http://www.inbaminge.com/t/s/Sudarum...oravaliyum.jpg
Printable View
கே.சி.எஸ். அருணாசலம் பற்றிய தகவலுக்கு நன்றி.கிருஷ்ணா சார்...இவரது மரபுக் கவிதைகளைத் தேடிப் பார்க்கணும்
http://media.dinamani.com/2014/08/31...es/w460/p3.jpg
"அந்தக் காலத்தில் ஏ.கே. சேகர், கனு தேசாய், சுதேந்து ராய் போன்ற ஆர்ட் டைரக்டர்கள் இருந்தார்கள். நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? என்னவோ?'' என்று தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார் தோட்டா தரணி. சென்னை தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது. தோட்டா தரணியின் பின்னால் அவர் வரைந்த தேசிய ஆர்ட் காலரியும், கபாலி கோயிலும், சாந்தோம் சர்ச்சும் கறுப்புக் கோட்டோவியங்களாக் சட்டங்களுக்குள் உயிரோடு இருந்தன.
""நான் சின்னப் பையனாக இருந்த போதே என் அப்பா வெங்கடேசுவர ராவுடன் ஸ்டூடியோக்களுக்குப் போவேன். மல்லீசுவரி என்ற சரித்திரப் படத்துக்கு என் அப்பாதான் ஆர்ட் டைரக்டர். அவர்களுடைய உழைப்பெல்லாம் இப்போது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இப்போது திரைப்படங்களில் ஆர்ட் டைரக்டரின் பங்கே மாறிவிட்டது என்று நான் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கங்கா என்று ஒருவர் இருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். புராணப்படங்களுக்கு அவர் மாதிரி யாரும் உழைத்திருக்க மாட்டார்கள்''
இரு நூறு திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிய தோட்டா தரணியின் சொற்பொழிவில் அப்பட்டமான உண்மை தெரிந்தது. தாபம் தெரிந்தது.
அந்த நாட்களில் சென்னைதான் தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தி திரைப்படங்கள் அதிகம் தயாரிக்கும் மையமாக இருந்தது. சில ஆங்கிலப் படங்கள் கூட இங்கே தயாரிக்கப்பட்டன. பிறகுதான் நாகேசுவர ராவ் ஹைதராபாதுக்கும், பிரேம் நசீர் கேரளாவுக்கும், ராஜ்குமார் பெங்களூருக்கும் ஸ்டூடியோக்களைக் கொண்டு போனார்கள்.
""சிறுவனாக அப்பாவுடன் ஸ்டூடியோக்களுக்குப் போன போது எம்.ஜி.ஆரைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். மறு நாள் பள்ளிக்கூடத்தில் போய் சினேகிதர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன் சிவாஜி, ஜெமினி எல்லாருடனும் பேசி, பழகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஆர்ட் டைரக்டருக்கும் சீன் டிசைன் பண்ணுபவருக்கும் இடையில் ஒரு பாலமாக இருப்பாராம் மேஸ்திரி. திறமை வாய்ந்த ஆசாரிகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாம் இருந்த காலம் அது. திரைப்பட இயக்குநர் செட் டிசைன் பற்றிப் பேச மாட்டார். தயாரிப்பாளர்தான் ஆர்ட் டைரக்டரிடம் பேசுவாராம் 35000 ரூபாய் ஆகும் செட்டை, 10000 ரூபாய்க்குள் முடிக்க முடியாதா? என்று கேட்பார்களாம்.''
ஆனால் தோட்டா தரணியின் செட்டுகள் மட்டும் ஏன் மக்கள் மத்தியில் பேசப்பட்டன?
""நிஜம் போல இருக்க வேண்டும் என்ற அக்கறைதான். ஒரு தடவை ஒரு செட்டுக்காக நல்ல உலர்ந்த புல் தேவைப்பட்டது. முதல் நாள் பெய்த அடை மழையில் எங்கே கிடைக்கும் உலர்ந்த புல்? நான் சோர்ந்துவிடவில்லை. என்னுடைய ஆட்கள் வீடு வீடாகப் போய் ஆறு லாரிகளில் உலர்ந்த புல்லைச் சேகரித்துக் கொண்டு வந்தார்கள்.''
