A Lesson in Gratitude from the Movie Maestro Sivaji Ganesan
http://www.sangam.org/taraki/article...n.php?uid=1382
Printable View
A Lesson in Gratitude from the Movie Maestro Sivaji Ganesan
http://www.sangam.org/taraki/article...n.php?uid=1382
சுமதி என் சுந்தரி பற்றிய விவாதம் மிகவும் அருமை. நண்பர் tac குறிபிட்டது போல் உணர்ச்சிமயமான காட்சிகள் என்பது எதவும் சுசு வில் கிடையாது . ஆனால் கற்பனையில் நடக்கும் முதல் இரவு காட்சியை மறக்கமுடியுமா மேலும் இறுதி காட்சியில் சுமதி ஒரு நடிகை என்று தெரிந்தவுடன் Ntin முகபாவங்கள் குறிப்பிடத்தக்கவை. சுசு ஷர்ட் என்று 70 கால கட்டங்களில் famous ஆனது நாகேஷ்/வ.கோபாலகிருஷ்ணன்/தங்கவேல் முன்னால் jj சிவாஜி இன் பின்னால் முகத்தை மறைதுகொள்வது மற்றும் எஅய் பிள்ளை சச்சாயி ஏனுங்க பாடல் முடிந்தவுடன் கையில் பலூனுடன் NT அண்ட் ஜ்ஜ் இரவில் நடந்து வரும் போது MSV backround மியூசிக் மற்றும் ஹம்மிங் மறக்கமுடியுமா
நட்புடன் GK
டியர் tac.....
நீங்கள் சொலவ்து உண்மைதான். (உங்கள் லிஸ்ட்டில் வரவேண்டிய இன்னொரு படம் 'பலே பாண்டியா' -1962). ஆனால் கலாட்டா கல்யாணம் படத்துக்குபின் நடிகர்திலகத்தின் படங்களில் நகைச்சுவைப்படங்களுக்கு பெரிய இடைவெளி விழுந்து விட்டது. அப்போது வந்தவை (அரிச்சந்திரா, எங்க ஊர் ராஜா, உயர்ந்த மனிதன், தெய்வமகன், திருடன், சிவந்த மண், விளையாட்டுப்பிள்ளை, வியட்நாம் வீடு, எதிரொலி, ராமன் எத்தனை ராமனடி, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், பாதுகாப்பு, இரு துருவம், தங்கைக்காக, குலமா குணமா) போன்ற படு சீரியஸ் படங்களே. எங்கமாமாவில் கூட பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்த அளவுக்கு நகைச்சுவை குறைவுதான். அதே நேரத்தில் மற்றவர்களின் படங்களில் நிறைய நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெற்றதோடு வீட்டுக்கு வீடு, உத்தரவின்றி உள்ளே வா போன்ற முழுநீள நகைச்சுவைப்படங்களும் வந்து கலக்கிக்கொண்டிருந்த நேரத்தில், அப்போதைய நடிகர்திலகத்தின் படங்களைப்பற்றி (சிலரால்) அப்படி ஒரு கேலிப்பேச்சு எழுந்தது உண்மையே. அந்நேரம், எதிர்பாராத சமய சஞ்சீவியாக வந்து கேலிபேசியோரின் வாயை அடைத்த படம்தான் சுமதி என் சுந்தரி.. (இதற்குப்பின் அதே ஆண்டில் வந்த படம் 'மூன்று தெய்வங்கள்')
'சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் எனும்போது...' என்ற வரிகள்தான் என்னையும் சகோதரர் ராகவேந்தர் அவர்களையும் உசுப்பி விட்டது. இன்னொன்று கவனித்தீர்களா?. பம்மலார் தந்துள்ள வசூல் விவரங்களே, அப்படம் மதுரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறதே.
இன்றிரவு சிங்கப்பூர் வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியில் ..குலமா குணமா.
திரு முரளி மற்றும் சாரதா madem அவர்கள் கவனத்திற்கு
மன்னவன் வந்தானடி திரைபடத்தில் ஒரு காட்சி NT ஐ அடிபதற்காக திரு நம்பியார் குருசாமி 4 அடியாட்கள் பெயரை கூறுவார்
ஆய் மாதவா பாலமுருகா சங்கரா ஆறுமுகம் - படத்தின் டைரக்டர் ப.மாதவன் கதை வசனம் பாலமுருகன் தயாயிருப்பு சங்கரன் ஆறுமுகம் (ஜேயார் movies producers
forum படிக்கும் போது memory வேறு யாராவது சொல்லியிருந்தாலும் நன்றி
நட்புடன் GK
Sun Oct 08, 2006 10:01 am you have posted the review of ennai pol oruvan
சகோதரி சாரதா அவர்களின் என்னை போல் ஒருவன் திரைப்படம் விமர்சனம் 2006 -2007 காலகட்டங்களில் (பார்ட் ௨) எழுதி உள்ளீர்கள் திருநெல்வேலியில் அந்த திரைப்படம் 1976 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது என்று நினவு அந்த திரைபடத்தின் விநியோகஸ்தர் (நெல்லை-கன்னியாகுமரி) திரு சூரிய நாராயணன் அவர்கள் முயற்ச்சியால் திரு முரளி கூறியது போல் 1976 ஆம் ஆண்டே censor ஆகி விட்டது ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும் என்று TMS பாடல் ஒன்று உண்டு (வித் சாய்பாபா இங்கிலீஷ் poem ) உங்கள் விமர்சனத்தில் அந்த பாடல் விடுபட்டுவிட்டது என்று நினைகிறேன்.
நட்புடன் Gk
அன்புள்ள ஜி.கிருஷ்ணா...Quote:
Originally Posted by gkrishna
அந்த 'என்னைப்போல் விமர்சனம்' நான் தமிழில் எழுதக்கற்றுக்கொள்ளும் முன் ஆங்கிலத்தில் எழுதியது. இப்போது படிக்கும்போது இன்னும் விவரமாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றும். ஆனால் இந்த 6-ம் பாகத்தில், மார்ச் 18 தேதிகளில், என்னைப்போல் ஒருவன் வெளியீட்டு நாள் பதிப்பில், நான், முரளியார், பம்மலார், ராகவேந்தர் மற்றும் நண்பர்கள் அப்படம் பற்றிய மேற்கொண்டு தகவல்களையும், 'ரிலீஸ் மேளா' விவரங்களையும் பதிந்துள்ளோம் பார்த்திருப்பீர்கள். என் விமர்சனத்தில் 'ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும்' பாடல் விடுபட்டிருந்ததை, அப்போதே ஒரு நண்பர் சுட்டிக்காட்டியிருந்தார்.
என்னைப்போல் ஒருவன் தமிழகமெங்கும் 1978 மார்ச் 18-லும், சென்னையில் மட்டும் 1978 ஏப்ரல் 14-லிலும் வெளியானதாகத்தான் நினைவு. ஆனால் திருநெல்வேலியில் மட்டும் 1976-லேயே (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே) வெளியானதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இதுபற்றி 'புள்ளிவிவர நிபுணர்கள்' முரளியாரும், பம்மலாரும்தான் விளக்க வேண்டும்.
கண்துளிர்க்க வைத்த பாசமலர் மூன்றாம் பாகம் அளித்த முரளிசாருக்கு நன்றி.
சரியான அவர் கணினிக்கும் நன்றி.
பம்மலார் பற்றி ராகவேந்திரா சார் சொன்ன வார்த்தைகள் சத்தியமானவை.
தொடர்ந்து நடிகர்திலகத்தின் சாதனைப்பட்டியலைத் தீட்டும் பம்மலாரின் அன்புக்கரங்களுக்கு நன்றி..
