நிர்மூலமாய் ஆனதன்று பழையதோர் உலகம்
நிர்மாணமானது அதன்பின் புத்தம்புது பிரபஞ்சம்
அதுவேதான் சூனியத்தின் மாபெரும் சூட்சுமம்
ஒன்றுமில்லாமல் ஆகி பின்னர் பூரணம் பிறக்கும்
Printable View
நிர்மூலமாய் ஆனதன்று பழையதோர் உலகம்
நிர்மாணமானது அதன்பின் புத்தம்புது பிரபஞ்சம்
அதுவேதான் சூனியத்தின் மாபெரும் சூட்சுமம்
ஒன்றுமில்லாமல் ஆகி பின்னர் பூரணம் பிறக்கும்
பிறக்கும் போதே சொல்லிவிட்டார்
..பேதை நானும் உனக்கென்று
அடடா அழகுப் பூஞ்சிரிப்பு
…அழகி இவளும் உனக்கென்று
பதமாய்ச் சொன்னார் உன் அம்மா
…பார்க்க மறுத்தீர் சிறுவயதில்
இதமாய் இளமை பூத்திருக்க
…இனிதாய்ப் படித்தேன் வளர்ந்துவிட்டேன்
வந்தேன் மாமா உமைத்தேடி
..வாகாய்ப் பேச வரச்சொன்னால்
செந்தேள் கொட்டாய் ஒருபார்வை
…சேர்த்துக் கோர்த்த ஒருசிரிப்பு
பெண்ணில் நானும் அழகிலையா.
..பெரிய படிப்புப் படிக்கலையா
எண்ணந் தன்னில் இன்னொருத்தி
..எளிதாய் உமக்கு அமைந்ததுவா..
செல்லக் கிளியாய் சின்னத் திமிராய்
.கள்ளச் சிரிப்பாய் கனிவாய்ச் சிவப்பாய்
வெல்லத் துளியாய் வேகங் கூட்டி
..மெல்ல இங்கே அழைத்தாய் பெண்ணே
பொய்யோ என்னும் இடையா என்றால்
…மெய்யே என்னும் பார்வை வீச்சு
சில்லாய்த் தெறித்த தேங்காய் வெண்மைத்
..தூக்கல் தெரியும் பற்கள் தன்மை
வந்தால் எண்ணம் ஆட்டங் காண
.;..மனதைத் திறந்து சொன்னாய் கண்ணே
உன்னை மறந்தே இருப்பது என்றால்
..ஊரை என்னை மறந்தாற் போல
திண்ணம் வேலை சிலமா தத்தில்
..திகைந்தால் நானும் வருவேன் உன்னூர்
கண்ணில் நெஞ்சில் கலக்கம் விட்டு
…கனிவாய், கனிவாய் கொடுப்பாய் முத்தம்…!
முத்தம் தந்தான் வம்பாய் வெறியுடன்
விடவில்லை என் கன்னமிரண்டையும்
கண்ணயர்ந்த என் மேல் படர்ந்தான்
முகத்தை முழுதாய் நனைத்துவிட்டான்
எழ விடவும் மறுக்கிறான் போக்கிரி மகன்
வேலை குவிந்து கிடக்கென நான் தவிக்க
ரசித்து மகிழ்கிறான் பெரிய கள்ளன்
இரவு லீலையின் பொல்லாத கண்ணன்
கண்ணன் சொன்னது கீதையில்
குணத்ரய விபாக யோகத்தில்
குணங்கள் மூன்று மாந்தரில்
குன்றியோ கூடியோ இருக்குமாம்
சத்வம் ரஜஸ் தமஸ் என்று
சாகச கண்ணன் சாதித்தது
சத்வ குணம் அதிலே சிறந்தது
சாத்வீகம் சத்தாயதில் பொதிந்தது
சத்துவ குணம் முனிவர் குணம்
சமச்சீர் நோக்கும் தெளிவும் உண்டாம்
ராஜச குணம் அது ராட்சச குணம்
கோபம் தாபம் குழப்பம் உண்டாம்
தாமச குணமோ சோம்பியின் இனம்
தள்ளும் கீழே எந்நாளும்
தயக்கம் மயக்கம் அதில் இருக்கும்
தமோ குணம் அதுவே அஞ்ஞானம்
அஞ்ஞானம் தான்..
