:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
interesting points
Printable View
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
interesting points
One of the renowned Western philosophers, Schopenhauer says "Compassion is the basis of all morality" in his famous work "On the Basis of Morality." According to me too.. indha 'dharma'vin unmaiyaana adipadai "Anbu" aagum. EndhappaNi anbilirundhu thodangigiradho adhuve dharmam aagiradhu.Quote:
Originally Posted by Shakthiprabha
This idea is central in Buddhism (the Dalai Lama himself is considered to be an incarnation of the Buddha of Infinite Compassion) and in the Vedic religion (http://veda.wikidot.com/dharma) too. Schopenhauer himself went into Hinduism and Buddhism and found parallels between his and those philosophies. Schopenhauer himself said about the Upanishads that they were ' the solace of his life and the solace of death'.
Love and Light.
March 11th
_________
நேற்று பேசப்பட்ட ஒரே விஷயம், 'நிஷ்காம கர்மா'. நாதன் அவருடைய நிறுவன விஷயமாய் ஏக மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இதைக் கண்டு அஷோக் "நீங்கள் ஏன் நிஷ்காம முறைப்படி செயலாற்றக் கூடாது" என ஆலோசனை வழங்குகிறான்.
'நிஷ்காம கர்மா' என்பது பலனை எதிர்பாராமல், கடமையைச் செய்வது. நம்மில் ஏறக்குறைய அனைவருக்கும், செயலை விட செயல் ஈட்டும் பலன் மேல் சந்தோஷம் இருக்கக்கூடும். நிஷ்காம கர்மாவைச் செய்பவனுக்கு செயலே சந்தோஷத்தை தருகிறது. அதனைத் தாண்டிய பலனைப் பற்றி அவன் பொருட்டாய் நினையாமல், செயலை சிறப்பாய் செய்வதிலேயே முழுமையான மகிழ்ச்சியை அடைந்து விடுகிறான்.
இதனை நடைமுறை வாழ்வில் கொணரும் போது, செய்யும் செயலில் மேலும் நேர்த்தி கூடுகிறது. ஒரு பொருளின் தரத்தில் கவனம் செலுத்தி, அதனை தயாரித்தால், அதன் தரம் மேம்பட்டு, உபயோகிப்பவன் பயன் அடைகிறான். So called goodwill increases. இறுதியாக, நாம் பயனைப் பொருட்டாய் கருதாவிட்டாலும், பயன் நன்றாக அமைந்து விடுகிறது. லாபத்துக்காக பொருளின் தரத்தை குறைத்து தயாரிப்பவன் நெடு நாள் வேரூன்ற முடிவதில்லை.
இலவசப் படிகள், ஊக்கத்தொகை, சம்பள உயர்வை மனதில் கொண்டு, உழைப்பவனின் உழைப்பு, முழுமையாய் வெளிப்படுவதில்லை. முழுமையாய் உழைப்பதை தம் கடமையாக கொண்டவனுக்கு, ஊதிய உயர்வு இத்யாதிகள் தானே வந்து சேர்கிறது.
இங்கு கர்மா எனப்படுவது அவரவர் செய்யும் தொழில் எனக் கொள்ளலாம், பெரிய அளவில், உயரிய நோக்கில் கர்மா எனப்படுவது யாகம் போன்றவற்றை குறிக்கும் எனக் கூறுவதோடு நிறுத்திக்கொண்டார். (He didn't touch what is actual karma, based on sects or otherwise)
கர்மாவை பற்றற்று செய்பவனுக்கு, அவற்றினால் ஏற்படும் பாப புண்யங்கள் பற்றிக்கொள்வதில்லை. கர்ம பலன்கள், அவனை சுற்றிப் பிணைத்துக்கொள்வதில்லை. இதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது ஒரு கதை.
