கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிகரமாக நடைபெற்றுள்ள ஒரு வார காலகட்டத்தில் [16.4.2010 வெள்ளி முதல் 22.4.2010 வியாழன் வரை], அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.40,000/- (ரூபாய் நாற்பதாயிரம்).
இக்காவியத்தை வெளியிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில் மட்டும், சற்றேறக்குறைய ரூ.10,000/-த்துக்கும் மேல் (ரூபாய் பத்தாயிரத்துக்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.
இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.