-
பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில் http://www.jeyamohan.in/?p=64127
பாபனாசம் படப்பிடிப்பு நேற்று [26-10-2014] முடிந்தது. தொடுபுழாவிலிருந்து நானும் சுகாவும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் திரும்பினோம். காலையில் வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து உடனே அடுத்த வேலைக்குச் செல்லமுடியவில்லை. ஒரு சினிமாப்படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம்.
சினிமாப்படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டத்தை சினிமாவுக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஓர் அரசு அலுவலகத்துடனோ வணிகநிறுவனத்துடனோ அதை ஒப்பிட்டால் அந்த வேறுபாடு திகைக்கவைக்கும். சினிமாவில் டீ பரிமாறுபவர் முதல் அனைவருமே சினிமா மேல் பெருங்காதலுடன் இருப்பவர்கள். சினிமாவை கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். அதில் பங்கெடுக்க விழைபவர்கள். ஆகவே ஒவ்வொரு கணமும் துடிப்புடன் அதில் ஈடுபட்டிருப்பார்கள். [சினிமா போல அத்தனை அற்புதமான கூட்டு உழைப்பு இருந்தால் பி.எஸ்.என்.எல் ஊழியர்களில் 70 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று பலமுறை தோன்றியிருக்கிறது]
சினிமாவில் ஈடுபடுபவர்களில் மிகச்சிலர் தவிர பெரும்பாலானவர்கள் கலைஞர்கள். தச்சர்கள் ,சிகைதிருத்துநர்கள் முதல் அனைவருமே வெவ்வேறுவகையில் கலைஞர்கள். கலைமனம் கொண்ட இத்தனைபேர் ஒரே இடத்தில் கூடும் இன்னொரு தருணம் நம் கலாச்சாரத்தில் இன்று இல்லை. கலைஞர்களின் மனமே தனி. அவர்கள் கலையை கொண்டாடுபவர்கள். கூடவே வாழ்க்கையையையும் கொண்டாடுபவர்கள்.
ஆகவே வெட்டி லௌகீகப்பேச்சுகளை சினிமாச்சூழலில் நான் கண்டதே இல்லை. சிரிப்பு கொண்டாட்டம் என்றுதான் சினிமாக்காரர்களின் ஜமா எப்போதுமே இருக்கும். சினிமாவின் மிகப்பெரிய கவர்ச்சியாக நான் காண்பதே இதைத்தான். ஆச்சரியமான ஒருவிஷயம் உண்டு, சினிமாவுக்கு வெளியே நம்மூர் ரசிகர்கள் எந்த சினிமா எவ்வளவு வசூல் செய்தது, எந்த ஹீரோவுக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்கள். சினிமாவுக்குள் அதைப்போல மொக்கைப்பேச்சே வேறில்லை.
சினிமாவுக்குள் முதன்மையான பேச்சு என்றால் கிண்டல்தான். அதில் தமிழ்ப்பண்பாடு குறைவாகவே பேணப்படும். அடுத்தபடியாக பழைய நினைவுகள். நுணுக்கமான தொழில்நுட்பத்தகவலக்ள் முதல் ஆளுமைகளின் குணச்சித்திரங்கள் வரை பேசப்படும். ஒரு புதிய தொழில்நுட்பம் வந்ததும் அதை எப்படி ஒருவர் புதியதாகப் பயன்படுத்தினார் என்பது எப்போதும் ஒருவகை சிலிர்ப்புடன் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும்.. கங்கா காவேரி படத்தில் பனைமரத்தில் காமிராவை கட்டி ஷாட் வைத்த கர்ணன் முதல் விடிவெள்ளியில் தீயை படம்பிடித்த வின்செண்ட் மாஸ்டர் வரை. அந்தப்பேச்சுகள் தமிழ் சினிமா என்ற இந்த வணிக- கேளிக்கை கலையின் உள்ளடுக்குகள் உருவாகிவந்த வரலாற்றைச் சொல்பவை. சினிமாவின் நாயகர்களின் ஆளுமைமோதல்களும் விசித்திரங்களும் பேசப்படும்.
இவற்றில் ஒரு சதவீதம் கூட அச்சில் வந்ததில்லை. சினிமாவுக்கு வெளியே பேசப்பட்டதில்லை. பேசலாகாது என்பது ஓர் எளிமையான அடிப்படை விதி. ஏனென்றால் நாடகக்காலம் முதல் கலைஞர்கள் தங்களை சமூகத்திற்கு வெளியே தான் வைத்திருக்கிறார்கள். மக்கள் என்று அவர்கள் சொல்வது அவர்கள் இல்லாத ஒரு தமிழகத்தை. அவர்களுக்கும் சினிமாவுக்கும் நேரடி தொடர்பே இல்லை. அந்த மர்மமே கிசுகிசுக்களாக தமிழ்ச் சமூகத்தில் உலவுகிறது.
