not only this..Quote:
Originally Posted by saradhaa_sn
at one stage they both ready to marry - by Abi's request
Printable View
not only this..Quote:
Originally Posted by saradhaa_sn
at one stage they both ready to marry - by Abi's request
sothappal - every alternative day ...Quote:
Originally Posted by saradhaa_sn
your comments - very good
keep on
Love and loyalty are very strange buddies to characters of people. I am sure Thol will be convinced by Abhi about her suspiscions of Thol. Thol's whole adult life has revolved around Abhi. He has no other life. Arathi and Manohar will be caught when Abhi sees her financial statement. I hope she kicks them out of her life. Anandi's behavior is understandable in view of the convincing acting by Arathi. Another interesting character is Krishnan [all purpose self serving opportunist]. I think he is going to tell Abhi everything to get into her favors. Arathi is not the most powerful anymore. Mother Karpagam is hopelessly old fashioned thinking that marriage is the salvation for women. She probably embraces the idea women should suffer and shed tears all the time.
I see Tamil comments. I regret I cannot read Tamil. Can this be written in English script? Is it too much to ask?
Anyone have a clue how long this show will last?
saradhaa mam.. updates pls.... :?
From the episode of 8/5/08 it looks like Abhi is getting a handle on Thol's non-involvement and Arathi's treachery. She needs to expose Arathi and boot her to Adhi's mercies.
Menaka's character is intriguing. Is she a front for something else or a sting operation to look into police dept and Adhi's network?
I am sure Abhi and Thol are going to make up. After all they have invested a lot of time in their relationship.
Thanks for listening to me.
ஆர்த்தியின் சூழ்ச்சியின்படி, ஏற்கெனவே தொல்ஸ் ஏற்பாடு செய்திருந்த இடத்தின் சொந்தக்காரரை வரவழைத்து, அபியின் முன்னால் அந்த இடத்தை தொல்காப்பியன், மேனகாவுக்கு கொடுக்கும்படி சொன்னதாக சொல்ல வைக்கின்றனர். இதற்குப்பின்னால் ஆதியின் சூழ்ச்சி இருக்கிறது.
இடையே கதையை நகர்த்த, திருவேங்கடத்தின் தேர்தல் பிரச்சார கோமாளித்தனங்கள். (இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தேர்தல் பிரச்சாரம். தேர்தல் நடக்குமா, அல்லது அதுவும் கோலங்கள் போலவே இழுத்துக்கொண்டு போகுமா?).
தொல்ஸ் இருக்கும்போது தான் மிரட்டி சாதித்ததுபோல நினைத்துக்கொண்டு, இப்போது தான் வாங்க இருக்கும் இடத்துக்காக அபியிடம் ஆர்த்தி அறுபது லட்சம் பணம் கேட்க, அபி மறுத்துவிடுகிறாள். இப்போது தன்னுடைய கவனம் மட்டுமல்ல ஆர்த்தியின் கவனமும் கூட, தான் புதிதாக செய்ய இருக்கும் டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்ட பற்றித்தான் இருக்க வேண்டும் என்கிறாள். முதல் முறையாக அலுவலகத்தில் ஆர்த்திக்கு மூக்குடைப்பு. உடைத்தவள் அபி என்பதால் ஆர்த்தியால் எந்த ட்ராமாவும் போட முடியவில்லை.
விஷயத்தைக்கேட்ட கிருஷ்ணன், தனக்கு தெரிந்த பேங்க் மேனேஜரிடம் லோன் ஏற்பாடு செய்வதாக சொல்லி ஆர்த்தியை அழைத்துப்போகிறார். அங்கே இவர்களுக்கு முன்னமே வந்து காத்திருக்கும் தொல்ஸ் இவர்களைப் பார்த்துவிட இவர்களுக்கு அதிர்ச்சி. முதலில் தொல்ஸ் மேனேஜரை சந்தித்து, பாண்டிச்சேரி ஆஸ்ரமம் ஒன்றுக்கு பேங்கின் நிதியுதவி கேட்க மேனேஜரும் அதை ஒப்புக்கொள்ள அவன் சென்றபின், 'நரிகள்' இரண்டும் உள்ளே போகின்றன. நிலம் வாங்க இப்போது லோன் தருவதில்லை என்று மேனேஜர் மறுத்துவிட, இது தொல்ஸின் சதிதான் என்று அவர்கள் குறுக்குப் புத்தி நினைக்கிறது.
அபிக்கும் தொல்ஸுக்கும் இடையில் பிரச்சினை பண்ணி அவர்களை பிரித்துவிட்டதாக ஆதி, மேனகாவிடம் சொல்ல அதற்கு அவள் தொல்ஸை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று கூறி ஆதிக்கு மேனகா அதிர்ச்சியளிக்கிறாள். (தொல்ஸ் விஷயத்தில் மேனகா எப்போதும் 'ஸாஃப்ட் கார்னரை'யே கையாள்கிறாள். அவன் தன் அண்ணன்தான் என்று அவள் உள்மனம் சொல்கிறதோ?. தன்மீது கொலை முயற்சி விஷயமாகக் கூட மற்றவர்கள் தொல்ஸ்மீது பழி சுமத்தினாலும் மேனகா நம்ப மறுக்கிறாள்).
ஆர்த்தி மீண்டும் அபியிடம் வந்து, தொல்ஸ் தனியாக தொழில் செய்ய லோன் பெற முயற்சிப்பதாக சொல்ல, இதனிடையே, ஆர்த்தியை புகைப்படம் எடுத்தவனை அபி அழைத்து, சில பொறுப்புக்களைக் கொடுக்கும் கையோடு, தொல்ஸ் ஆர்த்தியை போட்டோ எடுத்த விஷயத்தையும் விசாரிக்கிறாள்.
Thank You for the updates Saradhaa. I really appreciate it.
