Ganpat,
All Tamils should feel ashamed and guilty about the way we treated greats like mahakavi Barathi and Nadigarthilagam Sivaji.
Printable View
Ganpat,
All Tamils should feel ashamed and guilty about the way we treated greats like mahakavi Barathi and Nadigarthilagam Sivaji.
கார்த்திக் சார்,
என்னை வைச்சு காமெடி பண்ணியிருக்கீங்க. சாரதா மேடமும் ,முரளி சாரும் எழுதி கொடி நாட்டிய படத்துக்கு என்னையும் எழுத சொல்லி. தில்லானா மோகனாம்பாள் நாட்டியமாடிய பின் ஜில் ஜில் ரமாமணி நான் எதற்கு?மீள் பதிவுகளுக்கு நன்றி உங்களுக்கும் ,ராகவேந்தருக்கும்.
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
http://www.youtube.com/watch?v=iRJa6IydKRM
அன்புள்ள கோபால் சார்,
ஒவ்வொரு படத்தைப்பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அந்த வகையில்தான் 'தர்மம் எங்கே' படம் பற்றிய தங்கள் அலசலை தங்கள் கோணத்தில் பதிவிட வேண்டினேன். அதுவும் குறிப்பாக '1972-ம் ஆண்டின் படங்களைப்பற்றி எழுதப்போகிறேன்' என்று நீங்கள் அறிவித்ததால், அது வழக்கம்போல ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை என்பதோடு நின்று விடக்கூடாது. எனக்குப்பிடித்த, நமக்குப்பிடித்த, நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்குப் பிடித்த "தர்மம் எங்கே" விடுபட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்திலேயே தங்களை உசுப்பி விட்டேன். நீங்களும் அருமையாக எழுதி விட்டீர்கள். சாரதா அவர்களும், முரளி சார் அவர்களும் குறிப்பிடாத பல விஷயங்கள் தங்கள் பதிவில் இடம்பெற்றுள்ளன.
தில்லானாவையும், வசந்த மாளிகையையும் போற்றி எழுத இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். "தர்மம் எங்கே" யைக் கண்டுகொள்ள நம்மை விட்டால் வேறு யார்?.
'தங்க நட்சத்திரம்' சதீஷ் அவர்களே,
தாங்கள் பதித்துள்ள தர்மம் எங்கே நிழற்படங்கள் மிக மிக அருமையாக உள்ளன. நன்றிகள்...
தவப்புதல்வன்- 1972
முக்தா ஸ்ரீனிவாசன் ,சிவாஜியுடன் "அந்த நாள்" முதல் பணி புரிபவர். சில சிறு வெற்றி படங்கள் எடுத்த பிறகு நடிகர்திலகத்துடன் இணைந்து நிறைகுடம்,அருணோதயம் முதலிய வெற்றிகள் கண்டு தவப்புதல்வனை மூன்றாவது தொடர் வெற்றி படமாக வெளியிட்டார்.அவர் எல்லா படங்களுக்கும் அவர் இயக்குனர். அவர் அண்ணன் ராமசாமி பெயரில் தயாரிக்க படும்.
முதலில் சில வருடங்கள் உதவி இயக்குனாராக பணி புரிந்து ,முழு இயக்குனராக முதலாளி என்ற சூப்பர் ஹிட் படத்துடன் 57 இல் படத்துறையில் நுழைந்தவர்.ஆரம்பத்தில் எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஜெமினி உடன் பணிபுரிந்தாலும் பின்னாட்களில் இவர்களை உபயோகித்ததில்லை. 69 முதல் சிவாஜியுடன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இணைந்தார்.
அவர் படங்களுக்கென்று தனி சூத்திரம் உண்டு.
1) கதாநாயகன் அல்லது நாயகி ஏதாவது உடற்குறை அல்லது மன பிறழ்வு கொண்டிருப்பார்கள்.
