-
தர்மம் எங்கே -1972
சிவந்த மண் நவீன மயமாக்கப்பட்ட ஒரு ராஜா கதை. அதன் மிக மிக பிரம்மாண்ட வெற்றி (பத்து திரையரங்குகளில் நூறு தாண்டியது) வீரத்திருமகன் திருலோகச்சந்தரை(ஒரு ஆங்கில பட பாதிப்புடன்) தூண்டியிருக்கலாம். சிவந்த மண்ணின் வெற்றியின் ரகசியம் defined character establishment &Identity ,சுவாரஸ்யமான திரைக்கதை(கதாநாயகன் திட்டமிட்டு வில்லனை ஒழிக்க பார்க்கும் ),திருப்பங்கள், பிரம்மாண்டம், மிக மிக சிறந்த இசையமைப்பு,சிவாஜி-காஞ்சனா இளமை,சிறந்த நடிப்பு, மிதமான வசனங்கள் இன்னும் பல பல அடுக்கலாம்.
தர்மம் எங்கே படத்தில் அக்கிரமம் புரியும் ராஜபிரதிநிதியை எதிர்க்கும் சாமான்யன் ராஜசேகர் (தன் தங்கையை மணமுடிக்க போகும் பூபதி கொலை பழியில் இருந்து தப்பிக்க)ஆபத்தில் இருந்து தப்பி ,நாடோடி ரூபா,பூபதி துணையுடன் ராஜப்ரதிநிதியை துரத்தி விட்டு ஆட்சியை பிடிக்கிறான். பதவியை எதிர்பார்க்கும் பூபதி பதவி கிடைக்காத ஆத்திரத்தில் உள்ளபோது பழைய ஆட்சியாளரின் நண்பர்கள் தூண்டுதலால் ராஜசேகரை எதிர்க்க, இது தப்பித்த ராஜபிரதிநிதியின் சதி என்று கண்டு கடைசி காட்சியில் சுபமாக முடியும் சுலப கதை.
சுதந்திர பூமியில் பல வகை என்று NT ராஜசெகரனாய் பூ விற்பதில் தொடங்கி நம் காதில் வாடிய பூக்களை சரம் சரமாய் சுற்றுவார்கள்.காமா சோமா பாத்திரங்கள் ,சுவாரஸ்யம் இல்லா ஏனோ தானோ திரைக்கதை, யாருக்கு என்ன ஆனால் என்ன என்று நாம் கதைக்குள்ளே நுழையவே தோன்றாமல் நெளிய ஆரம்பிப்போம். ஒரு நகைச்சுவை காட்சி வந்து நம்மை நிமிர வைக்கும்.அது ராஜசேகரன் வடக்கு பகுதியை வீரசிம்ம வல்லவராயருக்கும்,தெற்கு பகுதியை திருவுடையானுக்கும்,கிழக்கு பகுதியை அறிவுடை நம்பிக்கும்,மேற்கு பகுதியை நல்ல தம்பிக்கும் கொடுத்து பூபதிக்கு பெப்பே காட்டும் காட்சி.பதவி பெறுவோர் தோளோடு தோள் நின்றவர்கள் என்று வசனத்தில் சொல்ல பட்டாலும் ,அதுவரை படத்தில் காட்ட பட்டிருக்கவே மாட்டார்கள்.முத்துராமனை விட அதிக வெறி பார்வையாளர்களுக்கு வரும்.
நடிகர்திலகத்திற்கு விக் பொருந்தாவிட்டாலும் அந்த முக அமைப்பு மிக அருமையாய் இளமையாய் இருக்கும்.மேற்சட்டை மட்டும் பிரபுக்கள் கால மோஸ்தரில் இருக்கும்.கால்சட்டை நார்மல்.
