-
கேட்க லாயிற்றே கண்ணனவன் குழலினிமை
…தெள்ளத் தெளிவாக தேனமுதாய்க் காதுகளில்
பார்க்க லாயிற்றே பரபரக்கும் விழிமலர்கள்
…பார்த்தன் திருவுருவம் வரும்திசையை நோக்கித்தான்
வேட்கை கொண்டவுளம் விரைவாக அங்குமிங்கும்
…வெட்கம் தனைவிட்டே அவனணைப்பை நாடித்தான்
வேர்த்து அலைபாயத் தவித்துநிற்க லாயிற்றே..
.மேவி அவளிடமே கண்ணனெப்போ வருவானோ
-
கண்ணனெப்போ வருவானோ
கவலையெல்லாம் தீர்ப்பானோ
அண்ணனையொத்து இருப்பானோ
அறிவுரைகளாய் தருவானோ
எண்ணங்களில் நிறைந்தானோ
ஏற்றங்கள் கொடுப்பானோ
வண்ணங்களாய் வார்ப்பானோ
வாழ்க்கையையே மாற்றுவானோ
திண்ணமாய் கும்பிடுவோர்
திருமலைநாதனை சேவிக்கிறார்
-
சேவிக்கிறார் பலர் பணநாதனை
உயர் பதவியில் இருப்பவனை
அடியாள் படை பலமுள்ளவனை
பவனி வரும் உற்சவ சாமியை
கொள்கையில்லாதது கொள்கை
அனுபவிக்க துடிப்பது என்னத்தை
-
என்னத்தை சொன்னார் கங்கை மைந்தன்
எப்படி அறுப்பது சம்சார பந்தன்
எப்படி பெறுவது பிறப்பறு முக்தி -என
பக்தியுடன் கேட்ட பாண்டு மகனுக்கு
பாசமாய் நேசமாய் பதில் சொன்னார்
பிறப்பு பின்னர் இறப்பு பின் தாயின் கருவில்
மீண்டும் உயிர்ப்பு மீளா துக்கம் மேதினியில்
மீள வேண்டில் மேக வண்ணன் புகழ் பாடு
பாரில் நாராயணன் நாமம் நீக்கும் பந்தம்
பாடு நாளெல்லாம் தேடு அவனடி நாடு !
//.. தொடரும் //
-
அவனடி நாடு
சற்றே நீளம் பருமன் ,
வாய்க்குள் கமறல் வரும்
ஆனாலும் புணர்வில் இன்ப வேதனை
அவ்வப்போது பிட்டம் புணர்வது
மரணாவஸ்தை புதுமை அருவருப்பு.
ஆனால் குமாஸ்தாவாக மாமிச பிண்டம்
அலுவலகம் போகும் தேவைக்கு குறைவாக
பொருள் கொடுக்கும்
என்னவோ வெட்டி முறித்தது போல
கைகால் பிடிக்க சொல்லி வாடி போடி என்னும்.
சாதி திமிர் வேறு சம்போகமோ அம்மா
அனுமதித்தால் மாதமிருமுறை இரு வினாடி
பிட்டம் தூக்கி அபான வாயுவால்
அவ்வப்போது ரசாயன போர் வேறு
குடும்பத்துக்கேற்ற பெண்ணாக மனையில் நின்று
புதிய ஆண் நண்பனுடன் நிஜ வாழ்வு.
இருபிறப்பு இதமானதே
-
இதமானதே இனிதாயினி இகத்தில்சுகம் பெறவே
பதமானவோர் துணையென்றுதான் பகிர்ந்தேனுன துளத்தை
மிதமேயென அவனோயிலை எனிலோயினி மகளே
சடமாகவே இருக்காமலே தயங்காமலே விடுவாய்..
சொல்வதற்கும் எழுதுதற்கும் வார்த்தை வேண்டும்
…சோகத்தில் எழுகின்ற குரல்தான் ஆனால்
எள்ளிடுவார் உன்விஷயம் பார்க்கும் மக்கள்
..ஏனென்று கேட்கிறாயா சரித்தான் போடி
துள்ளுகின்ற இளமையதில் வேகத் தட்டாய்
…துடிப்படக்கி நல்வழிதான் செய்யும் மாண்பு
இல்லறத்தில் இருக்கிறது மகளே ஆனால்
..ஏட்டினிலே சொலும்போது பொறுமை கொள்வாய்..
..
