-
Thanks Murali.. Couldn't have said it better.
g94127302/Ravi: To give an example, I just created a thread for discussions on the நான் சுவாசிக்கும் சிவாஜி! series in Vaaramalar:
http://www.mayyam.com/talk/showthread.php?10758
We can use this thread to collect all the series episodes and discuss them.
Hope you see that the information we all want to share, and the discussions we like to have, will be better organized this way. In fact this is the main advantage of hub-like forums than the facebook, twitter timelines. Tks.
-
சிவா சார்,
தீர்ப்பு மற்றும் நீதிபது வசூல் விவரங்கள் அடங்கிய நோட்டிஸ் நன்று. மேலும் இது போன்று உங்கள் வசம் இருந்தால் பிரசுரிக்கவும்.
வினோத் சார்,
1972-ம் ஆண்டு ஆகஸ்ட் நிகழ்வுகள் மற்றும் அக்டோபர் 1,2 மதுரை காந்தி ஜெயந்தி விழா பற்றிய வர்ணனைகளுக்கும் புகைப்படங்களுக்கும் மிக்க நன்றி. நினைவுகள் அந்தக் காலக் கட்டதிற்கு சிறகடிக்கின்றன. அதை பற்றி எழுத முயற்சிக்கிறேன்.
அன்புடன்
-
-
-
-
-
ஐயோ பாவம்...
இடும் பதிவுகளை, எழுதுபவராக இருந்தாலும் சரி, பத்திரிகை வழி பதிவுகளாக இருந்தாலும் சரி....படித்தாலும், பார்த்தாலுமே தெள்ளம் தெளிவாக ஒரு விஷயம் தெரியும் ...எந்த காலத்திலும்...அது நேற்றாக இருந்தாலும், இன்றாக இருந்தாலும், நாளையாக இருந்தாலும் அரியரை பார்த்து காழ்புணர்ச்சி, வயிற்ரேரிச்சல் பொறாமை மற்றும் வெதும்பல் திராவிடர்களுக்கே உரித்தான லக்ஷணம்.
இதிகாசத்தையும், புராண கதைகளையும் சாமர்த்தியம் என்று நினைத்து தனக்கு சாதகமாக உள்ள விஷயத்தை மட்டும் எடுத்துகொள்ளும் இந்த திராவிடர்கள், நடைமுறையில் உள்ள நிகழ்வுகளை பற்றி மறைக்க முனைவது எதனால் ?
பத்திரிகை வாயிலாக வந்த உரையாடலாக இருந்தாலும் சரி...அரசியல் மேடையானாலும் சரி....சிவாஜி அவர்களை பற்றி நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இந்த திராவிட ஆசிரியர்கள் வாய்மொழி தாக்குதலையும் நடத்தி, எழுத்துவழி தாக்குதலையும் நடத்தி, இன்னும் சொல்லபோனால் ஆள்வழி தாக்குதலையும் நடத்திய பாரம்பரியம் திராவிடர்களுக்கு உள்ளது என்ற உண்மையை தமிழகம் அறியும் !
இருந்தாலும் எவ்வளவு அடித்தாலும் தாங்கறான் ...ரொம்ப நல்லவன் என்ற ரீதியில் இவை ஒன்றுமே நடக்காதது போல பதிவிடும் ஒரு சில திராவிடர்களை பார்த்தால், கருணாநிதியை விட கெட்டிக்கார அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று தாராளமாக தெரிந்து கொள்ளலாம். !
நம் கேள்விக்கு என்றுமே சரியான பதில் சொல்ல தெரியாமல் "பரிதாபம், வெதும்புதல், உளைச்சல், பிழிச்சல்" என்று சால்ஜாப்பு வார்த்தைகளை மட்டுமே இடும் வழக்கம் நேற்று இன்று மட்டுமல்ல நாளையும் தொடரும் போல உள்ளது !
என்னசெய்வது ... "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்ற ஒரு பழமொழிதான் ஞாபகத்திற்கு இப்போது வருகிறது ! !