தோட்டா தரணியின் சென்னை அனுபவங்களைக் கேட்க வந்திருந்த ரசிகர் கூட்டத்தை அவர் ஏமாற்றவில்லை. திரைப்படத் துறைத் தகவல்களாகக் கொட்டினார். ஒரு பான் வாங்கிக் கொண்டு வர என்றே ஒரு கார் போகுமாம்
""நாங்கள் நிறைய நாட்கள் நெடுந்தூரம் நடந்ததும் உண்டு. இரவு இரண்டு மணிக்கு, கோடம்பாக்கத்திலிருந்து ஆழ்வார்பேட்டைக்கு நடந்து சென்றதுண்டு. ஆட்டோவில்தான் அதிகம் பயணம். புரொட்யூசரைத் தேடிப் போனால், இன்றைக்கு நேரம் இல்லை சார். நாளைக்குப் பார்க்கலாம் என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் வாங்கிய போது, "கார் வாங்கிட்டான் பாரு' என்று கிசுகிசுத்தார்கள். ஒரு பிரம்மாண்டமான அறைக்கு வர்ணம் பூசச் சொன்னார்கள். ஒரே நாள். அதற்கு 200 ரூபாய் தந்தார்கள்'' என்று தம் பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார் தோட்டா தரணி.
தோட்டா தரணி ஒரு தடவை பாரீசுக்குப் போன போது கிடைத்த ஓய்வு நேரத்தை, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த படங்களை வரையப் பயன்படுத்திக்கொண்டார். அவருடைய படங்கள் காலண்டர்களிலும், ஒரு சில விளம்பரங்களிலும் வந்திருந்தாலும், அவர் வரைந்த சில முக்கியமான ஓவியங்கள் உலகின் பல பாகங்களிலும் உள்ள அவருடைய ரசிகர்களின் தனிப்பட்ட கலெக்ஷனில் இருக்கிறதாம்.
""பம்பாயில் ஆறு மாசம் ஒரு விளம்பர கம்பெனியில் வேலை பார்த்தேன். இவன் இங்கே இருந்தால் ஆபத்து என்று என்னை சென்னைக்கே அனுப்பிவிட்டார்கள்'' என்று சொன்னபோது மெல்லிய சிரிப்பலை.
உடையலங்காரம் எல்லாம்கூட ஆர்ட் டைரக்டர்தான் அன்றைக்கு டிசைன் செய்து கொடுத்தாராம். திருவல்லிக்கேணியில் உள்ள தையல்காரர்கள் வேண்டிய மாதிரி, நேரத்தில் தைத்துக் கொடுத்துவிடுவார்களாம். "அஞ்சலி' படத்துக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு செட் போட டிசம்பர் 25ஆம் தேதி சொன்னார்கள். மறு வாரம் முதல் தேதி செட் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அந்தக் கடுமையான சோதனையை வெற்றிகரமாக முடித்தாராம் தரணி. நாயகன், தளபதி செட்டுகள் எல்லாம் பிரபலமாகப் பேசப்பட்டவை.
""மதுரை மீனாட்சி அம்மன் கோயில், உள்ளே பொற்றாமரைக்குளம் எல்லாம் ஒரு செட் போட்டீர்களே எல்லோரும் நிஜம் போல அதை எல்லாம் வணங்கினார்கள். அதை எல்லாம் அப்படியே வைத்திருந்தார்களா?'' என்று ஒருவர் கேட்டார். "" ஊஹும்'' என்றார் தோட்டா தரணி.
""ஒரு செட்டை படப்பிடிப்பு முடிந்ததும் பிரித்துவிடும்போது, உங்களுக்கு எப்படி இருக்கும்?'' என்பது இன்னொரு ரசிகர் கேள்வி.
""அது அழிக்கப்படும்போது அதைப் பார்க்க நான் அங்கே இருக்க மாட்டேன்'' என்றார் தரணி.
முதலில் தம்மைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல ஆரம்பித்தாலும், பதினைந்து நிமிடங்களுக்குத் தம் படைப்புகளை ஒரு குறும்படமாகக் காண்பித்த பிறகே, தம் பேச்சைத் தொடர்ந்தார் தோட்டா தரணி. வி. ஸ்ரீராம் தரணியை ஆரம்பத்தில் அறிமுகம் செய்து பேசினார். முடிவில்,""தரணி, நீங்கள் வரைந்ததிலேயே எனக்குப் பிடித்தது ஏ.வி.எம் செட்டியார் அவர்களின் புகைப்படம்தான். மத்திய அரசு அவருடைய தபால் தலை வெளியிடுவதற்காகக் கேட்டபோது அதை வரைந்து கொடுத்தீர்கள். அதன் பிரதியை மட்டும் நான் மத்திய அரசுக்குக் கொடுத்துவிட்டு, அதன் அசலை பத்திரமாக வைத்திருக்கிறேன், அதில் உங்கள் கையெழுத்துக்காக'' என்றார் மோகன் ராமன்.
