-
நீயில்லையெனில் இன்னொருவன்.
பெற்றோருக்கு நீதான் வேண்டுமென்றால், அசல் வீட்டு
உற்றாரின் வெற்றியை பெருமூச்சுடன் வெறுப்பார்களா.
ஆசிரியனுக்கோ இவனுடன் அவதி படுவதற்கு பதிலியாக
விசித்திர திறன் பெற்ற முன்னணி மாணவனுக்கு முனகுவானா.
நண்பனுக்கோ அருகாமை இல்லில் பள்ளியில் பேருந்தில்
கண்ணுக்கு கருத்துக்கு இசைவாய் ஓராத்மா இல்லா குறை .
பார்த்த பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இல்லையெனில்
நேர்த்தி வரனொன்று வரமாக சிலிக்கன் பள்ளத்தாக்கில் இன்பமாய்.
உன்னால் மட்டுமே முடியும் தம்பி உண்மையில்லா உன் மன பேதைமை
தன்னால் மேசைக்கு வந்த ஊதா வர்ண காகிதத்தில் கருப்பு காட்டிய விந்தை.
பிள்ளைகளுக்கு அன்னையை புணர்ந்தவனை அணைத்து வாழ்ந்தாலும்
உள்ளே முதல் ஐந்நூறு போர்ப்ஸ் நாயகன் அணைந்தவனானால் மெர்சிடிஸ் கனவு.
மருத்துவ மனைகளிலோ அமெரிக்க கூட்டத்தின் நடுவே தொல்லையாக
வெறுத்து அரசுக்கு பணிந்து உன்னுடலையும் நொந்து தீண்டும் செவிலியர்
அகந்தையில் சேர்க்க மறந்தது தெளிவு நீயில்லைஎனில் உன்னிலும் சிறப்பானவன்
காகங்கள் போல சுற்றும் மக்கள் உடலை கொத்தும் காகத்தை ஓட்டாமல் .
சுடுமோ இடுமோ என பிறவி தேர்வு இறுதியானதும் மக்கள் மகிழ்வர்.சுற்றோர்
அடுத்து ஊர் புகுவர் உனக்கு பிரதியாக இளமை சக்தியுடன் புத்தெழுச்சி
உலகத்தில் எங்கே ஒட்டினாய் எங்கு சிறந்தாய் எவர் வாழ்வை உய்வினாய்?
கலகத்தில் உழன்று அலைவுகளை கூட விடாத சுவடற்ற மறைவு.
-
மறைவு எழுப்பித் தடுக்க
திரைச்சீலை மரக்கதவு
முள்வேலி மதில்சுவர்
சாக்குப்படுதா போர்வை
மற்றும் பராமுக பாவனை
போதுமான எல்லைக்கோடு
-
எல்லைக்கோடு இருந்தும் மதிக்கவில்லை எதிரி
தொல்லைததந்தார் ஒதுங்கி நின்றோம் பதறி
பல்லையுடைத்தால்தான் துன்பம் உணர்வர் கதறி
வல்லை நம்எல்லையென அவர் போகவேண்டும் சிதறி
-
சிதறித்தான் போனோம் பல முறை .
கதறி கதறி கண்ணீர் வற்றி சிதறுவதில் கண்ணீர் மிச்சம்.
போதனைகள் கேட்டே பூதவுடல் வளர்த்தோம்.
வேதனை சுமந்தோம். சாதனை அரக்கருக்கு மட்டுமே.
உயிர்களிடத்து அன்பு காட்டும் பாரதியை மிதித்த பிள்ளையார்
உயிர்வாங்கி உடல் வளர்த்த வீரப்பனிடம் நயந்து பயந்தான்
வீரக்கலை பயின்றவர்கள் கொள்ளையடித்து கற்பழித்து
கோரக்கலையில் தேற அகிம்சை பயின்ற அறநெறி மாந்தர்
கேளாக் கலையில் தேர்ந்து அன்னாருக்கு தத்தம் பொன் பொருள்
கேளிர் கெட்ட பின் நீதி மன்றம் உள்ளிட்ட யாரையும் கேளீர்
அன்புநெறி ஆற்றும் என சேர்த்த சுற்றங்கள் வன்வெறியில்
பண்புநெறி துறந்த பாதகரையும் சொர்க்கம் சேர்க்கும் மாண்பு
சுற்றியும் நச்சு கூண்டு உண்பது நச்சு பொய்யுணவு சுவாசமோ
வற்றி போன பிரணவாயு புதுமைகளோ உருமாறும் விஷ நுண்ணியுர்கள்
பனிமாறி கடலாகி கரைதேடும் கல்கியாகும் நாளே அழித்து தழைக்கும்
பணியாற்றும் ஒரே தேவனை ஒன்றே குலமாய் சிதறாமல் தொழுவோம்.
