-
துள்ளல் பாட்டு என சிந்தித்ததில் கண்ணில் பட்டது..
http://www.inbaminge.com/t/c/Chittuk...Karai.eng.html
பொன்னுல பொன்னுல பண்ணின மூக்குத்தி மின்னுது மின்னுது
ஒத்த்க் கல் மூக்குத்தி
போக்கிரிப் பெண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்..கச்சேரி
பொய்க்காலுக் குருதையிலே ஊர்கோலம்..
மூக்குத்தி..அது மூக்குத்தியா அது..மனங்கொத்தி :) ஆமா எதுக்காக பெண்கள்மட்டும் மூக்குத்தி அணியறாங்க..
தேடிப் பார்த்ததில் :
//மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு மூக்குத்தி குத்தும் பழக்கம் இல்லை. பருவப்பெண்களே மூக்குத்தி அணிய வேண்டும் .பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.
இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.
காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.
நமது மூளையின் அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள் உணர்ச்சி களை செயல்படுத்தும். இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு அதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுகிறது.பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது.
இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் தான் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனா சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
நமது முன் நெற்றிப்பகுதியில் இருந்து சில நரம்புகள் மூக்கு தூவாரம் வரை கீழ் இறங்கி மூக்கு பகுதியில் மெல்லிய துவாரங்களாக இருக்கும். இதில் அணியப்படும் தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும்.
மூக்கு மடலில் ஏற்படுத்தப்படும் துவாரம் நரம்பு மணடலத்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும். ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள், உளச்சோர்வு ஏற்படமால் மூக்குத்தி தடுக்கிறது.//
செகப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி
அட தங்கமுகத்துல குங்குமப் பொட்டு வச்சுக்கிட்டு
நீ எங்கடி போற சுங்குடிச் சேல கட்டிக்கிட்டு (என்னபடம்)
மூக்குத்திப் பூ மேலகாத்து ஒக்காந்து பேசுதம்மா (மெளன கீதங்கள்)
சின்னச் சின்ன மூக்குத்தியாம்
செகப்புக் கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பெண்ணே ஒன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் (என்ன படம்)
சிறு கண்ணாடி மூக்குத்தி மணிமாலை
கண்ணீரில் நனையுதடி ( சந்தோஷப் பாட்டில் மூக்குத்தி வருதா என்ன)
கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி
என் மனதினால் முடித்த மூக்குத்தி (மணியே மணிக்குயிலே -நாடோடித் தென்றல்
விட்டுப் போனதச் சொல்ல மாட்டீங்களா என்ன..
-
http://www.photofast.ca/files/products/6395.jpg
படம் : பத்தாம் பசலி (1970)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தர்ராஜன், K.ஸ்வர்ணா
இசை : V குமார்
பாடல் : ஆலங்குடி சோமு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ
காற்றடிக்கிது மழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
காற்றடிக்கிது மழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
இங்கு கட்டிலுமில்லை மெத்தையுமில்லை
உனக்கும் தூக்கம் இல்லை
காசுமில்லை படிப்புமில்லை
அன்புக்கு பஞ்சமில்லை
உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச
கணக்கும் புரியவில்லை
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி
பார்க்க வந்தாயோ
துன்பத்திலே சிரிக்கச் சொல்லி
ரசிக்க வந்தாயோ
தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
இங்கு தெய்வமொண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர*ரோ
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்ல கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர*ரோ
http://www.youtube.com/embed/p7F3cit3zuE
இதே போல் பெற்ற மனம் பித்து 1973 படத்தில்
ஏழை தாய் தந்தையரின் தாலாட்டு.
இசை: V குமார்
பாடல்: பூவை செங்குட்டுவன்
நடிப்பு: முத்துராமன், ஜெயா
இயக்கம்: S P முத்துராமன்
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பொன்னூஞ்சல் இல்லை
பூமெத்தை இல்லை
நீ வந்த வேளையிலே
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூமெத்தை தானே தந்தை மனம்
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூமெத்தை தானே தந்தை மனம்
ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்
கண்ணே நீ துயிலும் மஞ்சமடா
மஞ்சமடா… மஞ்சமடா !
