Interesting Video about Chennai Flood (With Parasakthi Dialogue)
https://youtu.be/H8x0JxpVCCA
Printable View
Interesting Video about Chennai Flood (With Parasakthi Dialogue)
https://youtu.be/H8x0JxpVCCA
From the Chevalier Sivaji Ganesan Felicitation Souvenir
நடிகர்திதிலகத்தின் திரைப்பட விளம்பரங்கள்
காணொளி...
Sivaji sadanaigal: http://youtu.be/ukKnbN-Ax7o
http://i501.photobucket.com/albums/e...psyjmnhyor.jpg
Thanks to my dear friend who shared this 5oth Day advertisement.
RKS
தரிசனம்-2.
-------------
தாவணிக் கனவுகள்.
----------------------
தொடர்கிறது...
---------------
இந்தக் காட்சியைப் பார்க்கையில் எனக்கு சந்தோஷமாயிருந்தது.
தண்ணீரில்லாத வாளியின்
பிடியைப் பிடித்து நெஞ்சுக்கு
நேரே வைத்துக் கொண்டு
தண்ணீர் பிடிக்கப் போகும்
நடிகர் திலகம், அங்கே
குழாயடியில் நிற்கும் பாக்யராஜைப் பார்த்து விட்டு
எரிச்சலாகச் சொல்வார்..
"யார் முகத்தில முழிக்கக்
கூடாதுன்னு நினைச்சேனோ..
காலைலே அவன்
தரிசனமாவே இருக்கு."
இந்தத் தொடருக்கு நான்
வைத்திருக்கிற பெயர், "தரிசனம்". 'தரிசனம்' என்கிற
வார்த்தையை நடிகர் திலகம்
உச்சரிக்கக் கேட்ட சந்தோஷம்.
------------------
நெஞ்சுக்கு நேரே வாளியைப்
பிடித்துக் கொண்டு, கம்பீரமாக..
அதே சமயம் வேண்டாதவரை
நோக்கிச் செல்கிற தயக்கத்துடன் ஒரு நடை.
வழியெல்லாம் சுப்ரமணியத்தின் தங்கைகள்
சொல்லும் "குட் மார்னிங்" களை பெருமையோடு ஏற்றல்.
சுப்பிரமணியத்தின் குட்டித்
தங்கை அமர்ந்து குளித்துக்
கொண்டிருக்கும், சுப்பிரமணியம் நின்று கொண்டிருக்கும் குழாயடியை
அடைந்ததும் காட்டும் பெரும்
தயக்கம்.
சுப்ரமணியம் சொல்லும் "வெரிகுட்மார்னிங் கேப்டன்"
மரியாதையை ஏற்றுக் கொள்ளப் பிரியமற்ற வெறுப்பு.
"லட்சுமி. எனக்கு ஒரு பக்கெட்
தண்ணி பிடிச்சுட்டுப் போகணும். அவனை அந்தப்
பக்கம் போகச் சொல்லு."
முகம் பார்த்துப் பேச விருப்பமற்ற வெறுப்பு,
வார்த்தைகளில்.
வாலிப வயசின் குறும்பு மனம்
சீண்டி விளையாடாதிருக்குமா?
சுப்ரமணியம் ஆரம்பித்து
விட்டான். "என்ன.. மிலிட்டரி
காலங்காத்தாலே சுத்தி வளைக்குது?..நான்னா ஒரு பயம் இருக்கும்."
சுப்ரமணி இப்படிச் சொன்னதும்
கேப்டனிமிருந்து வெளிப்படும்
ஒரு சூரியப் பார்வையைச்
சந்திக்கப் பயந்து, சுப்ரமணி
"ஜகா" வாங்குகிறான்.
"இல்ல.. ஒரு அன்பு கலந்த
மரியாதை இருக்கும். வாட்
ஹேப்பண்ட் டுடே? காலைலே
காப்பி குடுக்கலையா?"
அந்தக் குட்டிப் பெண்ணும்
அண்ணனுக்குச் சற்றும்
இளைத்தவளில்லை. "காலைல
அஞ்சரை மணிக்கு நானே ஒரு
கப் கொண்டு போய்க் குடுத்தேன். அப்புறம் ஏழரை
மணிக்கு அவரே ஒரு கப்
கேட்டு வாங்கிக்கிட்டாரு."
கேப்டனுக்கு பொறுமை இழப்பு
அதிகமாகிறது. " லட்சுமி, நான்
யாரு.. என்ன சமாச்சாரம்னு
தெரியாமப் பேசிக்கிட்டிருக்கான்.. சொல்லி
வை."
