நடிகர் திலகம் பல தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் முதல் தர விடிவெள்ளியாக எந்தளவுக்கு இருந்திருக்கிறார் என்பதை கீழ்கண்ட தகவல்களிலிருந்து காணலாம். வருட வாரியாக நடிகர் திலகத்தை வைத்து திரைப்பட துறை வளர்ந்த வாழ்ந்த விபரங்கள்
Every 10 year of Release No of Nadigar Thilagam Films
1952 - 1962 ************** 83
1963 - 1973 ************* 84
1974 - 1984 ************* 81
1985 - 1988 ************* 27
Special appearances ********* 17
சிங்கப்பூரில் உடல் நலம் பாதிக்க படாமல் இருந்திருக்குமேயானால் அடுத்த பத்து ஆண்டுகளில் நிச்சயம் அதே அளவில் திரையுலகில் வலம் வந்திருப்பார். உடல் நலம் சற்று தேருவதற்குள் கலைத்துறையில் உள்ள தாகத்தினால் மருத்துவ ஆலோசனையையும் சரிவர செவிசாய்க்காமல், 1991 - 1, 1992 - 4, இதனால் மீண்டும் உடல் நலம் பாதிக்கபட்டாலும், 1993 - 1998 வரை தலா ஒரு திரைப்படமாக குறைத்துக்கொண்டு , 1999இல் மறுபடியும் 3 திரைப்படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்தன.
இது தவிர அந்தந்த வருடத்தில் கௌரவவேடம் புனைந்து மொத்தம் 17 படங்கள்.
40ஆண்டு காலம் எத்தனை புதிய கதாநாயகர்கள், புதிய இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வசனகர்த்த, இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொன்றீருப்பார்கள். எவருமே போட்டிபோட கூட நினைக்கமுடியாவண்ணம் 1953 முதல் வருடத்திற்கு சராசரி 8.58 திரைப்படங்கள் நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது.
இப்படி கலைதுறைக்காகவே தன்னை முழுவதுமாக அற்பனித்துக்கொண்ட உன்னத தமிழன் கலைக்குரிசில் சிவாஜி கணேசன்.
அப்படியென்றால், எத்தனை இயக்குனர்கள், நடிக நடிகையர், கதாசிரியர், வசனகர்த்த, டப்பிங் கொடுப்பவர், நடன அமைப்பாளர், பாடலாசிரியர், மற்றும் எவ்வளவு திரை துறையை சேர்ந்த தொழிலாளர்கள் இதனால் பயன்பெற்றிருபார்கள். திரை துறையின் வர்த்தகம் எத்தனை கோடிகள் இருந்திருக்கும் இவர் ஒருவரால் ....
நினைத்து பார்த்தால் புளகாங்கிதம் அடைகிறது ..!
அப்போது மட்டுமல்ல இப்போதும் எப்போதும் நடிகர் திலகம் பாடல் வரியில் கூறுவது போல " காலம்தனை நான் மாறவைப்பேன்....கண்ணே உன்னை நான் வாழவைப்பேன்...என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு " என்பதுதான் !