சாரதா அவர்கள் சொல்லும் சுமதி என் சுந்தரி தொடர்பான சேதிகள் எல்லாமே சுவை --
சட்டையின் அரைக்கைப் பகுதியின் நுனியில் சின்ன வெட்டு வைத்து தைப்பது - கல்லூரி மாணவர்கள் அனைவரும் பின்பற்றிய ஸ்டைல் என ஒரு பேட்டியில் இப்படம் பார்த்து ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சத்யராஜ் சொல்லியிருந்தார்.
கருப்பு வெள்ளையிலேயே ஸ்டைலில் கலக்கி, ட்ரெண்ட்செட்டர் ஆச்சே நம்ம நடிகர்திலகம்.
ராமன் எத்தனை ராமனடி பொம்மைகள் போட்ட ஸ்டைல் சட்டை
பட்டிக்காடா பட்டணமா பெல்பாட்டம், ஹேர்ஸ்டைல்..
-------------------
நம் கலாச்சாரச் சின்னம் நடிகர்திலகம்.
இன்னும் சவாலே சமாளியை விஞ்சும் வேட்டிசட்டைத் தோற்றம் வேறு எவரிடமும் கண்டதில்லை.
புதியபறவையில் முழுக்கைச்சட்டையை புஜம் வரைமடித்துவிடும் ''அலட்சியநேர்த்தி'' அழகை அடிக்க ஆளில்லை..
----------------------------------
ஜோ அவர்கள் கொடுத்த சுட்டி படித்து நெகிழ்ந்தேன்.
ஒருமுறை பெருமாள் அவர்கள் வந்ததால், எழுந்து மறைத்த சிகரட்டை கையாலே அழுத்தி அணைத்தவராம் நம் நடிகர்திலகம்.
அன்பிற் பணியுமாம் பெருமை!
Dig/......Quote:
Originally Posted by gkrishna
இதைப்படித்ததும் நினைவுக்கு வரும் இன்னொன்று....
காசேதான் கடவுளடா படத்தில் முத்துராமனும் லட்சுமியும் ஒரு பூங்காவில் அமர்ந்திருக்க, அங்குள்ள ஒலிபெருக்கியில் நேயர் விருப்பம் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். 'அடுத்த பாடல் காசேதான் கடவுளடா படத்தில் கோவை சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது. விரும்பிக்கேட்டவர்கள் சரவணன், கோபு, விஸ்வநாதன், வாலி ஆகியோர்'. (இவர்கள் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்). .....dig ends.
முழங்கை வரை மடக்கிவிடப்பட்ட முழுக்கை சட்டையென்றதும் எனக்கு நினைவுக்கு வருவது 'பொன்னூஞ்சல்' படத்தில் வரும் 'நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்' பாடல் காட்சிதான். என்ன ஒரு அழகு. கதாநாயகனும் நாயகியும் ஐம்பது மீட்டர் இடைவெளியில் நின்று பாடும், அருமையான கருப்புவெள்ளை ஓவியம். வேஷ்ட்டி சட்டையில் தலைவர் சூப்பரா இருப்பார்.Quote:
Originally Posted by kaveri kannan
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சாரதா madem என்னை போல் ஒருவன் பற்றி நான் குறிப்பிட்டது ஒரு நினைவில் வருடம் தவறாக இருக்கலாம். ஏன் என்றால் க்ரஹப்ரவேசம் (D.யோகானந்த் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் ) நெல்லை பூர்ணகலவில் திரையிடப்பட்டு 55 நாட்கள் ஓடியதாக நினவு தீடீர் என்று இன்றே இப்படம் கடைசி என்று நண்பர்கள் கூறியவுடன் கிட்டத்தட்ட 20 ரசிகர்கள் சென்று நெல்லை பூர்ணகலா திரைஅரங்கு உரிமையாளர் அவர்களடிம் சென்று முறையிட்டோம் மேலும 5 நாட்கள் மட்டுமாவது நீடித்து 60 நாட்கள் என்று முடிதுகொள்ளுமாறு கேட்டோம் ஆனால் வசூல் குறையவில்லை மேலும் தொடரசசியாக அந்த வருடத்தில் 2 /3 படங்கள் சரியாக போகவில்லை.ஆனால் இது சம்பந்தமாக எதுவும் செய்ய முடியாது நீங்கள் சுவாமி pictures உரிமையாளர் SK என்ற ச.கல்யாணசுந்தரம் இடம் சென்று முறையிடவும் என்று சொல்லிவிட்டார் இதில் காமெடி என்னவென்றால் இருவரும் பக்கா காங்கிரஸ்/சிவாஜி ரசிகர்கள். ஆனால் பிசினஸ் என்றவுடன் மாறிவிட்டனர். க்ரஹப்ரவேசம் திரைபடத்தை மாற்றிவிட்டு என்னை போல் ஒருவன் திரையிடபட்டதாக நினவு சிவாஜி மன்றத்தில் இருந்து கொடி மற்றும் தோரணம் கட்ட முடியாது என்று கூறி விட்டோம் பின்னர் கூலி ஆட்களை வைத்து காங்கிரஸ் கொடியும் அண்ணன் banner வைத்தார்கள் நிகழ்வு இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. யாரவுது நெல்லை ரசிகர் அந்த காலகட்டததை சேர்ந்தவர்கள் இருந்தால் நமது போரத்தில் இருந்தால் உறுதி படுத்தலாம்
காசேதான் கடவுளடா படத்தில் மேலும் ஒரு காட்சி தேங்காய் ஸ்ரீனிவாசன் சாமியார் வேடம் போட்டு உள்ளே வரும் போது வரிசையாக சுருளிராஜன்/வெண்ணிறாடை மூர்த்தி/மனோரமா/முத்துராமன்/லக்ஷ்மி/ஸ்ரீகாந்த் என்று நின்று கொண்டு இருப்பார்கள் அப்போது தேங்காய் கூறும் ஒரு வசனம் "சுருளிராஜ மனோரம் மூர்த்தி முத்துராம லக்ஷ்மி ஸ்ரீகாந்த நாம சுஷ்ம பிரசிதக' இதை பற்றி திரு கோபு/cvr ஒரு பேட்டியில் தேங்காய் ஸ்ரீனிவாசன் இன் timing sense பற்றி கூறி இருந்தார்கள்
Hearty welcome to NT club, Mr Krishna.
Murali sir, hope you will break the suspense very soon with a stunning review.
கிருஷ்ணா.....Quote:
Originally Posted by gkrishna
1976-ம் ஆண்டில் 'கிரகப்ரவேசம்' ஏப்ரல் 10 அன்று ரிலீஸ் ஆனது. அதிலிருந்து 27 நாட்கள் கழித்து மே 6 அன்று 'சத்யம்' ரிலீஸானது.
கிரகப்ரவேசம் வெளியாகி 77 நாட்களும், சத்யம் வெளியாகி 51 நாட்களும் ஆனபோது 'உத்தமன்' (June-26) ரிலீஸானது. இதில் எந்தப்படத்தைச்சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. (பின்னர் அக்டோபர் 22 தீபாவளியன்று 'சித்ரா பௌரணமி'யும், டிசம்பர் 15 அன்று 'ரோஜாவின் ராஜா'வும் வெளியிடப்பட்டது).
கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், நேற்று (23.4.2010) வெள்ளி முதல், தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], நமது சத்திய சீலரின் "ஹரிச்சந்திரா" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. முதல் நாள், முதல் காட்சியான நேற்றைய மாலைக் காட்சியை மட்டும், 200 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.10/-. ஒரே காட்சியில், ரூ.2,000/-த்துக்கும் மேல் (ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது. டூரிங் டாக்கீஸைப் பொறுத்தவரை, இது இமாலய சாதனை.
இத்தகவல்களை எமக்களித்த ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
இதய வேன்தன் சிவாஜி மன்ட்ரம் மஹாலக்ஷ்மி தெஅட்ரெ உழியர்கு வேட்டி அன்ட் சேலை கொடுததை நடிகர்திலgaம்.com முலம் தெரிந்து கொன்டென் வாழ்க
மிக்க நன்றி சாரதா madem அவர்களுக்கு
உங்களது தகவல்கள் என்னை கடந்த காலங்களுக்கு கொண்டு சென்று விட்டன. உங்கள் உடைய statistcis அபாரம.
