She sure did make an impact in Dhool.
.. RIP ...
http://www.indiaglitz.com/Dhool-Sorn...il-news-108981
Printable View
She sure did make an impact in Dhool.
.. RIP ...
http://www.indiaglitz.com/Dhool-Sorn...il-news-108981
இந்தியில் தயாராகிறது மஞ்சப்பை... ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப் நடிக்கிறார்? - http://tamil.oneindia.in/movies/news...ke-204782.html
விருதுகள் வியாபாரத்துக்கா? இல்லை விளம்பரத்துக்கா?
சமீப காலமாக விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் நடக்கும் கேலிகூத்துகளின் தொகுப்பு தான் இந்த பகுதி. சமீபத்தில் ஒரு முன்னணி தொலைக்காட்சி ஒன்று நடத்திய விருது வழங்கும் விழாவில் எத்தனை நடிகர், நடிகைகள் ஏன்? ரசிகர்களே கூட வீட்டுக்கு திரும்பி செல்லும் போது நிம்மதியாக சென்றார்கள் என்றால் கேள்விக்குறி தான்.
இதை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்ட்ரில் கூட பல ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்கள், இதில் நண்பர் ஒருவர் வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்தை இந்நேரத்தில் பகிர விரும்பிகிறோம். இதில் ‘ எங்கள் ஊரில் கடல் படமே 4 நாள் தான் ஓடியது, இதற்கு 5 அவார்டா?’ என்று கேட்டிருந்தார்.அவர் கூறியதை சிந்தித்து பார்த்தால், அதில் உள்ள அர்த்தம் புரியும்,
சென்ற வருடம் வெளிவந்த தரமான படங்களான மூடர்கூடம், சூதுகவ்வும் போன்ற படங்களுக்கு ஏதோ கண்துடைப்பு வேலைபோல் ஒரு விருதை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள், இதில் கொடுமை என்னவென்றால் ஓநாயும் ஆட்டுகுட்டியும் படத்திற்கு விருதே வழங்கப்படவில்லை.
மேலும் விளம்பரத்திற்காகவே எங்கும் செல்லும் நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான், அவருக்கு சென்றமுறை சிவாஜி விருது எதற்கு கொடுத்தார்கள் என்று இன்றுவரை 1000 கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. ஆனால் அவர் தன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் வந்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும், அதேபோல் தான் இந்த வருடம் தன் படத்தின் மார்க்கெட் நல்ல விலையில் தமிழ்நாட்டில் விற்க, இந்த வருடமும் கிளம்பி வந்துவிட்டார், இவர்களும் அவருக்கு ஒரு விருதை கொடுத்துவிட்டார்கள்.
இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு உயரிய விருதான சிவாஜி விருதை இந்த வருடம் கொடுத்தனர். அவர் திறமையான இயக்குனர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை, ஆனால் அவரை விட திரைத்துறையில் சாதித்தவர்களான மனோரமா, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜ, பாரதிராஜா என்று நமக்கு தெரிந்தே இத்தனை சாதனையாளர்கள் இருக்க, அவர்களுக்கு தெரியாமல் போனது ஏனோ?
இதேபோல் பல விமர்சனங்களை சந்தித்த தங்கமீன்கள் பின் அவர்களே வெட்கப்படும் அளவிற்கு பல விருதுகளை குவித்தது, இப்படத்திற்கு ஒரே ஒரு விருது மட்டுமே கொடுத்தார்கள்.மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக முத்துகுமார் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது, இப்பாட்டிற்கு இசையமைத்த யுவன் அவர்கள் இந்த விருது பட்டியலில் பரிந்துறை கூட செய்யவில்லை என்பதை மிக கோபமாக தெரிவித்தார் இயக்குனர் ராம்.
இதை தொடர்ந்து சிறந்த நடிகர் விருது விஸ்வரூபம் படத்திற்காக கமல் தேர்ந்தெடுக்கப்பட்டார், கமல் சிறந்த நடிகர் என்பதை விருது வழங்கி தான் நிருபிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, பரதேசி படத்தில் நடித்த அதர்வாவுக்கோ, அல்லது மரியான் படத்தில் நடித்த தனுஷ்க்கோ கொடுத்திருக்கலாம் என்று வெளிப்படையாக பலர் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.
இன்னும் சிலர் அந்த தொலைக்காட்சிக்கு படத்தை விற்றால் போதும், விருதை கொடுத்து விடுவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
விருது என்பது திறமைய தான் தேடி போக வேண்டும், ஆனால் தனது மதிப்பை காட்டுவதாக எண்ணி பெரிய நடிகர்களுக்கு, விழாவிற்கு வந்த நடிகர்களுக்கு மட்டும் விருது வழங்கினால் அதில் என்ன மரியாதை உள்ளது.
ரேச்சல்,
தமிழ் சினிமா மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையில் பாதியாவது விஜய் டிவிக்கு இருந்திருக்கலாம். :(
Sent from my GT-I9082 using Tapatalk
பணத்திற்காக படம் இயக்குவது பிடிக்காது: இயக்குநர் செல்வராகவன்
பணத்திற்காக எந்த ஒரு படத்தையும் இயக்குவதில்லை என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கினார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து சிம்பு, த்ரிஷா இணைப்பில் ஒரு படத்தினை இயக்க முடிவு செய்தார் செல்வராகவன். அப்படத்தை வருண் மணியன் தயாரிப்பதாக இருந்தது. அப்படம் தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது.
'இரண்டாம் உலகம்' தோல்வியால், செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினை இன்னும் முடியாததால், இப்படம் தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எப்போதுமே ஒரு படத்தை நிர்பந்தத்துக்காகவோ பணத்திற்காகவோ இயக்கியது இல்லை. ஒரு திரைக்கதை என்னை அடிமையாக்க வேண்டும். ஒருவழியாக, ஒரு நல்ல திரைக்கதை கிடைத்திருக்கிறது. அதை முழுமையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அப்படம் பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
That means he got a script similar to Irandaam Ulagam. Beware producers.. stay away from this creater.
:fatigue::fatigue:
These type of guys hides behind "I am not a professional ,I am a creator" tag whenever they are trapped.
Selva, If you fails both at box office and at critics table then, you are not a professional as well as a creator. Pesuradha korachitu velaya olunga pannalam.
Same thoughts. Its a long time since he even gave a decent movie.
Sent from my GT-I9082 using Tapatalk