என்ன பண்றது…
ரோசிச்சா
பலவருஷம் முன்னால
தாவணி போட்டப்ப
அம்மம்மா சொல்லுவாக
நேரத்தோட பள்ளிக்கோடம் போய்
நேரத்தோட வா..
இளந்தாரிகளப் பாக்காதே
பேசாத
சிரிக்கக்கூடசிரிக்காத
குனிஞ்ச தல நிமிராதம்பாக
இளவட்டப் பொண்ணுக்கு
எதுக்கு இத்தினி அலங்காரம்..
ஜிம்ப்பிளா இரு புள்ள
கல்யாணங் கட்டற்வரைக்கும்னாக
அம்மா ஒண்ணும் சொல்லாது
பாட்டி சொல்றதக் கேளு
ஒன் நல்லதுக்குத் தானேம்பாக
எப்ப நான் ஆச்சி பத்தி
கம்ப்ளோண்டு பண்ணாலும்..
ம்ம்
எல்லாம் ஆச்சு
கல்யாணங்கட்டி
ஆறு பெத்து
ரெண்டப் பறிகொடுத்து
நாலையும் வளத்து
ஆளாக்கி கல்யாணமும் பண்ணி
அதுகளுக்கும் பொறந்து
அதுங்களையும் வளத்தாச்சு
அதுவும் மூத்த பேத்தி இருக்கே
கோல்ட்ல பண்ண சிற்பம் மாரி..
தகதகன்னு இருக்கு
ப்ளஸ்டூ படிக்கப் போகுது
சாக்ரதையா இருபுள்ள
ரோட்ல நடந்துக்கிட்டே
அந்த குட்டிப் போனை நோண்டாத..
வெரசா நட
கலகலன்னு சிரிக்காதேன்னு
சொன்னா
மூத்த மருமவ
என்னத்திட்டறா..
சும்மா கிடங்க அப்பத்தா
அதுங்களுக்குத் தெரியும்
ஒங்க காலமில்ல இது
அதுவும்
கராத்தே கிளாஸ்லாம் போய்ருக்கா
ஸ்கூல்ல கிரிக்கெட்டீம் காப்டன்
சிம்ல போய் எக்ஸர்ஸைலாம் பண்ணுதா..
எம் பொண்ணுபத்தி எனக்குத் தெரியும்
சும்மா சும்மா குத்தம் சொல்லாதீய
பாவம்
ராவானா கண்ணால ஜலம் சொட்டுது
நா என்ன தப்புப் பண்ணிட்டேன்னு
பாட்டி திட்டுதுன்னு புலம்பறா…
இந்தாங்க ஒங்க கேப்பக்கஞ்சி
டிவி போடறேன்
நீங்க பாக்கற சீரியல் பாருங்க..
இது நல்லாஇருக்கே
இவ சொன்னா
நாஞ்சும்மா இருக்க முடியுமா
அஞ்ஞானம் இருக்க விடுமா
நா அப்படித்தான் சொல்லுவேன்
போடி இவளே
எனக்கொண்ணும் ஒண்ணோட
கஞ்சி ஓணாம்னு ரூமுல ஒக்காந்தா
உள்ள கிளாஸோட வந்து முறைக்கா..
குடிங்கம்மா.. ந்னு கொஞ்சம் தன்மையா
சொன்னதுனா குடிக்க ஆரம்பிச்சேனா
கிழவிக்கு வயசாய்டுச்சுன்னு முணுமுணு..
