கலியபெருமாள் சார்
இப்போது என்னை பற்றிய பதிவிற்கு ..எனக்கு பதியப்பட்ட பதிப்பிற்கு நான் பதில் உரைத்ததையும் எடுத்தாகிவிட்டது !
நீங்கள் நான் என்னமோ தொந்தரவு செய்கிறேன் என்று கூறியதால்.
நட்பு முக்கியம் என்று நீங்கள் கருதினால் என்று நீங்கள் கேட்டுகொண்டதாலும் ...நட்பு நிச்சயம் முக்கியம் என்று நான் நினைப்பதாலும் மட்டுமே நான் நீக்கினேன்...அதற்காக நான் அந்த விவாதம் தொடங்கினேன் என்று அர்த்தம் அல்ல சார் !
உங்கள் எஸ்வி சார் பதிவு செய்தது சரி என்ற பாணியில் உள்ள உங்களுடைய பதிவு...
ஆனால் அதற்க்கு நான் பதில் எழுதினால் அதுமட்டும் தவறு ...என்ற பாணியில் உள்ள உங்களுடைய பதிவு.....நீங்கள் கூறுவது.... ஞாயமா .?
ஞாயம் என்றால் விட்டுவிடுங்கள் !
நான் வலியவந்து எந்த தொந்தரவும் இந்த நிமிடம் வரை செய்ததில்லை சார் !
தூண்டும் வகையில் பதிவுகள் இருந்தால் நீங்கள் அதை பொருட்படுத்தாமல் பதில் உரைக்காமல் போவீர்களா சார் ? ஏன் அதை புரிந்துகொள்ள மறுக்குறீர்கள்..?
உங்கள் சார்பில் ஒரு பதிவு...ஒரே ஒரு பொதுவான பதிவு..."யாரையும் எந்த போட்டியாக கருதப்படும் நடிகரையும் நேரிடையாகவோ..மறைமுகமாகவோ தாக்கி பதிவுகள் இடுவதை தவிர்க்கவும்...மக்கள் திலகம் புகழ் மட்டும் இந்த திரி மூலமாக பரவட்டும் என்று இன்று வரை பதிவு செய்திருக்கிறீர்களா ?
மனதை தொட்டு சொல்லுங்கள் சார் !
நன்றாக போய்கொண்டிருக்கும் திரியில் நான் எதற்கு சார் குழப்பம் விளைவிக்க போகிறேன்...ஏன் எல்லோரும் அப்படி நினைகிறீர்கள் ?
பதிவு செய்தாலும் குற்றம்..! எடக்கு முடக்காக சில சமயங்களில் தெரிந்தோ தெரியாமலோ இங்கு பதிவிடும் பதிவிற்கு நான் பதில் அளித்து clarify செய்தால் அதற்க்கும் குற்றம் என்றால்... என்னதான் சார் செய்வது !
One request
தூண்டறா மாதிரி யாரும் எதுவும் எழுதாதீங்க சார்...நான் இந்த பக்கமே வரமாட்டேன் !
Rks