Dear Sir,
Thanks is not required. I wrote it with Genuine Intention but it misrepresented the content. This is Kaliyuga. So obviously, there is no value for Genuinity.
Printable View
Subbu,
How to protest? Give Mail ID or Hand Cell No of Randor Guy Ranga Durai to do the same.
நண்பர் சுப்பு அவர்கள் சொன்னதை முழுக்க ஒப்புக்கொள்கிறேன். இந்த ராண்டார் கய் என்பவரைப்பற்றி பலமுறை நான் இங்கே எச்சரித்திருக்கிறேன். நடிகர்திலகத்தின் படங்களை மட்டம் தடடுவதையே வேலையாகக் கொண்டு அலைபவர். (எவனெவனோ முட்டி மோதிப் பார்த்து மூக்குடைபட்டுப் போய்விட்டான்கள். இந்த ராண்டார் எம்மாத்திரம்).
இருப்பினும் நமது ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக, நடிகர்திலகத்தின் படங்களை பற்றி அவர் என்ன எழுதிக் கிழித்திருக்கிறார் என்பதைக்கூட சரியாகப் படிக்காமல் படத்தின் பெயரை மட்டும் பார்த்து விட்டு அதை அப்படியே இங்கே மறுபதிவு செய்வதை நிறுத்த வேண்டும். அத்துடன் அப்படிப்பட்ட குப்பைகளுக்கு 'லிங்க்' தருதையும் நிறுத்த வேண்டும்.
ஒருமுறை பொதிகை தொலைக்காட்சியில் இந்த ராண்டாரின் பேட்டியைப் பார்த்திருக்கிறேன். நடிகர்திலகத்தை கொண்டு பிழைப்பை நடத்திவிட்டு அவர் பெயரையே உச்சரிக்க மறுக்கும் ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி இவர்களைப் போலவே இந்த ஆள் வாயிலிருந்தும் அந்த மூன்றெழுத்து பெயரே வந்ததே தவிர, நடிகர்திலகம் உள்பட வேறு யாரைப்பற்றியும் பேசவில்லை. அப்போதே தெரிந்தது இவர் எப்படிப்பட்ட ஆள் என்பது.
எனவே இவரை எல்லாம் ஒரு விமர்சகராக அல்ல, மனிதனாகக் கூட மதித்து அவருடைய கிறுக்கல்களை இங்கே மீள்பதிவு செய்யவேண்டாம் என நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்....
அன்புள்ள ராகுல்ராம் சார்,
புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் இப்படி ஒரேநேரத்தில் பல தியேட்டர்களில் மெகா ரிலீஸாகப் பார்த்து மகிழ விரும்புவது பிரம்மாண்டப் படங்களையே தவிர குடும்பப்படங்களை அல்ல. இதை கர்ணன் நமக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது.
அந்தப் பிரமாண்டங்களிலும் அடிக்கடி மக்கள் கண்களில் பட்டிராத பிரம்மாண்டம்தான் வேண்டும் என்று மக்கள் சொன்னதை திருவிளையாடலும் வெளிப்படுத்தி விட்டது. (வெளியீட்டில் குளறுபடி முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை).
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களோடு மக்களின் எதிர்பார்ப்புக்களும் சேர்ந்தால் மட்டுமே மீண்டும் ஒரு கர்ணன் வெற்றியை ஈட்ட முடியும் என்பதை வசந்தமாளிகையும் காட்டிவிட்டது.
அந்தவகையில் மக்களிடம் சர்வே எடுத்த தங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கது, நடிகர்திலகத்தின் முதல் பிரம்மாண்ட வண்ணப்படமான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்பதில் சந்தேகமேயில்லை.
'பாசமலர்' பேர்வாங்கிய படம் என்பதால் தப்பிப்பிழைத்து விட்டது என்று நினைக்கிறேன். இதைநம்பி மீண்டும் பார்மகளே பார், படித்தால் மட்டும் போதுமா, இருவர் உள்ளம் என்று இறங்கினால் நிச்சயம் ஏமாந்து போவார்கள். இப்போது கூட முதல்வாரத்திலேயே 'புல் ஆகாவிட்டாலும் நல்ல கூட்டம் இருந்தது' போன்ற கமெண்ட்கள்தான் வந்துள்ளன. அதிலும் ஞாயிறு வரை அது ரசிகர்கள் தினம். திங்கள் முதல்தான் குடும்ப வாரம் துவங்கும். அதன்பிறகு தாக்குப்பிடித்து நிற்பதுதான் உண்மையான வெற்றி. 'பாசமலர்' அதைச்சாதிக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். (ஆனால் சென்னையில் அத்தனை அரங்குகளில் வெளியான படம் இரண்டாவது வாரத்தில், சாந்தியில் மட்டும், அதுவும் இரண்டு காட்சிகள் என்ற விளம்பரம், இன்னொரு கர்ணன் கனவைத் தகர்த்து விட்டது).