இந்த படத்தில் சில மின்மினிகள் இல்லாமல் இல்லை.(திருலோக சந்தர் ஆயிற்றே?)நடிகர்திலகம்-கலைச்செல்வி(உதவி புரியும் நாடோடி பெண் ) chemistry அவ்வளவு அருமையாக வந்திருக்கும். பதவி கொடுக்கும் காட்சியில் அங்கு அமர்ந்திருக்கும் ரூபா ,ராஜசேகரனை அதே பாவனைகளை மிமிக் செய்து கலாய்த்து ,கவனம் தவற செய்வது, ஒவ்வொரு முறை காதலை சொல்ல வரும் போதும் யாராவது இடைஞ்சல் செய்வது, டீசிங் செய்து காதலை வெளியிடும் போது ஒருவரையொருவர் பலமாகவே அடித்து கொண்டாடுவது ,பள்ளியறைக்குள் பாடல் காட்சி இவையெல்லாமே படு பிரமாதமாய் வந்திருக்கும்.நடிகர்திலகம் ஒரு கலீபா பாணியில் ஆட்சி புரிந்து (பழைய சட்டையை தானே தைப்பது)வரும் போது தன் மைத்துனன் பூபதி மேல் குற்றம் சாட்டும் மார்த்தாண்டன் என்பவன் மேல் ஆத்திரப்பட்டு ஒரு கணம் பழைய ஆட்சியாளன் போலவே நடக்க முற்படும் இடம் அருமையான ஒன்று.
என் தம்பிக்கு பிறகு கத்தி சண்டையில் நன்கு perform பண்ணினாலும், highlight சண்டை காட்சி நம் வாசு சார் போட்ட முதலில் பிடி பட்டு தப்பி ஓடும் காட்சி மிக அருமையாய் நடிகர்திலகம் ரிஸ்க் எடுத்து செய்திருப்பார்.
மெல்லிசை மன்னர் பாடல்களில் சுதந்தர பூமியில் ,வீரமென்னும் பாவை,பள்ளியறைக்குள் மூன்றும் சுமாரை விட மேல் ரகம். Re -Recording வழக்கம் போல. தர்மம் எங்கே, நான்கு காலங்களும் (காலத்தை வென்ற counter ?) படுத்தல்.
1972 முழுவதும் நாம் அதிகம் எதிர்பார்ப்பு வைக்காமல் மெகா ஹிட் ஆனவை வசந்த மாளிகை,பட்டிக்காடா பட்டணமா என்ற வைரங்கள்.எதிர்பார்த்த படி எதிர்பார்த்த வெற்றி கோட்டை தொட்ட படங்கள் ராஜா,ஞான ஒளி, தவப்புதல்வன்,நீதி ஆகியவை.நிறைய எதிர்பார்ப்பு வைத்து ,பிரம்மாண்ட opening பெற்றும் சுமார் வெற்றியடைந்தது தர்மம் எங்கே?
இவ்வளவு பிரம்மாண்ட தயாரிப்பு (பெரியண்ணாவின் முதல் கலர் படம்) ,நட்சத்திர குவியல்,சிறந்த வசனகர்த்தா,நல்ல டீம் அமைந்தும் திருலோகச்சந்தரின் பொறுப்பற்ற சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் கோட்டை விட்ட படம்.
-
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு சந்திரசேகர் அவர்கள்
பல்லாண்டு வாழ்க என்று நட்புடன் வாழ்த்தும் http://i43.tinypic.com/ruwcgk.jpg
வினோத்
SPECIAL REMEMBRANCE DAY TO ALL 26.8.1972- THAVAPPUDHALVAN -41ST ANNIVERSARY.
-
Kcs சார் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .நீங்கள் பிறந்தது நடிகர்திலகம் மற்றும் அவர் பக்தர்களுக்காக என்று ஒவ்வொரு செயலிலும் எழுத்தாணியால் ஆழ பதிக்கிறீர்கள். வாழ்க பல்லாண்டு.
வேலன் சார், உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .திரியின் வெற்றி உங்களுடைய வெற்றி.
கவிதையை படித்து வாழ்த்திய ஜோ சார், முரளி,ராகுல்,காட்டு பூச்சி,kcs , எஸ்வி ஆகியோரின் உந்துதலுக்கு நன்றி.
ராகவேந்தர் சார், நம் அனைவரின் தெய்வ தாயின் தினத்தன்று தாங்கள் மீள்பதிவிட்ட பம்மலாரின் பொக்கிஷ பதிவுகளுக்கு விசேஷ நன்றி. உங்களின் அயரா உழைப்பும்,ஈடுபாடும் உங்களை விட வயது அனுபவம் முதிர்ச்சி அனைத்திலும் சிறியவர்களான எங்களுக்கு உத்வேக வழிகாட்டி.வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன்.
எஸ்வி சார், எங்கள் தவ புதல்வனை எங்களுக்கே நினைவூட்டிய உங்கள் நடிகர்திலகத்தின் மீதான ஈடுபாடு தாங்கள் பிறந்த தங்கள் உத்தம குடியின் ஈடில்லா பரம்பரை சொத்து. சொத்தை காப்பீர்கள் என்று நம்புகிறோம்.