சத்யம்,உத்தமன் மற்றும் ரோஜாவின் ராஜா நினவு உள்ளது.
சத்யம் (இயக்கம் ச.கண்ணன்) நெல்லை சென்ட்ரல் theatre இல் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு தேவிகா அவர்கள் ஜோடியாக நடித்திருப்பார்கள். மேலும் கமலஹாசன்,மஞ்சுளா மற்றும் ஜெயசித்ரா உண்டு 'கல்யாண கோயிலின் தைவிக கலசம் ' மிக அருமையான பாடல்
ரோஜாவின் ராஜா (NVR Pictures direction கே.விஜயன்) நெல்லை சிவசக்தி theatre இல் வெளியானது. வாணிஸ்ரீ அவர்கள் ஜோடியாக நடித்திருப்பார்கள். அதில் வரும் சினிமா theatre காட்சிஇல் சிவாஜி அவர்கள் பின் சீட் இல் இருக்கும் வாணிஸ்ரீக்கு பொப்கோர்ன் கொடுப்பர்துகு பதிலாக வீரராகவன் அவர்களுக்கு கொடுப்பர் அதை வாணிஸ்ரீ நக்கல் அடிக்கும் காட்சி எல்லோராலும் ரசிக்கப்பட்டது.'ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருப்பான் ராஜா ராமன் நினைத்திருப்பான்' பாடல் காட்சி மிகவும் சிறப்பாக படம் பிடித்திருப்பார்கள் பாடலுடுன் வரும் விசில் அருமை மேலும் சுருளி அவர்கள் சிவாஜி முன்னால் நடிக்கும் கட்டபொம்மன் காட்சி,சிவாஜின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் அற்புதம் "நாளை நீ மன்னவன்","ஓடி கொண்டேய் இருப்பேன்" என்று இரண்டு பாடல்கள் மேலும் உண்டு
ரிலீஸ் முதல் நாள் அன்று முதல் காட்சிஇல் ரசிகர்கள் அனைவருக்கும் ரோஜா பூ ஒன்று வழங்கப்பட்டது
உத்தமன் நெல்லை பூர்ணகலவில் வெளியானது
உத்தமன் என்றதும் ஒரு நினவு உத்தமனில் சிவாஜி பெயர் கோபி மஞ்சுளா பெயர் ராதா அதே போல் உரிமை குரல் mgr பெயர் கோபி லதா பெயர் ராதா நெல்லை பூர்ணகலவில் உத்தமன் வசூல் மற்றும் உரிமைகுரல் வசூல் இரண்டயும் ஒப்பிட்டு ஒரு போஸ்டர் நெல்லை சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டது போஸ்டர் வாசகங்கள் இப்படி இருந்தன "உத்தமன் கோபி ராதா 50 வது நாள் வசூல் 188000
உரிமை குரல் கோபி ராதா 50 வது நாள் வசூல் 177000 " . உத்தமன் aakale lakjha என்ற ஹிந்தி படத்தின் தழுவல் என்று நினவு அதில் படகு படகு ஆசை படகு பாடலில் இளைய திலகம் scatting செய்யும் காட்சி உண்டு . முதல் ரிலீஸ் போது இந்த செய்தி வெளி வரவில்லை 1984 காலகட்டத்தின் போது உத்தமன் rerelease செய்யும் போது போஸ்டர்ல் இளைய திலகம் நடிகர் திலகத்துடன் இணைந்து செய்யும் scatting நிகழிச்சி காண தவறாதிர்கள் என்று விளம்பரம் செய்தார்கள்.
உத்தமன் விமர்சனம் நமது போரும்ல் வெளியிடப்பட்டு உள்ளதா
நட்பு உடன் Gk
Uthamanil skate scene undu anal
ilaya thilagam illai nam ithaya thilagam
neenga solvathu santhippu padama irukum(Sivaji-Prabu)
Uthaman is remake of Aa Gale Lagja Hindi (Shashi,Sharmila)
நன்றி கண்ணன் அவர்களே.
மோகன், கொஞ்சம் பொறுங்கள்.
சுவாமி, உண்மையிலே சத்தியசீலன் ஹரிச்சந்திரனின் வசூல் பிரமிக்கத்தக்கதுதான்.
கிருஷ்ணா,
உங்களிடம் நிறைய தகவல்கள் புதைந்து கிடப்பது நன்றாக தெரிகிறது. என்னைப் போல் ஒருவன் சென்சார் ஆனது 1976 டிசம்பர் 31. ஆகவே அது கிரகப்பிரவேசம் படத்தை ஒட்டி வெளி வர வாய்ப்பில்லை. எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை நீங்கள் குறிப்பிடுவது அந்தமான் காதலி - என்னைப் போல் ஒருவன் படங்களாக இருக்குமோ என்று. காரணம் 1978 ஜனவரி 26 அன்று வெளியான அந்தமான் காதலி மார்ச் 17 அன்று 51 நாட்களை நிறைவு செய்தது. மார்ச் 18 அன்று என்னை போல் ஒருவன் வெளியானது. என் சந்தேகம் சரியென்றால் அந்தமான் காதலி பூர்ணகலாவில் வெளியிடப்பட்டதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
ரோஜாவின் ராஜா படத்தைப் பற்றிய நினைவுகள் அருமை. ஆனால் ஒரு சின்ன திருத்தம். நடிகர் திலகம் பின்னால் உட்கார்ந்திருக்கும் வீரராகவனுக்கு கொடுப்பது பாப்கார்ன் அல்ல, சிக்லெட். [சார் இப்படி சிக்லெட் கொடுத்து கொடுத்துதான் என் தலை இந்த மாதிரி ஆயிடுச்சு].
சாரதா, ரோஜாவின் ராஜா டிசம்பர் 25 ரிலீஸ்.
சங்கரா,
உத்தமன் படத்தில் இளைய திலகத்தின் ஸ்கேடிங் உண்டு. ஆனால் அது படகு படகு பாடல் காட்சின் போது அல்ல. கேளாய் மகனே பாடலின் இறுதியில் ஸ்கேடிங் கிளப்பில் மகன் ஸ்கேட் செய்துக் கொண்டிருப்பான். அப்போது அங்கே வேறு சிலரும் ஸ்கேடிங் செய்துக் கொண்டிருப்பார்கள். அதில் இளைய திலகமும் ஒருவர்.
அன்புடன்
சாரி எனக்கு தெரியாது-ஆசர்யமா இருக்கேQuote:
Originally Posted by Murali Srinivas
முரளி சார்
சிக்லெட் - வீரராகவன் தலையைத் தடவியபடி சொல்லும் வசனத்தைச் சரியாகச் சொன்னதில் தெரிகிறது ---
உங்கள் ஆழ்ந்த ரசனை.
இந்தப் படத்தை நான் தொடர்ந்து 14 நாட்கள் தினம் ஒரு முறை பார்த்து
டைட்டில் இசை முதல் இறுதி வரை அப்படியே ஒலிச்சித்திரமாய் நண்பர்களுக்கு சொல்லி அசத்திய நினைவலைகள்.
Extreme depression - இதற்கான முகபாவம் -
நம் நடிகர்திலகத்தின் ஒரு பக்க கன்னச்சதையிடம் உலக் நடிகர்கள் பிச்சை வாங்க வேண்டும்.
ஏவிஎம் ராஜனுக்காகப் பெண்பார்க்கப் போன இடத்தில் வாணிஸ்ரீ..
அந்த அதிர்ச்சி முகபாவம் ---
,, மேலே போட வேண்டிய பெயரை கீழே ..'' அழைப்பிதழைக் கண்டு சொல்லும் இயலாமை...
'' அம்மா, தூங்கணும்'' என அபத்தமாய்ச் சொல்லும் மனப்பிறழ்வின் தொடக்கம்..
