சகா இல்லா வாழ்வு
சுகமில்லா பயணம்
சத்தியம் பொய் பேச
சமயமறிந்தவனவன்
சாம்ர்த்தியமானவன்
சமரோ சமாதானமோ
சகாயம் செய்வான்
சளைக்காத தோழன்
Printable View
சகா இல்லா வாழ்வு
சுகமில்லா பயணம்
சத்தியம் பொய் பேச
சமயமறிந்தவனவன்
சாம்ர்த்தியமானவன்
சமரோ சமாதானமோ
சகாயம் செய்வான்
சளைக்காத தோழன்
தோழன் இருந்தான் காசும் இருந்தது
கடனாய் கேட்டான் கொடுத்தேன் காசு
காலம் கழிந்தது காணோம் அவனை
கண்டேன் ஒருநாள் கேட்டேன் கடனை
காசும் தோழனும் இழந்தேன் அன்றே
:-( :-(
அன்றே மற நன்றல்லாததை
இன்றை நினை இனிமையாய்
நன்றே நடக்கும் அனைத்தும்
என்றோ வரட்டும் விடுதலை
விடுதலை என்பது உடைப்பது தளை
கெடுதலை எதிர்க்கலாம் கேள்வி கேட்கலாம்
அறிதலை பகிரலாம் அது இந்திய விடுதலை
அடிமை நாட்டிலும் அதுபோல் பேசலாம்
அதன் பின்னுண்டு அவனுக்கு விடுதலை
அமரனாவான் ஆணை அங்கு 'எடுதலை'!
எடுதலை என்றுவிட்டீர் என்பதியைக் கொன்றுவிட்டீர்
..எங்கினும் கண்டதுண்டோ இதுபோன்ற மதியீனம்
உடும்பென நீதிதன்னை உளத்தினிலே பிடித்துநீரும்
..உதவிடும் சாட்சியான சிலம்பினையே மறந்துவிட்டீர்
குறுகிய நெஞ்சமன்றோ கோமகனே கொண்டுவிட்டீர்
,,கூற்றுவன் கொண்டுசென்ற கணவந்தான் வந்திடுவானா
சுடுமழை சொற்களங்கு சடசடத்தே கனலைப்போல்
..சூழ்ந்ததும் மதுரைபின்னர் எரிந்தததுவும் அறிந்தகாதை..
//முரளீஈ... நற நற :)//
அறிந்தகாதை அறிந்த கதைதானா
பணம் பதவி பவிசு குறைவின்றி
மனைவி மக்கள் இளைய வாரிசுகள்
பார்வைக்கு மிக நிறைவான வாழ்வு
மறக்காதே அனுபவ பழமொழியிதை
ஒய்யார கொண்டையிலே தாழம்பூ
உள்ளே இருக்கும் ஈரும் பேனும்
கண்ணை நம்பாதே ஒரு நாளும்
நாளும் ஒரு காரணம் நவிலும் சகியே
நீளும் உன் பட்டியல் தேடி தேடியே
நேரம் கழித்து இன்றேன் வந்தாய் சொல்
நாடியே கேட்டதனால் நன்குரைப்பேன் நானே
ஓடியே வந்தேனா மூச்சிறைக்க படி ஏறி
தேடியேக் காரணம் காண மறந்தேன் சகியே !
சகியே உன்னை நினைத்தால் நெஞ்சில்
..தடைகள் தகர்ந்தே எழில்கள் ஊறும்
உரமாய் நானும் உயரத் தானே
..உணர்வில் கலந்தே உயிராய் நின்றாய்
கரத்தை நீட்டி ககன வெளியில்
..காற்றைப் போலப் பறக்கவும் வைப்பாய்
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே..!
தமிழே அமுதே தரம்கூடிய தங்கமே
குமிழாய் எத்துனை மொழி குறைந்தாலுமே
தன்னிகர் இலக்கியம் அததுனையும் தந்தாயே
தரணியிலே முன்மொழியாய் நீடு வாழ்வாயே
வாழ்வாயே வையத்தில் எல்லாம் பெற்று
... வளமுடனே குறையெதுவும் கொள்ளா வண்ணம்
நாள்பொழுது எக்கணமும் இன்பங் கூட்டி
.. நலமாக இருவென்றே சொல்லி என்னை
ஆழ்கடலில் தள்ளிவிட்டீர் அப்பா உங்கள்
..அரசினையே காப்பதற்கு எண்ணி நீவிர்
பாழ்மனதைக் கொண்டவந்தப் பகைவன் இல்லில்
..பட்டெனவே சேர்த்துவிட்டீர் ஆனால் அப்பா..
பெண்மனது என்னவென்று அறிய மாட்டீர்
..பிழையெல்லாம் புரிவதற்கும் அஞ்ச மாட்டீர்
என்னம்மா இதுசரியா என்ற கேள்வி
..எப்பொழுதும் கேட்டதில்லை நீவிர் என்னை
சொன்னசொலைக் காப்பதற்கு என்றே சொல்வீர்
..சோகந்தான் பெண்களுக்கா சொல்லும் அப்பா
மன்னனென்றால் மக்களுக்கு மட்டும் தானா
..மகளான எனக்குநீதி கிடையா தாப்பா..