'நிலவே உனக்குக் குறை ஏது' அருமையான பாட்டு சின்னா! 'அழகு ரதம் பொறக்கும்'பாட்டும் கற்பூரம்தான். தாராபுரத்தார் தரணி புகழ் அடைய வைத்த பாட்டு. ஆமா! மதுண்ணா சொன்ன "ம்ம்ம்மாட்டிகிட்டான்" ஷிர்டியும் புதிர் கண்டுபிடிச்சீங்களா?
Printable View
'நிலவே உனக்குக் குறை ஏது' அருமையான பாட்டு சின்னா! 'அழகு ரதம் பொறக்கும்'பாட்டும் கற்பூரம்தான். தாராபுரத்தார் தரணி புகழ் அடைய வைத்த பாட்டு. ஆமா! மதுண்ணா சொன்ன "ம்ம்ம்மாட்டிகிட்டான்" ஷிர்டியும் புதிர் கண்டுபிடிச்சீங்களா?
கே.எஸ்.ஜி என்று சினிமா வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படும் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள்..
சென்னையில் அடித்த புயலால் இவர் இறந்த செய்தி கூட பெரிதாக யாரும் கண்டுகொள்ளாத விதமாக அமைந்துவிட்டது.. பாவம் எப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர் , படைப்பாளி. இன்று கதையே இல்லாமல் படங்கள் வரும் நிலையில் நல்ல கதைக்கரு மற்றும் அழுத்தமான ஆழமான வசனங்களுடன் இவர் இயக்கிய
படங்கள் ஒன்றா இரண்டா …
ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்து, பல பாடல்களும் எழுதி (ஆம் உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே இவரது வரிகள் தான்) , இவரது கதை, வசனம் எழுதும் திறனால் கவியரசரின் அண்ணனால்(திரு ஏ.எல்.ஸ்ரீனிவாசன்) இயக்குனராக உருவெடுத்தார்.
இயக்கிய முதல் படம் சாரதா.. முதல் படமே வித்தியாசமான கதை.. ஆசிரியர் மாணவி காதல், பின் கணவனுக்கு அடிபட்டு ஆண்மை இழத்தல் என மிகவும் கனமான கதைக்கரு .. என்னமாய் இயக்கியிருப்பார் கே.எஸ்.ஜி.
ஒவ்வொரு கதையும் வித்தியாசமாகவு, பெண்மையை மையமாக கொண்டும், சமுதாய பிரச்சனைகளை சொல்வதிலும் இவர் கெட்டிக்காரர்
பணமா பாசமா என்று பட்டிமன்ற தலைப்பு போல் படங்கள் எடுத்து வெற்றி பெற்றவர் .
ஒரு பக்கம் பணமா பாசமா , குலமா குணமா போன்ற படங்கள்
இன்னொரு பக்கம் சித்தி, குறத்தி மகன், கை கொடுத்த தெய்வம் என அழுத்தமான படங்கள்
சித்தி என்ற சொன்னாலே கொடுமை என்று நினைத்துக்கொண்டிருக்க , சித்தி என்று ஒரு படமெடுத்து
பெரிய குடும்பத்தில் படிப்படியாக எல்லோர் அன்பையும் பெறும் அந்த சித்தி பாத்திரம் மக்களை திரும்பி பார்க்க செய்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.சித்தியாக பத்மினி வாழ்ந்திருப்பார்
தெய்வத்தின் தெய்வம்.. இளம் விதவை கதை .. கையாண்ட விதம் அருமை.
கை கொடுத்த தெய்வம்.. அப்பாவித்தனமான ஒரு பெண் .. அவள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், எப்படி சொந்த அண்ணனே அவள் மீது அவதூறு சொல்ல நண்பன் அவளுக்கு உதவ இப்படி போகிறது கதை..
குறத்தி மகன்.. ஒரு குற்வன் குறத்தி சமூக நிகழ்வுகள் அவர்களுக்கு உள்ள ஆசைகள் என அதை படம்பிடித்து
காட்டியது .. குறவன் குறத்தியாக ஜெமினியும் புன்னகை அரசியும் கலக்கியிருப்பார்கள்
கே.ஆர்.வியை பிரபலப்படுத்திய கற்பகம் இவரது இயக்கம்.. அதே கே.ஆர்.விஜயாவின் 100’வது படமான
நத்தையில் முத்து படமும் இவரது இயக்கம் . ஜாதிகள் இல்லையடி பாப்பா தான் கரு. அருமையான படம்
வசனங்கள் பளிச் பளிச்
வாழையடி வாழை, குலவிளக்கு, அடுக்கு மல்லி, பாலாபிஷேகம் என பல வித்தியாசமான படங்களை கொடுத்தவர்.
கதை, வசனம் இயக்கம் எல்லாவற்றிலும் மிக நேர்த்தி அதானால் தானே இவர் இயக்குனர் திலகம்…
பலரும் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய. இந்த கால இயக்குனர்கள் இவரிடம் ஒரு 10 நாள் பயிற்சி எடுத்திருந்தால் கூட நல்ல இயக்குனர்களாகியிருப்பர்.
இவரது மறைவு தமிழ் சினிமா ஒரு மிகச்சிறந்த படைப்பாளியை இழந்துவிட்டது.
இவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், எல்லாம் வல்ல இறைவன் இவரது ஆன்மா சாந்தியடைய
பிரார்திப்போம்
ராஜேஷ்(Rajesh Venkatasubramanian)
https://scontent-atl3-1.xx.fbcdn.net...ab&oe=56E3AB39
அன்பின் வாசு…
ஹாப்பி பர்த் டே டு யூ
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உங்கள் இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளூமே இனியதாக வாழ்த்துக்கள்..
பூசுமஞ்சள் மின்னுதற்போல் போடும் பதிவுகள்
வாசுதான் பெற்ற வரம்
[IMG]http://api.ning.com/files/hSOUK3FODouSSwfJdD1pR28c5FiiOkj*DK6MpxTC-lyTyxyMMWMc7asLaiZihR5Q4oewK2CmLvJIyulE7O3otLcwtaR eEjA5/sivajiganesan.jpg[/IMG]
அகெய்ன் விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே..
உம்மை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :)
[https://youtu.be/i-jlk4dEFLY
வாஸ்ஸூ நாளைக்குத்தான் ப்ர்த்டேயா..அதனால் என்ன அட்வான்ஸ் விஷஷா வெச்சுக்கலாம்.. :) ஜோரா பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பிச்சுடலாம்..
வாசு பிறந்த நாள் கொண்டாட்டம் - 1
காட்டினிலே கானக்குயில்
நெய்வேலியில் நம்ம வாசு பாட்டுப்பாடினார்
மதுர கீதம் பாடினார்..
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனகசபை
நடனமாடினார் ஒருவர் உருவம் மாறினார்...சுசீலாம்மாவின் குரல் இழையல் வெரி நைஸ்..
https://youtu.be/awl6lfD9Q40
vaNakkam from Hawaii! :) I probably wont boher you with any posts for a week. Have fun ! :)
Happy Birthday vasu ! :)
வாவ் ராஜ் ராஜ் சார் என் ஜாய்... ஹேவ் எ ஒண்டர்ஃபுல் ஹாலிடே
இனிய நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .