Done!
Murali, please do the necessary. :)
Printable View
எதிர்பாராதது [9.12.1954 - 9.12.2011] 58வது வருட ஆரம்ப நாள்
http://i1087.photobucket.com/albums/...n31355/7-6.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-13.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-14.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-11.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/4-7.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/5-9.jpg
"சிற்பி செதுக்காத பொற்சிலையே"... காலத்தால் அழிக்க முடியாத இனிய காவியத்தின் இன்ப கானம். (வீடியோ வடிவில்)
http://www.youtube.com/watch?feature...&v=Opv1Gdu4MZQ
'எதிர்பாராதது' காவியத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி இருவரின் மனதை உருக்கும் குரல்வளத்தில் உருவான அற்புதமான பாடலான "காதல் வாழ்வில் நானே... கனியாத காயாகிப் போனேன்" பாடல் மற்றும் இதர பாடல்களுக்கு லிங்க் கீழே.
http://www.inbaminge.com/t/e/Edhirpaarthadhu/
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
கோடியில் ஒருவரின் 'வெற்றிக்கு ஒருவன்' மற்றும் 'எதிர்பாராதது' படங்களுக்காக தாங்கள் அளித்துள்ள ஆவணங்கள் நாங்கள் மேலும் உங்களிடமிருந்து இதுபோன்ற அற்புத ஆவணங்களை எதிர்பார்க்க வைக்கின்றன. நாங்கள் எதிர்பார்க்கும் அத்தனை ஆவணங்களையும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தாங்கள் அளித்து வருவது தங்களது தயாள குணத்தைக் காட்டுகிறது. அற்புத பதிவிற்கு அசுர நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் உயரிய பாராட்டிற்கு உள்ளம் கனிந்த நன்றிகள். தங்கள் சபரிமலைப் பயணம் இனிதே நடந்து முடிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
வாசுதேவன்.
பிற மொழிகளில் 'எதிர்பாராதது'
http://i1087.photobucket.com/albums/...31355/1-12.jpg
அற்புதமான புதுமைப் படைப்பான ஸ்ரீதர் அவர்களின் 'எதிர்பாராதது' காவியம் மாபெரும் வெற்றி அடைந்ததோடல்லாமல் 'நித்யகன்யக' என்ற பெயரில் மலையாளத்தில் எடுக்கப்பட்டு 1963 இல் வெளியானது. நடிகர் திலகத்தின் பாத்திரத்தை சத்யனும், பத்மினியின் பாத்திரத்தை ராகினியும் (பத்மினியின் தங்கை), நாகையா அவர்களின் பாத்திரத்தை நடிகர் திலகத்தின் அருமை நண்பரான 'திக்குரிசி' சுகுமாரன் நாயர் அவர்களும் ஏற்று நடித்திருந்தனர்.
http://www.hindu.com/mp/2010/06/14/i...1451300401.jpg
தெலுங்கில் ‘Ilavelpu' என்ற பெயரில் வெளிவந்தது. பிரதான ரோல்களில் நாகேஸ்வரராவும், அஞ்சலி தேவியும் நடித்திருந்தார்கள். இயக்குனர் யோகானந்த் இயக்கியிருந்தார். 1956-இல் இப்படம் வெளிவந்தது.
'எதிர்பாராதது' இந்தியிலும் எடுக்கப்பட்டது. 'சாரதா' என்ற பெயரில் இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 1957-இல் வெளிவந்த இப்படத்தில் ராஜ்கபூரும், மீனாகுமாரியும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.
http://img694.imageshack.us/img694/3820/sharda1957.jpg
மேற்கண்ட மொழிகளில் 'எதிர்பாராதது' எடுக்கப்பட்டு அத்தனை மொழிகளிலும் வெற்றிகண்டது குறிப்பிடத்தக்கது.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
1954-ம் ஆண்டில் வெளியான 'எதிர்பாராதது' திரைப்பட பொக்கிஷப்பதிவுகள் அனைத்தும் அருமை. நீங்கள் பிறப்பதற்கு பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த ஆவணங்களை நீங்கள் சேகரித்து வழங்குவதைப்பார்க்கும்போது, பண்டைய இலக்கிய நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்தவற்றைத் தேடித்தொகுத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் அவர்களின் தொண்டே நினைவுக்கு வருகின்றது.
அவர் செய்தது தமிழன்னைக்குச்செய்த திருத்தொண்டு. நீங்கள் செய்து வருவது ஈடில்லா தமிழ்க்கலைஞன் நடிகர்திலகத்துக்கு செய்து வரும் திருத்தொண்டு. இரண்டிலுமே உயர்ந்து நிற்பது தியாகமும், சேவையுமே. உலகெங்கிலும் வாழும் நடிகர்திலகத்தின் ரசிகக்கண்மணிகள் மனம் மகிழ வேண்டுமென்பதற்காக தங்களை வருத்திக்கொண்டு நீங்கள் செய்து வரும் சேவைக்கு ஈடு இணையே இல்லை. அந்த வரிசையில் ஒரு மைல்கல் கல்தான் இந்த 'எதிர்பாராதது' விளம்பரப்பொக்கிஷங்களும், அபூர்வ நிழற்படமும்.
இயக்குனர் ஸ்ரீதரின் எழுத்தோவியத்தில் உருவான இவ்வரிய காவியம், பின்னர் பல்வேறு மொழிகளிலும் தயாராகி பெருவெற்றி கண்ட விவரங்களை நமது வாசுதேவன் சார் அருமையாக எடுத்தியம்பியுள்ளார்.