-
தொழுவோம் அழகை
குழந்தையின் சிரிப்பை
புல்லிடை பொடிப்பூவை
வெள்ளந்தியான மாந்தரை
மானுட அடையாளத்தை
அச்சாணி முறியவில்லை
-
அச்சாணிகள் முறியவில்லை பொருட்காட்சி சாலைகளில்.
இச்சைமிகு வாகனங்கள் புகைவிட்டு ஏந்தி செல்லும்
நச்சை இழுத்து வாழும் வண்டி மாட்டை உண்போர்
பிச்சை புகினும் கற்க அரசு பள்ளிகள் இருந்தும்
கொச்சை கொள்ளை கூடங்களாய் ஆங்கில பள்ளிகள்
சிச்சை கற்க அடகு கடையில் அடகாக அப்பனன்னை
கற்றபின் நிற்க அதற்குத்தக கொள்ளையர்களாய் தன்னை
விற்று சிற்றுந்தோ மகிழுந்தோ வாங்கி மகிழ் புகை விட்டு
சுற்றம் அனைத்தையும் முதியோர் விடுதிகளில் அட்டு
கொற்றம் காண கடல் கடக்கும் வீரதீர சோழர்கள்
குடிக்க மட்டும் வோட்கா, காண மட்டும் பாரிசு
குடிகாண தேடுவதோ சுத்த கற்பில் கடாமுடா பட்டி
மடிகணினியில் இணைதேடி ஸ்கய்ப்பில் காதல் கண்டு
முடிவெடுத்து முடியுமுன் மண்டபங்கள் கடிதாகி
இல்லாளை முதல் வருடம் முழுதும் புணர்ந்து பேர்
சொல்ல ஒரே வாரிசு பெற்று ,ஆயுள்வரை மூடியிட்ட புணர்ச்சி
கள்ள உறவு கொள்ளவும் மூடியிட்டே மேகம் தவிர்த்த மோகம்
உள்ள அனைத்திலும் கொள்ள ரப்பரும் ,பிளாஸ்டிக்கும்
தோலோடு தோலுரசி சுகம் காணா பிறப்புறுப்பு ரப்பருடன்
காலோடு தலை அனைத்துமே பிளாஸ்டிக் உறவுடன்
நாலோடு ஐந்தாக சுயமற்ற வாரிசின் வளர்ப்பு பிறந்தவுடன்
வாளோடு முற்பிறந்த மூத்த குடியின் வீரம் கணினி விளையாட்டில்
சுழற்சி செய்து இயற்கையை காக்காமல் சுழர்ச்சியால்
அழற்சியில் மானுடம் கொய்யும் நவீன செயற்கையே
விழலுக்கு இறைத்த நீராக அனைவரின் வாழ்வும்
நிழலுக்கும் ஒளியின்றி நிழல் வாழ்வு ,செல்வர்கள் ஐநூருக்காய் .
-
ஐநூறுக்காய்
ஆயிரத்துக்காய்
தக்க மண்டபம்
மொய்யெழுத கூட்டம்
அளவில்லா ஆடம்பரம்
ஏனிந்த விளம்பரம்
பட்டினி சாவுலகில்
பந்தியிலுணவு பாழ்
-
பாழ் வெளியில் தேவருடன்
பார்வதி சிவனார் பார்த்தபடி :
பீஷ்மர் பாண்டவருக்கு படுத்தபடி
பார் உய்ய வழி பகர்ந்தபடி:
பரந்தாமன் திருநாமம் ஆயிரம்
பாடி அனுதினமும் சிந்திக்க
அமுதம் போல் அனந்தன் பெயர்
அருளிக் கொண்டிருந்த நேரமது !
https://encrypted-tbn3.gstatic.com/i...ku8P020wYACHRQ
/தொடரும் /:smile2:
-
நேரமது கேட்க சரியாய் படவில்லை
கழுத்துக்கு எட்டு காரட் வைர அட்டிகை
சாண் அகல சரிகை பார்டர் பட்டுச்சேலை
அவசரமாய் வெளியே கிளம்பும் காலை
காத்திரு வரும் மயக்கம் தரும் மாலை
கச்சிதமாய் காய் நகர்த்துவதவள் கலை
-
கலைவாணியும் பிரமனும் அருணனும் வருணனும்
கண்ணாயிரம் கொண்ட இந்திரனும் சந்திரனும்
கந்தர்வரும் தேவரும் கிங்கரரும் ஒன்றாய் நின்று
கண்கொள்ளா காட்சிதனை காணலாயிற்றே !
கருமுகில் வண்ணன் மாதவன் கோவிந்தன்
கேசவன் ஸ்ரீதராவென பிதாமகர் பாடலாயிற்றே!
கண்ணனும் சத்யபாமா ருக்மணியுடன் அங்கே
காவியமாய் பீஷ்மன் உரை கேட்கலாயிற்றே !
(கிங்கரன் - கைங்கரியம் செய்பவன். eg : யம கிங்கரன்)