நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு, மீனவனை எதிர்பார்ப்பது உண்மையோ பொ்ய்யோ தெரியாது, ஆனால் அநத மீனவன் நடையை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.
http://www.youtube.com/watch?v=aTDV10y_Eko
நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு, மீனவனை எதிர்பார்ப்பது உண்மையோ பொ்ய்யோ தெரியாது, ஆனால் அநத மீனவன் நடையை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.
http://www.youtube.com/watch?v=aTDV10y_Eko
மாணவனுக்கு சந்தேகம் வந்தால் அறிவில் தெளிவு. கணவனுக்கு சந்தேகம் வந்தால் வாழ்வில் முறிவு. மன்னனுக்கு சந்தேகம் வந்தால்...
வந்தது....
சந்தேகம் தீர்ந்ததா..
தீர்ந்தது...
திருவிளையாடல் போல் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சிறந்த காவியம் வரப்போவதில்லை என்ற தீர்மானம் பிறந்தது...
அந்த சந்தேகம்... அதற்கான காரணம்...
http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ
டி.ஆர்.மகாலிங்கம் ஐயா,
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை, நீ இருக்கையிலே நாங்கள் இருந்ததும் பெரும் சாதனை...
http://www.youtube.com/watch?v=HdhAu6fbeIA
எத்தனை ஆண்டுகள், எத்தனை கலைஞர்கள், எத்தனை உழைப்பு, இவற்றின் உருவமே திருவிளையாடல் படைப்பு... இதனைப் பற்றிக் கூற
http://www.youtube.com/watch?v=8BN5bdI0GY4
சிறப்புச் செய்திகள்
1. வடநாட்டு ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் 1965ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.
2. சிவலீலா என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் படமாக்கப்பட்டது.
3. சிறந்த மாநில மொழிப்படங்களுக்கான இரு விருதுகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் பெற்றது.
4. தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டுமென்றாலும், எந்த ஒரு விழாவானாலும் முதலில் ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்ப தேர்ந்தெடுக்கப்படும் திரைக்காவியம்.
5. தேவர்கள் கண்ணிமைக்க மாட்டார்கள் என்பது புராணங்களில் கூறப்படும் ஐதீகம். இதற்கேற்ப சிவனாகத் தோன்றும் காட்சிகளில் நடிகர் திலகம் கண்ணிமைக்காமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
- தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.
திருவிளையாடன் சென்னையில் திரையிடப்பட்ட அரங்குகள்
சாந்தி,கிரௌன், புவனேஸ்வரி
- புகழ் பெற்ற சாந்தி கிரௌன் புவனேஸ்வரி என்ற இணைந்த திரையரங்க வெளியிடுகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.
திருவிளையாடல் மாபெரும் வெற்றித் திரைக்காவியம்...
சென்னை சாந்தி – 179 நாட்கள்
சென்னை கிரௌன் – 179 நாட்கள்
சென்னை புவனேஸ்வரி – 179 நாட்கள்
மதுரை ஸ்ரீதேவி – 167 நாட்கள்
சேலம் சாந்தி – 132 நாட்கள்
திருச்சி சென்ட்ரல் – 132 நாட்கள்
கோவை ராஜா – 132 நாட்கள், தொடர்ந்து டைமண்ட் 28 நாட்கள்
நாகர்கோவில் தங்கம் – 111 நாட்கள்
கரூர் லைட்ஹவுஸ் – 106 நாட்கள்
குடந்தை டைமண்ட் – 104 நாட்கள் தொடர்ந்து நியூடோன் 48 நாட்கள்
பாண்டி நியூகமர்ஷியல் – 101 நாட்கள்
நெல்லை ரத்னா – 100 நாட்கள்
தஞ்சை யாகப்பா – 100 நாட்கள்
மற்றும்
காஞ்சி கிருஷ்ணா – 84 நாட்கள்
பல்லாவரம் ஜனதா – 74 நாட்கள்
வேலூர் ராஜா – 84 நாட்கள்
தாம்பரம் நேஷனல் – 70 நாட்கள்
பெங்களூர் லட்சுமி – 78 நாட்கள்
பெங்களூர் ஸ்டேட்ஸ் – 70 நாட்கள்
மேலும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடி மாபெரும் வசூல் சாதனை புரிந்த புராண காவியம்.
- தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.
Excellent work Mr Raghavendra Sir and there are lot of informations in this film where all of them
are still relevent not only for today but also in the years to come.
Regards
பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கவிஞர் கா.மு.ஷெரீஃப்...?
இதோ ஒரு விவாதத்தின் சுட்டி
மேற்காணும் சுட்டி இடம் பெற்ற இணையப்பக்கத்திற்கான இணைப்பு - https://kavikamu.wordpress.com/page/2/Quote:
“பாட்டும் நானே” யாரெழுதியது?
https://kavikamu.files.wordpress.com...aane.jpg?w=645
திருவிளையாடல் படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடல்கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்று பரவலாக நம்பப்படும் வேளையில் நான் இவ்வலையில் அது கவி.கா.மு.ஷெரீப் அவர்களால் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டதற்கு ஏதேனும் வலுவான ஆதாரங்கள் உங்களிடத்தில் இருக்கின்றதா? என்று வாசகர்கள் வினவுகிறார்கள். திரு.ஜெயகாந்தன் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரிடம் தாராளமாக கேட்டுக் கொள்ளலாம். திரு.ஜெயகாந்த்தன் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலின் நகலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். – அப்துல் கையூம்
https://kavikamu.files.wordpress.com...ff-1.jpg?w=645
https://kavikamu.files.wordpress.com...ff-2.jpg?w=645
ஆதாரம்:
நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்,
ஆசிரியர் : ஜெயகாந்தன்
வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 17