கார்த்திக் சார்
நீங்கள் பூபாளம் பற்றி ஒரு பதிவு ஆரம்பிதீர்கள் .'இது குழந்தை பாடும் தாலாட்டு ' என்ற பாடலுடன்.
தீடீர் என்று பதிவை காணவில்லை
வாசு சார்
பெற்ற மனம் பித்து ஜெயா சாவித்திரி ஸ்ரீகாந்த் நாலாவது கூலிங் கிளாஸ் யாரு சார் ?
ஹீரோ நவரச திலகம் காணோமே ?
http://www.thehindu.com/multimedia/d...76_776841g.jpg
நவாப் நாற்காலி எஸ் வி சஹஸ்ரநாமம் பற்றி திரு வாசு அவர்கள் கூறிய ஒரு கருத்து ரொம்பவே சிந்திக்க வைத்தது.அதன் விளைவே இநத பதிவு
("திரும்பிப் பார்க்கிறேன்' என்ற சுயசரிதை நூலில் பாரதி கலைஞர் எஸ்.வி.சஹஸ்ரநாமம்).
தாயாரின் அரவணைப்பு இல்லாததால் பொள்ளாச்சியில் பெரிய தகப்பனார் இல்லத்தில் தங்கிப் படிக்கும்படி நேரிட்டது. பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா நாடகங்களில் சிறு வேடங்கள் ஏற்று நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
அந்தச் சமயத்தில்தான் மதுரை ஸ்ரீபால ஷண்முகானந்த சபா என்ற பெயரில் சிறுவர்களைக் கொண்ட குழு ஒன்று பொள்ளாச்சியில் நாடகம் போட்டுக் கொண்டிருந்தது. இதே குழுதான் பின்னர் டி.கே.எஸ் நாடக சபா என்ற பெயரில் பல சமுதாய, சரித்திர, நாடகங்களை நடத்திப் பிரபலமாக இருந்து வந்தது. அந்தக் குழுவினர் நடத்திய "அபிமன்யூ சுந்தரி' என்ற நாடகத்தில் டி.கே.சண்முகம் அபிமன்யுவாகத் தோன்றித் துடிப்பாக வசனம் பேசி நடித்து மக்களின் கரவொலியைப் பெற்றபோது நாமும் இந்தக் குழுவில் சேர்ந்து நடித்தால் நம்மையும் பாராட்டுவார்களே என்ற ஆசை என் மனதில் வேர்விட்டது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். பொள்ளாச்சியிலிருந்து குழு கோவைக்கு முகாமை மாற்றியபோது என்னுடைய புதிய ஆங்கிலப் புத்தகத்தை ஆறாணாவுக்கு விற்றுவிட்டு வீட்டுக்குத் தெரியாமல் கோவைக்கு ரயில் ஏறி விட்டேன்!
அடுத்த நாள் நாடகக் குழு மானேஜர் திரு.காமேஸ்வர அய்யரைப் பார்த்து என் ஆசையை வெளியிட்டபோது அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ""அவ்வளவு சுலபமாக உன்னைச் சேர்த்துக்கொள்ள முடியாது. ஒன்று உன் பெற்றோர் நேரில் வரவேண்டும் அல்லது கடிதமாவது கொடுக்க வேண்டும்'' என்றார் கறாராக! கடிதம் வாங்கி வருவதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டேன். அப்பாவிடம் நாடகக் கம்பெனி பேச்சை எடுத்தால் என்ன நடக்குமென்று எனக்குத் தெரியும். ஒரு முடிவுக்கு வந்தேன். என் தகப்பனார் எழுதுவதுபோல் ஒரு கடிதத்தை எழுதி மானேஜரிடம் சேர்த்தேன். அவர் பார்வை என்னை நம்பவில்லை என்பதைச் சொல்லியது! ""இது உன் அப்பா கையெழுத்தா?''
என்று கேட்டார். ""ஆமாம்'' என்று அடித்துச் சொல்லி விட்டேன்! அவர்களோடு தங்க அனுமதி கிடைத்தது.
