Originally Posted by
Yukesh Babu
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி !
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே !
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு !
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு !
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே !
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே !
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே ,
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே !
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே !