-
ஆய்வோம் அவன் ஆற்றல் அவன் ஏற்றம்
அறிவோம் அவன் அருமை அவன் பெருமை
இதமானது எது இறைவன் யார் ஆதாரமெது
அச்சுதன் யார் பக்தவத்சலன் யார் -தேடினார்
தேடி தெளிந்தார் தெளிந்தது பகன்றார்
நாடினார் நாடி கண்டுகொண்டார் பீஷ்மர்
நாராயணா வென்னும் நாமம் - நவின்றார்
ஆயிரம் திருநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம்
தருகிறான் விஷ்ணு தயக்கமின்றி கேள்
தருமம் பொருள் வம்சம் செழிக்கும்
துதிப்பவன் இருவினை இடரும் தீரும்
தூய்மையுடன் ஆயிரம் நாமம் சொன்னால்
நெறி சொல்லி நின்றாரில்லை பேரறிவு பீஷ்மர்
பெருமாள் பேர்பாட ஆயிரம் வைஷ்ணவ
அருந்தெய்வ திருநாமம் அடுக்கடுக்காய்
அருளினார் அழகாய் அம்பு படுக்கையில்
அஞ்சன வண்ணன் அமலன் விமலன் பேரோடு
இருடிகேசன் கோவிந்தன் பத்மநாபன் போக்தன்
அமரப்ரபு மதுசூதன் கேசவன் ஸ்ரீமான் என
அனந்த கல்யாண குணமாய் ஆயிரம் பேர்
அத்துடன் அநேகரூபன் அஜாதன் வனமாலி
ஆதித்யன் தாமோதரன் திரி விக்கிரமன்
அனுகூலா அச்சலா என சில நாமம் செதுக்கி
செவ்விய சஹஸ்ரனாம மாலை சேர்த்தார்
மாதவன் பேர் பாடவே மானுடம் உய்யவே
மண்ணு புகழ் மஹாவிஷ்ணு திருவடி சேரவே
https://encrypted-tbn1.gstatic.com/i...3YNJIl5_fhSqKA
// தொடரும் ... இது விஷ்ணு பற்றி அல்ல ராமனின் புகழ் சொல்ல :: எனது கிறுக்கல்கள் //
-
சேரவே சேராது இருப்புப்பாதையின் தண்டவாளங்கள்
தனித் தனிக்குணம் கொண்ட ஆண் பெண் மனங்கள்
பங்கமின்றி தொடரும் நம் நீண்ட நெடிய பயணங்கள்
பாங்காய் உள்வாங்க வேண்டிய பெரிய உண்மைகள்
-
உண்மைகள்
பொய் என்ற கொழு கொழு அண்ணனின் சோனித் தம்பி
வாய் நிறைய புகழ்ந்து அடிக்கடி அழைப்பர் போற்றுவர்
அகப்பை நிறைய அன்னம் என்னவோ அண்ணனுக்கே
ஜகத்தை அழிக்கும் பாரதி குரலுக்காய் சிறிதே அன்னம்
எல்லா தொற்றும் தொ ற்றி உயிர் விடும் சாத்தியங்கள்
கல்லாரும் கற்றோரும் கச்சேரியில் உரைக்க தேவை
மருத்துவரை கூப்பிட்டு பிழைக்க வைத்து குறை சோறு
கருத்து சொல்ல கூப்பிடுவது தம்பியை மறைபொருளாய்
ஒறுத்து புறம் தள்ளி போற்றுவது அண்ணனை அக்கா லட்சுமி
விரும்பி சேருமிடமோ அண்ணன்தான் தங்கை தரித்திரத்தை
கருமி நெஞ்சுடன் குற்றுயிரான தம்பியுடன் குலவ சொல்வாள்
தம்பியை போற்றி புகழ்ந்து என்ன பயன் வாழவிடாமல்
கம்பிக்குள் போக விடாமல் கண்டோரையும் காப்பது அண்ணனே
அண்ணா அண்ணா என தம்பிகள் அழைப்பது புரிந்திருக்குமே
அண்ணனின் புகழுக்கு அழிவேயில்லை காணீர் ஜகத்தோரே
பி.கு- சி.க -கச்சேரி என்றால் கோர்ட்.
-
ஜகத்தோரே அறிவீர் சர்வம் விஷ்ணு மயம்
ஜகத்ரக்ஷகன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
துக்கித்தோரே துதியுங்கள் ஆயிரம் நாமம்
தூரப்போகும் துன்பமெல்லாம் இன்பம் சேரும்
அருளியே முடித்தார் பீஷ்மர் ஆயிரம் நாமம்
அன்னை பார்வதியும் அங்கேயே பரமனும்
ஆவலுடன் அனைத்தையும் கேட்ட பின்னர்
அன்னபூரணி அகிலாண்டேஸ்வரி அவளது பதி
அம்பிகாபதி அவனிடம் ஆச்சரியமாய் கேட்டதிது
என்னதிது ! ஈஸ்வரா! எவ்விதம் சாத்தியம்
எந்நாளும் சொல்வது ஆயிரம் திருநாமம்
ஏது மாந்தர்க்கு காலம் நேரம் தினம்
ஏதேனும் எளிதான உபாயம் உங்களிடம்
இருந்தால் சொல்லவேண்டும் என்னிடம்
இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னான்
இறைவன் : என்னுயிர் மனோரமா - ஏனில்லை
எளிதான உபாயம் உண்டு ராம ராம என்று
நாளும் சொன்னால் ஆயிரம் நாமத்தின்
பலனும் அப்போதே கிடைக்கும் அறிவாய்
https://encrypted-tbn3.gstatic.com/i...laUHQiEpRP-f4S
" ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே !!!"