2)இவர்கள் குறைகளால் ஏதாவது மோசமான விளைவு நேரும்.
3)அந்த விளைவுக்கோ செயலுக்கோ அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
4)பழிதுடைத்து, அல்லது குறை தீரும் வரை அவர்களை வில்லனோ வில்லியோ ஆட்டி படைப்பார்கள்.
5)கதாநாயகன் அதை மற்றவரிடமிருந்து மறைத்து உண்மை வெளிக்கொண்டு வர முயல்வார்.
6)நகைச்சுவை நடிகர்களுக்கென தனி track ஓடும்.
7)ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகர்கள் ,கதாநாயகனின் பிரச்சினையில் இணைந்து தீர்க்க பார்க்கும் போது, பிரச்சினையில் வேடிக்கையான திருப்பங்கள் சேர்ந்து படத்தை நகர்த்தும்.
8)பெரும்பாலும் முடிவு சுபமாகவே இருக்கும்.
9)நகைச்சுவை முக்கியத்துவம் பெற்றாலும் ,மனதை வருடும் காட்சிகளும் இருக்கும்.
10)நாகேஷ்,சோ,மனோரமா தவறாமல்.
---இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,டி.கே.ராமமூர்த்தி,குமார் ,கே.வீ.மகாதேவன் என்று மாறி மாறி விஸ்வநாதனிடம் நிலை கொண்டது.
---வித்யா movies என்ற போர்வையில் ரவி,ஜெய்,முத்துராமன் என்றும் தொடர்ந்து படங்கள் எடுத்தார்.
---நடிகர்திலகத்தை வைத்து 9 படங்கள் இயக்கி தயாரித்தார்.
---பலவேறு பட்ட கதாசிரியர்களுடன் பணி புரிந்துள்ளார். குறிப்பிட தக்கவர்கள்-கே.பாலசந்தர்,மதுரை திருமாறன்,மகேந்திரன்,சோ,தூயவன், கலைஞானம்,ஏ.எஸ்.பிரகாசம்,விசு ஆகியோர்.
---மிக குறைந்த செலவில் படமெடுத்து பெரும் லாபம் கண்டவர்.
---பாலாஜி,திருலோகச்சந்தர்,மாதவன் வரிசையில்,நடிகர்திலகத்தின் loyalist ஆக இருந்து மிக பெரும் பலன் கண்டு ,லாபத்துடன் மன அமைதி கொண்டு மதிப்புடன் வாழ்ந்தவர்.
---மெகா ஹிட் படங்கள் தவப்புதல்வன்,அந்தமான் காதலி,கீழ் வானம் சிவக்கும். ஹிட் படங்கள் நிறைகுடம்,அருணோதயம்,இமயம்,பரீட்சைக்கு நேரமாச்சு. சுமார் வரிசையில் அன்பை தேடி,இரு மேதைகள்.
---பழுத்த காங்கிரஸ் தேசியவாதி.
---To be continued.
டியர் கண்பத் சார்,
தங்களின் பாராட்டிற்கு நன்றி. தினமலரில் வெளிவந்துள்ள கடிதம், ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் உள்ளத்திலும் கொதித்துகொண்டிருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
எழுதிய அன்பு ரசிகருக்கும், வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கும், பதிவிட்ட தங்களுக்கும் நன்றி.
டியர் கோல்டு ஸ்டார் சதீஷ் சார்,
தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றி.
தர்மம் எங்கே புகைப்படப்பதிவுகள் அருமை.
டியர் கோபால் சார்,
"தவப்புதல்வன்" முன்னுரைத் துவக்கம் அருமை.
Nothing to offend...i just wanted to register my view.
In his films, Mr. MGR, considers only his mother & thangachi as " thaaikulam". If you watch "Kadaloram vangiya kaatru" , Manjula, precariously wears a small piece of cloth which is actually meant to be a saree and that little piece of cloth also flies in air as soon as the song begins....but the gentleman's hat however remains intact on his head.