ருக்மிணியை துர்வாச முனிவருக்கு பிரசாதம் வழங்கிவிட்டு வருமாறு க்ருஷ்ணன் அனுப்புகிறான். வழியே ஆற்றுவெள்ளப்பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுகின்றபடியால், ருக்மிணியால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. "க்ருஷ்ணன் நித்ய ப்ரமச்சாரி என்றால் வழி விடு" என்று வேண்ட சொல்கிறான் க்ருஷ்ணன். ருக்மிணியும் அவ்வாறே கேட்டுக்கொள்ள ஆறு ஒதுங்கி வழிவிட்டது. பிரசாதம் உட்கொண்டு துர்வாசரிடத்தில் விடை பெற்று திரும்புகிறாள் ருக்மிணி. மீண்டும் வெள்ளம். "துர்வாசர் நித்ய உபவாசி என்றால் வழி விடு" என்று பணிக்கச் சொல்கிறார் மாமுனி. ருக்மிணியும் அவ்வாறே கூற ஆறு வழிவிடுகிறது. ருக்மிணிக்கு ஒன்றுமே புரியவில்லை. தம்முடன், குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் க்ருஷ்ணன் எப்படி நித்ய பிரம்மசாரி ஆக முடியும்? க்ஷண நேரம் முன்பு பிரசாதம் உட்கொண்ட முனிவர் எப்படி நித்ய உபவாசி ஆகப் பெறுவார்? குழப்பதிற்கு விடை க்ருஷ்ணன் அளிக்கிறான். 'நாங்கள் இருவருமே பற்றற்று எங்கள் செயல்களை, கடமைகளை, செய்வதால், எங்களுக்கு கடமையால் பிணைப்பு ஏற்படுவதில்லை' என்கிறான். எப்பேற்பட்ட பற்றற்ற நிலை இருந்தால் இது சாத்தியம் ஆகும் !! :bow:
இப்படித்தான், அஷோக் தன் கடமை என நினைத்து, சிங்காரத்திற்கு எதிராய், அவனால் பாதிக்கபட்டவனுடன் கைகோர்த்து, காவல் நிலையத்தில் சாட்சி கூறுகிறான். நீலகண்டன் மகள் அஷோகை நினைத்து வெகுவாய் கவலை கொள்கிறாள். க்ருபா ஜெயந்தியை மணந்து கொள்ள சம்மதம் இல்லை எனக் கூறிவிடுகிறான். இதை அறிந்த ஜெயந்தியோ அவளது பெற்றோர்களோ பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல், வேறு இடத்தில் வரன் தேடலைத் துவங்குகின்றனர்.
(வளரும்)
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
very good point :clap:
March 12th
_________
வேம்பு சாஸ்திரிகள் க்ருபா ஒரு இளம் பெண்ணுடன் பழகுவதை தாம் நேரில் பார்த்ததாக கூறுகிறார். யாரென்று விசாரித்து நல்ல முறையில் திருமணம் நடத்திவிடுமாறு உள்ளன்போடு கேட்டுக்கொள்கிறார். முதலில் இடிந்து விடுகிறார் சாம்பு. அவன் விரும்பும் பெண் ஜட்ஜின் மகள் என்று தெரிவிக்கிறாள் க்ருபாவின் தங்கை. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் குடும்பம் எனத் தெரிந்து மேலும் கலங்கிப்போகிறார் சாம்பு.
'காதல் திருமணம் என்ன குற்றமா' என்ற கேள்விக்கு, இக்காலத்தில் காதல் மலிவுப் பொருளாகிவிட்டது. காதலிக்காவிட்டால் ஒரு மனிதன் உணர்ச்சியற்றவன் என்ற நிலைக்கு கேலிக்குள்ளாக்கப்படுகிறான். சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரும் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட உணர்வுகளை, மீடியாக்களும் இத்யாதிகளுமாகச் சேர்ந்து பொதுவில் கொண்டாடுவதும் போற்றுவதும் பாராட்டதக்கதல்ல என்று சோ தன் கருத்தை கூறுகிறார். காதலர் தினம் என்று தனியொரு தினத்தை தூக்கிவைத்து கொண்டாடுவதும் பெரிதும் வரவேற்க்கத்தக்கதல்ல எனக் கூறினார். அக்காலத்திலும் கூட துஷ்யந்தன்-ஷாகுந்தலா போல் உண்மையாய் காதலித்து, காதலித்தவர்களையே கைப்பிடித்தோர்களும் இருந்தனர். இப்பொழுதும் இருக்கின்றனர். எனினும் பெரும்பான்மை சதவிகிதத்தில் காதலின் புனித உணர்வு குறைந்து விட்டது. காதல் திருமணங்கள் பெருகப் பெருக, விவாகரத்துக்களும் அதிகரித்துவிட்டதாய் வருத்தப்பட்டார். சாஸ்திரத்தில் கூறியிருக்கிற எட்டு வகையான திருமணங்களில், பெற்றோர்கள் தேர்ந்தெடுத்து வைதீக முறைப்படி முடித்து வைக்கும் திருமணமே சிறந்ததாம்.
கிரஹணம் பற்றிய பேச்சு அடிபடுகிறது. கிரஹண தர்பணம் செய்வது நலன் என வேம்பு சாஸ்த்ரிகள் கூறுகிறார். நீலகண்டன் தனக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றை, காரணம் புரியாமல் செய்ய விருப்பமில்லை என வாதிடுகிறார். வான சாஸ்திரத்தை சாதகமாக்கிக்கொண்டு பலர் தேவையற்ற நியதிகள் புகுத்திவிட்டார்கள் என சாடுகிறார். கொலம்பஸ் சிவப்பிந்தியர்களை ஏமாற்றி "உங்கள் உடைமைகளை நீங்கள் தரவில்லையென்றால், இதோ இந்த நிலா வராமல் போய்விடும்" என்று அமாவசை அன்று பயமுறுத்தி, ஏமாற்றி, பொருள் ஈட்டினானாம். ஒன்றும் தெரியாதவனை முட்டாளாக்கும் இது போன்ற சாஸ்திரத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். வேம்பு சாஸ்த்ரிகளுக்கு, நீலகண்டன் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்க முடியவில்லை.
இந்த கருத்தையொட்டி, சோ, பாம்பு, கிரஹணக் கதைகள் நம் புரிதலுக்காக இலகுவாக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கணக்கு சரியாய் அமைந்திருக்கிறது. இன்னைய தேதியில் இன்று இங்கே கிரஹணம் பாதிக்கும், என்ற கணக்குகள் துல்லியமாக இருப்பதாக கூறுகிறார். விஞ்ஞான முறைப்படியே நோக்கினும், சூரிய கிரஹணத்தன்று சூரியனின் ஒளி மட்டுபட்டிருக்கும் போது, ஏன் வெறும் கண்ணால் நோக்கக்கூடாது என்று விஞ்ஞானமே சொல்கிறது? நிச்சயம், அதன் ஒளியோ கீற்றோ உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியதாய் இருக்கலாம். ஒருவன் நீரிழிவு நோயால், புற்றுநோயால், இன்ன பிற நோயால் பாதிக்கபட்டு இறுதி நிலையிலோ ஆரம்ப நிலையிலோ மருத்துவரை நாடுகிறான். என்றோ ஒரு நாள் இந்த நோய் மனிதனை பீடிக்கத்துவங்குகிறது. அது கிரஹணத்தன்று கூட இருக்கலாம். நம்மால் கண்டறிய முடியாது. கிரஹணப் பீடை என்றால் பீடிப்பது, தாக்குவது, அவஸ்தைக்கு உள்ளாக்குவது என்று பொருள் எனக் கூறி முடித்தார்.
(வளரும்)
after thoughts: I cannot however agree, that divorces happen because of increased love-marriages. People are more open for seperation, added to it, tolerance level has gone down. Moreover, a partner is NOT a commodity to be chosen. It is awkward to accept the saying "you choose ur partner, love would (has to ?)follow." I am, biased and my thoughts are vehemently against arranged marriages and hence can be dismissed.
இன்னொன்று:
கோபு (நீலகண்டன்) மிக நன்றாக இயல்பாக நடித்துள்ளார். :clap:
நாதன், நளினி(வசுமதி), அஷோக், எல்லோரும் தம் பங்கை இயல்பாய் செய்கின்றனர்.
பாகவதரும் அவர் மனைவியும் சற்றே உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பு, எனினும் சுமாராய், நன்றாய் இருக்கிறது.
நீலகண்டன் மனைவி பர்வதம் (குயிலி) ரொம்பவும் மெனக்கெட்டு, அதிக உணர்சிகள் முகத்தில் தெரிக்க, முகச் சுளிப்பு, சுழிப்பு என எல்லாமே அதிக பட்ச நடிப்பு. சற்றே அலுப்பு தட்டுகிறது என்று அடக்கிச் சொல்வதைத் தாண்டி, மிகவும் எரிச்சலூட்டுகிறது .
இதை கவனத்தில் கொண்டு அவர் இயல்பாய் நடிக்கலாம். (தேர்ந்த நடிகை, நாம் சொல்லித்தர வேண்டியதில்லை)
Yes akka. His acting was really good yesterday :DQuote:
Originally Posted by Shakthiprabha
:yes:Quote:
நாதன், நளினி(வசுமதி), அஷோக், எல்லோரும் தம் பங்கை இயல்பாய் செய்கின்றனர்.
:|Quote:
பாகவதரும் அவர் மனைவியும் சற்றே உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பு, எனினும் சுமாராய், நன்றாய் இருக்கிறது.
:exactly: Overaction... :huh: Irritating at times...Quote:
நீலகண்டன் மனைவி பர்வதம் (குயிலி) ரொம்பவும் மெனக்கெட்டு, அதிக உணர்சிகள் முகத்தில் தெரிக்க, முகச் சுளிப்பு, சுழிப்பு என எல்லாமே அதிக பட்ச நடிப்பு. சற்றே அலுப்பு தட்டுகிறது என்று அடக்கிச் சொல்வதைத் தாண்டி, மிகவும் எரிச்சலூட்டுகிறது .