ஆச்சரியம்தான், தமிழ்ச்சமூகம் சினிமாவைப்பற்றி மட்டுமே முதன்மை ஆர்வ்ம் கொண்டிருக்கிறது. ஆனால் டீக்கடைக் கிசுகிசுப்பேச்சாளர் முதல் வணிகசினிமாவை கரைத்துக்குடித்து அலசும் அறிவுஜீவி வரை எவருக்கும் தமிழ்சினிமாவைப்பற்றி அனேகமாக ஒன்றுமே தெரியாது!
தமிழ் சினிமாவுலகம் உண்மையில் சிரித்துக்கொண்டே இருக்கிறது என எப்போதும் நினைப்பேன். தமிழ் அரசியலை, பண்பாட்டை, அறிவுஜீவிகளை தமிழ் சினிமா உலகம் பகடிசெய்துகொண்டே இருக்கிறது. வணிக சினிமாவை மிகமிக அதிகமாக கிண்டல்செய்வது சினிமாக்காரர்கள்தான். அப்படி பேசப்பட்ட சில பகடிகள் சினிமாவுக்குள்ளும் வந்துள்ளன. எப்படியும் ஒருலட்சம் நகைச்சுவைகளாவது இருக்கும். நாட்கணக்கில் ஒவ்வொரு நிமிடமும் சிரித்தால் தீராது.
சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு உயர்ந்த இலக்கிய ரசனை உண்டு, நல்ல சினிமா தெரியும். ஆனால் தமிழ் ரசனையின் ஒரு சரியான சராசரியை தொடுவதே அவர்களுடைய சவால். அதற்காகவே முயல்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியை இடைவெளியில்லாமல் பகடி செய்துகொண்டும் இருப்பார்கள்
நேற்று முன் தினம் அரங்கசாமியும் கிருஷ்ணனும் தொடுபுழா வந்தனர். கமல் இருந்தார். உச்சகட்டக் காட்சிப் படப்பிடிப்பு. இரண்டுநாள் முழுநேரச் சிரிப்பு மட்டுமே. கமல் விதவிதமாக நடித்துக்கொண்டே இருந்தார். நாம் கண்டுமறந்த மனிதர்கள் மட்டுமல்ல எழுபது எண்பதுகளின் ஒரு வாழ்க்கைத்தருணமே ஒரு மனித உடல் வழியாக உருவாகி வருவது கலையின் ஒரு அற்புதம்தான்.
எழுத்தாளர் சுகாவின் நகைச்சுவை ஒருவகை என்றால் கமல் இன்னொருவகை. சுகா நெல்லைக்கே உரிய சொல்லாட்சிகள் மூலம் விதவிதமான மனிதர்களை உருவாக்குகிறார். கமல் உடல் வழியாக. எழுபதுகளின் ஒரு கேரளக்கள்ளுக்கடையில் இருந்த அத்தனைபேரும் ஒரு உடலில் ஒரே சமயம் தெரிந்துசெல்வதை கண்டபோது கலைதொட்ட ஒன்று அழிவற்றதாகிறது என்றும் நினைத்துக்கொண்டேன்
சுகா
சிரித்து கண்சிவந்து மூச்சுத்திணறிய அரங்கா மனமுடைந்து ‘இதேமாதிரி வேடிக்கையும் வெளையாட்டுமா வேற ஒரு தொழிலே இல்லியே சார்’ என்றார். எப்படி இருக்கமுடியும் என எண்ணிக்கொண்டேன்.காரவானுக்குள் கமலுடன் பேசிக்கொண்டிருந்து விடைபெறும் தன் படத்தைப்பார்த்துக்கொண்டு ’இப்டி சிரிச்சாப்ல ஒரு படமே எங்கிட்ட இல்ல சார்’ என்றார்
கடைசிநாள் கேலியில் ஒரு வருத்தம் கலந்தது. கூட்டுப்புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். விதவிதமான கூட்டு ‘செல்ஃபி’க்கள் [இதற்கு இன்னும் இணையதமிழ் உருவாகவில்லையா?] அத்தனை பேரும் மாறிமாறி கமலுடன புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தனர்.‘இவங்கள்ளாம் இவரைப்பாத்துகிட்டேதானே இருக்காங்க?’ என்றார் கிருஷ்ணன். ‘அவர்கள் பார்ப்பது நட்சத்திரமான கமலை அல்ல. உற்சாகமே உருவான ஒரு சக சினிமாக்காரரை. அவர்களுக்கு அவர் மேல் இருக்கும் மோகம் அந்த உயிர்த்துடிப்பு காரணமாகவே’ என்றேன்.
