எம் பானுமதி தில்லானா மோகனாம்பாளில் செவிலியராக வருவார்.
நடிகர்திலகத்தின் தீவிர ரசிகை என அவர் முகமே சொல்லும்.
அவர் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... அஞ்சலிகள்!
Printable View
எம் பானுமதி தில்லானா மோகனாம்பாளில் செவிலியராக வருவார்.
நடிகர்திலகத்தின் தீவிர ரசிகை என அவர் முகமே சொல்லும்.
அவர் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... அஞ்சலிகள்!
வனஜா அவர்களே..
வேட்டியை மடித்துக்கட்டி விருந்து மேற்பார்வையிடும் கருணைச் சிங்கம்..
ஆட்டுக்கல் வார்த்தை வராமல் கையை ஆட்டிக்காட்டும் தன்மானம் சீண்டப்பட்ட சீறும் சிங்கம்..
சாப்பிட்டியா என மகனைக் கேட்கும் பாசச்சிங்கம்..
செத்துப்போ என பாடம் சொல்லும் ஞானச்சிங்கம்..
அரைமணியானால் என்ன? The Lion King still triumphs!!
தேவர் மகன் நினைவலைகளால் எங்களையும் கலங்க வைத்தீர்கள்..
அன்புள்ள திரு. (நெய்வேலி) வாசுதேவன் அவர்களே,
எனது "எங்கே நிம்மதி" பாடல் பதிவிற்கு உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
உங்கள் "நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகள்" தொடரின் அண்மைப் பதிவான "தர்மம் எங்கே" பட சண்டைக் காட்சியும் அதற்கு உங்கள் வர்ணனையும் மிகவும் நுணுக்கமாக இருந்தது. "தர்மம் எங்கே" படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் 1972-ஆம் வருடம் வெளிவந்து, எதிர்பார்ப்பை அந்த அளவிற்கு நிறைவேற்ற முடியாததால், பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனது இன்றளவும் அனைத்து நடிகர் திலக ரசிகர்களுக்கும் வருத்தம் தான். இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தால், 1972-ஆம் வருட சாதனை முழுமை பெற்றிருக்கும் (7 படங்களில் இது ஒன்று தான் வெற்றி பெறவில்லை. தோல்வி என்று சொல்ல முடியாது என்றாலும்!). என்னைப் பொறுத்த வரை, நடிகர் திலகம் ஒரு swashbuckling action role-ஐ அவருக்கேயுரிய நேர்த்தியுடன் செய்திருப்பார். திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு தொய்ந்ததும், தமிழ் நேட்டிவிட்டி குறைபாடும் தான் படத்தின் பெரிய வெற்றிக்கு இடையூறாக அமைந்தவை. இது பற்றி திரு. முரளி அவர்கள் விரிவாக ஏற்கனவே எழுதி இருக்கிறார் அவருக்கேயுரிய சரளமான புள்ளி விவரங்களுடன் கூடிய நடையில்!
உங்களின் அடுத்தடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
வனஜா மேடம் அவர்களே,
தங்கள் "தேவர் மகன்" பதிவு சுருக்கமாக இருந்தாலும், நேர்த்தியாகவும் சுவையாகவும் இருந்தது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
https://encrypted-tbn2.gstatic.com/i...b8LqgxhJQbjNzC
அதே போல 'பசும்பொன்' தேவர். தன் மகள் விதவையாகி விட்டதால் மருமான் சிவக்குமாரிடம் புலம்பும் புலம்பல். அலம்பல். ("பொட்டல்ல நட்ட மரமாப் போச்சே அவளுடைய பொழைப்பு".).. அவளுக்கு மறுவாழ்வு கிடைக்குமா என்ற ஏக்கம். எல்லா சுப காரியங்களுக்கும் முதல் மனுஷியாகச் சென்ற மகள் இனி எப்படி அனைத்திலும் கலந்து கொள்ள முடியும் என்ற துயரம். ("சே! கோடி கோடியாய் சொத்திருந்து என்னடா பிரயோஜனம்...எம் பொண்ணுக்கு எட்டணா குங்குமமும் நாலணா பூவும் வாங்கி என்னால கொடுக்க முடியலையேடா!) சிவக்குமாரிடம் இனி தன் மகளுக்கு இவன்தான் துணை என முடிவெடுத்து ,"கதிரேசா.. என் பொண்ணுக்கு அந்தப் பூவையும் பொட்டையும்"என்று நிறுத்தி சிவாவிடம் அவளுக்கு வாழ்வு கொடுக்க கெஞ்சுவது என்று அதகளம் புரிவார். தேவர் மகன் தேன் என்றால் பசும்பொன் பத்தரை மாற்றுத் தங்கம். ஆனால் தேவர் மகன் தான் எடுபடுகிறது. தேவர் மகனுக்கு கொஞ்சமும் குறைவில்லாத 'பசும்பொன் அவ்வளவாக அலசப்படுவதில்லை. இது ஏன் என்று கிஞ்சித்தும் எனக்கும் புரிய வில்லை.
