வணக்கம் வாசு ஜி
நலம் தானே
Printable View
வணக்கம் வாசு ஜி
நலம் தானே
கிரேட் வாசு/ராகவேந்தர்/ராஜேஷ்/ராஜ்ராஜ்/ரவி sirs
ராகவேந்தர் அவர்களின் மீண்டும் பொங்கும் பூம்புனல் தொடர்ந்து ஒலிக்கட்டும் .
ரவி அவர்களின் கர்ணன் கட்டுரை பல தகவல்கள் அடங்கியது .
ராஜேஷ் அவர்களின் தேவாவின் தேன் முத்துகள் ரோஜாவை கிள்ளாதே பாடல்கள் எங்கள் உள்ளதை கிள்ளியது . ரவி சார் கேட்பது போல் தான் கேட்க தோன்றுகிறது 'எங்கிருந்து பிடிக்கிறீர்கள் '
ராஜ் ராஜ் சார் அவர்களின் ஜுகல் பந்தி பல பழைய அபூர்வ பாடலகளையும் பிரபல பாடல்களையும் கலந்து கலை கட்டுகிறது .
நட்புடன்
வாங்க கிருஷ்ணா ஜி
நலம் தானே
தேனிசைத்தென்றலின் முத்துக்கள்-21
மூன்றாவது கண் - மணிவண்ணனின் நல்ல த்ரில்லர் படம். மோனிஷா அழகோ அழகு.. நிழல்கள் ரவி வில்லனாக செய்திருப்பார்.
இதில் தேவாவின் பின்னணி இசை அமர்க்களமாக இருக்கும்.
இதில் ஒரு பாடல்
மலேசியாவாசுதேவனின் குரலில் மலையாளம் மலையாளம்
பாடல் தொடங்குவது 2:17
https://www.youtube.com/watch?v=zeGatEiENSg
http://tamil.thehindu.com/multimedia...s_2215298f.jpg
http://upload.wikimedia.org/wikipedi.../87/Ranjan.jpg
சோதனை மிகும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, சிறு வயதில் தங்கள் அன்னை அல்லது ஆசான் கற்பித்த ஒரு பாடல் மூலமோ, வசனம் மூலமோ திரைக் கதாநாயகர்கள் மீண்டும் எழுச்சி பெறுவதாகக் காட்டப்படுவது திரை மரபு. அம்மாதிரிப் பாடல்கள் திரைக்கதையில் திருப்பத்தை ஏற்படுத்துவதுடன் மற்றுமொரு நோக்கத்தையும் நிறைவு செய்கின்றன.
அவை இடம்பெற்ற படங்கள் வெளிவந்து மறக்கப்பட்ட வெகு காலத்திற்கு பிறகும் கூட அவ்வித எழுச்சிப் பாடல்களின் வரிகளைக் கேட்கும் மக்கள் புது உற்சாகம் அடைவார்கள். அவை வெளிப்படுத்தும் உணர்வே, இதன் அடிப்படைக் காரணம். இம்மாதிரியான தமிழ்-இந்திப் பாடல்களைப் பார்க்கலாம். வழக்கப்படி முதலில் இந்திப் பாட்டு.
சிறந்த கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றுவதுடன் அவற்றுக்கு மனம் கவரும் இசையமைக்கும் திறனும் உடையவர் ரவீந்தர் ஜெயின். அவர் இயற்றி இசையமைத்த இப்பாடல் இடம்பெற்ற படம் ஃபக்கீரா. சசிகபூர், சப்னா ஆஸ்மி, மற்றும் டேனி ஆகியோர் நடித்திருந்தனர்.
அன்னை பாடுவதாகவும், சிறு வயதில் ஒன்றாக இருந்த சகோதரர்கள் பாடுவதாகவும், பின்பு ஒருவரை ஒருவர் அறியாத வண்ணம் பிரிந்துவிட்ட அவர்களில் ஒருவர் பாடுவதாகவும் ஆகமொத்தம் படத்தின் கதைப்போக்கில் மூன்று தருணங்களில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
பாடியவர்கள் லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார், மஹேந்திர கபூர் .
