற்றும் ஆய்வகம் ஒன்றை அமைத்திருக்கிறார். அது மட்டுமின்றி யூட்யூப் இணைய தளத்தில் ஏராளமான பழைய அபூர்வ பாடல்களைத் தரவேற்றியுள்ளார். நாம் காணும் பல அபூர்வ பாடல்கள் இவருடைய தரவேற்றல் மற்றும் வேம்பார் மணிவண்ணன் போன்ற நண்பர்களின் தயவினால் தான் என்றால் மிகையில்லை. இதில் நம் முடைய வாசு சாரின் பங்களிப்பும் யூட்யூப் இணையதளத்தில் குறிப்பிடத் தக்கதாகும். தமிழ்த் திரையிசை எதிர்காலத்தில் அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர இவர்களின் பங்களிப்பு வரலாற்றில் இடம் பெற்றதாகும். இவர்களைப் போன்ற பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் நம் உளமார்ந்த பாராட்டுக்கள். அனைத்துக்கும் மேலாக இம்மய்யம் இணையதளத்திற்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
பேராசிரியர் கந்தசாமி தம்முடைய இசை ஆய்வகத்தைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள், கேளுங்கள்..
http://www.youtube.com/watch?v=Sn3PaRHp7K4
இன்னொரு அன்பர்
http://www.youtube.com/watch?v=vH5t5hvEcKw
இந்த இசை ஆய்வகம் தொடர்பான காணொளிகள் மேலும் உள்ளன. இவற்றை பேராசிரியர் சேக்கரகுடி கந்தசாமி அவர்களின் யூட்யூப் சேனலில் காணலாம்.
மேற்காணும் காணொளிகள் ஒரு தகவலுக்காக மட்டுமே இங்கு தரப்படுகின்றனவே தவிர வேறோர் இணையதளத்தைப் பற்றி சொல்வதற்காக அல்ல என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
வாசு சார்.. பார்த்து நேற்றே எழுதி விட்டேனே..
கார்த்திக் சார்.. உண்மை தான்..எடுத்து இடும் போது நான் செக் செய்யவில்லை..சட்டெனத் தோன்றவும் இல்லை..மன்னிக்க.அந்த சி..எ. நிருபரைத் தேடணும் :)
வாசு சார், ராஜேஷ் ஜி, ராகவேந்த்ர் சார்..ராஜஸ்ரீ பாடல்களுக்கு நன்றி.. வாசு சார் ஸ்டில்களுக்கும்.. (தெலுகு பாட் மட்டும் தான் ஒன்று பார்த்தேன்..அடுத்த போஸ்ட் போட்டு விட்டு நிதானமாய்ப் பார்க்கணும்..(தி தி தே -2)
நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் தொடர்பான ஒரு தகவல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பபட்டது. அதனுடைய ஒலித்தொகுப்புடன் இப்பாடலின் காணொளி பேராசிரியர் கந்தசாமி அவர்களால் தரவேற்ரப் பட்டுள்ளது.
இதில் ஒலிபரப்பாகும் இலங்கை வானொலித் தொகுப்பாளரின் குரல் யாருடையது எனத் தெரியவில்லை.
http://www.youtube.com/watch?v=iHH2DFb6oO4
பொங்கும் பூம்புனல்
நாம் இருக்கும் இடத்தை சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். அதுவும் நாமே செய்ய வேண்டும் மற்றவர்களை எதிர்பார்க்கக் கூடாது. நம்மவர் பாட்டு ஞாபகத்துக்கு வருகிறதா. இதுவும் புதிதல்ல
1951ல் சிங்காரி படத்தில் பத்மினி பாடுவதாக வரும் காட்சியில் எல்லோரும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் நவீன வடிவமே நம்மவர் படத்தில் இடம் பெற்றது எனக் கொள்ளலாம்.
http://www.youtube.com/watch?v=lkhlyTZtNeg
பாடல் - கண்ணதாசன்
குரல் - ஜிக்கி
இசை - டி.ஏ.கல்யாணம்
படம் - சிங்காரி
ஆண்டு 1951
திரையிசையூடே திரவியம் தேடு…
****
அத்தியாயம் இரண்டு..
**
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே
அடித்து நொறுக்க
அப்பனும் நோக்கினான்..!
இந்தக் கவிதை எழுதியது மு. மேத்தா.. இந்தக் கருவை – அதாவது காதல்னு இருந்துச்சுன்னா அது தோல்வில தான் முடியும் என்ற படி எண்பதுகளில் பல படங்கள். வந்தன..சில வெற்றி, பல தோல்வியைத் தழுவின..
ஆனால் காதல் என்ற ஆதர்ச சக்தி என்ன செய்யும்.. பிற்காலத்தில் வந்த ஒரு பாட்டு என்னவாக்கும் அது பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தான் ஆசை..எஸ்.. ஆனால் யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது.. அதே போலத் தான் இந்தக் காதல் என்பதும்..என்று இருக்குமோ..
கல்லூரியில் தமிழ் இருந்தது இருவருடங்கள்..அப்போதா அல்லது ப்ளஸ்டூவிலா நினைவில்லை..இந்த சங்கப்பாடல் உண்டு..பாடலுக்குமுன் சிச்சுவேஷன் என்னன்னாக்க..
