சக்தி,
இன்று நடக்கும் அத்தனை தகிடுததம், தில்லுமுல்லு, ஏமாற்றுதல், ஏமாறுதல் எல்லாமே புராணங்களில் இருந்து வந்தவைதானே.
இந்திரனின் பொய்சேவல கூவக்கேட்டு நீராடச்சென்ற அகலிகையின் கணவனுக்கும், பொன்மான் என நினைத்து பொய்மானைத் துரத்திசென்ற ராமனுக்கும் அவை போலி என்பது பின்னர்தானே தெரிந்தது. ஆகவே போலிகளைக் கண்டு ஏமாறுவது நம் மூதாதையர் நமக்கு தந்த சொத்து.
அதுபோல, ஒருவன் நேர்வழியில் சென்றால் பலன் கிடைக்காது, குறுக்கு வழிதான் பலன் தரும் என்பதற்கு வினாயகர் - முருகன் - ஞானப்பழம் சம்பவம் ஒன்று போதாதா?. நிஜமாகவே உலகைச்சுற்றிய முருகனுக்கு பழம் கிடைக்கவில்லயே...!. பட்டைநாமம்தானே கிடைத்தது..!.