பாட்டு:
ஓ, சுன்கே தேரி புக்கார்,
சங்க் சல்னே கோ கோயி ஹோ, நாஹோ தய்யார்
ஹிம்மத் நா ஹார், சல் சலாச்சல்,
அகேலா சல் சலாச்சல்
ஃபக்கிரா சல் சலாசல் அகேலா சல்
நன்னே நன்னே பாவ் ஹை தேரி
சோட்டி சோட்டி பாஹே ஹை
ஊச்சி ஊச்சி மஞ்சில் தேரி
லம்பி லம்பி ராஹே ஹை
பஹ்லே கிஸ்மத் கி மார்
ஜித்னா தப்தா ஹை சோனா
உத்னா ஆத்தா ஹை நிக்கர்
ஓ, சுன்கே தேரி புக்கார்...
இதன் பொருள்:
உன் அழைப்பை ஏற்று உன்னுடன் செல்ல
எவரும் முன்வந்தாலும் வராவிட்டாலும்
தைரியத்தை இழக்காமல் தனியாகச் செல்
சென்றுகொண்டே இரு ஃபக்கீரா, செல்
உன் கால்கள் (அடிகள்) மெலிதானவை
உன் துணை (உதவி) சிறிது
(ஆனால்) உன் இலக்கு மிக உயரமானது
உன் பாதை நீண்ட நெடியது
முதலில் விதியின் விளையாட்டு
எனினும் கலங்காதே
தங்கம் எந்த அளவு அடித்து நீட்டப்படுமோ
அந்த அளவு அது பொலிவடையும்
தைரியத்தை இழக்காமல் தனியாகச் செல்
சூரியன், சந்திரன், நட்சத்திரம், எரிமலை
அனைத்திற்கும் அதன் அதன் சிரிப்பு உண்டு
எதிலிருந்து எவ்வளவு நீர் மேகமாக ஆகின்றதோ
அத்தனை நேரம் மழை பெய்கிறது
மனிதா, உன் சக்தி ஈடு இணையற்றது
நீ கங்கையை பூமியில்
இறக்கிக் கொண்டுவந்தவன்
தைரியத்தை இழக்காமல் தனியாகச் செல்
உன் அழைப்பை ஏற்று உன்னுடன் செல்ல
எவரும் முன்வந்தாலும் வராவிட்டாலும்
சென்றுகொண்டே இரு ஃபக்கீரா, செல்.
1976-ல் வெளியான இப்படப் பாடலின் அதே உணர்வு, 1957-ல் வெளிவந்த நீலமலைத் திருடன் என்ற தமிழ்ப் படப் பாடலில், (நிஜமாகவே நன்றாகக் குதிரை ஓட்டத் தெரிந்த கதாநாயகன் ரஞ்சன் பாடுவதாக) மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. ரஞ்சன்-அஞ்சலிதேவி நடித்து கே.வி. மகாதேவன் இசையில் அமைந்த இப்பாடலின் ஆசிரியர் மருதகாசி.
சுவையான விஷயம் என்னவென்றால் இந்தியில் மத்வாலா என்ற பெயரில் இது மொழியாக்கம் செய்யப்பட்டது. அதிலும் ரஞ்சன்-அஞ்சலிதேவியே நடித்ததுடன், மருதகாசியின் இப்பாடலும் ஹர்கோவிந்த் என்பவரால் வரிக்கு வரி மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆனால் நாம் கண்ட ஃபக்கிரா படப் பாடல் ஏற்படுத்திய பாட்டின் உணர்வை அது அளிக்கவில்லை.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகே அந்தத் தமிழ்க் கவி வெளிப்படுத்திய எழுச்சி உணர்வை ஒரு இந்திக் கவி அளிக்க முடிந்தது.
இனி தமிழ்ப் பாடல்:
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே உன்னை
இடற வைக்கும் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வெய்யடா நீ
அஞ்சாமல் கடமையில் கண் வெய்யடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
குள்ள நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் –நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
அவற்றை
எமனுலகுக்கு அனுப்பிவைக்கத் தயங்காதேடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா!
மேலே உள்ள கட்டுரை தமிழ் ஹிந்து நாள் இதழில் வெளி வந்த ஒன்று. ஆனால் ரஞ்சன் படத்திற்கு பதிலாக திரு எம் கே ராதா படத்தை பிரிண்ட் செய்து விட்டார்கள் .
http://www.youtube.com/watch?v=5f8Gq9NHkfE
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 22)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
http://www.padangal.com/uploads/movi...68c4424088.jpg
இன்றைய தொடரில் 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' படத்தின் பாடல்கள் பார்க்கலாம்.
http://i.ytimg.com/vi/M-Ze8lwmsTU/hqdefault.jpg
'பத்ரகாளி' திரைப்படத்தின் மெகா ஹிட் பாடலான 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' பாடலின் வரியை டைட்டிலாக வைத்தால் படம் மெகா ஹிட்டாகும் என்று நினைத்து டைட்டில் வைத்து விட்டார்கள் போல.:)
http://2.bp.blogspot.com/-KVQmzyV-Vt...s400/raaja.PNG
படம் ஹிட்டோ இல்லையோ ராஜா தயவால் சில பாடல்கள் ஹிட். மாதம்பட்டி எம்.சிவக்குமார் வழங்க விவேகானந்தா பிக்சர்ஸ் தயாரித்த படம் இது.