சொல்லட்டுமே…எனக்கென்னா…!
எனக்கென்னா குறைச்சல் இப்போ வயசா ஆச்சு
என்ன ஆறுதானே ஆகுது அது கூட ஒரு அறுபது
முன்னாடி உள் நாட்டுக்குள்ள அடிக்கடி பறந்ததுண்டு
மகன்கள் வீடுகளுக்கு வான்வழியாய் சென்றதுண்டு
மொதமொதலா இன்னும் அதிக உசரம் அதிக நேரம்
பறந்தா மூட்டு கொஞ்சம் அல்லது அதிகம் நோகும்
பரவாயில்ல பேராண்டிகளுடன் உல்லாசமாய் விடுமுறை
அடுத்த மாதம் இந்த தேதி அமெரிக்காவில் மகள் வீட்டில்
மகள் வீட்டில் இப்போது முதியோர் இல்லம் செல்லும் நாளை எண்ணி
மகளுக்கு வீடொன்று ஒன்று மகனுக்கில்லை மருமகளுக்கே கேரள
பாரம்பரிய மருமக்கள் தாயம் மருமகள் வடிவாய் நண்பர்களும் மகள்களுடன்
ஆரம்ப நாட்களில் மனைவி சொன்னது நமக்கென்று ஒரு வீடு வீடென்று எதனை
சொல்வீர் அதில்லை வீடு அதொரு ஆதிகால குகை உனக்கென்றே உள்ள அரண்
செல்வீர் அதனுள் ஓய்வு நிலையில் அந்நியர்கள் அனுமதிக்க படார் உமதே அது
அது ஒரு அந்தஸ்து மகனுக்கும் மகளுக்கும் வரன் பார்க்கும் போது வந்தவர்கள்
பொதுவில் கேட்டது சொந்த வீடா விடையின்றி குன்றிய நாட்களில் நிலைதெளிவு
வாடகை வீடுகளில் பிறந்து முதல் பிறந்தது முதலாய் சொந்தம் என்பது சுற்றோர் மட்டும்
பூடகமாய் பேசி வீட்டின் சொந்தம் குடிக்கூலி ஏற்றும் கால் ஒழுகல் பணி தனதில்லை
சுவர்களில் ஆணி கிறுக்கல்கள் என கூறி அனுமதியின்றியே அடுத்தோற்கு சுற்றி காட்டி
எவர் இவர் என்றரரிய கூட விடாமல் மறுநாள் தகவல் வெளியேறு என்று மகனின்
சொந்த வீட்டில் கால் மேல் கால் போட்டு செய்தி தாளுடன் தேநீர் திட்டம் தவிடு பொடி
இந்த இடம் உனதில்லை என உரைக்கவில்லை மருமகள் ஒரு படுக்கறையே எங்கப்பாம்மா
நாளை வருகை நீங்கள் போகலாமே மகளின் இல்லம் சொல்லி அனுப்புறோம் அறை காலியாகி
வேளை வருங்கால் மகள் வீட்டில் மூன்று வருடமாய் அறைதான் இன்னும் காலியில்லை
பாவம் மாப்பிள்ளையின் பெற்றோரும் மகள் வீட்டிலே அறிக்கை காத்திருப்பு சமன் ஆக
தேவைஒரு முதியோர் இல்ல அறை விவசாய குடி போல மகனை மூலதனமாய் கண்டு
திட்டமிடா ஓய்வில் நாள்தோறும் தேவையில்லா ஜீவனம் புழு போன்ற ஏளனம் வருடம்
தட்டாமல் பிறந்த நாள் வருங்கால் கிழிந்த ஆடைகளுக்கு ஓய்வுவருமா என குலுக்கல்சீட்டு
கழிசடை சமூகம் கொள்ளை காரர்களுக்கும் கந்து வட்டியாருக்கும் கற்பழிப்போர்க்கும் கருணை
பொழிந்து கம்பளம் விரிக்கும் திட்டமிடா நடுத்தரர் தூக்கிற்கு தயார் எனினும் அதனிலும் கொடிய
வாழும் தண்டனை அனு தினமும் இன்னுமா வாழ்கிறாய் என்ற ஏளன பார்வை ஆறுதல்
சூழும் கணங்கள் பெற்றோரை இல்லம் சேர்த்த சுற்றம் பேசும் பட்டி மன்றங்கள் முதியோரை மதியுங்கள்
மதியுங்கள் எனச்சொன்னார் பாட்டி
மனமார உதாரணங்கள் காட்டி
பேரன்கள் படபடத்து
பெரிதாக யோசித்து
கத்தினரே ஓசைதனைக் கூட்டி
சொன்னவிதம் புரியலையா கூறு
பெரியவங்க வயசைத்தான் பாரு
பலவிதமாய் அனுபவங்கள்
பக்குவமா உழைச்சிருந்தார்..