அந்த யூத் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் ஹிஸ் லவர்.. (மேஜர் சுந்தர் ராஜனைப் போல): எஸ்..அந்த க் கட்டிளம் காளை தன் மனம் கவர்ந்த கட்டிளம் காளிக்காக (ஓ அர்த்தமே மாறிடுதோ) இளமை ததும்பும் மங்கைக்காக அந்த மாமர நிழலில் மாலை நேரத்தில் காத்துக் கொண்டிருக்கிறான்..
“ஹாய்” எனத் துள்ளிக் குதிக்கும் சூரிய காந்திப்பூவாட்டாம் அவளும் வேகமாய் வந்து அவனைப் பார்க்கிறாள்..”ஸாரிப்பா (மே.சு..:மன்னிங்க அத்தான்!) கொஞ்சம் தாமதமாய்டுச்சு.. ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டு இருந்தீங்களோ..
”இல்லை டியர்.. வாழ்க்கைங்கறது என்ன..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் காத்திருத்தல் தானே..
வார்த்தை வருமென்று மழலையிலே காத்திருந்து
…வாகாக அன்னையினை அழைத்துவிட்டுப் பூத்திருந்து
கூர்ந்து கவனித்துக் கல்விதனைக் கற்கையிலே
..கொள்ளை கொண்டுவிடும் இளமைக்காய்க் காத்திருந்து
சேர்ந்தே வாலிபமும் வந்துவிட துணைதேடல்
..செல்லும் வாழ்க்கையிலே மகவுக்காய்க் காத்திருந்து
ஊற்றும் ஒருகாலம் வற்றிவிடல் போலத்தான்
..ஓடிவந்த முதுமையிலே காத்திருப்போம் முடிவுக்கே..
இல்லையா டியர்”
“ஹேய் வாட் ஹேப்பண்ட் ( மே.சு.: அன்பான முட்டாள் அத்தானே என்னாச்சு..கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா இந்த மாலைவேளையில் ஒரு ஒய்யாரச் சிங்காரி சிருங்காரங் கொண்டு உன்னைத் தேடி ஓடி வந்தாக்க இப்படியா சொல்றது.! இவ்ளோ நீள வாக்கியம்கறதால கொஞ்சம் மூச்சு வேற வாங்குது! )
”ஒண்ணுமில்லை பயந்துடாதே காதலி..கொஞ்சம் நினைச்சுப் பார்..ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நீயார் நான் யார்னு தெரியாது உன் ஊர் இருக்கற எடம் எனக்குத் தெரியாது (மெஷின் ஆஸ்பத்திரி ஸ்டாப் தெரியும்.ஆனா நான் செய்ன்ட் மேரீஸ்ல தான்படிச்சேன்.. நீ செய்ண்ட் ஜோசப் கான்வெண்ட்னு தெரியாது ) என் ஊர் இருக்கற இடம் தெரியாது.. எங்க அப்பா பேங்க்கர்..ஒங்க அப்பா எஸ்.பின்னு நீ சொல்லித் தான் தெரியும்( முன்னாடியே தெரிஞ்சா நான் ஏன் உன்னை டாவடிக்கறேன்!) இருந்தாலும் பாரு இவளே. மழையில விழற துளி மண்ணுல கலந்துடும்..அதுவே செம்மண்ணா இருந்தா வேகமா மிக்ஸாய்டும்..(அந்தச் செம்மண் சகதி தான் நன்னா வழுக்கும்!) அந்த மாதிரி நம்ம மனசு கலந்துடுச்சு டார்லிங்க்..!”
“என்ன சாங்க்ப்பா அது (மே.சு: அன்பரே.. நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.. சங்கப் பாட்டுப் பாடப் போகிறீர்கள் தானே)
“இது தான் செல்லம்..
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யாயும் நீயும் எவ்வுள மறிதும்
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சம் தான்கலந்தனவே”
**
இந்தப் பாட்டையே முழுக்க நிமிண்டி அந்தக்காலப் படத்தில் வரவேண்டும் என்பதற்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்..இருவர் படத்தில் விஷீவலில் மோகன்லால், மதுபாலா, ஐஸ்வர்யா ராய்…(மோகன்லால் கொடுத்துவச்சவர்)
.பாடியவர்கள்..உன்னிக் கிருஷ்ணன்.பெண்குரல் மறந்து போச்.
**.
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
**
பாடல் படமாக்கப் பட்டது கறுப்பு வெள்ளையில்..இடையில் தான் கொஞ்சம் கலர் வரும்..
*
என்னமோ போங்க.. முடிக்கறச்சே கவிஞர் மீரா எழுதின கவிதை தான் நினைவுக்கு வருது!
உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ (!) நல்லூர்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவின் முறை
மாமன் மச்சான்
நானும் நீயும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப் பிள்ளை மார்..
எனில்
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே!
*
இந்த நறுமுகையே பாட்டிலருந்தே இன்னொரு பாட்டோட(சங்ககாலம் தாங்க) ஒரு வரியை எடுத்திருக்கார் கவிஞர்..அந்தப் பாட்ட வச்சே ரெண்டு மூணு பாட்டு வந்திருக்கு
அது என்னன்னாக்க..
(தேடுவோம்..)