இதை கவனத்தில் கொண்டு அவர் இயல்பாய் நடிக்கலாம். (தேர்ந்த நடிகை, நாம் சொல்லித்தர வேண்டியதில்லை)
But atop all these characters, three characters which liked very much are "Maid Maami" @ Nathan's home... Mainly coz, she always shows a sadness on her face always (it is so realistic)... and Kavithalaya's guy... Vaiyapuri's adiyaal... :cool2: He is versatile... :bow:
and the last one is Vembu... romba natural'ana acting :thumbusp:
And about Love Marriage vs. Arranged marriage,
Both the marriages are acceptable as long as the couple have the Tolerance Level, Adjustment etc.
I have seen divorce in both the cases... :|
I stand for both!!!
Of course, "Jathagam" plays a major role... :oops:
விராஜன்,
உண்மை. வேம்பு மற்றும் சமையல் மாமியின் பாத்திரங்கள் ஜொலிக்கின்றன.
'வேம்பு'வின் குணங்கள் எனக்கு வெகுவாய் பிடித்திருக்கிறது. கல்மிஷமற்ற நல்ல மனம் படைத்த மனிதருக்கு எடுத்துக்காட்டாய் இருக்கவேண்டிய பண்புகள்.
March 13th
_________
தன் பையனுக்கு பெண்கெட்டு சாம்பு சாஸ்திரிகள் வேம்புவுடன் ஜட்ஜ் வீட்டிற்கு செல்கிறார். மிகுந்த தயக்கத்துடன் சிரம் தாழ்ந்து சாம்பு அமர்ந்திருக்க, மெதுவாக விஷயத்தை எடுத்துச் சொல்கிறார் வேம்பு. ஜட்ஜ் பதிலேதும் கூறாமல் உள்ளே செல்கிறார். இந்தக் கட்டத்தில் "தேடுவோம்" எனத் தொடர்குறியுடன் நிறுத்திவிட்டனர். எல்லோர் வீடுகளிலும் நடக்கும் அந்தஸ்து பிரச்சனைகள் அலசப்பட்டன. இன்று என்றில்லாமல், காலாகாலத்திற்கும் பண ஏற்றத் தாழ்வுகள் மனிதனை பெரிதும் ஆட்கொண்டிருக்கிறது. பண்டையகாலத்தில் ருக்மிணி க்ருஷ்ணனனை திருமணம் செய்த போது, பண பலம், படை பலம் அதிகம் படைத்த ருக்மிணிக்கு தன்னுடன் இசைந்து வாழ சம்மதமா என்று இருமுறை ஊர்ஜிதம் செய்து கொண்டானாம்.
பொதுவாகவே வைதீகம் தெரிந்த பிராமணர்கள் என்ற மரியாதை, அவர்கள் சிரார்த்தம் அல்லது நல்ல காரியங்கள் செய்விக்க வரும் போது பேசப்படுவதுடன் நின்றுவிடுகிறது. இன்றைய தேதியில் வைதீக பிராமணர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை வார்த்தை அளவிலும், சில இடங்களில் மனதளவிலும் நின்றுவிடுகிறது. அவர்களுடன் சம அந்தஸ்துடன் அமர அளவளாவ பலர் தயங்குவர் என்பதே உண்மை. வேதம் கற்றுவிக்கும், ஓதும் பிராமணனுக்கு பிறப்பால் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களோ அல்லது அந்தஸ்தில் உயர்ந்த பிராமண வகுப்பில் பிறந்த இன்னொருவரோ, தரும் மதிப்பு அவ்வளவே என்பது வேதனைக்குறியது.
சிங்காரத்தை தேடி போலீஸ் வலைவீசுகிறது. அவனை வையாபுரி தன் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்க முனைகிறான். அஷோக்குடன் பேசப்படும் சமாதான உடன்படிக்கை சரிப்பட்டு வரவில்லை. "என் ஆன்மாவின் கட்டளைப்படியே நான் நடப்பேன்" என அவன் திட்டவட்டமாக கூறிவிடுகிறான். அடுத்து வையாபுரி எடுக்கப்போகும் நடவெடிக்கை பயங்கரமாகவும் இருக்கலாம் என்ற நினைப்பு நாதனை தடுமாறச்செய்கிறது.
நேற்றைய தொடரில் எழுத விடுபட்டப் போன இன்னொன்று. சமையல் மாமியின் கணவருக்கு ஒரு மகள். அவர் இரண்டாம் மனைவி இறந்து விட்டதை அவர் வருத்தத்தோடும் பீடிகையோடும் மாமியிடம் தெரிவிக்க, மாமியின் சோகம் கலந்த சலனமற்ற முகத்தில் மெல்லியதாய் ஒரு பரிதாபமும், அன்பும் ஊற்றேடுக்கிறது.
(தொடரும்)
பி.கு: (இன்றைய பகுதியில் அலசி பேசப்படும் அளவு விஷயம் ஒன்றும் இல்லை)