Many many HAPPY RETURNS of the day KC sir. Your untiring efforts for NT MANIMANDAPAM and other social works are a great job you are doing. all the best May god bless you good health and wealth.
Printable View
மாந்தோரண பாட்டில், மாப்பிள்ளை பெண்ணுக்கு என்ற வரிகளில் கண்கள்,பாவங்களுடன் நடிகர்திலகம் புரியும் ஜாலம்!!!!?????
Quote Originally Posted by kaliaperumal vinayagam
உண்மை ரவி சார். திரையில் திருமுகமும் மறைவில் மறுமுகமாய் விளங்கிய நடிகர்கள் மத்தியில், நிழல் மற்றும் நிஜத்தில் ஒருவராய் விளங்கியவர் ஒரு தாய் மக்களின் நாயகன் மக்கள் திலகம்தான். தான் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பற்றி துளிகூட அக்கறை இல்லாமல், பணம் தருகிறார்கள் எப்படியும் நடிக்கலாம் என்று நடித்தவர்களிடையே, தான் நடிக்கின்ற நடிப்பு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், தீய பழக்க வழக்கங்களைக் களைய ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று நினைத்ததோடு மட்டுமல்லாது அதை நடத்தியும் காட்டிய, நினைத்ததை முடித்தவர். திரையில் கூட மது அருந்தி நடிக்க அஞ்சிய மது அருந்தா மாமேதை. அதைத்தான் தன் திரைப்பட பாடலில் "நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினைத் தந்தாகணும்" என்றார்
இந்த சமூக அக்கறைதான் இன்னும் இவர் பெயரை உலகில் மங்காமல் வைத்திருக்கிறது. இப்படி ஒரு சமூக அக்கறை இல்லாதவர்கள் இருந்தும் என்ன? இல்லாவிட்டால் என்ன?
Unquote
திரும்ப திரும்ப ஒரே பல்லவி ,நீதி கருத்து,நல்லவன் வேடம்(??) என்று. எதுவுமே உரிய பலன் கொடுத்து போய் சேர்ந்த மக்களை இம்மியளவேனும் உயர்த்த பயன் பட்டதா?அல்லது சொன்னவர்கள் மட்டுமே வாழ்க்கையை உயர்த்தி கொண்டார்களா? படிப்பில் நாட்டம் செலுத்தாமல் மதுக்கடை சென்றவர்கள் யார்? வன்முறையை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்கள் யார்? வாழ்க்கையில் மூளை சலவை செய்ய பட்டு மற்றதை காண மறுத்து வாழ்க்கையை வீணாக்கி கொண்டவர்கள் யார்?
நடிகரின் வேலையே கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக நடிப்பதுதானே?
எஸ்வி சார்,
நாங்கள் எங்கள் வழியில் சென்று யாரையும் புண்படுத்தாமல் நாகரிகமாக எங்கள் ஆய்வுகளை ,கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறோம். உங்கள் திரியில் எங்களை அனாவசியமாக வம்புக்கிழுத்து தூண்டுவது தொடர் நிகழ்ச்சியாகி கொண்டுள்ளது. திரும்ப திரும்ப கூறுகிறேன். நாம் நமது கருத்துக்களை கூறலாமே தவிர ஒருவர் மற்றவரை தாக்கினால் ,நாம் விரும்பும் நாயகர்களை நாமே அவமதிப்பதற்கு சமம்.
உதாரணம் மேலே குறிப்பிட்ட பதிவு,அதற்கு எங்கள் சுப்பு சாரின் பதில் பதிவு.
அதுசரி கலியபெருமாள் சார்,
உங்கள் வாக்கியங்களே ஒன்றுக்கொன்று முரண் படுகின்றன. திரையில் திருமுகம்,மறைவில் மறுமுகம் என்பது தொடக்கம். அடுத்த வரி பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயாராய்....
பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடித்தவர்கள் எப்படி திரைக்கு திரு முகம் காட்டியவர்கள் ஆவார்கள்?
எங்கேயோ இடிக்குது?குத்துதே? அபூர்வ சகோதரர்கள் படத்தில் வருவது போல இந்த துப்பாக்கி முன்பக்கமாகவும் சுட்டு பின் பக்கமாகவும் சுட்ட மந்திர துப்பாக்கி ஆகி விட்டதே?தயவு செய்து விளக்குவீர்களா?