:rotfl:Quote:
Originally Posted by saradhaa_sn
தேர்தலில் தோழர் பாலகிருஷ்ணனைத் தோற்கடிக்க ஆதி, தேவராஜ் பாண்டியன், திருவேங்கடம் ஆகியோர் (வழக்கமாக எல்லா சீரியல்களிலும் வருவதுபோல, அரைகுறையாக கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிட மாடியில் நின்றபடி) சதியாலோசனைகளில் ஈடுபடுகின்றனர். இதுவரை நடந்த பிரச்சாரத்தில் திருவேங்கடத்தின் பின்னடைவுக்கும், தோழரின் முன்னேற்றத்துக்கும் காரணம் திருவேங்கடத்தின் அர்த்தமற்ற உளறல் பிரச்சாரங்களும், தோழரின் ஆணித்தரமான அணுகுமுறையும்தான் என்று ஆதி சித்தப்பாவிடம் கோபிக்கிறான். தோழரைவீழ்த்த ஒரு நல்லதிட்டம் இருப்பதாக தே.பா.சொல்ல, அது வழக்கம்போல பின்னணி இசையுடன் வெறும் வாயசைப்பில் காண்பிக்கப்படுகிறது.
தோழரின் போஸ்ட்டர் ஒட்டிய அதே இடத்தில் அவரது போஸ்ட்டருக்கு மேலேயே திருவேங்கடத்தின் போஸ்ட்டர் ஒட்டப்பட, தொண்டர்களுக்கிடையே கைகலப்பு, அடிதடி, சண்டை. தோழரின் இரண்டே ஆட்களை எதிரணியினர் ஒரு ஆட்டோ நிறைய வந்து அடித்து நொறுக்கிப் போகின்றனர். வழக்கம்போல (கையூட்டு பெற்ற) காவல்துறை தோழரின் ஒரு தொண்டரை விசாரணை என்ற பெயரில் அழைத்துப்போகிறது. இன்னொரு தொண்டர் நிலை கவலைக்கிடம்.
அபியின் அலுவலகத்தில் அவளது அழைப்பின் பேரில் அம்மா, ஆனந்தி, மனோ, ஆர்த்தி எல்லோரும் ஆஜர். கூடவே குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத 'நரி கிருஷ்ணன்'. தன் கம்பெனி தற்போது பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற இருப்பதால் அவர்கள் அனைவரையும் டைரக்டர்களாக்க இருப்பதாக அபி சொல்ல எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால் ஆனந்தி, தான் பத்திரிகைத்துறையில் இருப்பதால், தன்மீது கேஸ், அது இது என்று பிரச்சினைகள் வரக்கூடும் என்றும் அது கம்பெனியின் நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால், தான் அந்த பொறுப்பை ஏற்கமுடியாது என்றும், மற்றவர்கள் இருந்தால் போதும் என்று கூறி விலகிவிடுகிறாள். புதிய பொறுப்பால் ஆர்த்திக்கும், மனோவுக்கும் நாக்கில் ஜலம். அம்மா வழக்கம்போல 'எனக்கெதுக்கும்மா இதெல்லாம்' என்று விலக முயற்சிக்க, அபி சம்மதிக்க வைக்கிறாள்.
இப்போது ஒரு புதிய பிரச்சினை கிளம்புகிறது. தொல்காப்பியனும் கம்பெனியில் இருப்பாரா என்று அம்மா கேட்க, அவரும் ஒரு ஷேர் ஹோல்டர் என்பதால் இருப்பார் என்று அபி சொல்ல, தொல்ஸ் கம்பெனியில் இருந்தால், தன்னால் இந்த பொறுப்பை ஏற்க முடியாது என்றும், தான் வீட்டைவிட்டே வெளியேறி முதியோர் இல்லத்தில் போய் தங்கப்போவதாகவும் அம்மா குண்டைப்போட, அபி அதிர்கிறாள். அம்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்த்தி, மனோ, ஆனந்தி மூவரும் வெளியேறுகின்றனர்.
நேற்று கொஞ்சம் சுறுசுறுப்பு... இன்று எப்படியோ...
எப்படி ...Quote:
Originally Posted by saradhaa_sn
On today episode, Abi asked Visvanathan to tell Thols to leave the company. Thols left the company without arguing or fighting. He also refused the money they gave him. Abi was sad and crying, but didn't say a word to Thols. Arthi as usual was laughing.
வஞ்சகமும் சூழ்ச்சியும் வென்றது... தொல்காப்பியன் வெளியேற்றப்பட்டார்... நட்பு, நட்பு என்று வாய்கிழிய பேசிய அபி, தன் குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து நட்பை தன் ஹீல்ஸ் செருப்பால் குதறித்தள்ளினார்....
முன்னதாக, தேர்தலில் தான் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்ற தீராத தாகமெடுத்து அலையும் திருவேங்கடம், அதற்காக தேவராஜ பாண்டியன் மற்றும் ஆதியுடன் சேர்ந்து ஒரு நாடகம் அரங்கேற்றுகிறார். அதன்படி தன்வீட்டில் மிக பவ்யமாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போது (அவரால் செட்டப் செய்யப்பட்ட) குண்டர்கள், தோழரின் ஆதரவாளர்கள் போல கோஷமிட்டுக்கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கின்றனர். அவரது குடும்பத்துப்பெண்களுடனும் தரக்குறைவாக நடக்க முற்பட்டதுடன், அவர்களை ஒரு அறையில் அடைத்து வைக்கின்றனர். இவையனைத்தும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடப்பதுடன், அவர்களது வீடியோ கேமராவிலும் பதிவாகிக் கொண்டு இருக்கிறது.
இதை சாக்காக வைத்து (காசு வாங்கிய) காவல்துறைனர் தோழரின் இருப்பிடம் சென்று அவரைக் கைது செய்து காவல் நிலையம் கொண்டு செல்ல, அங்கு (முன்னொருமுறை) ஆக்ரோஷத்துடன் தோழர், திருவேங்கடத்துடன் வாக்குவாதம் செய்ததை வீடியோவில் போட்டுக்காட்டி அதை ஆதாரமாக்குகின்றனர். அப்போது கழுத்தில் கட்டுடன் அங்கு வரும் திருவேங்கடம், அங்கும் தன் நாடகத்தைத் தொடர்கிறார். தோழரை தண்டிக்க வேண்டாமென்றும் விட்டுவிடுமாறும் ஏவல்துறையினரிடம் சொல்ல அவர்கள் விடுவிக்கின்றனர். அங்கும் பத்திரிக்கையாளர்கள் குழுமியிருக்க, அவர்கள் இவரது நாடகத்தை உண்மையென நம்புகின்றனர். திருவேங்கடத்தின் நாடகம் மகத்தான வெற்றி........ , இது ஒருபக்கம்.
