கிடையாதாப்பா ஒரு நல்லவன்
கேள்வி இது துரியோதனனுக்கு
கிடையாதாப்பா ஒரு கெட்டவன்
இக்கேள்வி மூத்தவன் தர்மனுக்கு
கீதை உரைத்த கண்ணன் குசும்பு
பார்வைதான் புலப்படுத்துகிறது
பங்காளி பய மக்கா என்றுணர்த்த
பரீட்சை வைத்தான் பரந்தாமன்
Printable View
கிடையாதாப்பா ஒரு நல்லவன்
கேள்வி இது துரியோதனனுக்கு
கிடையாதாப்பா ஒரு கெட்டவன்
இக்கேள்வி மூத்தவன் தர்மனுக்கு
கீதை உரைத்த கண்ணன் குசும்பு
பார்வைதான் புலப்படுத்துகிறது
பங்காளி பய மக்கா என்றுணர்த்த
பரீட்சை வைத்தான் பரந்தாமன்
பரந்தாமன் வடமொழியா அல்ல தமிழ் வழியா
பறந்து வந்ததாலா அல்ல பருந்து மேல் வந்ததாலா
பரந்து விரிந்த பார் அதிபனா இல்லை பாலி
பரக்ரிதியா பகர்வாயே பரந்தாமா !
--------------------
*பரக்ரிதி,பாலி – தமிழ் வடமொழிக்கு முன்னோடி
பரந்தாமா போதும் உந்தன் பொல்லாத விளையாட்டு
பேதை என்னை விட்டு விடு பாதையை நீயே காட்டு
திக்கு தெரியாத காட்டில் எனக்கு ஏனிந்த கண்கட்டு
தடுமாறி நிற்கிறேன் தவிக்கிறேன் நேரான வழிகாட்டு
காட்டு வழியிடை இரவுப் பயணம்
கானம் ஒன்றே வழித்துணையாகும்
பாட்டரவம் என்னை விலங்கிடம் விலக்கும்
பால் நிலா வெளிச்சம் பாதையைக் காட்டும்
நாட்டு மக்களின் தொந்தரவு தாண்டியே
நானே கண்டேன் புதிய பாதையை
வீட்டில் உள்ளோர் விடுகின்ற மூச்சு
வீதிகள் தாண்டியே என்னைத் தீண்டும்
பூட்டிய நெஞ்சிலே பெற்றவர் போதனை
பூவைப் பெற்றவள் அறியாப் பயணம்
வாட்டிய சோகத்தில் வாடிப் போனேன்
வந்தவள் நெஞ்சிலே அழுதே நின்றாள்
கட்டிலில் இருந்தே கீழே விழுந்தேன்
கனவுகள் விலக்கிக் காயம் கண்டேன்
கெட்ட கனவை கலைத்தக் காலையே
கெடாமல் என்மனம் காப்பான் இறைவன்
இறைவன் நினைத்தாலும்
மனிதன் நினைக்காவிட்டால்
ரன் எடுக்க முடியாது
என வாஸ்ஸப் மெஸேஜ் அனுப்பினால்
என்னா மேன்
என்னா வேலபாக்காம வெள்ளாட்ட பாக்கறியா
அச்சோ பாஸீக்கு எப்படி
தப்பா மெஸேஜ் போச்சு
ஆண்டவா காப்பாத்து..
காப்பாத்து கருணைக்கடவுளே
நாலு பக்கம் துன்பம் வந்தால்
ஓடுவதெங்கே ஒளிவதெப்படி
யானையும் சேனையும் துரத்த
ராணியும் உக்கிரமாய் பார்க்க
சதுரங்க ராஜா நான் செத்தேன்
செத்தேன் என்றாயே சும்மாதானே
செத்தேன் என்பவர் சாகவில்லை
செத்தவர் வந்து செப்பியதில்லை
சாவு மட்டுமே நிச்சயம் அது
செமிகோலனா சிறிய புள்ளியா
சரியாய் எதுவும் புரியவில்லை
சாமியே இல்லை நாமே அதுவும்
சாவு மட்டும் நம் கையில் இருந்தால்!
கையில் இருந்தால் அள்ளி வீசு
காசை தேன் துளியாய் மாற்று
கணங்களை முழுதாய் வாழு
கடந்து போனவை திரும்பாது
திரும்பாது முன்னோக்கு நான் முதுகில்குத்தும் நபரில்லை
துரும்பாக எனை நினைத்தாலுமுனை வைதேனில்லை
அரும்பாது நம்காதல் எனகண்டும் உனைவெறுத்தேனில்லை
விரும்பாது என்னோடுவாராதே வாழ்க்கை விளையாட்டில்லை
விளையாட்டில்லை என சொல்லியே விளையாட்டில் திளைக்கிறோம்.
பூமி மாதாவின் மீது நச்சுரம் பூச்சிகொல்லி மிகை மடிகறக்கும் விளையாட்டு.
அசல் மாதாவை துதி பாடி தெய்வமாக்கி உதிரம் உறிஞ்சும்
விளையாட்டு.
பாரதமாதவை பிளாட் போட்டு அன்னியர்க்கு விற்று கள்ளபண விளையாட்டு.
சக ஜீவிகளை சோதனையாக்கி வாழ்விடங்களை ஒழித்து தின்று தீர்க்கும் விளையாட்டு.
நட்பு சோதரம் நன்கு தரமிறக்கி நற் கொள்ளையடிக்கும் நகை
விளையாட்டு.
மனைகாதலி என்ற கற்பு சிலுவையில் கட்டி கவ்வி குதறி காம
விளையாட்டு.
சாலைகளில் சுதந்திரம் தேடும் சக எதிர்பாலினரின் மீது தோல் ,இரும்பி கத்தி கீறும்
குரோத விளையாட்டு.
காற்றும் மழையும் கடலும் பனியும் சூரியனும் சுழன்று திசை மாறி தாக்கும்
விளையாட்டு
காட்டுகிறது விளையாட்டில்லை வாழ்க்கை ,பலியாக போவது புற்றுக்கா மேகத்திற்கா கோழி பன்றி
காய்ச்சலுக்கா ,சாட் புட் த்ரீ விளையாட்டு
பிரளயம் எனது தேர்வு.