ஆனால் அதுதான் சாக்கு என்று 'நவராத்திரி'யை டிஜிட்டல் செய்கிறேன் என்று கிளம்பிவிடக்கூடாது. அவையெல்லாம் நல்லதாக நாலு பிரிண்ட்கள் (35 எம்.எம்.மில்) வைத்துக்கொண்டு ஒவ்வொரு தியேட்டராக மாற்றி, மாற்றிப்போட்டு, நல்லவசூல் பார்த்து, 'இணைந்த இத்தனையாவது வாரம்' என்று போஸ்ட்டர் ஒட்டவேண்டிய படமே தவிர ஒரே நேரத்தில் 60 தியேட்டர்களில் டிஜிட்டல், சினிமாஸ்கோப்பில் வெளியிட வேண்டிய படமல்ல.
வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டல், சினிமாஸ்கோப், ரீஸ்டோரேஷன் செய்து வெளியிட விரும்புவோர் முதலில் வாங்கவேண்டியது நெகடிவ் உரிமையோ அல்லது வினியோக உரிமையோ அல்ல. புத்தபுதிய கூரான கத்திரி, ஒரு தீப்பெட்டி இவைதான். கத்திரி, மூன்றரை மணிநேர படத்தை இரண்டேகால் மணிநேர படமாக குறைக்க. தீப்பெட்டி, வெட்டியவற்றை தீவைத்துக்கொளுத்த. (இருந்தால் திரும்பவும் சேர்த்துவிடுவார்கள்).. அதற்காக பந்துலுவையும் நாம் குற்றம் சொல்லபோவதில்லை. மூன்றரை மணிநேரத்துக்கு ஐந்து நிமிடம் குறைவாக ஓடினாலும் அதுபடமல்ல என்று முடிவு செய்யும் ரசிகர்களைக் கொண்டிருந்த காலத்தில் அவர் இந்தப்படத்தை எடுத்தார். ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் எந்தப்படத்தையும் இரண்டேகால் மணிநேரத்துக்குமேல் பார்க்கதயாராயில்லை.
பத்மினிக்கு 'இன்பம் பொங்கும் வெண்ணிலா' ஒன்று போதும், 'அஞ்சாத சிங்கம் என் காளை'யை தூக்க வேண்டும். படத்தின் நீளத்தைக்கூட்ட கருணாநிதி, முத்துலட்சுமி, குலதெய்வம் ராஜகோபாலுக்கெல்லாம் டூயட், அதுவும் வெள்ளையனை விரட்ட வீரப்போர் புரிந்தவன் வரலாற்றுப் படத்தில். கருமம்டா சாமி. 'ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி' பாடலை கண்மண் தெரியாமல் வெட்டி வீச வேண்டும். வெள்ளையத்தேவன் காளை மாட்டை அடக்கியதும் பத்மினி விடும் லுக் போதும். அப்புறம் பத்மினி மாறுவேடத்தில் வைத்தியராக வரும் பூரா காட்சியையும் வெட்டி உடனே கொளுத்த வேண்டும். வரலட்சுமி, பத்மினி, ராகினி புதிர் போட்டுப்பாடும் 'டக்கு டக்கு' பாடலை கொஞ்சமும் யோசிக்காமல் டக் டக் கென்று வெட்டியெறிய வேண்டும்.
பிரிட்டிஷ்காரர்கள், கட்டபொம்மன், வெள்ளையத்தேவன், ஊமைத்துரை, தானாபதிப்பிள்ளை, எட்டப்பன், ஜாக்சன், பானர்மேன், டேவிட்சன் இடம்பெறும் காட்சிகளனைத்தும் அப்படியே இடம்பெற வேண்டும். தர்பார் காட்சிகள், போர்க்களக்காட்சிகள் கொஞ்சமும் குறையாமல் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்புறம் பாருங்கள் படத்தின் தரத்தையும் விறுவிறுப்பையும்.
கட்டபொம்மனை மேலும் மேலும் வலியுறுத்தக் காரணம், இன்றைய தலைமுறையினர் அதிகம்பேர் பார்த்திராதது, அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாதது, கூடவே பிரம்மாண்டம் மற்றும் கண்ணைக் கவரும் வண்ணப்படம். எனவே பிரம்மாண்ட மறு வெளியீட்டுக்கு இப்போதைக்கு நம் கண்ணில் தெரிவது 'வீரபாண்டிய கட்டபொம்மன்' மட்டுமே.
