-
படித்ததில் பிடித்தது
கவிஞர் கண்ணதாசனை பற்றி நெல்லை கண்ணன்
http://kannadasan.files.wordpress.co...na-6.jpg?w=390
தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ
என்று கேட்கின்றார் கவியரசர்
ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.
அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.
உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.
கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.
செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.
உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.
-
ஜஸ்ட் ரிலாக்ஸ்.(தொடர்)
http://www.aqnb.com/wp-content/uploa...ust-Relax..jpg
https://lh5.googleusercontent.com/-D...-reception.jpg
இயக்குனர் வரிசை சி.வி.ராஜேந்திரன்.
http://sim03.in.com/62/b23ef79115dcd...0922_pt_xl.jpg
சி.வி.ஆர். இயக்கிய இன்னொரு காமெடிப் படமான 'நவாப் நாற்காலி' படத்திலிருந்து ஒரு அறுவைத்தனமான கலாய்ப்புப் பாடல். நாகேஷ் அறுவைப் பொன்மொழிகள் பேசி அடிக்கும் கூத்து ரகளை. தமிழ் அதிகம் தெரியாத ரமாபிரபாவுடன் இவர் பாடும் செம ஜாலியான ஒரு பாடல்.
படம் முழுக்க நாகேஷின் அறுவைக் கச்சேரி களை கட்டும். அதனால்தான் இந்த சப்பாத்தி சப்பாத்திதான் ரொட்டி ரொட்டி தான்..(அப்போதெல்லாம் அறுவை ஜோக் புகழ் பெறத் தொடங்கியிருந்த காலம். இதை பகிரங்கமாக ஆரம்பித்து வைத்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள். ஸ்ரீகாந்த் என்றாலே அறுவை ஜோக் என்று ஒருகாலத்தில் பெயர் எடுத்தவர் அவர். இத்தனைக்கும் படங்களில் இல்லை. நேரில் அவர் அடிக்கும் அறுவைக் கூத்துகளைக் கண்டு சக நடக்க நடிகையர்கள் அலறி ஓடுவார்களாம். 'சிவாஜி ரசிகன்' இதழில் கூட ஸ்ரீகாந்தின் அறுவை ஜோக்குகள் பல தொடர்ந்து வந்துள்ளன)
தமிழ் சரியாக வராத ரமாபிராபாவிடம் நாகேஷ் அறுவை தத்துவங்கள் சொல்லிப் பாடுவார். நடுவில் பிரபாவின் சந்தேகங்களுக்கு பதில் வேறு.
ரொம்ப இனிமையான பாடல் இல்லை. ஆனா ஜாலியான ஒரு பாடல்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-52.jpg
சப்பாத்தி சப்பாத்திதான்
ரொட்டி ரொட்டிதான்
'வாட் சப்பாத்தி? அது ஏப்டி இருக்கும்'? (ரமாபிரபா கேள்வி)
சப்பாத்தி சப்பாத்திதான்
ரொட்டி ரொட்டிதான்
'சவ் ரொட்டி இல்லே சவ் ரொட்டி அதூ அதூ' (நாகேஷ் பதில்)
அவனுக்கும் அவளுக்கும் வருவது காதல்
ஆனாலும் அவன் அவனேதான்
அவள் அவளேதான்
அரிசியும் உளுந்தும் சேர்ந்தது தோசை
ஆனாலும் அரிசி அரிசிதான்
உளுந்து உளுந்துதான்
ம்ஹூம்... இன்னாது அது உளுந்து? (ரமாபிரபா கேள்வி)
'உளுந்துமில்லே எளுந்துமில்லே... டால்' (நாகேஷ் பதில்)
கொடியில் வந்தது மல்லிகைப்பூ
அது கொண்டையில் ஏறுதம்மா
கொம்பில் முளைத்த முருங்கைக்காய்கள்
அது குழம்புக்குப் போகுதம்மா
குழம்புக்குப் போகுதம்மா
'முருங்குக்காய்!. இன்னாது அது முருங்குக்காய்'?
'டிரம்ஸ் ஸ்டிக்... டிரம்ம்மு...ரம்மு'
செடியில் பிறந்த பருத்தியில் இருந்து சேலைகள் வளருதம்மா
சேரும் ஆம்பள பொம்பளைக்கெல்லாம் திருமணம் ஆகுதம்மா
ஆம்பள ஆம்பளதான்
பொம்பள பொம்பளதான்.
வெள்ளரிக்காய பழுக்க விட்டால்
அது வெள்ளரிப் பழமாகும்
விதையை எடுத்து பூமியில் வச்சா மறுபடி காயாகும்.
மறுபடி காயாகும்.
'வெள்ரிப் பழம்! அது எப்படி இருக்கும் வெள்ரிப் பழம்?'
'உன் பேஸ் மாதிரி இருக்கும்'
காதல் பழுத்தால் ஒருநாள் அதுவும் கல்யாணம் ஆகி விடும்
கல்யாணம் முடிஞ்சா பொம்பள வயத்தில் மறுபடி பிஞ்சு வரும்
காதல் காதல்தான்
கல்யாணம் கல்யாணம்தான்.