-
சிவாஜி அற்புதமாக தன்னுடைய நடிப்பாற்றல் எந்த பள்ளி வகை பட்டது என்பதை அழகாக உணர்த்தியுள்ளார். கீழ்கண்ட Y .G .M கட்டுரை வரிகள் இதை தெளிவாக்கி P _R ,நான் சொல்ல விரும்பிய பள்ளிகளை தெளிவாக அவர் பார்வையில் விளக்கியுள்ளதுடன் method Acting என்று ஜல்லியடிக்கும் கும்பலுக்கு சவுக்கடியே கொடுத்துள்ளது.
"பாலு மகேந்திராவின் ஊமைக்குயில் படத்திற்காக, பெங்களூரில் ஒரு ஸ்டுடியோவில், நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பக்கத்து செட்டில் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இருப்பதாக சொன்னார்கள். விசாரித்ததில், அவர் செட்டில் இல்லை; ஸ்டுடியோவை சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறார் என்றனர். எடுக்க வேண்டிய காட்சியில், அவர் ரொம்ப களைப்பு அடைந்தவராக இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னை வருத்திக் கொண்டு, ஓடுகிறார் என்று தெரிந்தது.
இது பற்றி, சிவாஜியிடம் நான் ஒரு முறை பேசிய போது, 'யுசுப்பாய் பெரிய நடிகர். அவர் செய்தது அவருக்கு பொருந்தும். என்னைக் கேட்டால், டயர்டாக காட்சியில் இருக்க வேண்டும் என்றால், டயர்டாக நடிக்க வேண்டும். கொலைகாரனாக வரும் போது, இரண்டு கொலை செய்துட்டா, செட்டுக்கு வர முடியும்...' என்றார்."
-
தமிழத்தில் மார்ச் 14 முதல் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்
சென்னை - மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள் - தியாகம்
http://i501.photobucket.com/albums/e...ps3538c803.jpg
கோவை - ராயல் - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா
http://i501.photobucket.com/albums/e...psd1ecd3a5.jpg
திருச்சி - கெய்டி - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா
http://i501.photobucket.com/albums/e...ps70750109.jpg
மதுரை - அலங்கார் - தினசரி 4 காட்சிகள் - வைர நெஞ்சம்
http://i501.photobucket.com/albums/e...psdfb50f4d.jpg
மற்ற ஊர்களின் தகவல் கிடைத்தவுடன் பதிவு செய்யப்படும் ..!
-
அதி விரைவில் நடிகர் திலகத்தின் மற்ற திரைக்காவியங்கள் தமிழகம் முழுதும் வெளியிடபடுகின்றன ! அவைகளில் சில உங்கள் பார்வைக்கு !
அண்ணன் தங்கை பாசத்தின் உச்சம் - பாசமலர் - மீண்டும் ! - முன்பிருந்த குறைகள் நீக்கி புதிய பொலிவுடன் !
http://i501.photobucket.com/albums/e...psa740c127.jpg
பெற்றால்தான் பிள்ளையா ? இது கேள்வி ! படம் அல்ல ! -
இதை உணர்த்தும் விதத்தில் வசூலில் சக்கைபோடு போட்ட நடிகர் திலகம் 2 வேடங்களில் நடித்து - நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா சொல்லுங்கள் என்று கர்ஜித்த "என் மகன்" !
http://i501.photobucket.com/albums/e...psbd4bef2a.jpg
1977 இல் தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைத்த சிவாஜி ப்ரோடக்ஷுன்ஸ் அளித்த அண்ணன் தங்கை பாசத்தின் "கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதயன்றோ" என்ற மற்றொரு பரிமாணம், "அண்ணன் ஒரு கோவில் "
http://i501.photobucket.com/albums/e...pscaedd8a1.jpg
இதை தவிர ....ஸ்டைலிஷ் நடிப்பில் துப்பறியும் இலாகா அதிகாரியாக நடித்து பட்டையை கிளப்பிய EVER GREEN STYLISH " தங்க சுரங்கம்"
https://www.youtube.com/watch?v=AgUzhulHAvk
இன்னும் சில வாரங்களில் இவை அனைத்தும் ...கண்ணிற்கு விருந்து !