வண்ணத்தூரிகையால் எண்ணம் சொல்லும் முழுதான மனச்சிதைவு...
படிப்படியாய் முகஓவியம் தீட்ட இவர் ஒருவரைவிட வேறு எவர்?
நான் கண்டதில்லை இதுவரை.
கிருஷ்ணன் வந்தான்
அவன்தான் மனிதன்
இவற்றிலும் வாழ்ந்து கெட்டவனின் அடிபட்ட மனம் காட்டும் முகம்..
தாடி வேண்டாம்..அதீத தொழில்நுட்ப உதவி வேண்டாம்..
கன்னம் காட்டும் பச்சயம் போதும்
எங்கள் நடிப்புவைரத்துக்கு!
காலப் பெட்டகம்
ராஷ்டிரபதி ராதாகிருஷ்ணன் கையால் 'பத்மஸ்ரீ' விருது பெறுவதற்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் டெல்லி சென்றார். அந்த அனுபவங்களை விகடனில் நான்கு வாரங்களுக்குச் சுவைபட எழுதியுள்ளார். அதிலிருந்து, இதோ ஒரு துளி!
1966 ( vikatan)
ஜனாதிபதியுடன் ஒரு மணி நேரம்..
- பத்மஸ்ரீ சிவாஜிகணேசன்
சென்னையிலிருந்து டெல்லிக்கு 'காரெவெல்' விமானத்தில் நான் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அவற்றில் இரண்டு பயணங்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது நமது படை வீரர்களை உற்சாகப்படுத்த கலைஞர் தூதுக்குழு ஒன்று சென்றதல்லவா? அந்தக் குழுவில் ஒருவனக நான் டெல்லிக்குப் பறந்தபோது, 'இந்த நாட்டின் குடி மகன் என்ற முறையில் நம் கட மையை ஆற்றப் போகிறோம்' என்ற பெருமித உணர்வு என்னிடம் குடி கொண்டிருந்தது. அதேபோல், சென்ற மாதக் கடைசியில் நமது மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களி டமிருந்து 'பத்மஸ்ரீ' பட்டத்தைப் பெற டெல்லிக்குச் சென்றபோதும், 'இந்த நாட்டுக் கலைஞன் என்ற முறையில், கலைஞர்களின் பிரதிநிதியாக கிடைத்த கௌரவத்தைப் பெறப்போகிறோம்' என்ற எண் ணம் ஒருவித உவகையை என்னுள் உண்டாக்கியது. இந்த இரண்டும் என் வாழ்க்கையில் மிக முக்கியமன பயணங்கள்.
நடுவே ஜனாதிபதி - அந்தப் பக்கம் 'பத்மஸ்ரீ' பானுமதி - இந்தப் பக்கம் நான். எங்களைத் தவிர திரு. ஸி.ஆர்.பட்டாபிராமன், திருமதி சௌந்தரம் ராமச்சந்திரன், இன்னும் நம் ஊரைச் சேர்ந்த பலர் அந்தக் கொட்டகையில் குழுமி இருந்தோம். 'திருவிளையாடல்' படம் ஆரம்பமாகியது. இன்டர்வெல் கிடையாது. மூன்று மணி நேரம், இப்படி அப்படி நகராமல், தொண்டையைக் கனைக்காமல், பொம்மைபோல் உட்கார்ந்து நான் படம் பார்த்த ஒரே நாள் அதுவாகத்தான் இருக்க முடியும். அவர் அருகே அமர்ந்து படம் பார்க்கும்போது, ஏதோ ஒருவித பக்தி உணர்வு என்னைப் பீடித்தது. ஒரு மாபெரும் அறிவாளியின் அருகில் அமரும் பாக்கியம் கிடைத்ததே என்றெண்ணி, அக மகிழ்ந்தேன். படத்தைப் பார்க்கும் போது ஜனாதிபதி நகைச்சுவை யுடன் சொன்னார்: ''நான் சிவா ஜியுடன் அமர்ந்து 'சிவ்ஜி'யைப் பார்க்கிறேன்!''
இதற்கு முன்பு, அதே தியேட்டரில் தலைவர் காமராஜ் அவர்க ளுடன், 'நவராத்திரி' படத்தை ஜனாதிபதி பார்த்து மகிழ்ந்ததாகவும் அறிந்தேன்.
மறைந்த மாவீரர் லால்பகதூர் சாஸ்திரிக்கு 'பாரத ரத்னா' பட்டம் அவர் மகன் ஹரிகிருஷ்ணாவிடம் வழங்கப்பட்டபோதும், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை முதன்முதலா கக் கண்டுபிடித்துக் கொடுத்த முகம்மத் தின் ஜகால் அவர்களுக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்ட போதும், அந்தக் கூடத்தில் எழுந்த கரவொலி விண் அதிரச் செய்தது. விருது வழங்க என் பெயர் வாசிக் கப்பட்டபோது, ''அடடே! உங்க ளுக்கு அவ்வளவு பெரிய பெயரா? விழுப்புரம் சின்னய்யா கணேசனா நீங்கள்'' என்று சிரித்துக்கொண்டே கேட்டார் நம் அருமை ஜனாதிபதி.
விழா முடிந்ததும், விருது பெற்ற கலைஞர்களுக்கு ஒரு தேநீர் விருந்து. அந்த விருந்தின்போது, ஜனாதிபதி என்னைப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு அறி முகப்படுத்தி வைத்தார். ஏற்கெனவே அவர்களை எனக்கு நன்கு தெரிந் திருப்பினும், ஜனாதிபதி அறிமுகம் செய்துவைத்தது தனிப் பெரு மையை அளித்தது.
''மிகச் சிறந்த நடிகர். நொடியில் முகபாவங்களை மாற்றி, உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டுவார்'' என்றார் ஜனாதிபதி.
பலமுறை, பலரிடம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தபோதிலும், அவரிடமிருந்து வந்த அந்தச் சொற் கள் என்னைப் புல்லரிக்கச் செய் தன.
ராணி வாரப் பத்திரிகையின் சென்ற இதழிலும்(18.4.2010), அதன் தொடர்ச்சியாக இந்த இதழிலும்(25.4.2010), தனது மானசீக குருவான நடிகர் திலகத்தைப் பற்றி அவரது சிறந்த சிஷ்யர் சிவகுமார் அவர்கள் எழுதியவற்றைப் படிக்க கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்கவும்.
http://pammalar.webs.com/apps/photos...otoid=79795690
http://pammalar.webs.com/apps/photos...otoid=79795691
http://pammalar.webs.com/apps/photos...otoid=79795692
http://pammalar.webs.com/apps/photos...otoid=79795693
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிகரமாக நடைபெற்றுள்ள ஒரு வார காலகட்டத்தில் [16.4.2010 வெள்ளி முதல் 22.4.2010 வியாழன் வரை], அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.40,000/- (ரூபாய் நாற்பதாயிரம்).
இக்காவியத்தை வெளியிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில் மட்டும், சற்றேறக்குறைய ரூ.10,000/-த்துக்கும் மேல் (ரூபாய் பத்தாயிரத்துக்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.
இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி : பாசமலர் : தினசரி 3 காட்சிகள் : மொத்த வசூல்(சற்றேறக்குறைய)
13.4.2010 - செவ்வாய்
பிற்பகல் 2:30 = ரூ.2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)
மாலை 6:15 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
இரவு 9:45 = ரூ.1,500/- (ரூபாய் ஓராயிரத்து ஐநூறு)
14.4.2010 - புதன்
பிற்பகல் 2:30 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
மாலை 6:15 = ரூ.2,300/- (ரூபாய் இரண்டாயிரத்து முந்நூறு)
இரவு 9:45 = ரூ.1,400/- (ரூபாய் ஓராயிரத்து நானூறு)
15.4.2010 - வியாழன்
பிற்பகல் 2:30 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
மாலை 6:15 = ரூ.1,800/- (ரூபாய் ஓராயிரத்து எண்ணூறு)
இரவு 9:45 = ரூ.1,300/- (ரூபாய் ஓராயிரத்து முந்நூறு)
அன்புடன்,
பம்மலார்.
திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே உண்மை என்ன ஒரு அருமையான கணக்கு . அந்தமான் காதலி திரைப்படமும் நெல்லை பூர்ணகலவில் வெளியானது 55 நாட்கள் ஓடியதாக நினவு. அப்போது நான் PUC முடித்துவிட்டு இன்ஜினியரிங் காலேஜ்/சயின்ஸ் admission ஆக வெயிட் செய்து கொண்டிருந்த காலகட்டம்.
இந்த தருணத்தில் இந்த தளத்திருக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. ஆண்டாள் அருளிய திருபாவை அதை மு ஸ்ரீனிவாச iyengar என்ற ஆராட்சியாளர் எந்த கால கட்டத்தில் திருபாவை எழுத பட்டிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சி செய்யும்போது ஒரு பாசுரத்தில் "வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று" என்ற வரி வைத்து இந்த பாடல் 10 அல்லது 11 வது பாடலில் வரும் மார்கழி என்பது decemeber 14 அல்லது 15 வது தேதியில் வரும் அன்று பௌர்ணமி அதிலிருந்து என்று வெள்ளி கிழமை வந்தது என்று கண்டு பிடித்து 8 வது century என்று கூறி யதாக writer சுஜாதா சொல்லியிருந்தார் கிரேட் Mr .முரளி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நீங்கள் சென்னையில் இருந்தால் ஒரு முறை உங்களை எல்லாம் நேரில் சந்திக்க ஆவல்
நட்புடன் gk
நன்றி திரு பம்மலார் சார்,
ராணி வாரப் பத்திரிகையில் நடிகர் திலகத்தைப் பற்றி அவரது சிறந்த சிஷ்யர் சிவகுமார் அவர்கள் கூறியவற்றை படித்தேன்.
அருமை அத்தனையும் அருமை.
எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு மீண்டும் நன்றி.
அன்புள்ள கிருஷ்ணா...
இப்போது தெளிவாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன். 'அந்தமான் காதலி'யை 'கிரகப்ரவேசம்' என்று நினைத்ததன் விளைவாக, 'என்னைப்போல ஒருவனை' 1976-லேயே ரிலீஸ் பண்ணிட்டீங்க. :D (just joke)
நமது பம்மலார், முரளியார், ராகவேந்தர் இவர்களின் 'புள்ளிவிவரக் கணக்கு' எல்லோரையும் அசர வைக்கும். அவர்களிடம் யாரும் தவறான ஒரு தகவலைச்சொல்லி விட்டு தப்பிவிட முடியாது. ஏற்கெனவே மாற்று முகாம் ரசிகர்களுடன் சண்டை நடந்து, தற்போது பூட்டப்பட்டிருக்கும் திரிகளின் பக்கம் சென்று பார்த்தீர்களானால் தெரியும். நடிகர்திலகத்தின் படங்களின் புள்ளிவிவரம் மட்டுமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களெல்லாம் கூட எப்போது வெளியானது, எத்தனை நாட்கள் ஓடியது, திரையரங்கிலிருந்து அப்படம் எடுக்கப்பட்ட அடுத்தநாள் என்ன படம் அங்கே திரையிடப்பட்டது என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. (1976-ல் நான் சொன்ன ஐந்து படங்கள் தவிர ஜனவரி 26 அன்று 'உனக்காக நான்' மட்டும் ரிலீஸாகியிருந்தது).
நெல்லை திரையரங்க வெளியீடுகள் பற்றிய உங்களின் பதிவுகள் சுவையாக உள்ளன. தொடர்ந்து பதிவிடுவீர்கள் என ஆவலுறுகிறோம். அந்தமான் காதலியை பூர்ணகலாவில் மேலும் நீட்டிக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
பம்மலார், முரளி, ராகவேந்தர் மூவருமே சென்னையில்தான் உள்ளனர். சந்தித்தீர்களானால் அந்த தங்கச்சுரங்கங்களில் ஏராளமான தங்க(த்தகவல்)களை வெட்டியெடுத்துச்செல்லலாம்.
மிக்க நன்றி சாரதா madem அவர்களுக்கு
நீங்கள் கூறியபடி வேறு எந்த திரியும் இவ்வளுவு நீண்டதாக இல்லை. எத்தனை தகவல் எத்தனை நிகழ்வுகள் படிக்க படிக்க இன்ப தேன் வந்து பாயுது காதினிலே இந்த தருணத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்களுடுன் ஒரு சந்திப்பு எனக்கு நிகழ்ந்தது அப்போது தமிழக முன்னேற்ற முன்னணி இயக்கத்தின் ஒரு பொது கூட்டத்திற்கு மேஜர் அவர்கள் (தென்காசி) வந்திருந்த்தார்கள் அவரை அழைத்து செல்ல வேண்டிய கார் சற்று தாமதமாக வந்தது அதனால் அவர்கள் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்போர்ம்இல் வெயிட் செய்து கொண்டிருந்தர்கள். நிகழிசுக்கு ஏற்பாடு செய்த ரசிகர்கள்/கட்சி அங்கத்தினர்கள் யாரும் வரவில்லை நான் வேறு ஒரு வேலை ஆக ரயில்வே ஸ்டேஷன் சென்று இருந்தேன். நானே வலிய சென்று அறிமுகம் செய்து கொண்டேன். அப்போது அவர்கள் சற்று ஜோவியல் ஆக கூறினார்கள் 'சிவாஜி மட்டும் 75 காலகட்டங்களில் பெருந்தலைவர் மறைவுக்கு பிறகு கட்சி ஆரம்பித்து இருந்தால் எங்கோ சென்று இருப்பார். உண்மையான ரசிகர்கள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இன்று கட்சி வளர பெரும் பாடுபட வேண்டி இருக்கிறது' கடைசியில் அவரும் பிரிந்து சென்று விட்டார். அவர் நம்மவரை விட்டு பிரிந்தற்றுகு எதாவது மிக பெரிய காரணம் உள்ளதா தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஆனால் VKR இறுதி வரை அண்ணனுடன் நட்பாகவே இருந்தார் என்று கேள்வி பட்டேன் சிவாஜி/மேஜர்/vkr இல்லை என்றால் நடிகர் சங்கம் என்றோ காணாமல் போய் இருக்கும்.
தியாகம் 100vadhu நாள் விழா நெல்லை பார்வதி திரை அரங்கில் நடந்ததை மிக விரைவில் நினைவுக்கு கொண்டு வர முயற்ச்சி செய்கிறேன்
ஸ்ரீநிவாஸ் அவர்களின் அரசியல் நிகழ்வுகள் கட்டுரை பாதி படித்தேன் 1984 வரை மீதி நமது போரும் இல் உள்ளதா
நன்றியுடன் GK
திரு சிவகுமார் அவர்களின் கட்டுரை படித்தேன் பம்மலர் அவர்களின் வெப்.கேம்ஸ். தளத்தில். இது ஏற்கனவே அவருடய "இது ராஜா பாட்டை அல்ல" புக் இல் வெளியானது என்று நினைக்கிறன் அந்த புத்தகத்தில் அவர் எல்லா நடிகர்களையும் பற்றி எழுதி உள்ளார். ஆனால் சிவாஜிக்கு மாத்திரம் 5 chapters
திரு பம்மலார் அவர்கள் பம்மல் கண்ணதாசன் மன்றம் தலைவர் அல்லது செயலாளர் ஆக உள்ளார்களா
ஏன் என்றால் கடந்த வருடம் வாணி மஹால் ஒரு நிகழிசயில் திரு ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் திருமதி ஜெயசித்ரா அவர்களுக்கும் சிறந்த சாதனையாளர் விருது வழங்கினார்கள் அப்போது அங்கே சென்று இருந்தேன் திரு ஸ்ரீகாந்த் உடல் நலம் குன்றி மேடை ஏறவே மிகவும் கஷ்டபட்டார்கள் அப்போது சுவாமிநாதன் என்ற ஒருவரடுன் பேசிய நினவு திரு ஜெகத்ரட்சகன் அவர்கள் தலைமை வகித்தார்கள் திரு தமிழருவி மணியன் அவர்கள் சிறப்பு பேச்சாளர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு சிறந்த நாட்டிய நிகழ்ச்சி அமைத்து இருந்தார்கள் காதல் மன்னன் heroine மிஸ்.மனு நடனம் ஆடினார்கள்
நட்புடன் Gk
டியர் திரு கிருஷ்ணா,
தங்களுடைய நினைவுகளைப் படிக்கும் பொழுது பல சுவையான தகவல்கள் தெரிய வருகின்றன. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு தகவல் களஞ்சியமே இருக்கும். அதற்கு நீங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா என்ன.