விவரித்தாய் விவஸ்தைகளும் ஏதும் இன்றி
…விலாவரியாய் இங்குவந்து புலம்ப லுற்றாய்
புவனத்தில் மாக்களெல்லாம் மிருகம் போலே
..பிட்டுபிட்டு வைத்ததாக உந்தன் எண்ணம்
துவண்டுவிழும் சருகெல்லாம் மக்கிப் பின்னர்
….சிலநாளில் துளிர்த்தங்கே மரமாய் ஆகும்
சுற்றிசுற்றி வருவதுதான் பிறப்பும் இறப்பும்
…சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு நடப்பாய் மகளே
-
மகளே கொள்வாய் மிக கவனம்
வாக்கில் வேணும் நல்ல நாகரிகம்
காய் தவிர்த்து கனி போற்றுவாய்
அறியப்பட்ட இடக்கரடக்கல் பல
மூடியோ மூடாமலோ நன்றல்ல
தவிர் சபையோர்க்கு முகச்சுளிப்பு
-
முகஞ்சுளிப்புக் கொள்ளுகின்ற குழந்தை அன்று
…மூச்சுமுட்ட மருந்தினையே குடிக்கும் மேலும்
அகம்மலரும் சுரமதுவும் செல்ல அங்கே
…அழகுடனே அன்னையிடம் சிரிக்கும் பார்க்கும்
உடலினிலே கொண்டநோயும் மருந்தில் போகும்
…உளத்தினிலே கொண்டசுரம் என்று போகும்
படபடத்துப் பறக்கின்ற காலந்தன்னில்
…தானாகக் கரைந்துவிடும் நினைப்போம் நன்று..
-
நன்று நடப்பது தேவதை கதைகளில்தான்
அதில் மட்டும் மணம்புரிவார்கள் பின்னர்
மகிழ்வாய் வாழ்வார்கள் ஆயுள் முழுதும்
அலுத்துப்போகாதோ திகட்டாதோ எனவே
ஆண்டவன் கொடுக்கிறான் துன்பம் அடிக்கடி
ஒரொரு அடி நகர்கையிலுமோரடி தருகிறான்
-
ஓரடி நகர்கையில் மேலுமோரடி வைப்பவன்
சீரடி கொண்டவனல்ல சிந்தையில் தேர்ந்தவன்
நினைப்போம் நன்று செய்வோம் இன்று
வினைகளுக்கு வேலைவைப்போம் நல் சேர்த்து
வேறு என்ன சொல்ல செய்ய உலகம் வைத்தது
பேருசொல்ல சிற்பம் செய்வோம் என்றால் டாவின்சி
கவிதை வரைவோம் என்றால் கம்பன் பாரதி
கவிமனத்தை கரைக்கும் நாயகன் என்றால்
நடிகர்திலகம் கதை செய்வோம் என்றால் அசோகமித்திரன்
துடிப்பாக புதுமை காண்போம் என்றால் நியூட்டன்
டார்வின் எடிசன் ப்ராஇட் ஐன்ஸ்டீன் என்று வரிசை
தேர்வின் போது இவர்கள் கண்டதை வெளிக்கொணரும்
மூன்றாம்தர குடிமகனாக நாமெல்லாம் எதை காண
இன்று எதை செய்ய எதை எழுத எதை நடிக்க செய்ததை
செய்யவும் வேலையின்றி கூகல் அனைத்தும் மடியில்
ஐயகோ காதல் செய்வீர் என்றால் தற்குறிப்பு அனுப்பு
சம்பளம் பாப்போம்,கோத்திரம் நிறம் உயரம் கண்டே
சம பலன் காண்போம் பெண்களோ குறைவு தேவைநிறைய
என்னத்தை செய்ய செய்ததை செய்ய வேண்டும் அலுப்பின்றி
சொன்னதை சொல்ல வேண்டும் சுயமின்றி மிச்சம் என்ன
அன்னை தெரசா தொண்டுக்கு எக்காலமும் தேவையுண்டு
முன்னை புதுமைக்கும் புதுமையாய் பின்னை பழமைக்கும்
பழமையாய் அலுப்பு சலிப்பே இன்றி ஆறுதல் அறச் சுற்றம்
கிழமை தோறும் காத்திருப்போம் அழிவு நோக்கி ஆர்வமாக
எல்லாமே அழியட்டும் மீண்டும் தழைக்கட்டும் இலைகட்டி
எல்லைமீறுவோம் ஏவாளுடன் ஆப்பிள் விழுவதை ஆய்வோம்