-
தவப்புதல்வன்
நேற்று எதேச்சையாக, சன் லைப் தொலைக்காட்சியில், இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
1972-இல், முதன் முதலாக, இந்தப் படம் வெளியான போது, சென்னை கமலாவில், முதல் நாளே பார்த்து விட்டேன். அந்த வயதில், முதலில் என்னை ஈர்த்தது, வழக்கம் போல், "Love is fine darling" - ஆங்கிலப் பாடலில், நடிகர் திலகத்தின் ஸ்டைலிஷ் நடிப்பும், இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலும் தான்! அதன் பின்னர், எனக்குத் தெரிந்து இந்தப் பாடல் அடிக்கடி, மறு வெளியீடு செய்யப்படாததாலும், என்னுடைய கவனம், அவருடைய பழைய படங்களைப் பார்ப்பதில் கழிந்ததாலும் (நினைவு தெரிந்து பார்க்க ஆரம்பித்தது, ராஜா-விலிருந்துதான்), இந்தப் படத்தை மறுபடியும், முழு படத்தையும், பார்க்க வில்லை. சில வருடங்களுக்கு முன்னர், ஏதோ ஒரு தொலைக் காட்சியில் பார்த்த போது, நடிகர் திலகம் ஏ. சகுந்தலா வீட்டில் விழுந்து கிடக்கும் காட்சியையும், எம்.ஆர்.ஆர்.வாசு மற்றும் ஏ.சகுந்தலா டாமினேட் செய்யும் காட்சிகளும், தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், கோபம் வந்து, படத்தை மேற்கொண்டு பார்க்காமல் எழுந்து சென்று விட்டேன். (என்னதான் நடிப்பாக இருந்தாலும், பாழாய்ப் போன மனசு கேட்க மாட்டேன் என்கிறதே!).
எல்லோரும் எழுதி எழுதி, ஒப்புக் கொண்டு விட்ட ஒரு விஷயம் தான்! அதாவது, நடிகர் திலகத்தின் இமேஜைப் பற்றிக் கவலைப்படாத குணம். இருப்பினும், இந்தப் படத்தை நேற்று கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கப் பார்க்க, மனதில் எழுந்த, பிரமிப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது.
1972 - எல்லோருக்கும் தெரியும், நடிகர் திலகத்தின் உச்சக்கட்ட வசூல் சாதனை ஆண்டு. வெளி வந்த 7 படங்களில், 6 படங்கள் பெரிய வெற்றி அடைந்தன. (பட்டிக்காடா பட்டணமாவும், வசந்த மாளிகையும் வெள்ளி விழா தாண்டி ஓடியது; ராஜா, ஞான ஒளி, தவப்புதல்வன் மற்றும் நீதி 100 நாட்களும், அதற்கு மேலும், ஓடின.). இது தான் முக்கியம். நடிகர் திலகம் மெல்ல மெல்ல அதிரடி நாயகனாகவும், மசாலா நாயகனாகவும் கூடப் பெரிய நிலைக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், எதிர் மறையான கதாபாத்திரமாயிருந்தால் கூடப் பரவாயில்லை. இது, முற்றிலும், ஒரு விதமான, கோழைத்தனம் கலந்த, இயலாமை கலந்த பாத்திரம். இதை ஏற்று நடிக்க - அதுவும், அந்தக் கால கட்டத்தில் - எவ்வளவு துணிவு வேண்டும்? இருப்பினும், தைரியமாகத் துணிந்து ஏற்று நடித்திருக்கிறார்.
ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி! இந்நாளில், யார் யாரோ இதைப் பேசுகிறார்கள். ஆனால், இந்த வாசகம் நடிகர் திலகம் ஒருவருக்குத்தான் என்றும் பொருந்தும்.