இயக்குநர் ஒளிப்பதிவாளர் என மாறி மாறி படம் எடுத்துக்கொண்டோம். மெல்லமெல்ல ஒரு சோர்வு. மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பு. அதில் 38 நாட்கள்தான் உண்மையில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப்படப்பிடிப்பு மழையுடனான போராட்டம் என்று சொல்லலாம். நடுவே கமல் சற்று உடல்நலக்குறைவுக்கு ஆளானார். ஆனால் தேர்ந்த தொழில்நுட்பக்குழு கொண்ட ஜித்து ஜோசப் மிக விரைவாக, அனேகமாக கொஞ்சம்கூட வீண இல்லாமல், படத்தை முடித்தார்.
இத்தனைநாட்கள் சிரித்து கேலிசெய்து வேடிக்கைச் சண்டை போட்டு கூடி இருந்த ஒரு உற்சாகமான வாழ்க்கை முடிகிறது. கிட்டத்தட்ட பழையகால ஜிப்ஸி கலைஞர்கள்போல கூடாரத்தை கழற்றினால் இந்த ஊர் அன்னியம். வேறு ஊர், வேறு நிலம், வேறு மக்கள், புத்தம்புதிய இன்னொரு வாழ்க்கை. தொடுபுழாவில் போடப்பட்ட அந்த தத்ரூபமான முச்சந்தி செட் இப்போது போனால் இருக்காது. கனவுபோலக் கலைந்து மறைந்திருக்கும்.
-
Thanks Ravi for posting this.. nice write up by Jemo..
-
Papanasam audio soon
Papanasam audio soon Now that the shoot of Kamal Haasan’s upcoming venture ‘Papanasam’ is over, its audio, composed by Ghibran, is expected to be unveiled soon.
“Ghibran has come out with beautiful songs. They will be released at a function in Chennai by the end of November,” sources close to the unit say.
A remake of Malayalam hit ‘Drishyam’, ‘Papanasam’ has Kamal Haasan and Gauthami playing the roles made memorable by Mohanlal and Meena, respectively.
Jeetu Joseph, who wielded the megaphone for the original, directed the Tamil remake too. Shooting for the movie was completed in a record time of 60 days.
http://www.nikkilcinema.com/site/new...sam-audio-soon
This news is from Kamal's PRO, Hope to see the Audio release soon.
-
-
கலைஞனின் உடல் http://www.jeyamohan.in/?p=64298
ஜெ
நான் முதன் முதலாக ஒரு தரமான பாடகரை நேரில் பாடக் கேட்டது ஊட்டியில் யுவன் பாடிய போதுதான். பின்னணி இசை இல்லை , முழுமையாக்கப் பட்ட கச்சிதம் இல்லை , பதிவு செய்யப் பட்ட நுணுக்கம் இல்லை , இருந்தும் அது நேரில் ஜீவனுடன் இருந்தது , இத்தனைக்கும் யுவன் முறையாக பயின்றவரும் அல்ல . இந்த மின் சாதனங்களற்ற கடத்திகளற்ற இசை அனுபவமே அதை இன்னமும் உயிர்ப்புடன் நிகழ்த்தியது , பெரும் பாடகர்களின் பதிவு இசைக்கு ஒரு மாற்று மேல் அதன் அனுபவம் எனச் சொல்லலாம் .
கமலை சந்தித்த போதும் அதுதான் நிகழ்ந்தது . இரண்டு நாட்கள் ஒரு பெரும் கலைஞனின் அசல் கலை அனுபவம் வாய்த்தது . திரைப் படத்தில் நாம் காணும் கமல் முதலில் அவராக வந்து படம் செல்லச் செல்ல அவர் இல்லாமல் ஆவர் அல்லது அவராகவே நீடிப்பார். அனால் நம் நேரில் கண்ட நமக்காக மட்டுமே நடித்த கமல் முதலில் வேறொருவராக வந்தார் , தான் இல்லாமல் ஆனார் மெல்ல இறுதியில் தான் தானானார். பின்னர் யோசித்துப் பார்த்ததில் அவர் நமக்கு நிகழ்த்திக் காட்டிய சுமார் 20க்கும் மேற்பட்ட சம்பவங்களில் அனைத்திலும் அவர் ஒரு பார்வையாளர் மட்டுமே அது எல்லாம் தான் காண பிறருக்கு நிகழ்ந்தது, எதிலும் குறிப்பிடும் படியான பங்கேற்பாளர் அல்ல அவர். நம் கண் முன்னே அசோகனாக ,சிவாஜியாக , நாகேஷாக , எம் ஜி யா ராக , காகா ராதா கிருஷ்ணனாக என அனைவராகவும் கணப் போதில் தோன்றி முற்றிலும் தான் இல்லாமல் ஆனார் , மனிதர்களுக்கு இடையே இருக்கும் சில நுட்பமான கூர்ந்து கவனித்தால் மட்டுமே நாம் அறியக் கூடிய அம்சங்களை அவதானித்துள்ளார் , அதை லேசாக சுட்டிக் காட்டினாலும் ஆச்சர்யப் படத் தக்க வகையில் நாமும் அவரை அறிகிறோம் , அந்நபர்களை நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை அப்போது தான் நாமும் அறிகிறோம்.