லவ்வு லவ்வுதான்
மேரேஜு மேரேஜுதான்
லவ்வு லவ்வுதான்
மேரேஜு மேரேஜுதான்
பாடல் 1.36.13 to 1.39.07 வரை
https://www.youtube.com/watch?featur...&v=ejPNTXbtxZE
-
Enjoy the song from Khel Khel Mein sung by Kishoreji and Asha
http://youtu.be/z4W2n7eosMA
-
One more melody from Khel Khel Mein. Nice pair of Rishi & Neetu sung by Kishorji and Asha
http://youtu.be/roHRS-SWon4
-
வாசு சார்
நவாப் நாற்காலி பற்றிய ஜஸ்ட் ரிலாக்ஸ் பதிவு அருமை. அந்நாளைய நினைவுகள் நிழலாடுகின்றன. நவாப் நாற்காலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அந்த நாசமா நீ போனயா ஜோக் தான். நேசமணி பொன்னையா என்ற பெயரைக் குத்திக் குதறி அவள் சொல்லும் முன் கோபம் வந்து விடுகிறது. நாகேஷுக்கு முன் நமக்கு.. அந்த அளவிற்கு அருமையான பாத்திரப் படைப்பு...மறக்க முடியாத படம்.. மறக்க முடியாத பதிவு
இதோ தங்களுக்காக ஜெயச்சந்திரன் எஸ்.ஜானகி குரல்களில் கருடா சௌக்கியமா படத்திலிருந்து அருமையான பாடல்
மொட்டு விட்ட வாசனை மல்லி..
http://www.inbaminge.com/t/g/Garuda%20Sowkiyama/
-
இரவின் மடியில்
ஆஹா... என்ன சுகமான கானம்.... சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்... அந்த ஹம்மிங் நிழலாடிக் கொண்டே இருக்கிறதே... பாலாவின் வசீகரக் குரலில் இப்பாடல் நெஞ்சை விட்டு அகலாத இனிய கானமாகும். குறைவான இசைக் கருவிகள் நிறைவான இசை... இதை விட என்ன வேண்டும் பாடல் உடனே மனதில் நிலைத்து விடுவதற்கு...
அதானே மெல்லிசை மன்னர்..
கருடா சௌக்கியமா படத்திலிருந்து சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்.
http://www.inbaminge.com/t/g/Garuda%20Sowkiyama/
-
இரவின் மடியில்
மௌத் ஆர்கன் எனப்படும் இதழிசைக் கருவியின் இனிய நாதத்துடன் துவங்குகிறது இப்பாடல்... வாணி ஜெயராமின் வசீகரக்குரலில் எழுப்பும் கேள்விகளுக்கு விடையை நாம் தரவேண்டுமா..
சிலை வண்ணம் யாரோ
ஸ்ருங்காரம் யாரோ
தமிழ்ச்சங்கம் யாரோ
சங்கீதம் யாரோ..
விடையை தாங்கள் அறிவீர்கள்..
ஹிட்லர் உமாநாத் படத்திலிருந்து நம்மை மெய்மறக்கச் செய்யும் இனிய பாடல்..
இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
http://www.inbaminge.com/t/h/Hitler%20Umanath/
-
இரவின் மடியில்
மெல்லிசை மாமணி வி.குமாரைப் போன்று ஷ்யாம் அவர்களின் இசையும் குறைந்த அளவிலான இசைக்கருவிகளுடன் இனிமைக்கு முதலிடம் தந்து பாடல்களின் இசை புனையப் பட்டிருக்கும். வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவையாக இருக்கும். அந்த வரிசையில் இனியவளே வா திரைப்படத்தில் எஸ்.பி.பாலா அவர்களின் மதுரக் குரலில் மயக்கும் கீதம் இதோ..
பூமேகம் சூடும் செவ்வானமே.. வா வா என்னோடு பாடவே..
என்ன ஒரு இனிமையான பாடல்..
ஒலிப்பதிவின் தரம் சற்றே குறைவு என்றாலும் பாடலின் மெட்டு நம்மை மயக்கி விடும்.
கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/i/Iniyavale%20Vaa/
-
குட்மார்னிங் ஆல்..
ஹாய் ராக்வேந்தர் சார்..இரவின்மடியில் பாடல்களுக்கு நன்றி..
எஸ்.வாசு தேவன்.. கேல் கேல் மெய்ன் பாட்டுக்களுக்கு தாங்க்ஸ்...
காலையில் ஒலிக்கும் கானம் என்னவோ
பல்லவ நாட்டு ராஜ குமாரிக்குப் பருவம் பதினெட்டு
இவள் ஒரு சீதை - விஜயகுமார் சுமித்ராவாம்.. நான் படம் பார்த்ததில்லை பாட் மட்டும் கேட்டிருக்கிறேன்..
-
ANAIVARUKKUM INIYA KALAI VANAKKAM
http://youtu.be/d3VgNkkkADA