தங்கள் பாராட்டிற்கு நன்றி, கோபால் சார்.
Printable View
தங்கள் பாராட்டிற்கு நன்றி, கோபால் சார்.
அன்புச் சகோதரி வனஜா அவர்களே,
எனக்காகத் தாங்கள் கூறியுள்ள ஆதரவு வார்த்தைகளுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
வாசுதேவன் அவர்களே..
நடிகர்திலகத்தின் படர்ந்த மார்பில் முதுகை இணைத்துத் தம் இடது கன்னத்தை அவர் கழுத்து -தாடையில் இணைத்து தரும்
ஜமுனாவின் முகபாவம் - உலகை வென்ற பெண்ணின் பெருமிதம் காட்டும்..
தெத்துப்பல் புன்னகையும் தத்திய மென்நடையும் சிரிக்கும் விழியோடும் அடிக்கும் ஜடையோடும் காட்டும்
மெல்லிய அந்நியோன்யம் நடிகர்திலகம் - ஜமுனா இணைக்குச் சிறப்பு அடையாளம்..
உங்கள் தொகுப்புரை அருமை.. நன்றி..
மாலை சூடும் மணநாள்..
வறுமையில் செம்மை தேடும் ஆதர்ச தம்பதி காணுங்கள்..
http://www.youtube.com/watch?v=7zRfhAMqOKA
பார்த்தசாரதி அவர்களே...
மிக நுணுக்கமான ஆழமான அலசலால் அசத்தியமைக்குப் பாராட்டுகள்.
தொடர்ந்து வழிபடுவதால் நெற்றியில் தழும்பேறியதைக் காட்டிய நடிகர்திலகமே...
நீரே உமக்கு என்றும் நிகரானவர்...
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அன்பு உள்ளங்கள்
கோபால் [அலைபேசியிலும் வாழ்த்து]
சித்தூர் வாசுதேவன்
கணேஷ்
சந்திரசேகர்
காவேரி கண்ணன்
கல்நாயக்
நெய்வேலி வாசு [அற்புதமான புகைப்படத்திற்கு ஸ்பெஷல் நன்றி!]
ராதாகிருஷ்ணன்
சங்கரநாராயணன்
அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய
ராகவேந்தர் சார்
பார்த்தசாரதி
ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
அன்பு ஆதிராம் சார்,
தங்கள் கனிவான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! தாங்கள் குறிப்பிட்டது உண்மைதான். அன்பு பம்மலார் ஆரம்பித்த திரியில்தான் நடிகர் திலகத்தின் நாயகியர் தொடர் தொடங்கப்பட்டது. தற்சமயம் நடிகர் திலகம் திரி மூன்று திரிகளாக இருப்பதால் ஒவ்வொன்றிலும் பிரித்துப் போடலாமே என்ற எண்ணத்தில்தான் பார்ட் 10-இல் போட்டுள்ளேன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் வந்துள்ள தங்கள் வருகை மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தங்களுக்கும் என்னைப் போல ஜமுனாவை பிடிக்கும் என்பது மிகுந்த சந்தோஷம். தங்களுக்காக உங்களுக்கு மிகவும் பிடித்த 'அமுதை பொழியும் நிலவே!' இதோ.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o7n8di18mT8
ஜமுனா பதிவு பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி வனஜா அவர்களே! திருவாளர் பார்த்தசாரதி அவர்களின் பாடல் ஆய்வை அணு அணுவாக தாங்கள் ரசித்துள்ளது தங்களின் ரசனையின் மேன்மையை நன்கு உணர்த்துகிறது. பாராட்டுக்கள்.
டியர் பார்த்தசாரதி சார்,
தங்கள் 'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடல் ஆய்வை இரு முறை படித்து மகிழ்ந்தேன். பிரமாதமான ஆய்வு. உங்களின் இந்த அற்புத ஆய்வுக்காக தங்களை நாங்கள் "எல்லோரும் கொண்டாடுவோம்".
http://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw&feature=player_detailpage#t=3s
இனிய நண்பர் காவேரி கண்ணன் அவர்களே!
தங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி! மாலை சூடும் மண நாளைக் கொடுத்து மனம் மகிழச் செய்து விட்டீர்கள். (வழக்கம் போல அழகுத் தமிழிலே) நன்றி அய்யா!