டியர் வாசு சார்,
இதோ உங்களுக்குப் பிடிக்காத படத்திலிருந்து முழுப்பாடல்...
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச்சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை
முதல் சரணம்
(ராணுவ வீரர்களுடன்)
தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம்
மதித்து போற்றத் தகுந்தவராம்
கோழை போல வாழ்பவரை
பெற்ற தாயும் வெறுப்பாளாம்
(தொழிலாளர் மத்தியில்)
தோழர்களே கடமை செய்து முடித்த பின்னே
உரிமை கேட்கப் புறப்படுங்கள்
தொழில் நடத்தும் சீமான்கள்
உழைப்புக்கேற்ற பொருள் கொடுங்கள்
உழைப்புக்கேற்ற பொருள் கொடுங்கள்
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச்சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை
இரண்டாவது சரணம்
(ஹிப்பிகள் மத்தியில்)
வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார்
முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார்
மூளைவளரும் காலத்திலேயே
முடியை வளர்க்கப் பாடுபட்டார்
(நாகரீக மங்கையர் மத்தியில்)
கன்னியரே அலுங்கி குலுங்கி நடப்பதற்கு
ஆடை லுங்கிதான் எதற்கு
சேலை செய்த பாவமென்ன
மேலைநாட்டு மோகமென்ன
மேலைநாட்டு மோகமென்ன
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச்சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை...