இன்னொரு பக்கம் தொல்காப்பியனை வெளியேற்றியே தீரவேண்டும் என்று அபியின் குடும்பத்தினர் அனைவரும் (ஆனந்தி உள்பட) நிர்ப்பந்திக்க, வேறு வழியின்றி அபி சம்மத்தித்து, தொல்ஸுக்கு ஐம்பது லட்சரூபாய் கொடுக்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஐம்பது லட்சம் கொடுக்க ஆர்த்தி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். (அவள் முப்பாட்டன் வீட்டு சொத்து போல).
ஞாயிறு அன்று, தேவாலயம் சென்று சாந்தியின் மகளைப் பார்க்கும் வழக்கமுள்ள தொல்ஸ் அங்கு போக, டிடெக்டிவ் ஏஜென்ஸியின் சித்ரா அவரைச் சந்திக்கிறாள். (கிருஷ்ணன் அட்ரஸ் கொடுத்தது நமக்கு தெரியும்). சித்ராவின் பேச்சிலும் நடத்தையிலும், தொல்ஸ் மீது ரொம்ப மதிப்பும் நட்பும் பாராட்டுவதுபோல தெரிகிறது. அவள் சென்றதும் நரிகிருஷ்ணன் தொல்ஸைப் பார்த்து, அபி மறுநாள் அலுவலகம் அழைத்ததாக சொல்கிறார், காரணம் தெரிந்தும் சொல்லாமல்.
மறுநாள், கான்ஃப்ரன்ஸ் டேபிளில் அபி, விஸ்வநாதன், ராஜாமணி மேடம், ஆர்த்தி ஆகியோர் காத்திருக்கின்றனர். (அபி கோமாவில் கிடந்தபோதும், ஆதியால பலமுறை குறிவைத்து தாக்கப்பட்ட போதும், அபி, பல்வேறு சங்கடத்தில் தவித்தபோதும் இவர்களெல்லாம் எங்கே போயிருந்தனர் என்று தெரியவில்லை). தொல்ஸை கம்பெனியைவிட்டு வெளியேற்றும் விஷயத்தை, விஸ்வநாதன்தான் தொல்ஸிடம் சொல்ல வேண்டும் என்று அபி சொல்கிறாள். எல்லோரும் பெரும் புயலை எதிர்பார்த்திருக்க தொல்காப்பியன் ஆஜர்....
தொல்காப்பியனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்ததும், அபியின் முகத்தில் சொல்ல முடியாத சோகமும் கலக்கமும் சூழ்கிறது. சொல்லப்போகும் விஷயத்தை தொல்ஸ் எப்படி எடுத்துக்கொள்வாரோ, பிரச்சினை வெடிக்குமோ என்ற திகில் அபியிடம் மட்டுமல்ல, கூடியிருக்கும் அனைவரிடமும் இருக்கிறது... ஆர்த்தியைத் தவிர. அவள் தொல்ஸை எந்த வகையிலும் மேலும் அவமானப் படுத்தவும் அசிங்கப்ப்டுத்தவும் தயாராக இருக்கிறாள்.
விஸ்வநாதன் தொல்ஸை உட்காரச்சொல்ல, அவர் உட்கார மறுத்து நிற்கிறார். எப்படி சொல்வது என்று தயங்கியபடி விஸ்வநாதன் பெரிய பீடிகையெல்லாம் போட்டு கடைசியில் தொல்ஸை கம்பெனியைவிட்டு வெளியேற்ற அவர்கள் அனைவரும் முடிவு செய்திருப்பதாகச் சொல்ல, தொல்ஸ் முகத்தில் அதிர்ச்சி.. கண நேரம்தான். மறுபடியும் 'இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்' என்பது போன்ற அவரது ட்ரேட் மார்க் புன்னகை.
சட்டென்று சுதாரித்துக்கொண்டு காரணம் கேட்க அவர்களால் காரணம் சொல்ல முடியவில்லை. தொல்ஸ் இருந்தால் அபி குடும்பம் விலகிப்போகும் என்ற காரணம் மட்டுமே சொல்லப்படுகிறது. எவ்வித சலனமும் இலாமல், 'சார், நான் எங்கே கையெழுத்துபோடணும்னு சொல்லுங்க. போட்டுக் கொடுத்துட்டுப் போறேன்' என்று தொல்ஸ் சொல்ல ராஜாமணி, விஸ்வநாதன் முகத்தில் ஆச்சரியம், ஆர்த்தி முகத்தில் புன்னகை, அபி முகத்தில் சொல்லமுடியாத வேதனை. (தேவயானியின் முகபாவம் அபாரம்). கையெழுத்துப்போட்டுவிட்டு திரும்பிப்போகும் தொல்ஸை விஸ்வநாதன் அழைத்து ஒரு கவரை நீட்ட, அது என்ன என்று கேட்க, அவருடைய உழைபுக்கு சன்மானமாக ஐம்பது லட்சம் ரூபாய் செக் இருப்பதாக விசு சொல்ல, தொல்ஸ் அதை மறுத்து வெளியேறுகிறார்.
காலம் காலமாக கட்டிக்காத்த நட்புப்பாலம், சில நரிகளின் சூழ்ச்சியால் தகர்த்தெறியப்பட்ட வேதனையுடன் அமர்ந்திருக்கும் அபி முகத்தி கேமரா FREEZE ஆக.......
இன்று என்ன நடக்கிறதென்று பார்ப்போம்....
thank youQuote:
Originally Posted by saradhaa_sn
பார்ப்போம்....
How come Abi - buddhisali, thiramaisali, porumaisali .............. etc etc. can easily believe one side (not even give an option to the other person to talk) and take such decisions ?
Thols-kku thyagi pattam nerungi varugiradhu.