நண்பர்களே,
பதிலுக்கு பதில் என்று நாம் போய்க்கொண்டிருந்தால் அதற்கு முடிவே கிடையாது. போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் என்று நம் பணியைத் தொடர்வோம். காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். உண்மை என்றுமே அடைந்து கிடக்காது.
http://youtu.be/jGAeoj0z1sc
தில்லான மோகனாம்பாள்
1968 ல் வந்து , இன்றும் கலக்கும் படம் . நானும் என் நண்பர்களும் (ஒரு 6 நண்பர்கள் ) ஒரு முடிவு செய்து உள்ளோம் . பிரதி வாரம் விடுமுறை நாள் ல் ஒரு NT படத்தை பார்க்க வேண்டும் என்று . ஒரே கண்டிஷன் படத்தின் பிரதி பிரமாதமாக இருக்க வேண்டும் என்றது தான் . அந்த பொறுப்பு என்னக்கு , என் என்றல் இதில் அதித ஆர்வம் உள்ளவன் நான் , மேலும் 6 வருடமாக த்வத் வாங்கி கொண்டு இருக்கிறேன்
என் நண்பன் வீட்டில் Home தியேட்டர் இருக்கிறது , பெரிய ஸ்க்ரீன் , சினிமா தியேட்டர் போலே , so இடம் அவன் வீடு அந்த வகையில் முதல் முதல் ல் இந்த படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்தோம் .
ஏற்கனவே இந்த படத்தை பல முறை பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்கும் பொது ஒரு சில விஷயங்கள் புதிதாக தெரிந்தது , அதை அடிப்படியாக கொண்டு எழுத போகிறேன் , இதில் உள்ள அம்சங்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் இருந்தாலும் , ஒரு சின்ன ரசிகன் , ஆவலுடன் எழுவதாக எண்ணி கொண்டு உங்கள் நல்லாசிகளை வழங்க கேட்டு கொள்கிறேன்
எது பிரமாண்டம் ,நம் நாட்டின் கலைகளை , ஸ்டெல்லார் cast கொண்டு திறம்பட இயக்கி ,நடித்து , திறம்பட இசை அமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த படம் தான் இந்த காவியம்
முன்னால் முதல்வர் திரு MGR அவர்கள் ரஷ்ய delegates க்கு இந்த படத்தை திரையிட்டு நம் நாட்டின் பெருமையை நிலை நாட்ட ஒரு பொக்கிஷம் இந்த படம்
இனி
இந்த படத்தின் பெயர் போடும் போதே பிரமாண்டம் நம்மளை தொற்றி கொள்கிறது , BGM ஸ்கோர் மற்றும் திரை எங்கும் ஜெனகளும் , நாம் ஒரு திருவிழாவை காண போவது தெரிகிறது
முதல் காட்சியில் (மோகனா) அலங்காரம் செய்து கொண்டு தன்னை தானே ரசித்து கொண்டு இருக்கிறார் , அது ஒரு 5 -6 உருவங்களை நம்மளுக்கு காட்டுகிறது (ஒளிபதிவு : KS பிரசாத் , படத்தொகுப்பு : ராஜன் , TR நடராஜன் )
அதை தொடர்ந்து இரண்டு நாதஸ்வரம் வாசிப்பது கேட்கிறது , அது தான் சிக்கல் சண்முகசுந்தரம் மற்றும் தங்கரத்தினம் (சிவாஜி & AVM ராஜன் )
கோவில் ல் வெடி சத்தம் NT க்கு இடயுறு செய்ய அவர் கச்சேரி யை பாதியில் நிறுத்தி செல்கிறார் , அவர் இந்த சத்தம் குறித்து தன் தம்பி இடம் பேசும் பொது , அவர் குரலில் ஒரு தளர்ச்சி , காரணம் அவர் நாதஸ்வரம் வாசித்தல் , குரல் வலம் கொஞ்சம் தொய்வு , அதை அழகாக காட்டி இருப்பார்
அவர் செல்லும் பொது , மோகனா வை பார்த்த உடன் மனசை பரி கொடுக்கிறார் , இருந்தாலும் இரண்டு திறமைசாலிகளுக்கு இடையில் வரும் ஈகோ , அவர்களை சுற்றி ஒரு மாய சுவரை எழுபிகிறது
சத்திரத்தில் சிவாஜி யை காண வரும் ஜில் ஜில் ரமாமணி யை சிவாஜி அன்புடன் விசாரிப்பதும் , அதே சமயம் அவர் தோல் மேல் கை போடும் பொது அதை நாசுக்காக தவிர்ப்பதும் , ஆன் பெண் நட்புக்கு ஒரு இலக்கணம் . பாலையா ஜில் ஜில் யை நுகர்வது ஒரு நல்ல தமாஷ் , மனோரமா பேச்சு ஆற்றல் மூலம் கவர்கிறார் . அவர் நாகலிங்கதிடம் நான் ஒரு பக்கம் ஆடுகிறேன் , மோகனா ஒரு பக்கம் ஆட்டும் என்று சொல்லும் பொது அவர் வெகுளி குணம் வெளி படுகிறது