படத்தைப் பொறுத்தவரை - தொய்வில்லாமல் சீராக, சுவாரஸ்யம் குன்றாமல் சொல்லப் பட்டிருந்தது. நடிகர் திலகம், வழக்கம் போல், கதாபாத்திரமாகவே மாறியிருந்தாலும், அளவாகவும், இயல்பாகவும், அழகாகவும் நடித்திருந்தார். அருமையான பாடல்கள். இந்தப் படம் நூறு நாட்கள் ஓடியதில் வியப்பில்லை தான். (திரு. முரளி அவர்கள், "சிவாஜியின் சாதனைச் சிகரங்கள்" கட்டுரையில், 1972 - வருடத்திய படங்களைப் பற்றி அலசியிருந்த போது, இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தது, பசுமையாக நினைவில் இருந்தது. அப்படியே எழுத முடியவில்லை. அதாவது, "ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா மிகப் பெரிதாக ஓடிக் கொண்டிருக்கிறது, மறு பக்கம் வசந்த மாளிகை பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில், வெளியான தவப்புதல்வன், நூறு நாட்களை தொட்டது என்றால், நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் பவர் என்ன என்பது புரியும்".)
இத்தனைக்கும், தவப்புதல்வன், ஒரு கருப்பு வெள்ளைப் படம் தான்.
திரு. முரளியின் அந்த வர்ணனையும், நடிகர் திலகத்தின், சரளமான நடிப்பும் தான், மீண்டும் தவப்புதல்வனைப் பார்க்க வைத்தது.
பார்த்து முடித்ததும், திரு. முரளியைத் தொடர்பு கொண்டு பேசியும் ஆகி விட்டது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
'துணை' படத்தின் ஆய்வுக்கட்டுரைக்கு என் பதில் பதிவின் சின்ன கொசுறு இணைப்பு....
நான் ஏற்கெனவே சொன்னபடி, நம்மவர்கள் மிக அருமையாக சமைப்பார்கள். ஆனால் பறிமாறும்போது கோட்டை விட்டு விடுவார்கள்....
காலை 8 மணிக்கு டிபன், மதியம் 12 மணிக்கு லஞ்ச், மாலை 6 மணிக்கு மாலை டிபன், இரவு 9 மணிக்கு டின்னர். இதுதான் வழக்கமான நியதி.
ஆனால் காலை 8 மணிக்கு டிபன், காலை 9 மணிக்கு லஞ்ச், 10 மணிக்கு டிபன், 11 மணிக்கு டின்னர், 12 மணிக்கு மறுநாளுக்கான காலை டிபன்... இப்படி பறிமாறியவர்களைப் பார்த்ததுண்டா..?. என்னதான் லஞ்ச் அருமையாக இருந்தாலும், டிபன் சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் லஞ்ச் சாப்பிட முடியுமா?. சாப்பிட மறுத்த மக்களை குறை சொல்ல முடியுமா..?.
இதோ நம்மவர்கள் பறிமாறிய லட்சணம்....
03.09.1982 தியாகி
01.10.1982 துணை
14.11.1982 பரீட்சைக்கு நேரமாச்சு
14.11.1982 ஊரும் உறவும்
10.12.1982 நெஞ்சங்கள்
விஸ்வரூபம் வெற்றிப்படம் தந்த கிருஷ்ணா மீண்டும் படம் எடுக்கிறார். துரை என்ற அருமையான இயக்குனர் முதன்முறையாக இயக்கி படமெடுக்கிறார். 'வேறுபக்கம்' தாவாமல் தன்பக்கமே நிலைத்து நிற்கும் முக்தா படமெடுக்கிறார். தன் சக நடிகர்கள் ஏ.வி.எம்.ராஜனும் புஷ்பலதாவும் இரண்டாவது முறையாக படமெடுக்க, அதை சக நடிகர் மேஜர் இயக்குகிறார். இன்னொரு சக நடிகர் விஜயகுமார் முதன்முறையாக படமெடுக்கிறார்.
எப்படியெல்லாம் திட்டமிட்டு எப்படியெல்லாம் வெளியிட்டிருக்கலாம். யாரையும் குற்றம் குறை சொல்வதற்கல்ல இது. பெரும் வெற்றிகளை ஈட்டியிருக்க வேண்டிய படங்களெல்லாம் அநியாயமாய் வெற்றி வாய்ப்புகளை இழந்தனவே என்ற அடித்தட்டு ரசிகனின் வயிற்றெரிச்சல், வேறொன்றுமில்லை.
-
கார்த்திக் சார்,
நீங்கள் உள்ளம் நிறைந்து வாசுவிற்கு அளித்த பாராட்டுக்கு மிக நன்றி. நீங்கள் பாராட்டுக்கே இலக்கணம் வகுத்து,இதுதாண்டா பாராட்டு என்று சொல்ல வைத்து விட்டீர்கள்.