I don't think Abi completely believes Aarthi. When the employee who took the picture of Arthi came she asked him in a very suspicious and unsettled tone. Also the way she's been behaving toward Arthi shows she's a little mad. When Arthi came in and said nothing, she told her to go do her work. And when Narayan said Thols is playing a double games she yelled at him. MAkes me wonder if Thols and Abi are secretly friends. Also when ever people aks about Abi to Thols like The Father at church or Manager he answers it like they are still friends.Quote:
Originally Posted by sudha india
அபி தொல்காப்பியனை வெளியேற்றியதற்கு முழுக்காரணம் தன் தங்கை ஆர்த்தியின் பேச்சை நம்பி தொல்ஸ் மீது சந்தேகப்பட்டதால் அல்ல. அப்போதும்கூட அவள்தொல்ஸை கம்பெனியின் பார்ட்னராக வைத்திருக்கவே விரும்புகிறாள். ஆனால் அபியைப் பணிய வைத்தது குடும்பத்தாரின் நிர்ப்பந்தம்.Quote:
Originally Posted by sudha india
தொல்காப்பியன் இருந்தால் தான் கம்பெனியின் ஷேர்ஹோல்டராக இருக்க மாட்டேன் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வீட்டையே விட்டு வெளியேறி ஏதாவது முதியோர் இல்லத்தில் போய் தங்கி விடுவேன் என்று அபியின் அம்மா மிரட்டும்போது அவளால் என்ன செய்ய முடியும்..?. தொல்காப்பியன் என்ற ஒருவன் இல்லையென்றால் அபியின் கதை எப்போதோ முடிந்திருக்கும், தன் சக்களத்தி மகன் ஆதித்யா அவளை எப்பவோ கொன்று புதைத்திருப்பான் என்பதை அந்த நன்றிகெட்ட (தா)ய் மறந்தது ஏனோ...?.
இப்போது OFFICE-ல், தன்னை வீட்டு விசேஷத்துக்கு அழைத்து வேண்டுமென்றே அவமானப் படுத்திய ஆர்த்தி, மனோ பக்கத்தில் கொஞ்சமும் வெட்கமின்றி உட்கர்ந்திருக்கிறாள்.
ஆதியை விட, காஞ்சனாவை விட, பாஸ்கரை விட, அலமேலுவை விட, திருவேங்கடத்தை விட படுமோசமான கேரக்டர் அபியின் அம்மா கற்பகம். எல்லாவற்றையும் மிரட்டியும், கண்ணீர் சிந்தியும் சாதித்துக் கொள்கிறாள்.
தேவராஜ பாண்டியன், திருவேங்கடம், ஆதித்யா ஆகியோர் மதுவருந்திக்கொண்டு இருக்கும் இடத்துக்கு வரும் கிரியிடம், தொல்காப்பியன் இருக்குமிடம் பற்றி எந்த தகவலும் கிடைத்ததா என்று கேட்க, கிரி மறுக்க, ஆதி கோபப்பட, அதே சமயம் கிரி இன்னொரு குண்டைத் தூக்கிப்போடுகிறான். ஆதி பார்ட்னராக இருக்கும் எம்.எம்.சிட்டி மேக்கர்ஸ் வேலைக்கு முக்கியத்துவம் தராமல், மேனகா தான் தனியாக செய்யும் 'மேனகா டவர்ஸ்' வேலையை மட்டுமே கவனம் செலுத்துவதாக மற்றவர்கள் பேசுவதாக சொல்ல, ஆதி கலங்கிப்போகிறான்.
அதே வேகத்துடன் மேனகாவைச்சந்திக்கும் அவன், அடக்க ஒடுக்கமாய் மெல்ல அவளிடம் விஷயத்தைச் சொல்ல அவள் கோபத்தின் உச்சிக்குப்போகிறாள். தன்னைப் பற்றி ஆதிக்கு சந்தேகம் வந்துவிட்டதாக கூறி, அவனை ப்ராஜக்டிலிருந்து விலகி விடுமாறு கொதிக்கிறாள். ஆதி குறிப்பிட்ட ப்ராஜக்ட் விஷயமாக என்னவெல்லாம் வேலைகளை தான் மேற்கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டிய அவள், இனிமேலும் ஆதி தன்னுடன் பார்ட்னராக இருக்க தான் விரும்பவில்லையென்றும், அவன் தன்னிடம் முதலீடு செய்த பணம் முழுவதையும் மறுநாள் வந்து வட்டியுடன் வாங்கிச்செல்லுமாறும் சொல்லி அதற்கு மேல் அவனிடம் பேச விரும்பவில்லையென்று அவனை வெளியேற்றுகிறாள்.
(இதற்கு முன் தனிக்காட்டு ராஜாவாக உலாவந்த ஆதி, தற்போது தன் கம்பீரம் இழந்து மேனகாவிடம் ஒரு அடிமை போல கெஞ்சுவது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. ஆயிரம்தான் அவன் கெட்டவனாக இருந்தபோதிலும் இந்த தொடரில் கம்பீரமாக உலாவந்தவன் ஆதி. இப்போது மேனகாவின் எடுபிடிபோல ஆனது வருத்தமாக இருக்கிறது. எங்கள் அஜய்கபூர் மீண்டும் சிங்கமாக உலவ வேண்டும்).
பெங்களூரில் இருந்து காரில் சென்னை திரும்பிக்கொண்டு இருக்கும் 'உஷா' (நினைவிருக்கிறதா?), வழியில் கார் ரிப்பேராகிப் போக நடுவழியில் நின்றுகொண்டிருக்கிறாள். வண்டி ரெடியாக நேரமாகும் என்று கூறும் டிரைவர், வேறொரு ட்ராவல்ஸ் வண்டிக்கு தகவல் சொல்லியிருப்பதாக கூறுகிறான். இதனிடையே அவ்வழியே 'பைக்'கில் வரும், அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஊழியர் ஒருவர், உஷாவைப் பார்த்து வண்டியைவிட்டிறங்கி நலம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது ட்ராவல்ஸ் வண்டி வருகிறது. வண்டியிலிருந்து இறங்கும் டிரைவர் வேறு யாருமல்ல தொல்காப்பியன்தான்.
அந்த இடத்தில், அந்த கோலத்தில் தன் நண்பரும் கம்பெனி பார்ட்னருமான தொல்ஸைப்பார்த்து உஷாவுக்கு அதிர்ச்சி. கம்பெனி பெரிய ப்ராஜக்ட் ஒன்றை எடுத்து அதில் மும்முரமாக மூழ்கியிருக்கும் வேளையில், அதன் முதுகெலும்பான ஒரு நபர் ட்ராவல்ஸ் வண்டி ஓட்டுவதாவது..?. உஷா குழப்பத்தின் எல்லைக்குப்போய் விவரம் கேட்க, தொல்ஸ் மழுப்ப, உடனிருக்கும் ஊழியர் நடந்தவையனைத்தையும் புட்டு, புட்டு வைக்க உஷாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. மற்றவைகளை வண்டியில் போகும்போது பேசிக்கொள்ளலாம் என்று கூறி, அந்த ஊழியருக்கு விடைகொடுத்தனுப்பி வண்டியில் ஏறும் உஷா, தொல்ஸிடம் விவரம் கேட்க, அவர் ஏதோ தத்துவக் கதைகளையெல்லாம் சொல்ல, உஷாவுக்கு மட்டுமல்ல நமக்கும் புரியவில்லை. இன்னும் வண்டியில்தான் அவர்கள் போய்க்கொண்டிருப்பதால், மேலும் பேசிக்கொண்டு போவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
(அந்த வண்டியில் தொல்ஸும் உஷாவும் மட்டுமல்ல, நாமும் சேர்ந்து பயணிப்பது போன்ற நினைவைத்தரும் அருமையான ஒளிப்பதிவு).