நடிகர் திலகம் அவர்கள் சிறந்த நடிகராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் திகழ்ந்தார்கள். 1975 என்ற ஆண்டினைப் பற்றிப் பலர் கூறும் ஒரே கூற்று அவர் ஸ்தாபன காங்கிரஸை விட்டுச் சென்றிருக்கக் கூடாது என்பது. இதைப் பற்றி அலசும் முன் அன்றைக்கு இருந்த சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது. சரி நடிகர் திலகம் தான் சென்று விட்டார். அதன் பிறகு மற்றவர்கள் அதைத் தொடர்ந்திருக்கலாமே, யார் வேண்டாம் என்றார்கள். ஸ்தாபன காங்கிரஸிலேயே தங்கி விட்ட காமராஜ் விசுவாசிகள் என்று கூறிக்கொண்டவர்கள் ஏன் அக்கட்சியைத் தொடரந்து நடத்தவில்லை. பின்னர் எமர்ஜென்சி காலத்திலேயே அது ஜனதா வாகி பல கட்சிகள் ஒருங்கிணைந்து தானே உத்தமத் தலைவர் மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியையும் அவர்களால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே. ஆனால் அவர்கள் என்ன கூறினார்கள், இனிமேல் சிவாஜி படம் போணியாகாது, யார் பார்ப்பார்கள் என்றெல்லாம் ஏளனம் செய்தார்கள். கலை வேறு அரசியல் வேறு என்பதில் நடிகர் திலகம் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் மக்களும் நன்கு உணர்ந்ததால் தான் அதற்குப் பின்னர் அவருடைய வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்ற திரிசூலம் வெளிவந்தது.
இப்படி பல கேலிகள், ஏளனங்கள் அனைத்தையும் தாண்டித் தான் நடிகர் திலகம் வெற்றிகளைக் குவித்தார். இதில் ஒரு பெரிய விஷயம் என்ன வென்றால் இநதக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் நடிகர் திலகம் அவர்களுக்கும் இடையே நட்பு மேலும் இறுகியது நெருக்கமானது. இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து தம் உண்மையான நட்பைப் பேணிக் காத்தனர். இது தான் நடந்தது. அவர் யாருக்கு ஆதரவளித்தாரோ அந்தக் கட்சியினர் தான் அவரைப் புழுதி வாரித் தூற்றினர். இது ஊரறிந்த உண்மை.
1977-80க்குப் பின் அவர்களெல்லாம் எங்கே. அன்று நடிகர் திலகத்தைத் தூற்றியவர் பலரும் பின்னர் இந்திரா அம்மையார் மீண்டும் பிரதமரான போது அந்தக் காங்கிரஸில் தானே ஐக்கியமாயினர்.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரிடையே இருந்த நெருக்கத்தின் முக்கியமான சான்று. எனக்குத் தெரிந்த வரை நடிகர் திலகமும் எம்.ஜி.ஆர். அவர்களும் அரசியலில் நேருக்கு நேர் மோதியதாகத் தெரியவில்லை. இருவருமே அவரவர் சார்ந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டு தங்களுடைய உழைப்பினையும், பொருள், நேரம் யாவையும் ரசிகர் பலத்தையும் அர்ப்பணித்தனரே யன்றி தமக்காகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. 1977ல் தான் முதன் முதலாக எம்.ஜி.ஆர். அவர்கள் தமக்காக மக்களிடம் போய் நின்றார். அப்போது அவருக்குக துணையாக ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் நடிகர் திலகம். 1980 மற்றும் 1984 ஆண்டுகளில் காங்கிரஸில் நமது சிவாஜிரசிகர் மன்றம் கண்ட சோதனைகள் ஊரறிந்த வரலாறு. 1984ல் பின்னர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலமுற்றிருந்த போது நடிகர் திலகம் அவர்களுக்காக குடும்பத்துடன் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் மசூதிகளிலும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தி அவர் நலம் பெற வேண்டிக் கொண்டார். அது மட்டுமன்றி அமெரிக்கா சென்று அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
இவையெல்லாவற்றையும் விட 1987ல் அவர் மறைந்த பொழுது அவருடைய இயக்கம் சிதறக்கூடாது, ஒன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தானே காங்கிரஸுடன் கருத்து வேறு பாடு கொண்டு விலகினார். பின்னர் அதிமுக மீண்டும் ஒன்றாக இணைந்த போது மகிழ்வுற்றார். அதே போல் 1989ல் தமது உடன் பிறவா சகோதரர் எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியார் ஜானகி அம்மையாருக்காகத் தானே வாக்குக் கேட்டார். அப்போதும் தனக்கெனக் கேட்க வில்லையே. அவருடைய தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்டதே 50 தொகுதிகளில் மட்டும் தானே.
இதையெல்லாம் சொல்லக் காரணம் நடிகர் திலகம் தேர்தலிலும் தோற்றிருக்கலாம், அரசியலிலும் தோற்றதாக சிலர் எண்ணலாம். ஆனால் அதில் மனிதாபிமானமும் நட்பும் சகோதரத்துவமும் காப்பதற்காக உழைத்த உண்மையான மனிதனுக்கேற்பட்ட தோல்வியாகத்தான் கருத வேண்டும். அந்தத் தோல்வியினால் நட்டம் அந்த மனிதருக்கல்ல. அதனால் நாம் சிறுமைப்படத் தேவையில்லை என்பதே என் பணிவான தனிப்பட்ட கருத்து. இதில் கருத்து மாறுபட எவருக்கும் உரிமையுண்டு என்பதையும் நானறிவேன். இது என் தனிப்பட்ட கருத்து என்பதை மட்டும் கூறிக் கொள்ள விழைகிறேன்.
அன்பு நண்பர் கிருஷ்ணா மட்டுமல்ல பல சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் திலகத்தின் தோல்வி பற்றிய ஒரு ஆதங்கம் மனதில் இருந்து கொண்டே யிருக்கும். அதைக் களைவதற்கான முயற்சியே இவ்வளவு நீளமான பதிவு.
ராகவேந்திரன்.
தாராசுரத்தில் ஹரிச்சந்திரா அசுர சாதனை
கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், நமது சத்திய சீலரின் "ஹரிச்சந்திரா" சிகர சாதனை புரிந்துள்ளது. 23.4.2010 வெள்ளி முதல், இங்கே தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], இக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிநடை போட்டு வருவதையும், வெள்ளியன்று மாலைக் காட்சி மட்டும் ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல் வசூல் அளித்ததையும், யாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
மேலும், "ஹரிச்சந்திரா" திரைக்காவியத்தை, வெள்ளி (23.4.2010) இரவுக்காட்சி, சனி (24.4.2010) மாலை மற்றும் இரவுக்காட்சிகள் ஆகிய 3 காட்சிகளில் மொத்தம் 400 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். இந்த 3 காட்சிகளிலும் மொத்தம் ரூ.4,000/-த்துக்கும் மேல் (ரூபாய் நான்காயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், நேற்று (25.4.2010) ஞாயிறன்று மாலைக் காட்சியை மட்டும், 300 மக்களுக்கும் மேல் கண்டு களித்து ரசித்துள்ளனர். இந்த ஒரு காட்சி மட்டும் ரூ.3,000/-த்துக்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்துக்கும் மேல்) வசூல் அளித்துள்ளது. ஆக, ஞாயிறு (25.4.2010) மாலைக் காட்சி வரை, நமது சத்தியசுந்தரத்தின் "ஹரிச்சந்திரா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.9,000/-த்துக்கும் மேல் (ரூபாய் ஒன்பதாயிரத்துக்கும் மேல்).