சிவக்குமார், ஜெயகணேஷ், (ஜெயகணேஷ், ஹெரான் ராமசாமி, சத்யராஜ் வில்லன்கள் குரூப்) சுருளி, சுமித்ரா, சௌகார் ஜானகி, சுப்பையா, மேஜர், சுருளி, சத்யராஜ், கோவை சரளா, திருப்பூர் மணி, மனோரமா, சத்யப்ரியா, ஜெயமாலினி நடித்த இப்படத்திற்கு கண்ணதாசன், புலமைப் பித்தன் பாடல்கள் இயற்றி இருந்தனர். பாரதிதாசன் பாடலும் உண்டு. வெங்கட் ஒளிப்பதிவு செய்த இப்படத்தை தயாரித்தவர் திருப்பூர் மணி. கதை வசனம் டைரக்ஷன் என்.வெங்கடேஷ்.
1.சுமித்ரா சுசீலா அம்மாவின் குரலில் பாடும் நல்ல பாடல். அமைதியாகப் போகும். சுமித்ராவுக்கு இசையரசியின் குரல் ரொம்பப் பொருத்தம். சிவக்குமார் வழக்கம் போல ஒரே பாணியில். கண்ணதாசன் இயற்றிய பாடல்.
'மோக சங்கீதம்
நிலவே நிலவே
அதைக் கேட்க வந்தாயோ'
https://www.youtube.com/watch?v=8iqB...Tyi69Ix4ZpFmHA
2. இரண்டாவது செம ஹிட்டடித்த பாடல்.
பாலாவும் சுசீலாவும் பின்னி எடுத்து நம் உள்ளங்கள் அனைத்தையும் கொள்ளை அடித்த பாடல். ராஜாவின் இன்னொரு விஸ்வரூபம். வானொலிகளில் போடு போடுவென்று போட்ட பாடல்.
http://i.ytimg.com/vi/RqHueAMlB-s/hqdefault.jpg
'மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தானையை'
கண்ணதாசனின் அற்புதமான வரிகள். சிவக்குமார், சுமித்ரா ஜோடிப் பொருத்தம் அம்சம்.
https://www.youtube.com/watch?v=tQAJLVLEaWM&feature=player_detailpage
3. 'கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்'
வாணி ஜெயராம் பாடிய அற்புத பாடல். எனக்கென்னவோ இந்தப் பாடல்தான் மிகவும் பிடிக்கும். இளையராஜா இசையமைத்த
'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் வாணி பாடும்,
'ஒரே நாள்... உன்னை நான்'
பாடல் போலவும்,
'மாங்குடி மைனர்' படத்தில் சந்திர போஸ் இசையில் இதே வாணி பாடிய,
'கண்ணன் எங்கே ராதை அங்கே'
பாடலையும் ஒத்திருக்கும்.
வாணி மிக அழகாகப் பாடியிருப்பார். இளையராஜாவின் டியூன் அற்புதமாக இருக்கும். புலமைப் பித்தன் இயற்றிய பாடல் இது.
நான்கு வரி கானங்கள்.
'வயற்றில் சுமந்த மகன் வாழ்க்கையிலும் சுமையானான் என்று இளையராஜா 'சிதம்பரம்' ஜெயராமன் போல சோகப் பின்னணியில் பாடும் 4 வரிப் பாடலும் உண்டு.
'காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்... கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்' என்ற பாரதிதாசனின் சில வரிகளை பாலா பாடியிருப்பார்.
http://play.raaga.com/tamil/song/alb...umantha-267191
கிருஷ்ணா!
சூப்பர்.
குடும்பப் பாட்டு இல்லை குருநாதர் பாட்டு இல்லை ஆசான் பாட்டு.