As usual good update saradha.....
I saw y/days episode and for no speacific reason, I am thinking of the tamil movie "THOOKU THOOKI"
TO compare with kolangal :
Konduvandhal thandhai : No respect for the fathers in this serial. so we leave it.
Kondu vandhalum varavittalum Thai : Karpagam - Evlovuthan avamana paduthappattalum namma kozhandhaigalthanennu oru character. Goes on getting humiliated knowing well that she will get kicked.
Kanchana : Adhi evlo kolai pannalum, he is great-nu oru feeling.
(Indha thaaigalai parthale peyai pakra feeling...Adhaiyum meeri oru erichal varudhu)
Seerudan vandhal sagodhari : Anu and Arthi can be taken as example. Adhi and Mano avangala support panra varaikkum OK. Kelvi kettal....thats the end of a good sister.
Kolaiyum seival pathini : Enakkennavo the second wife of Baskar will do that-nu thonudhu - for killing her dear father.......
Uyir kaappan thozhan : Ofcourse the story line is friendship between Thols, abi and Usha. Thols has already save Abi many times. Now it may be Usha saving Thols by telling the truth to Abi. Uyiraivida sirandha Maanathai (manidhaabimaanathai) kaappathuvaal endru ninaikiren.
//Dear friends - Dont get upset with me for comparing the evergreen Thooku thooki with this serial. Just sharing my thoughts //
இந்த வரிக்கு அவசியமே இல்லை சுதா...Quote:
Originally Posted by sudha india
மிக அருமையாக ஒப்பிட்டிருக்கிறீர்கள்.
எனக்கென்னவோ, உஷா அவ்வளவு சீக்கிரம் அபியையும், தொல்ஸையும் சேர்த்து வைத்துவிடக்கூடாது. தொல்காப்பியன் இல்லாத நிர்வாகம் எவ்வளவு சீரழிவைச் சந்திக்கும் என்பதை அபி மட்டுமல்ல, அவளது மொத்த குடும்பமும் (ஆனந்தி உட்பட) உணர வேண்டும். அதன் பலனை அனுபவிக்க வேண்டும். ஆர்த்தியின் அடாவடித்தனங்கள் அபியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவை வெளிச்சத்துக்கு வரவேண்டும்.
அதுவரை அபியும் தொல்ஸும் விலகியே இருக்க வேண்டும்.
:exactly:Quote:
Originally Posted by saradhaa_sn
:clap: :clap:Quote:
Originally Posted by saradhaa_sn
It's nice to have Usha back and she's back as the old Usha. The old Usha was strong and stands up to what she believes. It's nice they bought her in, since Abi's character has changed and no longer stands up to what she believes. Like when she didn't want Thols to leave the company, but she still let her family talk her into leaving the company.
இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு மேனகாவிடம் பெற்றிருந்த நல்ல பெயரை சில நிமிடங்களில் இழந்துவிட்ட துக்கத்தில் ஆதித்யா தவிக்கிறான். பலமுறை போன் செய்தபோதும், மேனகா எடுக்கவில்லை. அவன் கோபம் முழுக்க கிரியின்மீது திரும்புகிறது. தேவராஜ பாண்டியன் சமாதானம் சொன்னபோதும் அவனுக்கு திருப்தியில்லை. கடைசி முயற்சியாக தேவராஜனின் 'செல்'மூலம் முயற்சிக்க, புதிய எண்ணைக்கண்டதும் போனை அட்டெண்ட் பண்ணும் மேனகா, ஆதியின் குரலைக்கேட்டதும் 'கட்' பண்ணுகிறாள்.
(இந்த மேனகாவுக்கு அலுவகம என்றெல்லாம் எதுவும் கிடையாதா?. எப்போது பார்த்தாலும் ஒரு 'லேப்டாப்பை' மடியில் வைத்துக்கொண்டு (மேஜையில் கூட அல்ல). இருக்கிறாள். பக்கத்தில் ஒரு ஆணும் பெண்ணும் (ஜெனிபர்..?) நின்றுகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் உட்கார்ந்து பார்த்ததில்லை, பாவம். மற்றபடி ஒரு ஆஃபீஸோ, அதில் அவளுக்கென்று ஒரு அறையோ காண்பிக்கப்படவில்லை).
அபியின் அலுவலகம் வரும் உஷா, அபியின் மனமாற்றம் பற்றி பூடகமாகப் பேசுகிறாள். ஒரு கட்டத்தில், அவள் ஏற்கெனவே தொல்காப்பியனை சந்தித்துவிட்டு வந்திருப்பதாக கூறி, நடந்தவற்றுக்கு விளக்கம் கேட்க, அபியிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை. நடந்த உரையாடலை ஒட்டுக்கேட்டுவிட்டு உள்ளே நுழையும் ஆர்த்தி, தொல்ஸைப்பற்றி மோசமாக விமர்சித்ததுடன், அவன் தன்னிடமே தகாத முறையில் நடந்ததாக கூற, இப்போது உஷாவுக்கு அதிர்ச்சி. தொல்ஸ் இப்படி நடந்திருப்பாரா என்பதால் அல்ல. அவர்மீது எப்படி இந்தமாதிரி ஒரு பழி விழுந்தது என்று.
தொடர்ந்து தொல்ஸுக்கு சப்போர்ட்டாகப்பேசும் உஷாவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எரிச்சல் அடையும் ஆர்த்தி, உஷாவையே தனிப்பட்ட முறையில் (புருஷனோடு வாழமுடியாத வாழாவெட்டி என்று) தாக்குகிறாள், தன் அக்கா அபியும் அந்த கேரக்டர்தான் என்பதையும், தானும்கூட கொஞ்சநாள் அப்படி வாழ்ந்தததையும் மறந்து.