நடிகர் திலகத்துடன் எம். பானுமதி.
http://i1087.photobucket.com/albums/..._000143102.jpg
பானுமதி
காதல் மலர்க் கூட்டம் ஒன்று என மலர்களின் கூட்டத்தில் ஒரு மலராக தெய்வ மகனில்
திலகத்தின் வளர்ப்பு மகளாக ராமன் எத்தனை ராமனடியில்
நாகேஷின் ஜோடியாக வியட்நாம் வீட்டில்.
செவிலியாக தி.மோகனாம்பாவில்.
நடிகர் திலகத்துடன் நாடக மேடைகளில் ஏராளமாக.
இன்னும் நிறைய.
மறக்க முடியவில்லை.
கிஞ்சித்தும் குறைவில்லாத என்று சொல்ல முடியுமா. நடிப்பைப் பத்தி சொல்கிறீர்களா, பாத்திரப்படைப்பையுமா?
பசும்பொன்னை எல்லா காட்சிகளும் நினைவில் இல்லை. ஆனால் அது பெரிய தேவர் அளவு பற்பல எண்ண ஓட்டங்கள், சூழ்நிலைகள் இருந்தனவா?
சிவாஜியின் சிறப்பம்சங்களில் ஒன்று - ஒரே நேரத்தில் பற்பல உணர்ச்சிகளை தெளிவாக வெளிப்படுத்துவது. கோவம்-அவமானம், கையாலாகாமை-வெறுமை, ஊர்த்தலைவனாக சோகம் - தந்தையாக பெருமிதம் - என்று மிக நுட்பமான தருணங்கள். அவை கமலுடைய எழுத்தின் ஆழத்தால் கைகூடியவை. இப்படிப்பட்டவருக்குத் தான் அப்படிப்பட்ட காட்சிகளை எழுத முடியும் என்பது needless to say.
பாரதிராஜாவின் signature ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டு அதைத் தீவிரமாக வெளிப்படுத்துவது என்று சொல்ல நினைக்கிறேன். அத்தகைய ஒரு நடிப்பை சிவாஜியிடம் பெற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். நடிப்பளவில் ஒன்றுக்கொன்று குறை என்று சொல்வதற்கில்லை. அந்த கதை சொல்லும் முறை, காட்சி-படத்தின் அழகியலுக்குத் தகுந்தது. நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் அதைப் பார்க்கலாம்.
முதல்மரியாதை வேறு பிராணி - அதில் ஒரு sexual frustration undercurrent இருக்கும். அதை மிகக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார். அந்த flirtatiousness கொஞ்சம் பிசகினாலும் நன்றாக வந்திருக்காது. ஆனால் கதைக்கு அது மிக முக்கியம். என்றாலும் கூட ஒரு காட்சியில் அனேகமாக 'ஒரு உணர்ச்சி'யே மேலோங்கி நிற்கும். அதை சிறப்பாக வெளிக்கொணர்வதே அவர் பாணி என்பேன் (Let me know if any of you disagree, it would be interesting to hear).
ஆனால் கமல் - அவரது எழுத்துப் பொற்காலமான 89-95ல் எழுதிய கதைகளில் பல simultaneity of multiple emotions வந்துகொண்டே இருக்கும். சில நேரம் ஒரே காட்சியில் இருவேறு கதைமாந்தர்கள் இருவேறு விதமாக ரியாக்ட் செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு திரையெழுத்தாளராக தன்னைத் தானே challenge செய்துகொள்ளும் இடங்கள் அவை.
ஆனால் சிவாஜி கிடைத்ததும் ஒரே நபருக்கே ஒரே தருணத்தில் உருவாக்கி விளையாடியிருப்பார்கள். What fun he must have had writing those scenes with Sivaji in mind! He would have tried to up the challenge: let us make the emotions more and more complex, let us create more moments where the acting would shine through, where a crackle of the voice and demeanor would convey the emotion of the scene.
Vankv, உங்கள் இளைய மகன்-அப்பா insightஐ ரசித்தேன். கமலும் ஒரு கடைசிப்பிள்ளை.
Dramas
‘Jahangir', ‘Neethiyin Nizhal', ‘Kalam Kanda Kavingan', ‘Vengayin Maindhan' and ‘Vietnam Veedu'