மறுநாள் மாலை மூன்று மணியிருக்கும். இன்னொரு உறவினரோடு அப்பாவை நாடகக் குழு இருந்த இடத்தில் பார்த்ததும் என் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது! மானேஜர் ஆள் மூலம் அப்பாவுக்குத் தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்! இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது? நாங்கள் தங்கியிருந்த இடத்துக்குப் பின்னால் ஒரு பெரிய கேணி. உள்ளே படிக்கட்டுகள். அதில் இறங்கி ஒளிந்து கொண்டேன். சமையல் உதவியாளர் ஒருவர் இதைப் பார்த்துச் சொல்லிவிட்டார்! மானேஜர் முன்னிலையில் அப்பா கேட்டார்: ""படிப்பா? நாடகமா?''
""நாடகம்தான்'' என்று தயங்காமல் சொன்னேன்! ""தலை எழுத்துப்படி நடக்கட்டும்!'' என்று ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்! இப்போது நான் மதுரை ஸ்ரீபால ஷண்முகானந்தா சபாவில் ஒரு நடிகன்!
கிருஷ்ணா சார்,
http://www.frontline.in/static/html/...6000707901.jpg
சகஸ்ரநாமம் பதிவு ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங். நல்ல நடிகர். இவர் நடித்த படங்களிலேயே எனக்கு 'பேசும் தெய்வம்' தான் ரொம்பப் பிடிக்கும். பலர் 'போலீஸ்காரன் மகள்' என்பார்கள். சகஸ்ரநாமம் 'பர்மா ராணி' என்ற மாடர்ன் தியேட்டர்ஸ் படம் மிகப் பழைய படம் (1945)ஒன்றில் சிறு வேடத்தில் வருவார். டிஆர்.சுந்தரம் அதில் வில்லன். மிக வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட படம். சமீபத்தில்தான் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது. ஹொன்னப்ப பாகவதர்தான் ஹீரோ. ஹீரோயின் யார் என்று கேட்கிறீர்களா? அப்புறம் நம்ம சி.க.வுக்கு என்ன வேலை இருக்கிறது?:)
டியர் சின்னக்கண்ணன் சார்,
மூக்குத்தி பற்றிய ஆராய்ச்சிப்பதிவு உண்மையிலேயே அசர வைத்தது. இதுவரை மூக்குத்தி வெறும் அழகுக்காக அணிந்து வந்ததாகவே நினைத்திருந்தேன். அடுத்து, காது தோடுக்கு என்ன மருத்துவக்காரணம்?. இப்படி ஒவ்வொரு நகைக்கும் காரணம் கண்டுபிடித்தோமானால் அப்புறம் வீட்டில் நச்சரிப்பு தாங்க முடியாதே. அப்புறம், தொப்புளில் குத்திக்கொள்கிறார்களே ஒரு தொங்கட்டான் அதுக்கும் ஒரு மருத்துவ காரணம் இருக்கணுமே.
இன்றைய ஸ்பெஷல் (66)
இன்றைய ஸ்பெஷலில் 'பிரேமாலயா'வின் '47 நாட்கள்' படப் பாடல். 47 ஜென்மமானாலும் மறக்க முடியாத பாடல்.
'மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே'
http://i.ytimg.com/vi/8wVhsnprGrQ/maxresdefault.jpg
பாடலை மட்டும் ஆய்வு செய்ய நினைத்தால் மனம் கேட்கவில்லை. அதுவும் பாலச்சந்தரின் அதிதீவிர ரசிகர்கள் வேறு இருக்கிறார்களா! 'மன்மத லீலை'க்கு அவ்வளவு வரவேற்பு இருந்ததே! அதனால் கொஞ்சம் படத்தைப் பற்றியும் சொல்லிவிடலாம் என்று. அப்புறம் நண்பர்கள் நீங்கள் புகுந்து பிரித்து மேய்ந்து விட மாட்டீர்களா என்ன!
முதலில் இப்படத்தின் கதையை கொஞ்சம் பார்த்து விடுவோம்.
