http://i50.tinypic.com/sykqy9.jpg
Printable View
courtesy - mahadevan subramanaiam- net
உற்சாகம் எனும் உணர்வுக்கு உதாரணமாக வரும் பாடல் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் திரைத் துறையிலும் அரசியலிலும் நீங்கா இடமும் மங்கா புகழும் கொண்ட தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்". இந்தப் படத்தில் தான் அவரது அரசியல் வாரிசு அடையாளம் காணப் பட்டது. செல்வி.ஜெயலலிதாவும் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆரும் இணைந்து தோன்றும் இப்பாடல் சோர்ந்த போதெல்லாம் நெஞ்சை உயிர்ப்பிக்கும். திரு. எம்.எஸ்.வி அவர்களின் மெல்லிசையில், டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் வந்த களிப் பாடல் இது.
அந்தக் கூட்டம் அடிமைப் பட்டுக் கிடந்தது. அந்தக் கூட்டம் உய்வு பெற வந்த தலைவன் அவன். அவன் கண்டெடுத்த தலைவி அவள். அந்தத் தேசத்தை அவர்கள் மீட்டெடுக்கப் போகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.
"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்"
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.
சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.
எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!
courtesy-abhidheen-net
Dear masanam
thuklak cartoon posted here just for how makkal thilagam songs utilized by politicians.
No intention .
1980 - tuklak published special articles with front page cover of makkal thilagam .
We always considered makkal thilagam mgr cinema only .
Dear Vinod Sir
I appreciate your real intention of having posted the thuglak cartoon here.
However, thuglak often made negative criticisms about Makkal Thilagam during his life time.
My heartfelt thanks for your tremendous contributions in making this thread very active.
வினோத் சார்
மக்கள் திலகம் திரி பல்வேறு புது தகவல்களுடன் அருமையான பதிவுகளுடன் சிறப்பாக செல்கின்றது .
மக்கள் திலகம் உயிரோடு இருந்தவரை அவரை பற்றி குறை கூறியவர்கள் எல்லாம் இன்று அவரது புகழ் பாடுவது பற்றி என்ன சொல்வது ?
துக்ளக் ஆசிரியர் தனது பத்திரிகையில் வாலியின் கட்டுரை [மக்கள் திலகம் பற்றிய கட்டுரை ]வெளியானது .
கல்கி இதழில் - 43 வாரங்கள் தொடர்ந்து பல்வேறு கலை - அரசியல் சம்பந்த பட்ட பிரமுகர்கள் மக்கள் திலகத்தை பற்றி கட்டுரை வெளியானது .
பல அரசியல் இயக்கங்கள் அவரது பாடல்களையும்
படத்தையும் போட்டு விளம்பரம் செய்கிறார்கள் .
அரசியல் - சினிமா இரண்டிலும் நமது மக்கள் திலகம் பெயரும் -படமும் இல்லாத நிலை தற்போது உள்ளது .
அன்புடன்
இராமமூர்த்தி