AVM ராஜன் சொல்லி , பாலையா நடனத்தை காண permission கேட்பது , அதை மென்னு முழுங்குவது , பிறகு தப்பித்து செல்வது , கோவில் ல் சிவாஜி யை பார்த்து ஒளிவது பாலையா
பலே ஐயா
மறைந்து இருந்து பாடல் , நடனம் self explanatory . (சொல்ல தேவை இல்லை )
ரயில் ல் பத்மினி வரவை எதிர் பார்ப்பதும் , அவர் வந்ததும் பாலையா விடம் இடம் மாற சொல்வதும் , விளக்கு அணிந்த உடன் , மனசு மனசும் பேசுவதும் , காதல் ஓவியம்
அதில் பாலையா CK சரஸ்வதி உடன் வம்பு இழுப்பது நல்ல தமாஷ்
ரயில் நின்ற உடன் BGM ஒரு வித கீச்சு குரலில் ஒலிக்கும் , அது இந்த ஜோடி பிறிவதனால் தானோ
அங்கே நாகேஷ் சிவாஜி யை வரவேற்க வருகிறார் , ஆணால் மாளிகை யில் வாசிக்க சூழ்நிலை சரி இல்லாதனால் அவர்கள் வெளியே வந்து வாசிப்பதும் , வெளி நாட்டவர்கள் ஆடுவதும் , காவியம்
அந்த காட்சியில் நாகேஷ் செய்யும் சேஷ்டை க்கு ஒரு சபாஷ் ,உடம்பை வில்லாக வளைந்து ஓடி வருவதும் , பின் ஆடுவதும் , நாகேஷ் டாப்
பாலாஜி யின் சூழ்ச்சியால் சிவாஜி பத்மினி யை வெறுக்க நேர்கிறது (நாகேஷ் யின் கூட்டு , அவர் புத்தி சாதுர்யம் , கூடவே வடிவாம்பா வின் பேராசை )
நாகபட்டினத்தில் மனோரமா வின் கம்பெனி ல் மனோரமா உடன் அவர் தவில் வாசிப்பதும் , மனோரமா நாதஸ்வரம் வாசித்து ஆடி கொண்டே உகர்வதும் , சிவாஜி அடிக்கும் கமெண்ட்ஸ் , சிரிப்பு க்கு உத்தரவாதம்
சிவாஜி யை மலாயா வுக்கு போக விடாமல் இருக்க பத்மினி அவரை போட்டிக்கு அழைக்க , சிவாஜி ஒத்து கொள்கிறார் (male ஈகோ வின் அற்புத காட்சி அமைப்பு )
பாலாஜி மனம் திருந்தி பத்மினி யை தன் தங்கையாக ஏற்று கொள்கிறார் .
வைத்தி (நாகேஷ் ) நாகலிங்கதுடன் சேர்ந்து நடனத்தை நடக்க விடாமல் தடுக்க முயற்சிக்கிறார் )
நடன முடிவில் , பத்மினி க்கு தில்லான மோகனம்பாள் என்று ஒரு பெயர் கிடைகிறது
சிவாஜி கத்தியினால் குத்த பட்ட உடன் துடித்து உழுவதும் , கண் முழித்து கை வரவில்லை என்று ஏங்குவதும் ஒரு கலைஞன் யின் ஏக்கம்
ஆஸ்பத்திரியில் பெண் nurse தன்னை கவனிப்பதை தவறாக நினைத்து விலகுவது , அந்த nurse தன் தந்தை சிவாஜி யின் ரசிகர் அதனால் தான் இப்படி கவனிக்கிறேன் என்று சொன்ன உடன் அவர் முகத்தில் காடும் பாவம் . அந்த nurse சிவாஜி யை கிணத்து தவளை என்று சொன்னதை ஒத்து கொள்வது போல் அமைகிறது
நலம்தானா- சாக வரம்
நாகேஷ் அதை காண வரும் பொது , முதல் வரிசை யில் அமர்வதும் , அந்த சீட் யில் உக்கார வேண்டியவர் வந்ததும் , சமல்லிப்பதும் , சவடால் வைத்தி
நாகேஷ் இப்போ நம்பியார் உடன் சேர்ந்து மோகனா வை ராஜாவுக்கு (நம்பியார்) ஆசை நாயகி ஆக்க முயல்கிறார் , அந்த முயற்சி சிவாஜி &பத்மினி யை சேர்க்கிறது . முடிவில் சுபம்
இந்த படத்தின் கதை ஆனத விகடன் ல் வந்த போதே இந்த படத்தின் நாயகன் சிவாஜி தான் என்று மக்கள் எண்ணினார்கள் , சிவாஜி யை மக்கள் மனசில் வைத்து இருந்தார்கள் , இந்த படத்துக்கும் தேசிய விருது அவர்க்கு கிடைக்க வில்லை , ஸ்டேட் award கூட இல்லை (பத்மினி , மனோரமா வுக்கு கிடைத்தது )