மூளைக்குள் ஏற்றிப்போய்ச் சேரு..
சின்னவங்க நாங்கதானே பாட்டி
சிறுவிஷமம் செய்வதனால் நாட்டி..
எங்களுக்குப் புரியாத
ஏதேதோ கதைகளையே
சொல்லலாமா நீயேசொல் பாட்டி
பாட்டி என்றால் பல் போய் பரிதாபமாய்
கோல் ஊன்றி சுருங்கின கொட்டையாய்
இளம் வயதில் பார்த்த புத்தகச் சித்திரங்கள்
தந்த ஒரு படிமம் மூளையில் அழியாதிருக்க
போகுமிடமெல்லாம் 'மரியாதை' மிகுந்த இந்த
மாநகரில் எனை பாட்டி என சிறு பெண்களழைக்க
கோபந்தான் வருகுதே மனம் வருந்துதே துவளுதே
என்றும் பதினாறாய் நிற்கும் என் இளம்மனத்தாலே
இளம் மனத்தாலே
ஐஷ்வர்யாவை அபிஷேக்கிடமிருந்து அள்ளி சென்று சுவைக்க முடியும்
ஐஸ்யர்வத்தை அம்பானிகளிடமிருந்து ஒரே நொடியில் கவர முடியும்
வேற்று கிரகங்களுக்கு நொடியில் சென்று அங்கு தரையில் பாயிட முடியும்
மாற்று வாழ்வில் புகுந்து காலிலிருந்து தலை வரை மாறி இன்பவாழ்வில் திளைக்கமுடியும்
சற்றே மாற்றி மாற்றி முடிவெடுத்து எப்போதுமே சரியான திசை காண முடியும்
சுற்றும் பூமியை நில் என்று ஆணையிட்டு அனைத்து வாழ்வையும் மாற்ற முடியும்
கற்றும் பிறழ்ந்து வாழும் சுற்றோரை மற்றோரை கல்லெறிந்து கொல்ல முடியும்
நினைத்தவுடன் கனவில் நினைத்த பெண்ணை அணைத்து பிணைந்து இணைய முடியும்
வினை விதைத்து வினை அறுத்த பலன்களை கற்பனையில் கண்டு தீயோரை தீயில் இடலாம்
இளம் மனம் இருக்கும் அறுதி இறுதி அவனவன் உள்ளத்திலே பதினாரிலும் எண்பதாவதும் மாற்றி வாழ்வதும்
தளமிடுவதோ கனவோ கற்பனையோ அல்ல வாழும் கணம் வாழும் விதம் சூழும் எண்ணம்
உலகை மாற்றி வளம் காணும் வித்தகனாய் விடலை பருவத்தில் இருந்தவன் அதே விடலையாய்
கலக்கி வருகிறேன் மாற்ற மனதுடன் மண் புழுவையும் மாற்ற இயலாமல் அங்கீகரித்து சக வாழ்வில்.