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
செல்லமகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள்
ஏழையுடன் வந்தாளடா
ஸ்ரீராமன் அடிதொட்டு பின் செல்லும் சீதைக்கு
பெருமைகள் வேறேதடா
பெத்தமனம் பித்தாக பேதைமனம் கல்லாக
பெத்தமனம் பித்தாக பேதைமனம் கல்லாக
தன் சொந்தம் வெறுத்தாளடா
தந்தை மனம் தவித்திருக்க
பரமனுடன் துணை நின்ற
பார்வதியும் பெண்தானடா
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
தனிமரமாய் நின்றவனை
தழுவுகின்ற பூங்கொடியாள்
சுகமென்ன கண்டாளடா
கொடியுண்டு மரமுண்டு
குழந்தையெனும் கனியுண்டு
குறையென்ன கண்டேனடா
உனதன்னை துயர்தன்னை
நான் தீர்க்கும் முன்னாலே
உன்கவலை கொண்டேனடா
கண்ணனாக நீயிருக்க மன்னனாக அவர் இருக்க
கவலைகள் எனக்கேதடா
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ ஆராரிராரிராரோ
http://www.youtube.com/watch?v=karD1Q_p-1s
இரண்டும் வி குமார் இன் தாலாட்டு
ஆனால் காட்சி அமைப்பு வேறு
முதலாவது தூக்கு கயிறு மாட்டி சாக போகும் நாகேஷை காப்பாற்றிய குழந்தையை தூங்க வைக்க
இரண்டாவது பணக்கார வீட்டு பெண் ஏழை வேலைக்காரனை திருமணம் செய்து கொண்டு பிறந்த குழந்தையை தூங்க வைக்க
-
சி கே சார்
முக்குத்தி பூ மேலே காத்து உட்காந்து பேசுதம்மா
இநத முக்குத்தி பூ எப்படி இருக்கும்
-
செகப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி
எல்லோரும் நல்லவரே (முத்து ராமன் மஞ்சுளா - ஜெமினி நிறுவனம் தயாரிப்பு
-
dear cee kay sir
கே. சி. எஸ். அருணாசலம், ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் திரைப்பாடலாசிரியர். பல துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் கவிதைக்கு முக்கியத்துவம் அளித்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு பூர்வீக வாள். இவரது கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை, கவிதை என் வாள், பாட்டு வராத குயில் ஆகும். இவர் ஒரு மரபுக் கவிஞர். இவர் புதுக் கவிதைக்கு எதிரானவர் என்றாலும் புதுக்கவிதை படைப்பவர்களோடு நட்புடன் பழகியவர் .
பாதை தெரியுது பார் திரைப்படத்திற்காக இவர் எழுதிய சின்னச் சின்ன மூக்குத்தியாம் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
20 ஆண்டுகள் தாமரை இதழில் பணியாற்றினார். தனது இறுதி நாட்களில் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் தந்தை, நாச்சிமுத்துக் கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். ஆனால் தொடங்கிய பணியை முடிக்கும் முன் காலமானார்.
ஆதாரம்[தொகு]
பாடிப் பறந்த குயில், தினமணி, அக்டோபர் 28, 2012
-
கிருஷ்ணா சார்,
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு
வேடிக்கை காட்டுது ஒன்னும் தெரியலைன்னு
புரியுதா. தேங்க்ஸ் பார் லிரிக்ஸ்.
ஆனால் படம் செம போர்.
-
வைத்ய சிகாமணி மூக்குத்தி சின்னக்கண்ணன் சார் வருக. :)
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலித்தது மறந்துடுச்சா?
-
//வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்னு
வேடிக்கை காட்டுது ஒன்னும் தெரியலைன்னு// :) கிருஷ்ணா சார், வாசுசார்.. தாங்க்ஸ்..
நெசம்மாவே தெரியலைன்னு தான் கேட்டேன்..
இந்த மூக்குத்தி இருக்கே பலப் பல டிசைன்ல பண்ணுவாங்க க்ருஷ்ணா சார் (ஆஹா என்ன ஒரு இன்வென்ஷன்)
ஒத்தைக் கல்லு தான் மோஸ்ட்லி இருந்தாலும் சின்னதா பூ டிசைன்ல அந்த க் காதலி போட்டுக்கிட்டிருக்காளாம் -அதுவும் கொஞ்சம் நிறம் மங்கிய மூக்குல (சரிதா ?!)..எனில் அந்த மூக்குத்திப் பூமேல காத்து ஒக்காந்து பேசுதுன்னு கவிஞரோட கற்பனை!
-
குகநாதன் அப்படின்னாலே ஜெயா வந்துடுவாரே!
-
//ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலித்தது மறந்துடுச்சா?// ஒரு ஓரமா காதுலகேக்குதே..அப்புறம் காதோரம் லோலாக்குன்னு நினைவுக்கு வருது!