'அதெல்லாம் முடியாது, நான் 'பார் மகளே பார்' படத்தை டிஜிட்டல், சினிமாஸ்கோப் செய்து 80 அரங்குகளில் ஒருசேர திரையிடுவேன்' என்று கிளம்பினால் தடுப்பதற்கு நாம் யார்?....
கார்த்திக் சார்,
randor Guy பற்றி நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்கிறேன். இவன் ஒரு அற்ப பயல். நம் போன்றவர்களெல்லாம் பிழைப்பு தேடி போய் விட்டதால் இவன் போன்ற ....... விமர்சகன் போர்வையில் பொய் சொல்லி இழி வாழ்க்கை வாழ்கின்றனர்.
Restoration and ரிலீஸ் பற்றி நீங்கள் சொன்னதை இரண்டு விதமாக பார்க்கலாம்.
1)இருவர் உள்ளம், பா series போன்ற படங்களெல்லாம் ஒரிஜினல் நெகடிவ் பெற பட்டு டிஜிட்டல் restoration செய்ய பட்டு கலைஞர் டிவி செய்தது போல செய்தால் டிவி சேனல்கள் தங்கள் TRP rating எகிற செய்ய முடியும்.(இருவர் உள்ளம் magic ). நீங்கள் சொல்வது லிமிடெட் ரிலீஸ் செய்து காசு பார்க்கலாம். ஒரு நூறு படங்களாவது இப்படி செய்ய பட வேண்டும்.
2)வீரபாண்டிய கட்டபொம்மன் ,புதிய பறவை,திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் ,சிவந்த மண்,வசந்த மாளிகை ,கெளரவம் போன்றவை சரியான உரிமம் பெற பட்டு ஒழுங்கான restoration ,டிஜிட்டல், ஒரிஜினல் soundtrack கொண்டு செய்ய பட்டு கர்ணன் போல ரிலீஸ் செய்ய பட்டு (நல்ல விளம்பர உத்தியுடன்) வெளியிட பட்டால் கர்ணன் அளவு வெற்றி வாய்ப்பு உண்டு.(திருவிளையாடல் திடீர் தோன்றல் திட்ட மிட படாமல்,வசந்த மாளிகை பிரிண்ட் தரம் படு மோசம்.)
3)உத்தம புத்திரன், தெய்வ மகன் இரண்டும் வண்ணம் பெற்று புது தரம் கொண்டால் எல்லா
சாதனைகளையும் முறியடிக்கும் என்பது சர்வ நிச்சயம்.
அன்புள்ள கோபால் சார்,
நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "தர்மம் எங்கே" படத்தின் அலசல் கட்டுரை மிகவும் அருமை. இப்படம் நமது திரியில் சாரதா அவர்களுக்கு, முரளி சீனிவாஸ் சார் அவர்களுக்கு, மற்றும் எனக்கு மிகவும் பிடித்த படம். (அவர்கள் இருவரும் இப்படம் பற்றி எழுதிய பதிவுகளைத் தேடிப்பார்த்து விரைவில் பதிக்கிறேன்).
தொய்வடைந்த திரைக்கதையால் பெரும் வெற்றி பெறமுடியாமல் போன படம் என்பது உண்மை. பழைய உடைகளை சுவரில் மாட்டி வைத்திருப்பது சர்வர் சுந்தரத்தை நினைவூட்டியது. விறுவிறுப்பான ஆரம்பம், இடைவேளைக்குப்பின் சற்று இழுத்தாலும் கிளைமாக்சில் மீண்டும் நம்பியார் வந்ததும் சூடு பிடிக்கும். சுதந்திர பூமியில், வீரமென்னும் பாவைதன்னை, பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே மூன்று பாடல்களே போதுமானது. மற்ற இரண்டும் போர்.
சிறப்பான ஆய்வுக்கட்டுரைக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்...
Dear chandrashekar sir,
many more happy returns of the day.may god and nt bless you
Chandrasekhar Sir,
Wish you many more happy returns of the day!!!
Yesterday late evening saw about last 30 minutes of " Anbalippu " in Tamil Murasu. A serious problem which India is facing today, i.e. developing industries & real estate at the cost of agriculture, is the core of this film. Though the issue was not seriously discussed, the film clearly delivered the message in its own way. NT as usual was perfect as a villager.