"வெள்ளி,சனி,ஞாயிறு - மூன்று நாட்களுக்கு மட்டும்" என்ற அறிவிப்புடன் வெளியான இக்காவியம் உருவாக்கிய வசூல் பிரளையத்தால், இன்று 26.4.2010 திங்களன்று நான்காவது நாளாக வெற்றி பவனி வருகிறது. ஏ, பி, சி சென்டர்கள் மட்டுமல்லாது, ரிமோட் சி சென்ட்ர்களான டூரிங் டாக்கீஸுகளிலும் , பராசக்தி காலம் தொடங்கி இன்று வரை ஈடு, இணையற்ற சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவை நமது நடிகர் திலகத்தின் காவியங்களே என்பதற்கு இதை விட வேறென்ன கட்டியம் கூற வேண்டும். சினிமா சாதனைகளின் நிரந்தர சக்கரவர்த்தி நமது நடிகர் திலகமே.
போனஸ் நியூஸ்:
தமிழ்த் திரைப்பட வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு டூரிங் டாக்கீஸில், 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய, முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும், பார் போற்றும் பாரத ஜோதியின் "பாவமன்னிப்பு" திரைக்காவியமே. இராமநாதபுரத்தில் உள்ள சிவாஜி டூரிங் டாக்கீஸில், "பாவமன்னிப்பு" 16.3.1961 வியாழன் முதல் 23.6.1961 வெள்ளி வரை, 100 நாட்கள் ஓடி, விண்ணை முட்டும் வெற்றியைப் பெற்றது.
"ஹரிச்சந்திரா" தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு குதூகலமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
கிருஷ்ணா,
நன்றி. நடிகர் திலகத்தைப் பற்றி மட்டுமல்ல வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்த கோதை நாச்சியாரைப் பற்றியும் ஆழ்ந்து படிப்பவர் நீங்கள் என தெரிகிறது. வாழ்த்துகள்.
நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தை தொடராக எழுதி வந்த நான் அதை 1982-ம் காலக்கட்டத்திற்கு பிறகு தொடர முடியவில்லை. சில உண்மை நிகழ்வுகளை எழுத்தில் வடிக்கும் போது ஏற்படும் நடை முறை சிக்கல் இது. நேரம் காலம் சேர்ந்து வரும் பிறிதொரு காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். நீங்கள் இப்போது மேஜர் பற்றி கேட்டிருக்கும் கேள்வியும் மேற்சொன்னவற்றில் அடங்கும் என்பதால் பின்னர் பேசுவோம்.
நான் சென்னையில்தான் உள்ளேன். நிச்சயமாக சந்திப்போம்.
ராகவேந்தர் சார்,
சரியாக சொன்னீர்கள். யாருக்கு பாடுபட்டாரோ அவர்களே இன்று கேலி பேசுவதுதான் காலத்தின் கோலம். இதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும்.
சுமதி என் சுந்தரி மதுரை வசூல் பற்றி பேசும்போது சில விஷயங்களை குறிப்பிட வேண்டும்.
ஐ.பி.எல்.
சித்திரை திருவிழா
ஞாயிறு மாலை 5.45 முதல் 6.45 வரை இடி மின்னலுடன் பெய்த கன மழை.
புதிய படங்களுக்கே இவற்றை கடந்து வசூலிப்பது என்பது கடினமான விஷயம். அப்படியிருக்க இவற்றையும் மீறி மதுரை மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது. ஆனால் அவர்களையும் விஞ்சும் வண்ணம் தாராசுரம் மக்கள் ஹரிச்சந்திராவிற்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர். வாழ்க அம்மக்கள்.
அன்புடன்
டியர் கிருஷ்ணாஜி, தங்களின் பாராட்டுக்கள் எம்மை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள்!
பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு.டாக். "சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் என்றால்" என்று நீங்கள் எழுதியதால் நிறைய நன்மை. இந்த இளமைக்காவியம் குறித்து எத்தனை அதியற்புதமான பதிவுகள். இதற்காக உங்களுக்கும், கிருஷ்ணாஜிக்கும், திரு.சங்கரா அவ்ர்களுக்கும், "சுமதி என் சுந்தரி" என்று சிவாஜி(மது) கூறினால், "சிவாஜி(மது) என் சுந்தரர்" என முழங்கும் ராகவேந்திரன் சாருக்கும், சுந்தரத் தமிழில் "சுமதி என் சுந்தரி"க்கு சூப்பர் விமர்சனத்தை (இனி இது போல் எவரும் எழுத முடியாது என்கின்ற அளவுக்கு) எழுதிய சகோதரி சாரதாவுக்கும், அபரிமிதமான அற்புதத் தகவல்களை அள்ளி அளித்துள்ள முரளி சாருக்கும் மற்றும் ஜேயாருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!
தங்களின் பாசமிகு பாராட்டுக்களுக்கு நயமிகு நன்றிகள், திரு.காவேரிக் கண்ணன்.
அன்புடன்,
பம்மலார்.
GK அவர்களே,Quote:
Originally Posted by gkrishna
தியாகம் 100 வது நாள் நெல்லை நிகழ்ச்சிகள் பற்றி எழுதுங்கள். என்னை பொறுத்த வரை தியாகம் அனைத்து NT ரசிகர்களுக்கும் பிடித்த படம். இந்த படம் எங்கள் மதுரை சிந்தாமணியில் சில்வர் ஜுபிலி கொண்டாடிய படம். என் cousin தொடர்ந்து 25 முறை பார்த்து ரசித்த படம் (எங்கள் சொந்தக்காரர் தான் அன்றைய தியேட்டர் உரிமையாளர்).
Murali should have lot of information about this movie and madurai celebrations.
Regards
Pammalar,Quote:
Originally Posted by pammalar
As usual, you are outdoing yourself. The collection of SES (rs.40k) is a bit disappointment and it is less than that of Pudhiya Paravai (rs. 45k).
kaaranam ennavo? Chitrai Tiruvizha samayam?
Regards
Hi guys,
I am Sathish from Australia and native of Madurai. I am big big veriyan of Sivaji and was part of GoldStar Sivaji Student Wing in Madurai. We used to have posters for all our Thalaivar NT movies. We are first one started 4 bits poster for "Avan Than Manithan" when releasted in Meenatchi theatre.
I have been NT follower from my class 7th. One time in Alankar theatre for the movie "Nitchaya Thmboolam" myself and my consin both shown "Karpooram" standing on Balcony slap if we miss a step we might have fallen down to ground floor. That time theatre people came and took both of use to theatre admin room and called police. We both are very small ie., 12 years old and not caring about police and looking at 100 days shields displayed in the cabin. Finally NT fans came and rescused us. It is still thrills me a lot.
After my College days (till 1993) I have not gone to theatres on Sundays. Before that every time NT movies released anywhere in Madurai used to watch the movie on Friday evening show, Sunday evening show and last day evening show.
Tac, if your consin watched movies at Chinthamani (his relative threature), then I bet you should be a Sourashtra guy like me...
Because in Madurai more 80% Sourashtra people like one and only NT movies.
I will post my experience in coming days...