சுப்ரமணியம், மேலும் சீண்டுகிறான்."ஆமா.. இவரைப்
பத்தித் தெரியாதா? இந்த
நாட்டில உள்ள முப்பத்தாறு
கோடி ஜனங்களுக்கும் இவருன்னா அத்துபடி. போன
வாரங் கூட சிமெண்ட் கம்பெனி
முதலாளி இவரு வண்டவாளத்தப் புட்டுப் புட்டு
வச்சாரு. என்னிக்கோ ஒரு
நாள் மிலிட்டரில சாதாரண
சிப்பாய் வேலை பாத்துட்டு,
கேப்டன்னு ஊருக்குள்ள
பொய்யைச் சொல்லிக்கிட்டு
குட்மார்னிங் வாங்கிக்கிட்டிருக்காரு."
இதைக் கேட்டதும்.. பொய்க்
கோபம் நிஜக் கோபமாகிறது.
கேப்டன் சிதம்பரமாக,
"அடி..ங்.."என்று வாளியைத்
தூக்கிக் கொண்டு கோபமாய்
சுப்ரமணியத்தை அடிக்கப்
போகும் நடிப்பை வெகுவாக
ரசிக்கும் நமக்கும் அது போன்ற
ஒரு வருத்தங் கலந்த கோபம்..
சத்தியமான ஒரு விஷயம்
பரிகசிக்கப்படுவது கண்டு
விம்முகிற நம் இதயங்களில்
இருந்து கசிகிற வேதனை மிகுந்த கோபம்...
வரத்தான் செய்கிறது.
"சித்தப்பா..சித்தப்பா" என்று
வசந்த மாளிகையில் சிறுமியாய் வந்த ஸ்ரீதேவியோடு " வார்த்தை
நானடி" என்று காதல் பாடுகிறார்...
அம்பிகாவோடு ஆடுகிறார்...
அனுராதாவைப் பார்த்து அசடு
வழிகிறார்...
வயதுக்குப் பொருத்தமில்லாமல்
நடிக்கிறார்...
இவ்வாறெல்லாம் நடிகர் திலகத்தை இகழ்ந்தவர்கள்
உலவிய எண்பதுகளில்...
ஒரு ஜோடியில்லாமல்...
ஒரு வரி பாடலில்லாமல்..
திணிக்கப்பட்ட சண்டைகளில்லாமல்...
படம் முழுதும் தானே இருக்க
வேண்டுமென்கிற பிடிவாதம்
இல்லாமல்...
பல தலைமுறைகள் தாண்டி
வந்த திரைக்கலைஞரோடு
இணைவதில் ஒரு துளி
தயக்கமில்லாமல்...
கர்வமில்லாமல்...
நான் முன்னமே சொன்னது
போல், கௌரவ வேடந்தானே
என்று ஒப்பேற்றாமல், வேடத்திற்கு கௌரவமாய்
தன் நடிப்பைத் தந்த "தாவணிக்
கனவுகள்" பார்த்த பிறகும்
மாறாதவர்கள் மீது பாய்கிற
கோபம்.
(...தொடரும்...)
உலக உத்தமன்
சிவாஜியின் மறுக்க முடியாத சாதனைகளில் ஒன்று.
ஓடிய திரைப்படங்களின் நாட்கணக்கும் வசூல் கணக்கும்
உன் நடிப்புக்கு ஈடாகுமா? http://i1065.photobucket.com/albums/...psuqdhzdqx.jpg
Fullpage
ஏங்க வைக்கும் விளம்பரம்
இந்தப்படமும் திரைக்கு வந்திருந்தால்...
அது உந்தன் சாதனையின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாகவல்லவா இடம் பெற்றிருக்கும். http://i1065.photobucket.com/albums/...pssd9ydehs.jpg
உன்னைப்போல தெய்வம் கூட இருக்காது அன்போடு http://i1065.photobucket.com/albums/...psejzgdkbt.jpg
இன்று இரவு 9மணி அளவில் பம்மலார் என்னை தொடர்பு கொண்டுஆவணங்களின் பதிவுகளுக்கு மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்தார்.அவர் மீண்டும் திரிக்கு வந்து பதிவிட வேண்டும் என்று எல்லோருடைய சார்பாகவும் கேட்டுக் கொண்டேன். அவரும் வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
உண்மையான அன்பையும் பாராட்டையும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் போல் வேறு யாரும் வெளிப்படுத்தமுடியாது.
அவருக்காக இந்த அன்புப்பரிசு.
உங்களின் சார்பாக.,.
http://i1065.photobucket.com/albums/...psocjosu3r.jpg
தினந்தந்தி
முழுப்பக்கம்
Dinathanthi
Fullpage
அதர்மத்தை ஏற்காத தர்மராஜா http://i1065.photobucket.com/albums/...ps7f7gnwf1.jpg