விஷாலி என்ற வைஷாலி ஒரு அப்பாவி பிராமணப் பெண். அவளை திருமணம் செய்து கொள்கிறான் குமார் என்ற இளைஞன். அவன் வேலை பார்க்கும் பாரீஸுக்கு அவளை அழைத்துச் செல்கிறான். தம்பதியர் சந்தோஷமாக நாட்களைக் கழிக்கும் தருணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குமாரின் நடத்தைகள் மேல் விஷாலிக்கு சந்தேகம் வரத் தொடங்குகிறது. ஆமாம். அவள் சந்தேகப்பட்டது மாதிரி எல்லாம் நடக்கிறது. குமார் ஏற்கனவே லூஸி என்ற பிரஞ்ச் பெண் டாக்டரை மணந்து கொண்டவன். லூஸியிடம் விஷாலியைத் தன் தங்கை என்றும், விஷாலியிடம் லூசியை தன் சிநேகிதி என்றும் பொய் சொல்லி வைத்திருக்கிறான் குமார். தன் பேச்சு சாதுரியத்தின் மூலமும், கிரிமினல் புத்தி மூலமும் மேல் அபார்ட்மெண்டில் லூஸியுடனும், கீழே விஷாலியுடனும் வெகு சாமர்த்தியமாக குடித்தனம் நடத்துகிறான் அந்தக் கயவன்.
விஷாலி உண்மையைக் கண்டு பிடித்துக் கேட்டதும் வேறு வழியில்லாமல் அவளிடம் தன் முதல் திருமணத்தை ஒத்துக் கொள்கிறான் குமார். லூஸியிடம் பணம் நிறைய இருக்கிறது என்றும் அது வேண்டுமானால் அவளையும், தன்னையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறுகிறான் குமார். ஆனால் விஷாலி மறுக்கிறாள். தாய் வீ(நா)ட்டிற்கு போக வேண்டும் என்று துடிக்கிறாள்.
http://pesumpadam.com/wp-content/upl...al-620x453.jpg
விஷாலி தனக்கு எல்லா விதத்திலும் தடையாய் இருப்பதாக நினைத்து அவளை பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்குகிறான் குமார். அவன் கொடுமையிலிருந்து தப்பிக்க பலவகையிலும் முயலும் விஷாலி மொழி தெரியாததால், தன் நிலைமையை மற்றவர்களிடம் உணர்த்த முடியாததால் ஒவ்வொரு முறையும் அதில் தோல்வி அடைகிறாள். கர்ப்பம் தரித்திருக்கும் விஷாலியை அடிவயிற்றில் சூடு போட்டு கர்ப்பத்தைக் கலைக்கும் அளவிற்கு கொடுமைக்காரனாகப் போய் விடுகிறான் குமார்.
பாரிஸில் அனாதையாக சுற்றிக் கொண்டிருக்கும் துணிச்சல் மிக்க நல்ல மனம் கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணும், மனிதாபமுள்ள ஒரு டாக்டரும் இறுதியில் வைஷாலியின் நிலைமை அறிந்து அவளுக்கு உதவி செய்து குமாரிடமிருந்து அவளைக் காப்பாற்றி அவளை இந்தியா கொண்டு வந்து அவளது தாய்வீட்டில் சேர்க்கிறார்கள். கணவனை வெறுத்து வெறுத்து ஒதுக்கி விட்டு புக்ககத்திலிருந்து மீண்டும் பிறந்தகம் வந்து, வேறு கல்யாணமும் பண்ணிக் கொள்ளாமல் தன் பிறந்த வீட்டிலேயே சோகமாக வாழ்கிறாள் விஷாலி.
குமாரின் கபட நாடகங்களைத் தெரிந்து கொண்ட அவன் முதல் தாரம் லூஸியும் தன் திருமண மோதிரத்தைத் தூக்கி எறிந்து குமாரை உதறித் தள்ளுகிறாள். விஷாலியும் இல்லாமல், லூசியும் இல்லாமல் தனியே விழிக்கிறான் குமார்.
விஷாலியின் கதையை சினிமாவாக எடுக்க முடிவு செய்கிறார்கள். நடிகை சரிதா விஷாலியின் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி அந்த கேரக்டரை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் விஷாலியை நேராக சந்தித்து விஷயங்களை தெரிந்து கொள்ள விஷாலியின் கிராமத்திற்கு செல்கிறாள். முதலில் சரிதாவிடம் எதையும் சொல்லாமல் எறிந்து விழுகிறாள் விஷாலி. விஷாலியின் அண்ணன் சரிதாவிடம் தன் தங்கையின் கதையை சொல்கிறான்.
பின் விஷாலி சமாதானமாகி சரிதாவை வழி அனுப்பி வைக்கிறாள்
'சினிமாவிலாவது எனக்கு மறு கல்யாணம் செய்து வையுங்கள்' என்று.