அப்போதைய நிகழ்வுகளை அறிய இத்தகைய ஆவணங்கள் எவ்வளவு பேருதவியாக இருக்கின்ற என்பதற்கு ஒரு உதாரணம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள திரையரங்குகளின் வரிசை. சென்னையில் மட்டும் 5 திரையரங்குகளின் வெளியானது மட்டுமல்ல, ஒரே ஏரியாவிலுள்ள இரண்டிரண்டு தியேட்டர்களில் வெளியாகியிருப்பதுதான். சித்ராவும் காமதேனுவும் ஒரே ஏரியா அரங்குகள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஏராளமான படங்கள் வெளியாகும்போது, அண்ணாசாலைப்பகுதியில் தியேட்டர் கிடைக்காதபோது மட்டுமே காமதேனுவில் புதிய படம் வெளியிடப்படும். அப்படி காமதேனுவில் வெளியாகும் படம், அண்ணாசாலை தியேட்டர்களில் வெளியிடப்படாது. ஆனால் 'எதிர்பாராதது' சித்ரா, காமதேனு இரண்டு அரங்குகளிலுமே புதிய வெளியீடாக வெளியாகியுள்ளது.
அதுபோல வடசென்னைப்பகுதியில் பிராட்வே அரங்கும், பாரத் அரங்கும் நடந்து செல்லும் தூரத்திலேயே உள்ளன. (1972-ல் ஒரு ரம்ஜான் தினத்தன்று பிராட்வேயில் 'தங்கதுரை' படத்துக்கு டிக்கட் கிடைக்காமல், நாங்கள் ஐந்தாறு பள்ளி மாணவர்கள் நடந்தே போய் 'பாரத்'தில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்தோம்). ஆனால் அவ்வளவு அருகருகே உள்ள இரண்டு தியேட்டர்களிலும் 'எதிர்பாராதது' வெளியாகி அசத்தியிருக்கிறது. இவையெல்லாம் தங்களின் ஆவணப்பொக்கிஷங்கள் மூலம் மட்டுமே அறிய சாத்தியமாகிறது.
அதற்காக எங்கள் அனைவரின் நன்றிகளையும் தெரிவிப்பதுடன், தன்னலமற்ற தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம். ராமஜெயம் சார் சொன்னதுபோல, தங்களைப்போன்ற தூய ரசிகக்கண்மணிகள் எந்த ஒரு கலைஞருக்கும் கிடைக்கமாட்டார்கள் என்பது உண்மை.
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தங்களது எதிர்பாராதது ஆவண பொக்கிஷங்கள் நாங்கள் எதிர்பாராதது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், கண்டிப்பாக அவைகள் தங்களால் பதிவிடப்படும் என்பது தெரிந்தது தான். மிக்க நன்றிகள். நீதி திரைப்பட ஆவண பொக்கிஷங்கள் மிகவும் அருமை. குறிப்பாக, குமுதம் விமர்சனம் நான் படிக்காத ஒன்று (குமுதத்தில் வேலை செய்தும் கூட!).
மறுபடியும் நன்றிகள்.
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
பம்மலார் எதிர்பாராதது படத்தைப் பதிந்தவுடன், அந்தப் படங்களின் பிரத்தியேக ஸ்டில்களையும் பாடல்களையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. அந்தப் படத்தில் வரும், "சிற்பி செதுக்காத பொற்சிலையே" பாடல் காலத்தால் அழிக்க முடியாத அற்புதப் பாடல். ஏ.எம்.ராஜா அவர்களும் நடிகர் திலகத்திற்கு சிறந்த பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது இந்தத் தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும். 1952-இல் துவங்கி, 60 வரை, சி.எஸ்.ஜெயராமனும் ஏ.எம்.ராஜாவும் நடிகர் திலகத்திற்கு பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அதாவது, எந்தப் பின்னணிப் பாடகருக்கும் ஏற்றவாறு, தன்னுடைய உடல் மொழியை மாற்றிக் கொண்டவர் நம் நடிகர் திலகம் என்பதற்கு இதை விடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. இன்னும் நிறைய சொல்லலாம். மேலும், எதிர்பாராதது படம் பிற மொழிகளில் வந்தது பற்றிய விவரங்களும் அருமை. அதன் தெலுங்குப் பதிப்பை நான் சிறு வயதில் பார்த்தது நினைவில் இருக்கிறது. ஹிந்தி பார்த்ததில்லை.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
http://www.sadmuffin.net/cherrybam/g...lations013.gif http://www.sadmuffin.net/cherrybam/g...lations012.gif
நம் அன்பு மாடரேட்டர்கள், அன்பு முரளி சார், மற்றும் அன்பு ராகவேந்திரன் சார் ஆகியோரின் ஆசீர்வதங்களினாலும்,முயற்சிகளாலும் திரி நாயகர் பம்மலார் அவர்களுக்கு முரளி சார் பதிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களோடு இந்தத் திரியின் புதிய பாகம் (Current Discussions) தொடங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தம். சதா சர்வகாலமும் நடிக தெய்வத்திற்கே தொண்டு செய்வதைக் கடமையாகக் கொண்ட நம் பம்மலாருக்கு நடிகர் திலகத்தின் ஆசிகள் பூரணமாக உண்டு என்பதை இந்நிகழ்வு ஆணித்தரமாக நிரூபணம் செய்கிறது. ஆவணத் திலகத்திற்கு கிடைத்துள்ள பெருமையை எண்ணி மனம் பூரிப்படைகிறது. நடிகர் திலகத்தின் பரிபூரண ஆசிகளோடு அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வாராக என்று நம் அனைவர் சார்பாகவும், நமது திரியின் சார்பாகவும் அவரை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.