தங்கையைப் பேசவிட்டுவிட்டு தான் எதுவும் பேசாமல், அவளையும் அடக்கிவைக்காமல் இருக்கும் அபியின் செயல் உஷாவுக்கு கோபத்தைதர, உஷா வெளியேறுகிறாள். அவள் சென்றபின், அவளோடு சேர்ந்திருந்த அந்த பசுமையான, மற்றும் கஷ்டமான நாட்களை அபி நினைத்துப்பார்க்கிறாள். (தொல்ஸ் வெளியேற்றப்பட்டபோதும், அவன் தனக்காகப் பட்ட கஷ்ட்டங்களை நினைத்துப்பார்த்தாள்).
(நேற்று, சுதந்திர தினத்தையொட்டி ஒளிபரப்பப்பட்ட 'திருவிளையாடல் ஆரம்பம்' திரைப்படம், கோலங்கள் நேரத்தையும் சேர்த்து விழுங்கி விட்டது. அதனால் 'அரசி'யில் இருந்தே சீரியல்கள் துவங்கின).
wow saradha madam... thanks a lot for ur updates again :D
your update is helpful for somany viewers who all are not able to see the serial :D
hi sudha Maami.. nice comparision :clap:
Arthi sis..
Why not you change your name and put a good one.
You see, wherever you watch, ARTHIs are always trouble makers for others (except you).
i am an exceptional!!! serial names are fake ones... :PQuote:
Originally Posted by mr_karthik
Real Arthis are just oppsite to Serial Arthis :thumbsup:
-- deleted --
commnets about " kolankal " only are welcome here
ஏற்கெனவே போனில் மேனகாவைத் தொடர்புகொள்ள முயன்று தோற்ற ஆதி, நேரில் அவளைப்பார்க்க வருகிறான். அப்போது அவள் கார்த்திக்கிடம் பிஸினஸ் விஷயமாக முக்கிய டிஸ்கஷனில் இருக்க, ஆதியைக் கண்டுகொள்ளவில்லை. ஆதிக்கு நெருப்பின் மீது நிற்பதுபோலிருக்கிறது. போதாக்குறைக்கு கார்த்திக் போகும்போது தன் பங்குக்கு ஆதிக்கு அட்வைஸ் பண்ணி விட்டுப்போக, 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்ற நிலை ஆதிக்கு. ஒருவழியாக ஆதியிடம் முகம் கொடுத்துப்பேசும் மேனகாவிடம், ரொம்பவே பணிந்து பவ்யமாக மன்னிப்பு கேட்கிறான் ஆதி. என்ன செய்வது, சிங்கத்தின் வாயில் தலையைக்கொடுத்தாயிற்றே. இனிமேல் மேனகாவிடம் தன்னுடைய ப்ராஜக்ட் பற்றி எந்த ஒரு வார்த்தையும் கேட்கமாட்டேன் என்று சத்தியம் செய்கிறான். மேனகாவிடம் ஆதியின் பிடி வசமாக மாட்டிக்கொண்டது. இனி எந்தக்காலமும் அவன் மேனகாவிடம் எதுவும் கேட்க முடியாது. உடனடியாக ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யும்படி தன் எடுபிடிகளில் தலைமை எடுபிடியிடம் சொல்கிறாள். பின் என்ன அது அலுவலகமா, அல்லது அவன்தான் ஆபீஸரா..?. எப்போதும் மேனகாவுக்குப் பக்கத்தில் அடியாட்கள் போலவே நின்று கொண்டிருக்கின்றனர்.
தோழரின் பாசறை. ஆனந்தி மேனகாவின் பிரஸ் மீட்டுக்குப் போகப்போவதாகவும், அவளைப்பற்றியும், ஆதியைப்பற்றியும், தேவராஜ பாண்டியனைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் சேகரித்து வைத்திருப்பதாகவும் விரைவில் தன்னுடைய பத்திரிகையில் வெளியிடப்போவதாகவும் தோழரிடம் சொல்கிறாள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக கடலோரப்பகுதியில் சிறிய வீடு எடுத்து தங்கியிருக்கும் தொல்காப்பியனைப் பார்க்க சித்ரா வருகிறாள். அங்கிருந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டு வீட்டை அடையும் அவள் உருப்படியாக எதுவும் பேசவில்லை. இரண்டு துண்டு பிரட் தின்றதோடு சரி. கிளம்பிப்போகும்போது, ஷேர் ஆட்டோவில் போக, அதில் ஏற்கெனவே வின்சென்ட் இருக்கிறான் (இப்போது புது அவதாரமான பிராமணர் வேடத்தில்..., விட்டால் இவரும் தசாவதாரம் எடுப்பாரோ). ஆட்டோவில் போகும்போது விவேக்கிடம் இருந்து போன் வர சித்ரா பேசுகிறாள் (தொல்காப்பியனின் பெயரைக் குறிப்பிடாமல்). ஒரு இடத்தில் வின்சென்ட் இறங்கிக்கொள்ள, ஆட்டோ புறப்படும் நேரத்தில் போனில் சித்ரா தொல்காப்பியன் பெயரைச்சொல்ல இவர் அதிர்கிறார். சுதாரிப்பதற்குள் ஆட்டோ போய்விடுகிறது. (வின்சென்ட் குடியிருக்கும் வீட்டு மாடியில்தான் சித்ரா குடியிருக்கிறாள். இப்போது சித்ராவை வின்சென்ட் பார்த்துவிட்டார். அவளுக்கும் தொல்ஸுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிந்து விட்டது).
தன்னுடைய ப்ராஜக்டுக்கு பார்த்த இடத்தை விலைபேச கிருஷ்ணனுடன், அந்த இடத்தின் சொந்தக்காரரைச் சந்திக்கப்போகிறாள் அபி. ஓனர் இப்போ வந்துவிடுவார் என்று அங்குள்ள ஒருவர், இவர்களை ஓனரின் அறைக்கு அழைத்துச்சென்று அமர வைக்கிறார். காத்திருக்கிறார்கள். ஓனர் வருகிறார், வேறு யாருமல்ல பாஸ்கர்தான். ஸ்டாஃப்களின் குட்மார்னிங்'களைப் பெற்றுக்கொண்டு (அபி அமர்ந்திருக்கும்) தன்னுடைய அறையின் கதவைத்திறக்க.... FREEZE.... (Freeze ஆனது அபியோ, பாஸ்கரோ அல்ல, காட்சி..)