இந்த படத்தில் தாங்களே நாதஸ்வரம் வாசிப்பதை போல் மக்கள் நினைகிரர்களே என்று கேட்டதற்க்கு
நம்மவர் அளிக்கும் பதில்
வெறும் நடிப்பு தான் , நான் வாசிக்க வில்லை , முக பாவங்களில் அப்படி செய்தேன் அந்த பாராட்டு , மதுரை சேதுராமன் , பொண்ணு சாமி
க்கு தான் சேர வேடும்
இசை (மாமா மகாதேவன் , பாடல் : கண்ணதாசன் )
எது செட் எது ஒரிஜினல் என்று தெரியாத வண்ணம் அரங்கம் அமைத்தது கங்கா
ஒரு படத்தில் பங்கு பெற்ற அனைவரும் சாக வரம் பெற்ற படம் என்று இந்த படத்தை சொல்லலாம்
ராகுல்,
ஒரு சிறிய ஆலோசனை. நான் கூட மற்றவர்கள் மிக சிறந்த முறையில் ஆய்வு செய்து விட்ட படங்களை மறு ஆய்வு செய்வதை தவிர்ப்பேன். உதாரணம்- தேவர் மகன்(p _r ),தில்லானா மோகனாம்பாள்(பலர் ,சமீபத்தில் p _r ,முரளி) .நான் உன்னிடம் எதிர்பார்ப்பது இதுவரை யாரும் தொடாத படம்.
சரியாகச் சொன்னீர்கள் சுப்பு சார்,
குடிக்காதவர் போல நடிப்பது மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்கு. மற்றபடி உண்மையில் சமூக அக்கறை இருந்திருக்குமானால் தன ஆட்சியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்டிருக்க வேண்டும். செய்யலையே.
எழுதக்கூடாது, கண்டுகொள்ளக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் மக்கள் திலகத்தின் புகழையும், பெருமையையும் பாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் 'மற்ற நடிகர்கள்', 'மற்ற நடிகர்கள்' என்ற வசவு அதிகமாக இருக்கிறது. (Not ALL there, but one Hubber).
சமூக அக்கறை என்பது குடிக்கும் வேடத்தில் நடிக்காமல் இருப்பதில் மட்டும்தானா?. உடன் நடிக்கும் கதாநாயகியரை ஆபாசமாகக் காட்டுவதில் இல்லையா?. அவர் இடம்பெறும் எத்தனை டூயட்களில் நாயகியர் ஆபாசமாக உடையணிந்து நடித்துள்ளனர். குறிப்பாக "அழகிய தமிழ்மகள்" பாடலாகட்டும், "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை" பாடலாகட்டும், "இன்னொரு வானம் இன்னொரு நிலவு" பாடலாகட்டும், "அங்கே வருவது யாரோ" பாடலாகட்டும் கதாநாயகியரான மஞ்சுளா, லதா ஆகியோரின் உடைகள் படு ஆபாசம். இதுபோல ராமன் தேடிய சீதையிலும் ஒரு பாடலில் ஜெயலலிதா ரொம்ப ஆபாச உடையில் ஆடியிருப்பார். (இதுபோல பல பாடல்கள், சாம்பிளுக்கு மட்டும் இவை. இவற்றை மட்டுமே இல்லைஎன்று மறுக்கட்டுமே). இது ஒன்றும் இல்லாத குற்றச்சாட்டு அல்ல. அனைத்துப்பாடல்களும் இணையத்திலும் கிடைக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின்றன. பார்த்து கன்பர்ம் பண்ணிக்கொள்ளலாம். அவர்தான் தன படங்களின் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துபவராயிற்றே. அவர் சொன்னால் வீரப்பன் கேட்க மாட்டாரா?. அசோகன் கேட்க மாட்டாரா? அல்லது நீலகண்டன் கேட்க மாட்டாரா?. "மற்ற" நடிகர்கள் போல நடித்தோமா, ""பணம் வாங்கினோமா"" என்று போகிறவர் அல்லவே. அனைத்திலும் நுழைந்து பட்டை தீட்டுபவராயிற்றே. கதாநாயகியரை ஆபாசமாகக் காட்டுவது சமூக அக்கரையில் சேர்த்தியில்லையா?. மற்ற நடிகர்கள் படங்களில் இடம்பெறவில்லையா என்று கேட்கக்கூடாது. உங்கள் கூற்றுப்படி அவர்கள் “சமூக அக்கறை இல்லாதவர்கள்”. இவர் அப்படியல்லவே. மூச்சுக்கு மூச்சு 'தாய்க்குலம்' , 'தாய்க்குலம்' என்று உச்சரிப்பவர் படத்திலா இப்படி ஆபாசம்?...