'ஃபகீரா' படம் 1976 ஆம் ஆண்டு வந்தது. இப்போது நீங்கள் பார்க்கப் போகும் பாடல் மூன்று குழந்தைகளுடன் தாய் பாடும் பாடல். ஹேமலதா பாடியது.
https://www.youtube.com/watch?v=_L9QtJcrkNI&feature=player_detailpage
இதே பாடலை மகேந்திர கபூர் குரலில் டேனி சில வரிகள் பாடுவார்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MT0iuBeOSnE
'Disco dancer' படத்தில் ராஜேஷ் கண்ணா மிதுன் சிறுவனோடு ஆடிப் பாடும் பாட்டு. பிரிந்த பின்னால் தகப்பன் மகன் மீண்டும் ஒன்று சேர.
'Goron Ki Na Kalon Ki Duniya Hai Dilwalon Ki'
சுரேஷ் வாட்கர் பாடியது. ராஜேஷின் சூப்பர் ஸ்டைல் பிளஸ் பப்பிலஹரி அமர்க்களம்.
அருமையான பாடல்.
தமிழில் 'பாடும் வானம்பாடி' யில் தகப்பன் நாகேஷ் மைந்தன் ஆனந்த்பாபுவுக்கு கற்றுக் கொடுக்க, அப்படியே 'வாழும் வரை போராடு' இந்தி டியூன் காப்பியிலேயே.
https://www.youtube.com/watch?v=aXE5kVqBZn8&feature=player_detailpage
குதிரை நாயகர்கள்
//சோதனை மிகும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, சிறு வயதில் தங்கள் அன்னை அல்லது ஆசான் கற்பித்த ஒரு பாடல் மூலமோ, வசனம் மூலமோ திரைக் கதாநாயகர்கள் மீண்டும் எழுச்சி பெறுவதாகக் காட்டப்படுவது திரை மரபு. அம்மாதிரிப் பாடல்கள் திரைக்கதையில் திருப்பத்தை ஏற்படுத்துவதுடன் மற்றுமொரு நோக்கத்தையும் நிறைவு செய்கின்றன''//
எங்காவது ஊட்டி, ஏற்காடு மாதிரி தேயிலைத் தோட்டங்கள் இருக்கும் பகுதியில் கதாநாயகனை குதிரையில் உட்கார வைத்து விட வேண்டியது. அப்படியே வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதையில் நாயகன் கௌபாய் வேட்டைக்காரன் டைப்பில் தொப்பி அணிந்து, இடுப்பில் கன் பெல்ட் கட்டி, தத்துவம் பொழிந்து, வீணர்களை ஒடுக்க வீராவேசமாக பாடியபடி குதிரை ஓட்டுவான். பெரும்பாலும் பின்னால் திரையில் மலைக் காட்சிகள் ஓடும். தேவர் பெரும்பாலும் தயாரிப்பாளாராய் இருப்பார். படம் பார்ப்பவன் அப்படியே டென்ஷன் ஆகி விடுவான். அவனும் மனக் குதிரையில் பறப்பான்.
அப்படி ஒரு பாட்டு. 'நேர் வழி' திரைப்படத்தில் மக்கள் கலைஞர் பேக் புரஜெக்ஷன் திரிக்கு முன் அமர்ந்து வெறும் குதிரையை ஓட்டுவார். பாடகர் திலகம் உச்சஸ்தாயியில் பாடலை வீறு கொண்டு முடிப்பார். கைத்தட்டல், விசில் கிழியும். அதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். இப்போது குதிரை திரையில் காட்டினாலே புளூ கிராஸ் காரர்கள் வந்துடுவாங்க.:) அப்புறம் எங்க குதிரையில் அமர்ந்து பாடல் பாடுவது?
https://www.youtube.com/watch?v=KjDeQY0Oduc&feature=player_detailpage
இதோ ரஜினி கூட குதிரையில் வந்து 'நான் போட்ட சவால்' என்று சவால் விட்டபடி 'நெஞ்சே உன் ஆசை என்ன?.. நீ நினைத்தால் ஆகாததென்ன?' வீரப் பாட்டை டி.எல்.மகராஜன் குரலில் பாடி மலை உலா வருகிறாரே.
இதெல்லாம் powerfull பாடல்கள், ரசிகர் வங்கிப் பாடல்கள் ஓட்டு வங்கி மாதிரி.:)
https://www.youtube.com/watch?v=liomCdomyD0&feature=player_detailpage
குதிரை நாயகர்கள்
'காதல் மன்னன்' ஜெமினி குதிரையில் சென்று வீரப் பாட்டெல்லாம் பாட மாட்டார். அதிலும் லவ்ஸ் பாடல்தான் பாடுவார். :)
'பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா' என்று.
http://img.youtube.com/vi/XehD-bXUFk0/0.jpg