Quote:
அவுட்டோர்களில் நடக்கும் சீரியல் படப்பிடிப்புகள்!
சினிமா படப்பிடிப்புகளைதான் பெரும்பாலும் அவுட்டோர்களில் முகாமிட்டு நடத்துவார்கள். சீரியல்களைப்பொறுத்தவரை சென்னையை தாண்ட மாட்டார்கள். ஏதேனும் பங்களா டைப் வீட்டிற்குள்ளேயே சுற்றிசுற்றி படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், சமீபகாலமாக சீரியல் படப்பிடிப்புகளையும் வெளியூர்களில் நடத்தி வித்தியாசம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில், சி.ஜே.பாஸ்கர் இயக்கிய ஆதிரா சீரியலை கேரளாவில் முகாமிட்டு அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கினர்.
அதையடுத்து மேலும் சில சீரியல் படப்பிடிப்புகளும் அவுட்டோர்களில் நடந்து வந்த நிலையில், தற்போது ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் காக்க காக்க சீரியல் படப்பிடிப்பும் அவுட்டோர்களில் நடக்கிறது. முருகன் கதை என்பதால் தமிழ கத்தில் உள்ள பிரதான முருகன் கோயில்களில் அதாவது அறுபடை வீடுகள்அனைத்திலும் இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம். தற்போது திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் காக்க காக்க சீரியல் படப்பிடிப்பு நடக்கிறது.
அதேபோல், கிருஷ்ணா, வாணி போஜன் முக்கிய வேடங்களில் நடித்து வரும் தெய்வமகள் சீரியலின் படப்பிடிப்பு யூனிட்டும் இம்மாதம் கேரளா செல்கிறது. அதையொட்டி கதையில் விறுவிறுப்பூட்டும் திருத்தங்களை செய்து வேறு சில நடிகர் நடிகைகளையும் கதையில் இணைத்து வருகிறார்கள்.