-
Many many happy returns of the Day Chandrasekar. May God bless you will all cheer, heath and wealth
-
Hearty welcome to our Suharaam. I will give you the appropriate links to read our reviews and analysis on your Favourite movies. Enjoy and Pl. Give your regular feedbacks and your impressions .
-
http://i1.ytimg.com/vi/giyTMqWABEc/h...jpg?feature=og
நடிகர் திலகத்தின் சிறந்த திரைக்காவியங்களில் ஒன்றான அவள் யார் திரைப்படத்தின் பாடல்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் அடையாளம் காணப் பட்ட திரு ரகுநாத் பாணிக்ரஹி அவர்கள் காலமானார். கண் காணும் மின்னல் தானோ, நான் தேடும் போது பாடல்கள் இன்றளவும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும். காலஞ்சென்ற அவருடைய மனைவி சஞ்சுக்தா பாணிக்கிரஹி அவர்கள் மிகச் சிறந்த ஒடிஸி நடனக் கலைஞர்.
திரு பாணிக்கிரஹி அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
-
சுஹராம் தங்களுக்கு நல்வரவு. தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் ரசிகர் சேனையில் மற்றொரு வீரராக தாங்கள் வருகை புரிவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
-
அவள் யார் படத்தில் ராஜேஸ்வரராவ் இசையில் கண்காணும் மற்றும் நான் தேடும் என்ற இரண்டு பாடல்கள் பாடிய பாடகர் என்று ஞாபகம். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
-
Special Thanks to Subbu for removing the posts. I am sorry Subbu if I affended you any way which is not my intention as you know.
-
1 Attachment(s)
Randor Guy என்ற பணம் கொடுத்தால் மட்டுமே தனது விமர்சனத்தில் ஒதவாகரை படங்களை அதில் நடித்த நடிகர்களை மட்டும் உயர்த்தி எப்போதும் விமர்சனம் என்ற பெயரில் புளுகும் ,
நம் நடிகர் திலகம் திரைப்படங்களையும், நடிகர் திலகத்தையும் எப்போதும் ஏதாவது நொட்டையும், தவறான தகவல்களையும், தன்னுடைய காழ்புணர்ச்சி கொண்ட புளுகு மூடையும் அவிழ்த்துவிடும் "Blast from the Past" என்ற தலைப்பில் தி ஹிந்து பத்திரிகையில் விமர்சனம் எழுதும் காழ்புணர்ச்சி கொண்ட Randor Guy மடையனின் மற்றும் ஒரு பொய் பித்தலாட்ட விமர்சனம் இந்த "விடிவெள்ளி"
விடிவெள்ளி திரைப்படம் மிக சிறந்த ஒரு வெற்றி பெற்ற குடும்ப காவியமாகும். சென்னையில் சித்ரா மற்றும் கிரௌன், மதுரையில் சிந்தாமணி திரையரங்குகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய நல்லதொரு வெற்றிகாவியம். ( ஆதாரம் இங்கு பதிவிசெயப்பட்டுளது: உபயம் திரு. பம்மலர் அவர்கள்)
உண்மை இப்படி இருக்க இந்த மடையன் RandorGuy BOX ஆபீசில் விடிவெள்ளி சோபிக்கவில்லை என்று தனது வழக்கமான நடிகர் திலகத்தின் திரைப்படத்தை பற்றிய ஒரு அண்டப்புளுகை அவிழ்த்து விட்டிருப்பது மிகவும் துரத்ரிஷ்டவசமானது.
இனியும் இதுபோல இந்த மடையன் புளுகை அவிழ்த்துவிடாமல் இருக்க நண்பர்கள் எவரேனும் அவனுடைய தொலைபேசி எண்ணை எனக்கு இங்கு பதிவிடுவாரேயானால், அவனிடம் இதுபற்றி நேரிடையாக தக்க ஆதாரங்களுடன் விளக்கவும், இனி இதுபோன்ற கதைகளையும், புளுகுமூட்டைகளையும் அவிழ்த்து விடுவது நிருத்திகொள்ளும்படியும் எச்சரிக்கை விடுக்க முடியும்.
நடிகர் திலகத்தின் மேல் உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்குமேயானால் நண்பர்கள் இதற்க்கு கடும் கண்டனத்தை தெரியபடுத்த வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.
Attachment 2519