அலுவல் நிமித்தமாக நான்கு நாட்கள் வெளியூரில் இருந்ததால். திரியைப் பார்க்கமுடியவில்லை.
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை திரியில் தெரிவித்த நண்பர்கள் திரு.கோபால் சார், ராகவேந்திரன் சார், முரளி சீனிவாஸ் சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், வினோத் சார், ஹரிஷ் சார், கல்நாயக் சார் மற்றும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்த பம்மலார் சார் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.
என்றும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள் தங்கள் அனைவரின் வாழ்த்தும், ஆதரவும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.
இத்திரியில் 2011 ஆம் ஆண்டு பதிவிட்டதை இங்கு மறுபதிவிட்டிருக்கிறேன். (அதன்பிறகு இணைந்துள்ள நண்பர்களுக்காக)
பிறந்த நாள் வாழ்த்துக்களை திரியிலும், தொலைபேசியிலும், முகநூல் மூலமாகவும் அளித்த நண்பர்களுக்கும் மற்றும் உங்களைப் போன்ற பல்லாயிரக்கான ரசிக இதயங்களின் நட்பை எனக்களித்த விண்ணிலிருந்து எனை வாழ்த்தும் கலை தெய்வம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப இவ்வுலகில் என்னைப் படைத்த இறைவனுக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இந்த நேரத்தில் என்னுடைய சில உணர்வுகளை இத்திரியில் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
சிறு வயது முதலே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த எனக்கு, வேலையில் சேர சென்னை வந்தபோது நடிகர்திலகத்தை நேரில் சந்திப்பேன் என்றுகூட நினைத்தது கிடையாது. ஆனால் கடவுள் சித்தம் - அவரிடமே வேலைக்கு சேரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய கட்சி அலுவலகப் பொறுப்பாளாராக பணியாற்றும்போதும், அவர் அரசியலைவிட்டு விலகிய பிறகு சிறிது காலம் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் பணியாற்றியபோதும், அந்த மகானுடன் பழகியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும்.
பொக்கிஷப் பதிவுகளை அள்ளி வழங்கும் ரசிக மாமணிகள் உள்ள இத்திரியில் - என்னுடைய வாழ்நாள் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வரும் மூன்றை இணைப்பாக இங்கு அளித்துள்ளேன்.
1 ) 1985 ஆம் ஆண்டு அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் அட்டையை திரு. தளபதி சண்முகம் அவர்களிடம் இருந்து பெற்றது.
http://i1234.photobucket.com/albums/...ps9fb8176e.jpg
2 ) நடிகர்திலகத்தின் விசிட்டிங் கார்டு (அவருக்கு விசிடிங் கார்டு தேவையா என்ற கேட்பது எனக்குத் தெரிகிறது) சந்தனத்திலானது. வெளிநாடு செல்லும்போது மட்டும் உபயோகப்படுத்துவது.
http://i1234.photobucket.com/albums/...ps10a4ac62.jpg
3 ) 25 - 08 - 1988 அன்று அலுவலகத்திற்கு வந்த நடிகர்திலகத்திடம் நாளை எனக்கு பிறந்த நாள் என்று சொன்னபோது, தன்னுடைய புகைப்படத்தில் கையெழுத்திட்டு, வாழ்த்து தெரிவித்து, எனக்கு அளித்த புகைப்படம் இது.
http://i1234.photobucket.com/albums/...pscd1ae38c.jpg
நட்பு கலந்த நன்றியுடன்,