அவரை சந்தித்த போது தான் ஒன்று தோன்றியது , ஒரு மேம்பட்ட நடிகன் சற்று முயன்றால் பல்வேறு நபர்களை நிகழ்த்திக் காட்டி விடமுடியும் , பாவனை /வடிவ பேதங்ககளை நிகழ்த்துவது சாத்தியம் தான் ஆனால் உணர்வுகள் ஏறும் படிநிலையும் இறங்கும் படிநிலைகளையும் ஒரு பெரும் கலைஞனால் மட்டுமே நிகழ்ந்த முடியும். இயக்குனர் R C ஷக்தி உங்களின் மகாபாரதத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டும் போது க்ளாப்ஸ் அடிப்பதில் நெகிழத் துவங்கி , காமிரா துவக்கத்தில் ஒரு படி ஏறி , நடிகர் நடிக்கத் துவங்கும் போது மேலும் ஒரு படி ஏறி ஷாட் முடிந்ததும் உச்சகட்ட அழுகைக்கு சென்று உங்களை கட்டி தழுவி அழுத நிகழ்வு அபாரம் . உணர்வெழுச்சி ஒவ்வொரு படியாக ஏறி அதன் உச்சத்தை அடைந்து தளர்வதை நாம் கண்டோம்.
இன்னமும் சற்று நேரம் இருந்திருந்தால் கடவுளை நடித்துக் கட்டி ஒரு பிரபஞ்சத்தை கண்முன் படைத்தது விடுவாரோ என்ற அச்சத்துடன் தான் நான் விடை பெற்றேன்.
அசலைக் காட்டிலும் போலச்செய்தலில் உயர்ந்து படைப்பவன் ஒரு அசல் கலைஞன். கமல் ஒரு அசல் கலைஞன்.
கிருஷ்ணன்
-
பாபநாசம் படத்தின் டப்பிங் பணி தொடங்கியது
மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றியடைந்த ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தில் மோகன்லால் நடித்த வேடத்தில் கமலும், மீனா நடித்த வேடத்தில் கௌதமியும் நடித்து வருகிறார்கள். மேலும், கலாபவன் மணி, சார்லி உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
மலையாள படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் திருநெல்வேலி அருகில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர். கமல்ஹாசன் இன்று தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசியுள்ளார்.
கமல் நடிப்பில் ‘விஸ்வரூபம்-2’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களும் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் எந்த படம் வெளியாகும் என்பது விரைவில் தெரிய வரும்.
-
CINEMATOGRAPHER SUJITH VAASSUDEV INTERVIEW
Drishyam, the Malayalam blockbuster is coming to Tamil as Papanasam with Kamal Haasan reprising Mohanlal’s role. Cinematographer Sujith Vaassudev who has worked in Drishyam and Papanasam talks to Jyothsna Bhavanishankar on these two films, the differences between Mohanlal and Kamal, his aspirations and many more.
.....
.....
Difference between Mohanlal and Kamal Haasan
Mohanlal’s performance will be very easy and subtle. Kamal knows the Tamil audience well and he performs a bit louder. That said, it was a brilliant experience for me to have worked with a legend like Kamal. It was a revelation for me to see the gamut of expressions on his face and the minute reactions. There are no words to express and there are no reasons to compare these legends. Both of them are actors in their own stride.
...........
...........
rest in : http://behindwoods.com/tamil-cinemat...-vaassdev.html
-
After Kamal Haasan, it's now Ajay Devgn's turn
Best part about making a great film is, you still tend to make money through the remake rights. Drishyam is one such Malayalam movie that created ripples across the South for its realistic and very gripping portrayal of a family in trouble.
This Mohanlal starrer that went on to receive maximum reception when it released in late 2013 is already being remade in Tamil with Kamal Haasan playing the lead. The Telugu version released sometime back and had Venkatesh in the lead role. Now the Hindi version is all set to go on floors.
Post the 'Action Jackson' dud, Ajay Devgn is all set to reprise the role done by Lal in the original. Sources tell that 'Dombivali Fast' fame Nishikant Kamat will direct this flick. Viacom 18 Motion Pictures are the producers. The filming starts in Feb end and the film may release in September or October.
http://behindwoods.com/tamil-movies-...vgns-turn.html
-
Let's hope the Hindi version does not release before Papanasam.
-
Close ... Hindi starts in Feb and projected to be out Sept/Oct. They may keep their time better than us .. Hope we may be able to get it out by july (2-3 months from UV).