அன்பு கண்பட்
சூழ்நிலைப் பாடல் மேற்கோள்வதில் மிக வல்லவர் தாங்கள். மெச்சுகிறேன் நண்பரே!
Printable View
அன்பு கண்பட்
சூழ்நிலைப் பாடல் மேற்கோள்வதில் மிக வல்லவர் தாங்கள். மெச்சுகிறேன் நண்பரே!
நண்பரும் பகைபோல் தெரியும் - அது
நாள்பட நாள்பட புரியும்..ம்ம்ம்ம்...!
http://youtu.be/SulCj23RsIY
திகைக்க வேண்டாம் ... நீங்களெல்லாம் சொன்னது தான் ...
அபாரம் இராகவேந்திரரே....
சோலைமலர்க்கூட்டம் சொந்தம் கொண்டாடி சிரித்து உறவாடுமே
மலைப்பனிமூட்டம் மலர்கள் இடைதோன்றி மறைத்து விளையாடுமே...
என மக்கள்திலகம் பாடல்வரிகளைப் பதிக்கலாமே என நான் எண்ணிவந்தால்..
நடிகர்திலகமே நம்மிடை வந்து ஒரே கட்சியாய் இருப்போம் எனச் சாந்தி நிலவ, புத்தர் வழி சொல்லும் மிக மிகப் பொருத்தமான சூழற்பாடல்..
எப்படிப் பாராட்ட?
பெருநூலகத்தில் தகுந்த மேற்கோள் ஏட்டைச் சட்டென எடுத்துத்தரும் சிறந்த நூலகராய் உங்களைக் காண்கிறேன்..
( இப்பாடலிலும் வாயசைவுக்கு ஒரு விரிவுரை நிகழ்த்துகிறார் நடிப்பாசான்..)
கன்பட் சார்,
'கன்பைட் காஞ்சனா' I Mean விஜயலலிதாவுக்கு பதிலடி இல்லையா? உங்களுக்கா சொல்லித் தரணும்!
http://www.mayyam.com/talk/showthrea...Part-9/page125
அன்பு வாசு,
வனஜா அவர்கள் சுட்டியவழி சென்று படித்து அசந்தேன் ..
என்ன ஓர் உணர்வு தோய்ந்த நினைவேடு!
இன்றும் மணக்கிறது புதிதாய்.
மென்மையாய் மனம் வருடுகிறது
புத்தக நடு மயிலிறகாய்..
பின்னர் நடிகர்திலகத்தை நேரில் வாராவாரம் சந்தித்ததாய்க் கோடிட்டுருக்கிறீர்கள்..
அவற்றை எழுதியிருந்தால் சுட்டுங்கள்...
---------------------------------------------------
தர்மம் எங்கே - பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலும் கடலூர் கழிமுகங்களில் படமாக்கப்பட்டதல்லவா?
தூரத்து இடிமுழக்கம் போல் பின்னர் கடலூர் பக்கம் படமாக்கப்பட்ட படங்கள் வணிகவெற்றி பெற்றிருந்தால்
தமிழகத்தின் சிறு கேரளமாம் கடலூர் இன்னும் படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும்..
வாசுதேவன் அவர்களுக்கு,
காலை வணக்கம்.
நீங்கள் தலைவரை 'பாதுகாப்பு'டன் சந்தித்த விவரங்கள் நெஞ்சை நெகிழ வைத்தது.ஒரு வீடியோ பதிவு போல நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை விவரித்துள்ளீர்கள்.அன்னை இல்லத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் தொலைவில் என் இல்லம் இருந்தாலும் எனக்கு இந்த பேறு கிட்டவில்லை. ம்ம்ம் என்ன செய்வது?What I have given and kept is only that much!!
உங்களுக்கெல்லாம் தெரிந்த என் நெருங்கிய நண்பர் ஒருவர்,தலைவரை கோவை விமான நிலையத்தில் அகஸ்மாத்தாக சந்தித்து அப்படியே நெடுஞ்சாண் கிடையாக 'அவர்' காலில் விழுந்து, 'அவரை'யே தூக்கி வாரிபோடவைத்த விவரமும் சுவையாக இருக்கும்.அதன் பின் அவர், தலைவர் அருகிலிருந்த, தனக்கு சற்றும் அறிமுகம் இல்லாத, நடிகர் சரத்குமாரிடம் சொன்னதோ!!!! என்ன செய்வது அறிமுகமானவர்களை அதிகம் சோதிப்பதும் அறிமுகமாகாதவர்களை அதைவிட அதிகம் சோதிப்பதும் அவர் சுபாவம் அல்லவா!
நன்றி.
பார்த்த சாரதி,
எல்லோரையும் கொண்டாட வைத்து விட்டீர்கள். இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள். நானும் உங்களுக்கு துணையாக அடுத்து,ஒரு முக்கிய பாடல் சிவகாமியின் செல்வனில் இருந்து எடுத்து விரிவாக ஆராய போகிறேன்.
கண்பட்-
இப்போது நாம் பகையாளிகள். பங்காளிகள். கோர்ட்லே சந்திப்போம். பூனைக்கு தோழனாய் இருப்பதை விட்டு விட்டு......... ஹூம். எடுத்து கொண்ட காரியத்தின் தன்மை அப்படி,அப்படி பொய் யுடம்பு போர்த்த தூண்டியுள்ளது உம்மை.
காவேரி கண்ணன்,
மிக அற்புதமாய் உள்ளன. தொடர்ந்து விரிவாக எழுதுங்கள். தாங்கள் உயர்ந்த மனிதனுக்கு எழுதிய அம்சத்தை பாகம் பத்தில் எனது விமரிசனத்தில் சுட்டி காட்டியுள்ளேன். பக்கம் 91 என்று ஞாபகம்.http://www.mayyam.com/talk/showthrea...Part-10/page91
வாசு
எப்படி தலைவருக்கு இவ்வளவு இழிவு நேர்ந்த போதும் சும்மாயுள்ளார் வேந்தர்? ஓஹோஹோ ,இழிவு படுத்த உலக உரிமை போலும்.(உனக்காக நான்!!!!). தங்கள் பாதுகாப்புக்கு நானும் உடன் வருகிறேன்.