சொல்லியபடி.
சிவசங்கரியின் புகழ் பெற்ற பெருத்த வரவேற்பைப் பெற்ற கதை. பாலச்சந்தர் கதை கெடாமல் அதே சமயம் பாரிஸின் கண்கவர் அழகை படம் நெடுக விஷாலிக்கு சிரஞ்சீவி சுற்றிக் காண்பிப்பது போல நமக்குக் காட்டி நல்ல நடிகர்களை நடிக்க வைத்து இப்படத்தை நன்றாக இயக்கியிருப்பார். 'எல்லோரும் சதையை எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்றால் பாலச்சந்தர் கதையை எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்று வெற்றி பெற்றிருக்கிறார்' என்று ஒரு பத்திரிகை அப்போது விமர்சனம் எழுதியிருந்தது.
http://i1.ytimg.com/vi/PsQ1cLMrfus/hqdefault.jpg
குமார் என்ற அயோக்கிய நரிக் கணவனாக 'ஆந்திர சூப்பர் ஸ்டார்' ஆரம்ப கால சிரஞ்சீவி, நம் எரிச்சலை அவர் மேல் அழகாக வரவழைப்பார். (இப்படிப்பட்ட திறமைசாலிகள் ஓடும் விமானத்தைத் தனி ஆளாக தடுத்து நிறுத்துவதும், ஒத்தையாய் ஒரு நூறு பேரை அடிக்கும் மாஸ் ஹீரோவானது பற்றி என்ன சொல்வது!)
http://i.ytimg.com/vi/7966bSNuAP4/default.jpg
பரிதாப நாயகி விஷாலியாக சாமுத்ரிகா லட்சண அழகி ஜெயபிரதா. மிக அழகான, இயல்பான, பரிதாபப்பட வைக்கும், அழகுடன் சேர்ந்த அளவான நடிப்பு. ஜெயபிரதாவைக் காப்பாற்றும் உத்தம ரவுடிப் பெண்ணாக 'தம்'மடிக்கும் ரமாபிரபா, (ரமாபிரபாவுக்கு வாணியின் குரலில் வித வித காஸ்டியூம்களில் 'இவள் உன்னை நினைத்த போதே மடக்குவாளய்யா'என்ற பாடலும் உண்டு) டாக்டராக பாலச்சந்தரின் 'ஜென்டில் மேன்' சரத்பாபு, (ஒரிஜினல் கணவன் மனைவி) மற்றும் பாலச்சந்தரின் (கிருஷ்ணா சாரின்) ஆஸ்தான ரமணமூர்த்தி, அனுமந்து அனைவரும் உண்டு
ஜெயபிரதாவிற்கு நடிகை சுஜாதா குரல் கொடுத்திருப்பார். சிரஞ்சீவிக்கு 'டெல்லி' கணேஷ் என்று நினைக்கிறேன். சரிதா நடிகையாக சிறு ரோலில். ஆன் பட்ரீஷியா என்ற பிரெஞ்ச் நடிகை லூஸி என்ற சிரஞ்சீவியின் முதல் காதலியாக
ரகுநாத ரெட்டி காமரா. கண்கவர் பாரீஸ் இவர் திறமையால் நேரே நம் கண் முன்னாடி.
இசை 'மெல்லிசை மன்னர்'. பாடல்களை மட்டுமல்ல. ரீரிக்கார்டிங்கில் அதம் பறக்கிறது. குறிப்பாக இறுதியில் விஷாலி குமாரிடம் இருந்து தப்பி பாரிஸ் நகரத்தில் ஓடும் காட்சி.
இந்த ஒரு பாடல் போதும் அவருடைய ஒட்டு மொத்தத் திறமைக்கு. 'தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை' என்ற அருமையான இன்னொரு பாடலும் உண்டு. (பாலா வித் வாணி)
இப்பாடலின் ஆரம்ப பிரம்மிக்க வைக்கும் இசையைக் கேட்காமல் விட்டு விடாதீர்கள்.
http://i1.ytimg.com/vi/3xjLSr2sz7E/mqdefault.jpg
விஷாலி படத்தில் தன் கணவனால் அனுபவிக்கும் கஷ்டங்களின் போது துண்டு துண்டாக பின்னணியில் ஒலிக்கும் பாடல் படம் முழுக்க வரும்.