Thank you saradhaa_sn
keep up
தொல்ஸ் /சித்ரா
யாருக்கும் கஸ்டம் கொடுப்பதில்லயாம் என்கின்றர்ர் தொல்ஸ்
இந்த கோலங்களை விடவா ..
:-)
அபியைத் தன்னுடைய அறையில் பார்த்த பாஸ்கருக்கு இன்ப அதிர்ச்சி. தன்னுடைய இடத்தை விலைக்கு வாங்க அபி வந்திருக்கிறாள், அதன் மூலம் அபியுடன் தன் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவன் புன்னகையில் தெரிகிறது. ஆனல் தான் விலை பேச வந்தது பாஸ்கரின் இடம் என்பது தெரிந்த அடுத்த வினாடியே, அபி புறப்பட தயாராகிறாள். ஆனால் பாஸ்கர், தடுத்து, தனக்கும் அவளுக்கும் இடையேயான பழைய குடும்ப உறவுகளை எல்லாம் ஒதுக்கி வைக்கும்படியும், அவள் பிஸினஸ் பேச வந்திருப்பதாகவும் தான் பிஸினஸ் செய்ய இருப்பதாகவும் சொல்லி, தான் விறக் இருக்கும் இடத்தை அபியின் பெரிய ப்ராஜக்ட் ஒன்றுக்கு தருவதை தான் விரும்புவதாகவும் ஆகவே அவளே அதற்கு ஒரு விலையை நிர்ணயித்து எடுத்துக்கொள்ளும்படியும் கூற, அபிக்கோ அவன் சும்மா கொடுத்தாலும் அந்த இடம் வேண்டாம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்க, மறுத்துவிட்டு புறப்படுகிறாள். (ஆனால் இருவருக்கும் இடையே காரசாரமான வாதம் எதுவும் இல்லை, புன்னகையுடனேயே உரையாடினர்).
வெளியில் வந்ததும் காரை எடுத்துக்கொண்டு வருவதாகச்சொல்லி கிருஷ்ணன் போக, அபியைத்தொடர்ந்து அவள் பின்னாலேயே படியிறங்கி வரும் பாஸ்கர், அவளிடம் ஏதோ தனியாகப் பேசப் போகிறான் என்று எண்ணும் நேரம், அவ்விடத்தில் காரில் வந்திறங்கும் டாக்டர் ரமேஷ், அபியிடம் விவரம் கேட்கிறான். தன் ப்ராஜக்ட்டுக்கு இடம் வாங்கும் விஷயமாக வந்திருப்பதாகச் சொல்லும் அபியிடம், அதே ஏரியாவில் தனக்கு தெரிந்த ஒருவரது இடம் இருப்பதாகச்சொல்லி தன்னுடைய காரில் டாக்டர் ரமேஷ் ஏற்றிக்கொள்ள, தன் காரில் பின்தொடருமாறு கிருஷணனுடன் அபி தெரிவிக்க, நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் பாஸ்கருக்கு உள்ளத்தில் பொறாமைத்தீ. (ஏற்கெனவே டாக்டர் ரமேஷை திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக கோயிலில் வைத்து பாஸ்கர் எதிரிலேயே அபி சொன்னது நினைவிருக்கலாம்).
(திருச்செல்வத்திடம் இருக்கும் ப்ளஸ் பாயிண்ட் இதுதான். எந்த ஒரு கேரக்டரையும் அம்போ என்று தொங்கலில் விட்டு விட்டுப் போய்க்கொண்டிருக்க மாட்டார். எங்காவது ஒரு இடத்தில் அவை வந்து 'லாக்' ஆகிக்கொண்டே இருக்கும். அங்குசாமியும், ராஜேஷின் அண்ணன் குடும்பமும், டாக்டர் ரமேஷும், கார்த்திக்கும் திரும்ப வருவார்கள் என்று நினைத்தோமா?. விரைவில் கங்காவின் குடும்பமும் திரும்பி வருவார்கள்.. பாருங்கள்).
பிரஸ்மீட்டுக்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் ஆதியும், கார்த்திக்கும் பிரஸ் மீட் பற்றிய சின்ன அறிமுகம் கொடுக்க, மேனகா பேசுகிறாள். தங்களுடைய ப்ராஜக்டைப் பற்றி தங்களுக்கு வேண்டாத சிலர் இல்லாததும் பொல்லாததுமாக தவறான வதந்திகளைப்பரப்பி வருவதாக சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஆனந்தி உள்ளே வந்து குறுக்கிடுகிறாள். மேனகாவின் 'ஸேட்டலைட் சிடி' ப்ராஜக்டுக்கு ஏழை எளியோர் குடியிருக்கும் நிலங்களை சங்கரபாண்டியன், தேவராஜ பாண்டியன், ஆதித்யா ஆகியோரின் அராஜக, அடாவடி நடவைக்கைகளால் கைப்பற்றியதாகவும், அதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூற, மேனகாவுக்கு அதிர்ச்சி. அவள் சந்தேகத்துடன் கார்த்திக் பக்கம் திரும்ப அவனுக்கு தர்மசங்கடம். ஆனந்தியை அடக்க முயலும் ஆதியையும், கார்த்திக்கையும் அவள் சட்டை பண்ணவில்லை.
ஆனந்தியின் அக்கா அபி, இன்னொரு பெரிய ப்ராஜக்ட் பண்ண இருப்பதால் தங்கள் செல்வாக்கைக் குறைக்கவே ஆனந்தி இப்படி குற்றம் சுமத்துவதாகவும், அதற்கு பத்திரிகை என்ற போர்வையை கேடயமாக பயன்படுத்துவதாகவும் மேனகா பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறாள்.
