உண்மை சி கே சார் உங்கள் கருத்து ஏற்பு உடைய கருத்து.அது எங்க ஊரு கண்ணகி சி கே சார்
Printable View
தண்டை என்பது காலில் பெண்கள் அணியும் கொலுசு டைப் ஆபரணம்..ஆனால் கொலுசு இல்லை..வட்டமாக உள்பகுதி சற்றே ஹாலோவாக் இருக்கும்.. என்பது எனக்குத் தெரிந்த வரை நான் அறிந்தது..ஆனால் இந்த கார்த்திக் சார் பாட்டில்(?!) ..
தண்டை சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது
வாழைத் தண்டு போல கால் நடந்து பின்னால் வருகுது..
அது சரி எப்படி தண்டை யில் சத்தம் வரும்.. அதாவது கொலுசாக மாற்றப் பட்ட தண்டை என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும்..மணிகள் கோர்க்கப் பட்டு சிலுங்க் சிலுங்க் என்று குட்டிக் குட்டி ஐஸ்கட்டிகள் கண்ணாடிக் கிண்ணங்களில் மோதுவது போலச் சிரிக்கும் இளம்பெண்ணின் சிரிப்பொலி போல சிலுங்க் சிலுங்க் எனக் கொலுசொலி இருக்கும் என ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..!
கொலுசு..ஒய் எ ஃபீமேல் ஷுட் வியர் தட்.. என்பதற்கு தேடியதில்..
//ஆரம்ப காலத்தில் நாம் எல்லோரும் கொலுசு அணிந்தோம். பின்னர் இடைப்பட்ட காலத்தில் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப்பட்டது. தற்பொழுது அது மீண்டும் வழக்கத்திற்கு வந்ததுள்ளது. அதிலும் ஒற்றைக் காலில் கொலுசு அணிவதுதான் பேஷன். பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.
தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.
உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப் படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.// இருக்கலாமாயிருக்கும்!
சரீ ஈ ஈ.. நமக்கென்ன என்னல்லாம்ப்பா பாட்டு இருக்குன்னு பார்த்தா..
//அல்லித் தண்டு வெள்ளித் தண்டை
முத்துச் செண்டு கன்னங்கள்
மின்னல் என்று மின்னக் கண்டு துள்ளிச் செல்லும் எண்ணங்கள் // ஆக அல்லித் தண்டுக் காலில் இருக்கற வெள்ளித் தண்டையும் சரி, டபக்குன்னு மேல முகத்தைப் பார்த்தா இந்த பேர்ள்ஸ் எல்லாம் கோர்த்த செண்டாட்டமா பஃப்னு இருக்கற கன்னங்களும் சரி மின்னல் மாதிரி மின்னறதப் பார்த்தா .. எங்கெங்கோ செல்லும் உன் எண்ணங்கள் அப்படிங்கறா..
//கொட்டடி சேலை தழுவ தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்க குலுங்க சலக்கு சலக்கு சிங்காரி // என்னவாக்கும் படம்..
//அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய்
தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ// வேதம் நீ இனிய நாதம் நீ
கஞ்சிக் கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கணும்
நடந்து வரும் அழகைப் பார்த்துப் பசியும் கூடப் பறக்கணும்/ அய்யனாரு நிறஞ்ச வாழ்வு கொடுக்கணும்(காவல் தெய்வம்.)
இ.கா.படங்கள்ளயும் ஓரிரு பாடல்கள்ள தண்டை வருது..அ.கா.படங்கள்ள சொல்லடி அபிராமியிலையும் வருது ..அது அப்புறம் ..
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் பதிவு எண் # 1649 -ஐ கண்களில் நீர் சொட்டசொட்ட படித்து முடித்தேன். திரு தாரிகன் அவர்களின் இனிய சாட்டையடி மிகமிகப்பிரமாதம். 70-களில் மெல்லிசை மன்னரின் பாடல்களின் தாக்கத்தை எவ்வளவு அழகாக தொகுத்தளித்திருக்கிறார். அபாரம், அற்புதம் என்பதெல்லாம் மிக மிக சாதாரண வார்த்தைகள்.
இந்தப்பதிவு "சிலருக்கு" தெளிவு ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும் வரட்டுப்பிடிவாதத்தினால் ஏற்க மறுப்பது போல நடிக்கக்கூடும். மெல்லிசை மன்னரின் தாக்கத்தை விவரிக்கும் அதே வேளையில் கூடவே இசையரசியின் புகழ் பாடியிருப்பதும் அருமையோ அருமை. 'கதவில் மாட்டிய எலிகளின்' குரல்கள் எக்காலமும் இவரை நெருங்க முடியாது.
தெளிவு ஏற்படுத்தும் தீர்க்கமான பதிவு. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நிறைய சொல்லலாம். உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் வர சிரமப்படுகின்றன.
திரு கார்த்திக் சார்
உங்களை போலவே நானும் இன்னும் இந்த கட்டுரையில் இருந்து வெளி வர முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன். நேர் கோட்டில் பயணிக்கும் நம் அனைவரின் உள்ள கிடைக்கையை வெளி படுத்திய கட்டுரை .
இந்த கால கட்டத்திய பாடல்கள் இன்னும் நிறைய உள்ளன .. நீங்கள், வாசு சார், கோபால் சார், ராகவேந்தர் சார் ,ராஜேஷ் சார்,மது சார்,சி கே சார் sss சார் ,கோபு சார்,நெய்வேலி வாசு சார்,முரளி சார் மற்றும் பெயர் விடுபட்டு போன பலரும் இந்த பணியை தான் செய்து கொண்டு இருக்கிறோம்
டியர் கிருஷ்ணாஜி,
நான் அவ்வளவு கோபமாக பதிவு இட்டதும் நல்லதுக்குத்தான். அதனால்தான் இப்படியொரு அருமையான கட்டுரையை இங்கே பதிவிட்டீர்கள். 'கண்ணா நலமா' படமும் மெல்லிசை மன்னர் இசைதான். வி.குமார் என்பதாக தாரிகன் குறிப்பிட்டிருந்தார்...
நன்றி கார்த்திக் சார்
உங்கள் பதிவை திரு காரிகன் பதிவில் பின்னூட்டமிடுகிறேன் உங்களின் சார்பாக
டியர் வினோத் சார்,
'ஊட்டிவரை உறவு' மற்றும் 'சித்தி' விளம்பர ஆவணங்களுக்கும், பாடல்களின் வீடியோக்களுக்கும் மிக்க நன்றி...
டியர் கார்த்திக் சார்,
எனக்குப் பிடிக்காத படமான பிள்ளையோ பிள்ளை படத்திலிருந்து பிடித்த பாட்டின் பாடல் வரிகளைக் கொடுத்து விட்டீர்களே. அருமை. (47 நாட்களில் மூழ்கி விட்டதால் கொஞ்சம் லேட். ஸாரி) மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி, மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, வெள்ளை மலரில் ஒரு வண்டு, குண்டூரு ஹனுமந்தப்பா என்று எல்லாப் பாடல்களும் பிடிக்கும். லஷ்மியின் தொப்பை,:) (காஸ்ட்யூம் கேவலம்) மு.க.முத்துவின் பெண்பிள்ளைத் தனமான நடிப்பு, மேக்-அப் பிடிக்கவே பிடிக்காது. எம்.ஆர்.ஆர்.வாசு ஒரு ஆறுதல்.
மெல்லிசை மன்னர் மட்டுமே பெருத்த ஆறுதல்.