-
அறிவாய் அளவாய் உப்பு காரமிட்டு
அறுசுவை விருந்து படைத்து மகிழ
அறியாய் அழுக்கும் அவலமுமான
அகந்தையுடன் பிறந்த ஆண்மகனை
-
ஆண்மகனாய் பாராது
ஆன்மீகமாய் பார்த்திடின்
நாமம் ஏதாயினும்
நன்மைப் பயத்திடும்
நஞ்சில்லா நெஞ்சுடன்
நம்பி நினைத்திட்டால்.
-
கிறுக்கன்
-
நினைத்திட்டால் அந்த நாளை நினைத்திட்டால்
பாலாய் பொங்குது பாவை மனசு பரவசத்தில்
பிறந்த வீட்டை விட்டு புது உலகம் சென்றிட
படபடப்பாய் இமைகள் இனி துடிக்காமல் மூட
பொருட்டில்லையிங்கு சேர்த்து வைத்த எதுவும்
பறப்பேன் புதிய உலகில் இப்பூத உடலை துறந்து
-
துறந்து செல்வதற்கு நான் ஒன்றும் பற்றற்றவன் இல்லை
பறந்து மேற்பார்வை கொள்வதற்கு நான் பறவையும் இல்லை
இறந்து போனால் எதைத்தான் பார்ப்பேன் விவரமும் இல்லை
சிறந்து விளங்கிட எத்துறைதேடுவேன் வழிகாட்டி இல்லை
திறந்த புத்தகமாகிட நான் என்ன சிறப்பு கொண்டேன் வாழ்வில்!!!
-
வாழ்வில் சவாலுக்கு என்றும் பஞ்சமுண்டோ
வரிந்து கட்டி நீயும் போராடிட வேண்டாமோ
வருந்துவதால் எவ்விதமான பயனுமுண்டோ
வதனம் தான் வாடி தன் ஒளி இழக்கலாமோ
சோர்வை நீக்கி சுயபச்சாதாபம் தவிர்த்து எழுந்திடு
சொடுக்கிக் கூப்பிடு சோதனைகளை வா வாவென
வீழ்வேன் என நினைத்தாயோ என சண்டை போடு
வாழ்வது ஒரு முறை அதை செய்திடு நிறைவோடு
-
நிறைவோடு வாழ்பவன்
பிறந்த போது நிர்ணயித்த எதிர்காலம்
சிறந்த பள்ளிக்கு வித்யா மந்திர்
பள்ளிக்கு செல்ல எந்த கார் யார் ஓட்டுனர்
மெள்ள கல்வி பயில நீச்சல் கற்க ஒரு இசைக்கருவி
கூடவே டென்னிஸ் அவ்வப்போது கிரிக்கெட்
தேடவே தேவையில்லாமல் நிர்ணயித்த இணை
தந்தையின் செல்வ நண்பரின் ஒரே மகள்
எந்தையும் தாயும் மகிழ வருடம் ஒரு பிறந்தநாள்
கூடுதல் இரண்டில் ஒன்றாம் குழு முடிந்தவுடன்
தேடுதல் இன்றி நிர்ணயித்த ஐந்து லட்ச ஐ டி தனியார்
முடிந்ததும் டி.சி.எஸ் மும்பையில் முதல் வேலை
கடிமணம் அடுத்த இரண்டாம் வருடம் பிள்ளை பிறந்தான்
வித்யாமந்திர் சற்றே பெரிய கார் அடிக்கடி மாறும் ஓட்டுனர்
மத்யமர் வாழ்வில் எங்கே மாற்றம் மகிழ்ச்சி ஒன்றே நிலை
எப்போதாவது சேரியில் விளையாடி கழித்து தன் பிற்காலம்
தப்போ சரியோ தன் கையிலாக நிலையாமையில் உழலும்
வறியசிறுவனை வேடிக்கை பார்க்குங்கால் வாழ்க்கையில்
தெரியவரா நிலையாமை அறியாமை ஆச்சர்யங்கள் தான்
சுவையோ தன் வாழ்வை தானே வாழ்தல் தனித்தன்மையோ
கவைக்கு உதவா நிச்சய வாழ்வில் சில திருப்பங்களும் உண்டு
சக்கரை நோய் திடீர் பணி மாற்றம் பணி நீக்கம் திருப்பி தேடும்
அக்கரையில் அயர்ச்சி மகனின் திடீர் குடி பழக்கம் பணப்பை
பறிபோதல் சிலதொலைத்தல்கள் மறதிசார் மனமாச்சர்யங்கள்
வறியோருக்கு வக்கற்றோருக்கே வாழ்க்கை சுவாரஸ்ய சுவையோ
பிறப்பிலேயே நிர்ணயிக்க பட்ட நாடக வாழ்வு ஒரே கதை
மறக்காத மக்களின் அதே நிலை அதே நிறை அதே அதே அதே