ஆனந்தியின் குற்றச்சாட்டுக்கள் ஒரு கட்டத்தில் எல்லைமீறிப்போக, மேனகா உடனே பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டு, தங்கள் ப்ராஜக்ட் பற்றிய விவரங்களடங்கிய சிறிய கையேட்டை விநியோகிக்குமாறு தன்னுடைய உதவியாளரிடம் கூறிப் புறப்படுகிறாள்.
who is karthick?? Aanandhi's lover? :roll: (Vishva or Vijay saradhi??? )
Its Vishva ... :)Quote:
Originally Posted by Arthi
thanks Madhu :D
டாக்டர் மகேஷ் சொன்ன, பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள இடத்தின் சொந்தக்காரரை சந்திக்கும் அபிக்கு அந்த இடம் பிடித்துப்போக, தான் அந்த இடத்தை வாங்கிக்கொள்வதாக சொல்ல, அவர் 30 கோடி விலை சொல்கிறார். அது அபிக்கு சற்று கூடுதல் விலையாக தோன்ற, அவர் விலையில் உறுதியாக இருக்க, இடத்தின் வில்லங்கம் சம்மந்தமான விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டு ஒரு வாரத்தில் வருவதாகச் சொல்லி புறப்படுகிறாள். (கூடவே ஒட்டுவாலாக கிருஷ்ணனும்). அவள் போனதும், அபி தன்னை மணந்துகொள்ள மறுத்துப்பேசிய தருணங்களை டாக்டர் மகேஷ் நினைத்துப்பார்க்கிறார். (ஸாரி, முன்னர் நான் குறிப்பிட்டதுபோல அவர் ரமேஷ் அல்ல).
ஆனந்தியும் கார்த்திக்கும் வாக்குவாதத்தில் இறங்குகின்றனர். ஆனந்தியின் செயலால் தனக்கு மேனகாவிடம் கெட்டபெயர் ஏற்படும் என்று கார்த்திக் சொல்ல, அதுபற்றி தனக்கு கவலையில்லையென்றும், எந்த தனிப்பட்ட ஒருவருக்காகவும் தன்னுடைய கொள்கைகளை காம்ப்ரமைஸ் செய்துகொள்ள முடியாது என்றும் மறுக்கிறாள். அப்போது அங்கே வரும் தோழர், அவர்களது பேச்சின் சூட்டைத் தணிக்க முயல, கார்த்திக் அவர்மீதும் குற்றம் சுமத்துகிறான். ஆனந்தியின் தவறான போக்கைக் கண்டித்து திருத்த வேண்டிய அவரே அவளது நடவடிக்கைகளூக்கு தூபம் போடுவதாகச் சொல்ல, கோபம் அடைந்த ஆனந்தி கார்த்திக்கை சத்தம் போட்டு வெளியேற்றுகிறாள்.
பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த கசப்பான விஷயங்களால் கொதித்துப்போயிருக்கும் மேனகாவை மேலும் தூண்டும் விதமாக, 'ஆனந்தியை ஏன் இன்னும் சும்மா விட்டு வைத்திருக்கிறீர்கள்?' என்று ஆதி எரிகிற தீயில் எண்ணை ஊற்ற அவள் கோபம் மேலும் அதிகமாகிறது. அந்நேரம் அங்கு வரும் கிரி, ஆதியை தனியே அழைத்துப்போய், 'அபியின் ப்ராஜக்டுக்கு டாக்டர் மகேஷின் நண்பருடைய இடம் கிடைத்து விட்டது' என்ற விவரம் சொல்ல, அவனுக்கும் கோபம் தலைக்கேறுகிறது.
மகேஷின் நண்பர் மதுவருந்திக்குஒண்டு இருக்கும் 'பார்'க்கு அடியாட்கள் சகிதம் வரும் தேவராஜ பாண்டியன், 'அபிக்கு தன்னுடைய இடத்தை விற்றால், அவருடைய உயிரை எடுத்துவிடுவதாகவும் அப்புறம் எத்தனை கோடிகள் வந்தாலும் அவரால் அனுபவிக்க முடியாது என்றும், தன்னுடைய இந்த எச்சரிக்கைக்குப்பின்னால் மேனகா இருப்பதாகவும்' கடுமையாக மிரட்டி விட்டுப்போகிறான்.
தான் ஏற்கெனவே கட்டிக்கொண்டு இருக்கும் 'சைட்'ட்டில் (ஒட்டுவால் கிருஷ்ணன் சகிதம்) போயிருக்கும் அபியை, அந்த பிளாட்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர் ஒருவர் சந்திக்கிறார். பிளாட் சம்மந்தமான பேச்சுக்கு நடுவே அவர் தொல்காப்பியனைப்பற்றி விசாரிக்க, கிருஷ்ணன் 'அவர் இப்போது இல்லை'என்று பட்டென்று பதில் சொன்னது பிடிக்காமல் அபி அவரைக் கண்டிக்கிறாள். அப்போது அபிக்கு போன்கால் வர, எடுத்துப்பேசினால் மறுமுனையில் நிலத்தின் சொந்தக்காரர். மேனகாவின் சார்பில் தேவராஜபாண்டியன் தன்னைக்கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டுப்போன விவரத்தை சொல்லி, அபிக்கு நிலம் தர மறுக்கிறார். அபி சமாதானம் செய்ய முயன்றும் அவர் கேட்கவில்லை. 'உங்களுக்கு இன்னொரு இடம் கிடைக்கும், ஆனால் எனக்கு இன்னொரு உயிர் கிடைக்காது' என்று அவர் சொல்ல, அபியால் மேற்கொண்டு வற்புறுத்த முடியவில்லை. கிருஷ்னனைப்போகச்சொல்லி விட்டு, கோபத்துடன் மேனகாவைப் பார்க்கச் செல்கிறாள்.
செக்யூரிட்டிகள், மேனகாவின் எடுபிடிகள் என்று யார் தடுத்ததையும் பொருட்படுத்தாமல் நேரே சென்று மேனகாவைப்பார்க்க, அவளோ மிகவும் கூலாக 'நீ என் காலில் விழ வருவேன்னு எனக்கு தெரியும்' என்று கூறி அபியின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டுபோக...., பதிலுக்கு அபி என்ன சொன்னாள்..?
அது இனிமேல்தான் தெரியும்.
:ty: saradhaa
dign
// oru naal :ty: icon pottu pottu thalai sutha poguthu aana kku :lol2:
I am just kidding :D
aana its actually so cute to watch u putting :ty: icon . //
dign 2
:shaking: my mother in law was saying aanandhi and kolangal may finish very soon (and that was in last nov, which she confirmed again this june...so both the serials are still running :roll: ?)
(atleast did aanandhi get over?)
:shaking:
just curiosity! srry guys carry on :thumbsup: :wave: