டியர் பாலா சார்,
கவிதைக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் பாலா சார்,
கவிதைக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் 'வெற்றிக்கு ஒருவன்' பற்றிய பதிவு very interesting. நாங்கள் கடலூரில் ரசிகர் மன்ற ஷோ ரிலீசன்று காலைக்காட்சி பாடலி தியேட்டரில் ஏக ரகளையோடு இப்படத்தைப் பார்த்ததை நினைவு படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு இருந்த அதே மனநிலைதான் கொஞ்சமும் மாறாமல் அப்படியே எங்களுக்கு இருந்தது. 'கண்ணே கண்மணியே' என்ற பெயரில் பேசும்படம் பத்திரிக்கையில் முதன் முதல் தலைவர் ஸ்ரீப்ரியாவுடன் பயந்தாற்போல் நிற்கும் ஸ்டில் வெளிவந்தது நினைவிருக்கிறது.
தந்தை மேஜருடன் A certificate படம் பார்ப்பது, சாப்பாடு சாப்பிடும்போது 'முட்டையில் முள்ளு' என்று சொல்வது, நீங்கள் குறிப்பிட்டது போல இடைவேளை வரை அவரை மகா கோழையாக சித்தரித்திருந்தது...இவையெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இடைவேளைக்கு பிறகு படம் சூடு பிடித்து கொஞ்சம் தாக்குப் பிடித்ததால் நாங்களும் கொஞ்சம் தாக்குப் பிடித்தோம். எல்லாமே இருந்தும் எதுவும் இல்லாத படமாகப் போய்விட்டது. அதுமட்டுமில்லாமல் 'வெற்றிக்கு ஒருவன்' என்று சொன்னாலே நம் ரசிகர்கள் உட்பட அனைவரும் சற்று முகம் சுளிப்பது போன்ற ஒரு பெயரை இந்தப்படம் பெற்று விட்டது துரதிருஷ்டம் தான். அந்த அளவுக்கு மோசம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று. டைட்டிலில் தலைவர் குங்பூ,கராத்தே பாணியில் கை,கால்களை அசைத்து ஆக்ரோஷமாக ஓடி ஓடி வருவது போன்ற ஆரம்பக் காட்சியில் தியேட்டர் கூரை பித்துக்கொண்டு போனது நிஜம். 'வெற்றிக்கு ஒருவன்' ரிலீஸ் அன்று தமிழ்நாடு முழுவதும் அன்று நம் ரசிகர்களுக்கு இருந்த மனநிலையை உங்களத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக எழுதி உணர்த்த முடியாது. அதற்காக உங்களுக்கு என் சிறப்பான நன்றிகள்.
குறிப்பு: நடிகர்திலகம் திரி என்பதால் வெறும் நிறைகளை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டு ஆடாமல் நம்மிடம் இருக்கும் குறைகளையும் நாம் அனைவரும் அலசுவது சிறந்த நடுநிலைக்கு எடுத்துக்காட்டாகும். இதற்காக நாம் அனைவரும் நிஜமாகவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட நடுநிலையான பதிவுகளை நம் திரியைத் தவிர நான் வேறு எங்கும் பார்த்ததாக நினைவில்லை.
நன்றியுடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
எங்கள் அனைவருடைய உளப்பூர்வமான பாராட்டுக்களை பணிவோடு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறும் பாங்கு உண்மையாகவே தாங்கள் சிறந்த பண்பாளர்,பணிவாளர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. "நான் எதுவும் செய்யவில்லை" என்று நீங்கள் தன்னடக்கத்துடன் கூறினாலும் நீங்கள் இத்திரிக்காக எதுவும் செய்வீர்கள் என்பது நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் பாலா சார்,
அசத்தல் கவிதை. சூப்பர். பாராட்டுக்கள். ஒரு சிறு வேண்டுகோள். அடிக்கடி காட்சி கொடுங்கள். அப்போதுதான் இப்படிப்பட்ட சிறந்த பதிவுகளை நாங்கள் படித்து இன்புற முடியும். நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
கடந்த செப்டம்பர் மாதம் நடிகர் திலகத்திற்கு கடலூரில் சிலை நிறுவ வேண்டும் என்று கடலூர் நகர சிவாஜி மன்றம் சார்பாக கடலூர் நகரசபை துணைத் தலைவர் திரு.தாமரைச்செல்வன் அவர்கள் மூலம் கடலூர் நகரசபை கூட்டத் தீர்மானத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதற்கான தினத்தந்தி செய்தி.
http://i1087.photobucket.com/albums/...IMG_0001-3.jpg http://i1087.photobucket.com/albums/...IMG_0002-2.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'எதிர்பாராதது' அரிய வரலாற்று ஆவணம்.
'எதிர்பாராதது' 58-ஆவது வருடத் துவக்கத்தை முன்னிட்டு 'தினத்தந்தி' நாளிதழில் (22-3-2005) 'வரலாற்றுச் சுவடுகள்' என்ற தொடரில் 'திரைப்பட வரலாறு' (106) என்ற தலைப்பில் நடிகர் திலகம் புகழ் பாடிய தொடரில் வெளியான 'எதிர்பாராதது' படத்தைப் பற்றி வந்த இந்தக் கட்டுரையைப் பதிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் படித்து இன்புற வேண்டுகிறேன்.
http://i1087.photobucket.com/albums/...an31355/01.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-16.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-12.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு வாசுதேவன் சார், பாராட்டுக்கு நன்றி.
'எதிர்பாராதது' படத்தின் படப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சியின் பத்திரிகை வடிவத்தை அப்படியே பெயர்த்துத் தந்தமைக்கு மிக்க நன்றி. 'அடி வாங்கியவனை விட்டுட்டு அடித்தவங்களுக்கு சிகிச்சை' என்று நடிகர்திலகம் சொல்வது, அவருக்குள்ளே இருக்கும் நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்துகிறது.
கடலூர் நகராட்சியின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றபின் நடிகர்திலகத்தின் சிலை அமைப்பு பற்றி பேசப்பட்டதா, சிலையமைப்புக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா?.
அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். தங்கள் ஊர்களில் ஜாதிப்பெயர்களில் அமைந்த சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றி தலைவர்களின் பெயர்களைச்சூட்டும்போது, தவறாமல் முக்கியமான சாலையொன்றுக்கு 'நடிகர்திலகம் சிவாஜி' அவர்களின் பெயரைச்சூட்டுங்கள். இது தமிழர்களின் விருப்பம், வேண்டுகோள்.
அன்புள்ள பம்மலார் சார், பாராட்டுக்கு நன்றி.
படங்களின் பெயர்கள் மாற்றம் பற்றி தாங்கள் குறிப்பிட்ட பட்டியலில் மேலும் சில...
'கந்தன் கருணை'யின் முந்தைய பெயர் 'கந்தலீலா'
'பைத்தியக்காரன்' என்று முதலில் பெயரிடப்பட்ட படம்தான் 'எங்கிருந்தோ வந்தாள்' ஆனது (நன்றி, முரளி சார்)
'எங்க வீட்டு தங்க லட்சுமி' பின்னர் 'அண்ணன் ஒரு கோயில்' என்று கொண்டாடினாள்.
ரிஷிமூலம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல். அது முதலில் 'ரிஷிமூலம்' என்ற பெயரில்தான் மேடை நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. பின்னர் படமாக்கத் துவங்கியபோது 'திசைகள் திரும்பும்' என்று பெயர் சூட்டி படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
இதனிடையே, 'திரிசூலம்' மாபெரும் இமாலய வெற்றி பெற்றதால், தொட்டதற்கெல்லாம் செண்ட்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகில் ஒரு சபலம் யூனிட்டாருக்கு ஏற்பட்டது. ஓசை நயத்தில் 'திரிசூலம்' என்பது போலவே அமைந்த 'ரிஷிமூலம்' என்ற ஒரிஜினல் பெயரையே சூட்டி விடலாம் என்று விரும்பியதால், ரிஷிமூலம், திசைகள் திரும்புமாகி மீண்டும் ரிஷிமூலமாகவே மாறி வெளியானது.
பெயர் மாற்றங்களில் பல உண்டு. அதில் ஒன்று கொடுத்து வைத்த மகராஜா பின்னர் உத்தமனானது என்று நினைக்கிறேன்.