உங்கள் வயித்தெரிச்சலில் ,நானும் பங்கெடுத்து கொள்கிறேன். வெளியீட்டில் நம்மவர்களின் சொதப்பல் சொல்லி மாளாது. என்னதான் பாதாம் அல்வாவாகவே இருந்தாலும், ஒரே நேரத்தில் 20 கிலோவா சாப்பிட முடியும்? ஆனாலும் சதவீத கணக்கு வெற்றியை பார்த்தாலும் நம்மவரை அடிக்க ஆளில்லை.
-
டியர் வாசு சார்,
தங்களது இரண்டாயிரமாவது பதிவாக அமைத்த "துணை" ஆய்வு கட்டுரை பிரமாதம், காட்சியை விவரிக்க துணையாய் பதிவிட்ட ஸ்டில்களும் அற்புதம்.
-
Dear Vasudevan Sir,
It is really great pleasure in congratulating you on crossing 2000 posts and each one of your post is an 'Research' itself and this is not mean but a great achievement.
And your Analysis of "Thunai" picture is a great example of your writings.
We always look for your write-ups as we look for our Great NT's acting!!!!
ANM
-
Garuda Sowkiyama
Dear Sivaji Fans,
Here is the link to watch Garuda Sowkiyama.
http://www.tamilflix.net/2012/10/gar...vie-watch.html
Jeev
-
I'm beginnig to become addicted to this site. I've been yearning to talk to people about NT, now I found one with 'NT ardent fan's club. Even though I do not have the capacity to do a big write up's like you people, I read each one of them. Also once I read a write-up or comment, I tend to watch the NT movie. I have created a 'Sivaji Movie Bank' folder in my external hard disk! trying to save as many of his films as possible. Good to know so many Tamilans in the world have the same taste as me, brilliant! Anybody who talks nice things about Sivaji Ganesan would be my friend, so you guys are my friends!! Thank you
-
Dear Vankv
Welcome to the world of the ONLY EMPEROR IN CINEMA the Nadigar Thilagam Sivaji Ganesan world. Happy to read your post and delighted. PLEASE INTRODUCE YOURSELF, your real name, where are you from and so on, so that you may have a chance to meet like minded friends in person in your surroundings.
Also from your posts I guess you might be in your mid fifties or late forties. This is only a wild guess. It may be wrong because we come across so many youngsters belonging to the current generation being ardent / hardcore fans of NT. If it is so, it will be more happier for seniors like us. Please share your nostalgia on NT, away from his movies. This will enlighten us on his social and public contributions hitherto unknown to the Society.
Warm welcome once again
Raghavendran
-
சித்தூரில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள்.
எனதருமை நண்பர் சித்தூர் திரு.வாசுதேவன் அவர்கள் சித்தூரில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளின் இரு புகைப்படங்களை ஈ மெயிலில் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆந்திர மாநில சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் திரு.C.N.ராஜசேகர் அவர்களும், சித்தூர் நகர தலைவர் திரு.தரணி முதலியார் அவர்களும் மற்றும் திரளான நடிகர் திலகத்தின் ரசிகர்களும், நடிகர் திலகம் பிறந்தநாள் விழா நிகழ்சிகளில் கலந்து கொண்டனர். புகைப்படங்களை அனுப்பி வைத்த அன்பு நல்லுள்ளம் திரு வாசுதேவன் அவர்களுக்கு எனது சார்பிலும், நமது திரியின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகள். புகைப்படங்கள் இதோ நமது பார்வைக்கு.
http://i1087.photobucket.com/albums/...Untitled-2.jpg
http://i1087.photobucket.com/albums/...Untitled-3.jpg
-
டியர் வினோத் சார்,
2000 பதிவுகளுக்கான சிறப்புப் பரிசாக என் ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்த ஆண்டனி என்ற அருணை தந்து மெய்மறக்கச் செய்து விட்டீர்கள். ஆஹா! என்ன போஸ் சார் அது! அற்புதமான நிழற்படத்திற்கு எண்ணிலடங்கா நன்றிகள் சார்.