Swamynathn, your effort is unbelievable. Thanks for showing Thalaivar NT's movies gala on Sundays which take me back to my olden Madurai days.
Last week I have watched SES in DVD and enjoyed it lot.
I have more than 70 NT movies in DVD and whenever I travel around the world always carry NT movies DVD to refresh and entertain myself.
திரு ராகவேந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி
அன்பு நண்பர் கிருஷ்ணா மட்டுமல்ல பல சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் திலகத்தின் தோல்வி பற்றிய ஒரு ஆதங்கம் மனதில் இருந்து கொண்டே யிருக்கும். அதைக் களைவதற்கான முயற்சியே இவ்வளவு நீளமான பதிவு.
உங்கள் உடைய கருத்து எல்லோர்ருக்கும் நிச்சயமாக ஏற்புடையதே
இந்த பதிவு மூலமாக நம்முடைய (சிவாஜி ரசிகர்கள்) ஆதங்கம் நீங்கினால் மிகவும் நன்றே. நெல்லை சிவாஜி மன்ற தலைவர் ஒருவர் 80 கால கட்டங்களின் துவக்கத்தில் சிவாஜி அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்க முன் வராத போது அதற்காக வாதிட்டு காங்கிரஸ் கட்சியிஇன் ஒரு முக்கிய பிரமுகர் ஒருவரினால் தன்னுடைய வேலைஐ இழந்தார் என்று கேள்விப்பட்டு உள்ளேன் அந்த அளவுக்கு சிவாஜி அவர்கள் ஒரு ரசிக கூட்டதை உருவாக்கி வைத்து இருந்தார் என்பது உண்மை.
நடிகர் திலகம் அவர்கள் என்றுமே தனக்காக வாழவில்லை. உயர்ந்த மனிதன் திரைப்படத்திலே ஒரு வசனம் நினவு டாக்டர் கோபால் (அசோகன்) அவர்கள் "ராஜு நீ ஒரு கோழை சுயநலக்காரன் தீஇலே எறிந்த பார்வதிஐ (வாணிஸ்ரீ) உன்னாலே காப்பாற்ற முடியவில்லை" கூறும் போது "கோபால் என்னை கோழை என்று சொல்லு ஆனால் சுயநலக்காரன் என்று சொல்லாதே நான் என்றும் எனக்காக வாழவில்லை எப்போதுமே பிறருக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்" என்று கூறுவர்.
நான் இதை சினிமா வசனமாக கருதவில்லை நடிகர்திலகத்தின் அடி மனதில் இருந்து வந்த வர்தைகளாகவே கருதுகிறேன்
நட்பு உடன் gk
வெல்கம் கோல்ட் ச்டார்-Mஅதுரை யின் பலம் கூடி வருகிரது
நமது திரியின் புதிய 'தங்க நட்சத்திரம்' சதீஷ் அவர்களை அன்புடன் இருகரம் நீட்டி வரவேற்கிறோம்.
உங்களின் முதற்பதிவே முத்தான பதிவாக அமைந்துள்ளது. சிறு வயதிலேயே நடிகர்திலகத்துக்காக உங்களின் சாகசம் வியப்புற/சிலிர்க்க வைக்கிறது (உங்கள் கஸினுக்கும் சேர்த்துத்தான்). நமது திரியில் நடிகர்திலகத்தின் படை பெருகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஜி.கிருஷ்ணா, காவேரிக்கண்ணன், ராதாகிருஷ்ணன், சதீஷ் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் அசர வைக்கிறது.
முரளியார், tac, இவர்களுடன் இன்னொரு மதுரை மாமணியாக வந்திருக்கும் சதீஷ் அவர்களே உங்களது அனுபவங்களை தொடர்ந்து தந்து அதிசயிக்க வைக்க வேண்டுகிறோம்.
ஜி.கிருஷ்ணா...
நம் சகோதரர் tac சொன்னது போல 'தியாகம்' 100-வது நாள் நெல்லை பார்வதி நிகழ்வுகளை அறிய ஆவலாக இருக்கிறோம். மேஜருடனான சந்திப்பு அருமை. நானும் அவரை சந்தித்திருக்கிறேன். (அவர், நம் அண்ணனை விட்டு விலகிய காரணம் ரொம்ப நெகிழ்வூட்டுவது. யாருடைய பிரிவுக்கும் அண்ணன் இவ்வளவு நெகிழ்ந்ததில்லை. 'இவன் கூட என்னை விட்டுப்போவான்னு நினைக்கலையே' என்று அண்ணன் ரொம்பவே வருந்தினார். ராகவேந்தர் சொன்னதுபோல வெளிப்படையாக அலச முடியாத விஷயங்கள்).
ராதா கிருஷ்ணன்....
அருமையான பதிவுக்கு நன்றி. உங்கள் பங்களிப்பை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்.
காவேரிக்கண்ணன்.....
தெள்ளிய தமிழ்நடையில் வரும் உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.
ராகவேந்தர் சார்...
நடிகர்திலகத்தின் அப்போதைய அரசியல் முடிவை ஆய்ந்து எழுதப்பட்ட அருமையான விளக்கக் கட்டுரை. பலருடைய சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வண்ணம் அமைந்தது. அவர் யார் யாருக்கெல்லாம் ஊர் ஊராகச்சென்று பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தாரோ, அவர்களெல்லாம் கொஞ்சம் கூட கூசாமல் அவரை தாக்கி விமர்சனம் செய்தது ரசிகர்கள் மனதை வலிக்கச்செய்தது. நீங்கள் சொன்னது போல எம்.ஜி.ஆரோ அல்லது கலைஞரோ கூட அவரை அப்படிப்பேசியதில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கூட்டம் மட்டும் அப்படியே அவருடன் துணை நின்று தெம்பும் ஆதரவும் தந்தனர். அதனால் 'உத்தமனி'லிருந்து மீண்டும் வெற்றிகளைக் குவிக்கத் துவங்கினார்.
பம்மலார்....
பாராட்டுக்கு நன்றி. சென்னை நகரில் மட்டுமல்லாது, கிராமங்களிலுள்ள டூரிங் டாக்கீஸ் வரை அண்ணனின் படங்களின் வசூலை திரட்டி நீங்கள் தரும் பாங்கே தனியொரு சாதனை. 'அரிச்சந்திரா' வசூல் விவரம் அசத்தியது. தாராசுரம் மக்களுக்கு நன்றி.
முரளியண்ணா....
தங்களின் அரசியல் கட்டுரை தொடராமல் நின்று போனதில் எங்கள் எல்லோருக்கும் ஏமாற்றமே. என்ன செய்வது?. இடம் பொருள், ஏவல் இருக்கிறதல்லவா. என்னுடைய சிறு யோசனை, நீங்கள் தனியாக Blog ஒரு துவங்கி அதில் அண்ணனின் அரசியல் பயணத்தை விவரிக்கலாம். ரொம்பப்பேர் எதிர்பார்க்கின்றனர்.
Thanks Sarada madam.
Let me start with small flashback.
When "Paddikkathavan" released we had big riverly with Rajinikanth fan which continued on "Viduthalai" release time also. Around that time, Thalaivar NT movie "Nan Vazha Vaiphen" released in Madurai Sivam theatre and as usual Gold Star Sivaji fan had poster for that movie and that time Rajni movie "Kaali" released in Madurai Alankar theatre. We have pasted NVV posters on Rajni face in the Alankar theatre itself on Friday. But on Sunday we found Rajni fans had poster for NVV and they have pasted on the top of our poster everywhere in Madurai including at Sivam theatre which made us very angry and we have shown that on Sunday evening in the theatre whenever Rajni came in the screen we made big noise and Rajni fans were also there but finally our numbers were more, so we won.
Those are happy days....
Next, I should recall "Avan Than Manithan" for 4 bits poster which lots of MGR fans did not like it, because we were first one to start 4 bits of poster that time.
Cheers,
Sathish