பாடலைக் கேட்கும் போதெல்லாம் நம் நெஞ்சை அடைப்பது போல ஓர் உணர்வு நமக்கு வருவது தவிர்க்க முடியாதது. அது பாலாவுக்கும், மன்னருக்கும் கிடைத்த வெற்றி
பாலாவுக்கு முழு கிரெடிட்டும் போய் சேரும். மனிதர் அப்படி பாடலின் தன்மை அறிந்து, குழைத்து, விஷாலியின் மேல் படம் பார்ப்போரின் இரக்கத்தை அதிகப்படுத்தும் அளவிற்கு உணர்ந்து பாடி பிரமாதப் படுத்தியிருப்பார்.
பாலாவின் மிக முக்கியமான பாடல்களில் மிகச் சிறப்பான தலையாய மனதைப் பிசையும் பாடல் இது.
கண்ணதாசனின் அட்டகாசமான, எளிமையான, விஷாலியின் துன்ப நிலையை மிக அழகாக நம் நெஞ்சில் பதிய வைக்கும் வரிகள்.கதைக்குத் தகுந்தாற்போல தாய்நாட்டின் பெருமையையும் சேர்த்து வரிகளாக்கிய சாமர்த்திய திறமைசாலி.
இப்பாடல் படத்தில் மொத்தம் விட்டு விட்டு 7 நிமிடங்களுக்கு வரும். ஆனால் வீடியோவில் பாதியளவு பாடல்தான் உள்ளது. இறுதி 2 சரணங்கள் மிஸ்ஸிங். எனவே இப்பாடலின் ஆடியோ இணைப்பும் தந்துள்ளேன். அனைவரும் முழுப் பாடலையும் கேட்டு தன் வசம் இழக்கலாம்.
http://www.4shared.com/mp3/W44Qsj6s/...html?locale=en
கொஞ்சம் பெரிய பாடல். பாடலில் மொத்தம் நான்கு சரணங்கள். ஒவ்வொரு நிலையிலும் விஷாலி படும் துயரங்களை விளக்கும் பாடல்.
இனி பாடலின் முழு வரிகள்
http://i.ytimg.com/vi/8ZaRiSOmA8E/hqdefault.jpg
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
தாமரைப் பூவென்றான்
காகிதப் பூவானான்
ராமனைப் போல் வந்தான்
ராவணன் போலானான்
தாமரைப் பூவென்றான்
காகிதப் பூவானான்
ராமனைப் போல் வந்தான்
ராவணன் போலானான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு
பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம்
ஊருக்கு ஒரு எண்ணம்
யாருக்கு அவன் சொந்தம்
யாருக்கு அவன் மஞ்சம்
கண்ணீரில் நீராட கடல் தாண்டி
வந்தாளே பொன்மங்கை
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
பேதங்கள் அறிகின்றான்
வேதனை தருகின்றான்
நல்லவன் செல்லாத
பாதையில் செல்கின்றான்
பேதங்கள் அறிகின்றான்
வேதனை தருகின்றான்
நல்லவன் செல்லாத
பாதையில் செல்கின்றான்
அப்பாவிப் பெண் உள்ளம்
இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது
காலையில் ஓர் வண்ணம்
மாலையில் ஓர் வண்ணம்
மாறுது அவன் பாதை
வாடுகிறாள் பாவை
பூச்சூடி வந்தாளே
புரியாமல் நின்றாளே இப்போது
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
ஆசையில் ஓர் நாளில்
பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆனோமே
சேயினைக் கண்டோமே
ஆசையில் ஓர் நாளில்
பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆனோமே
சேயினைக் கண்டோமே
ஏன் இந்த சேய் என்று தாளாத
நோய் கொண்டாள் இப்போது
பாசத்தில் நீராடி பந்தத்தில் போராடி
வேஷத்தைத் தொடர்வாளா
வேதனை பெறுவாளா
ஊரில்லை உறவில்லை
தனியாக நின்றாளே பூமாது
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ
எவ்விதம் செல்வாளோ
தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ
எவ்விதம் செல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள்
எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது
இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டுத் தெய்வங்கள்
துணையாக வாராதா இப்போது
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
(பாடல் முடிந்தவுடன் பாடலின் பல்லவி இசையருவியாய் மட்டும் கொட்டும் இன்பத்தைக் கேட்டு அனுபவியுங்கள்)
http://www.youtube.com/watch?v=O1e-G...yer_detailpage